செங்கல்பட்டு வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செங்கல்பட்டு வட்டம், தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் ஒன்றாகும் [1] இந்த வட்டத்தின் தலைமையகமாக செங்கல்பட்டு நகரம் உள்ளது.

இந்த வட்டத்தின் கீழ் செங்கல்பட்டு, பாலூர், சிங்கபெருமாள்கோவில், ஆப்பூர், காட்டாங்குளத்தூர் என 5 உள்வட்டங்களும், 72 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]செங்கல்பட்டு வட்டத்தில் அச்சரபாக்கம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

வட்டம் பிரிப்பு[தொகு]

2019-ஆம் ஆண்டில் செங்கல்பட்டு வட்டத்தின் வண்டலூர், கூடுவாஞ்சேரி, மாம்பாக்கம் என 3 உள்வட்டங்களையும், 37 வருவாய் கிராமங்களைக் கொண்டு வண்டலூர் வட்டம் நிறுவப்பட்டது. [3]

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 573,406 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 289,210 ஆண்களும், 284,196 பெண்களும் உள்ளனர். 142,062 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 46.1% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 85.16% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 983 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 63507 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 956 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 147,654 மற்றும் 9,177 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 88.67%, இசுலாமியர்கள் 4.28%, கிறித்தவர்கள் 6.11% மற்றும் பிறர் 0.93% ஆகவுள்ளனர்.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கல்பட்டு_வட்டம்&oldid=3629334" இலிருந்து மீள்விக்கப்பட்டது