சு. தமிழ்ச்செல்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சு. தமிழ்ச்செல்வி என்பவர் ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர்.

சு. தமிழ்ச்செல்வி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கற்பகநாதர்குளம் என்னும் ஊரில் 1971 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் நாள் பிறந்தார். இவருடைய பெற்றோர்களான தந்தை சுப்பிரமணி ஓமியோபதி மருத்துவராகப் பணியாற்றியவர். தாயார் முத்துலட்சுமி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

பல இலக்கிய மேடைகளில் பங்களிக்கும் இவர் மாணிக்கம், அளம், பொன்னாச்சரம், ஆறுகாட்டுத்துறை, கீதாரி, தொப்புள்க்கொடி மற்றும் கண்ணகி ஆகிய நாவல்களை எழுதியுள்ளார்.[சான்று தேவை]

இவர் எழுதிய "மாணிக்கம்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருந்தது. 2022 ஆம் ஆண்டுக்கான விளக்கு விருது பெற்றுள்ளார்.

பரிசுகளும் சிறப்புகளும்[தொகு]

  • தமிழ் வளர்ச்சித் துறை, சிறந்த புதினம் ("மாணிக்கம்") விருது, 2002
  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் விருது, புதினம்- "கற்றாழை"
  • கலைஞர் பொற்கிழி விருது (தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம்)
  • விளக்கு விருது 2022

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._தமிழ்ச்செல்வி&oldid=3804005" இலிருந்து மீள்விக்கப்பட்டது