சு. தில்லைவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சு. தில்லைவனம் (பிறப்பு: டிசம்பர் 25 1954 புதுச்சேரி எழுத்தாளர். புதுச்சேரி இலாசுப்பேட்டையில் வசித்து வரும் இவர் கல்லூரி ஆசிரியராக 31 ஆண்டு காலம் பணியாற்றியுள்ளார். இதழியல், தகவல் தொடர்பியல், அகழாய்வு வரலாறு முதலியன தொடர்பில் 6 நூல்களைப் படைத்துள்ளார். இவர் எழுதிய “புதுச்சேரி மாநிலம் - வரலாறும் பண்பாடும்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாட்டுவரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._தில்லைவனம்&oldid=3614104" இலிருந்து மீள்விக்கப்பட்டது