சு. ரா - நினைவின் நதியில் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சு.ரா - நினைவின் நதியில் எழுத்தாளர் சுந்தர ராமசாமியைப்பற்றி ஜெயமோகன் எழுதிய நினைவுச்சித்திரம் இந்நூல். 2004ல் சுந்தர ராமசாமி மறைந்ததும் இந்நூல் எழுதப்பட்டது. உயிர்மை பதிப்பகம் இதை வெளியிட்டிருக்கிறது. இந்நூலின் முதல் பகுதி உயிர்மை இதழில் வெளிவந்தது

உள்ளடக்கம்[தொகு]

’இது சுந்தர ராமசாமி குறித்த ஒரு முழுமையான சித்திரத்தை அளிக்கிறது என்றே எண்ணுகிறேன். இந்நினைவுகள் எனது ஒரு காலகட்டத்தின் சித்திரங்களாகவே என் பார்வைக்குப் படுகின்றன. இது சுந்தர ராமசாமி அல்ல, என்னுடைய சுந்தர ராமசாமி என்று படுகிறது. இதேபோலப் பல சுந்தர ராமசாமிகள் இருக்கலாம். அவர்களும் எழுத்தில் வரக்கூடும். அது வரவேற்கத்தக்கதே. நம் காலகட்டத்து மாபெரும் ஆளுமைகளில் ஒன்று அவர். சிலைகளை உருவாக்க வேண்டாம். அவை சரியும். ஆனால் மூதாதையரை உண்டு செரித்துக் கொள்வோம். அது நம் வேருக்கு நீர்’ என்று ஜெயமோகன் சொல்கிறார்

சுந்தர ராமசாமி மறைந்த சில தினங்களில், ஜெயமோகனால் எழுதி முடிக்கப்பட்ட இந்நூல் சு.ரா.வின் ஆளுமையை வாசகனின் நினைவில் கட்டி எழுப்புகிறது. சு.ராவைப் பற்றி மனநெகிழ்ச்சியூட்டும் கவித்துவம் மிகுந்த பதிவுகளும் அவரது அழகியல் மற்றும் தத்துவ நோக்கை வெளிப்படுத்தும் உரையாடல்களும் மிகுந்தது இந்நூல். சு.ராவின் நினைவுகளைப் பல்வேறு தளங்களில் விரித்து எழுதிய இந்நூல் அவரைப் பற்றிய படைப்பூக்கமுள்ள ஓர் ஆவணமாக விளங்குகிறது.சுந்தர ராமசாமி மற்றும் ஜெயமோகன் இருவருக்கிடையேயான நெருக்கத்தையும் உரசலையும் பேசுகிறது. தமிழின் மிகச் சிறந்த இரு எழுத்தாளர்களைப் பற்றிய ஓர் சித்திரத்தை நம்முன் வைக்கிறது இந்நூல்.