சுவாதி சங்கீதோத்சவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவாதி சங்கீதோத்சவம்
நாள்ஒவ்வொரு ஆண்டும் 4 சனவரி முதல் 13 சனவரி வரை
அமைவிடம்(கள்)திருவனந்தபுரம், இந்தியா
சுவாதி இசை விழா நடைபெறும் குதிரை மாளிகையின் தாழ்வாரம், கச்சேரி தொடங்குவதற்கு சற்று முன்பு
பார்வையாளர்களுக்காக ஒரு தற்காலிக பந்தல்

சுவாதி சங்கீதோத்சவம் (Swathi Sangeethotsavam) (சுவாதி இசை விழா) என்பது மகாராஜா சுவாதித் திருநாளின் இசையமைப்பைக் கொண்டாடும் பத்து நாள் இசை விழாவாகும். மகாராஜா தனது பல படைப்புகளை இயற்றியதாக நம்பப்படும் திருவனந்தபுரத்திலுள்ள குதிரை மாளிகையில் ஒவ்வொரு ஆண்டும் சனவரி 4 முதல் 13 வரை திருவிழா நடத்தப்படுகிறது. இவ்விழா சுவாதி திருநாளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அவரது இசையமைப்பிற்காகவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இசை விழாவிற்கு நுழைவுக் கட்டணம் ஏதுமில்லை. தலைமையில் திருவிதாங்கூர் இராம வர்மன் மகாராஜா அறக்கட்டளையின் கீழ் இளவரசர் இராமவர்மன் இந்த விழாவை நடத்துகிறார். [1]

வரலாறு[தொகு]

சுவாதித் திருநாளை முன்னிட்டு கேரள அரசு குதிரை மாளிகையில் விழாவை நடத்தி வந்தது. 1990களின் பிற்பகுதியில், கேரளா முழுவதும் வெவ்வேறு இடங்களில் நடத்த முடிவு செய்து, குதிரை மாளிகையில் திருவிழாவை நிறுத்தினர். பிறகு, கர்நாடக இசைக் கலைஞரும் சுவாதித் திருநாளின் நேரடி வழித்தோன்றலுமான இளவரசர் இராமவர்மா இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளார் [2] [3]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Swathi Sangeethotsavam @ Kuthiramaika". swathithirunal.in. பார்க்கப்பட்ட நாள் 21 October 2013.
  2. "Royal musical treat". தி இந்து. 4 January 2008 இம் மூலத்தில் இருந்து 8 ஜனவரி 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080108141114/http://www.hindu.com/fr/2008/01/04/stories/2008010450030200.htm. பார்த்த நாள்: 21 October 2013. 
  3. "The sound of music: Meet Rama Varma, the man behind Thiruvananthapuram's Swathi Festival". https://www.thenewsminute.com/article/sound-music-meet-rama-varma-man-behind-thiruvananthapurams-swathi-festival-94496. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாதி_சங்கீதோத்சவம்&oldid=3710804" இலிருந்து மீள்விக்கப்பட்டது