சுரேந்திர சாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Veer
சுரேந்திர சாய்
பிறப்பு(1809-01-23)23 சனவரி 1809
சம்பல்பூர், ஒடிசா
இறப்பு28 பெப்ரவரி 1884(1884-02-28) (அகவை 75)
ஆசீர்கார்

சுரேந்திர சாய் (23 ஜனவரி 1809 - 28 பிப்ரவரி 1884) ஒரு இந்தியா விடுதலைப் போராட்ட வீரர்.[1] மேற்கு ஒடிசாவை ஆங்கிலேயர்களிடம் இருந்து பாதுகாக்க சிறைச்சியிலேயே தன் வாழ்க்கையை இழந்தார்.

போராட்டம்[தொகு]

அவர் 1827 இல் 18 வயதில் ஆங்கிலேயருக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கினார்.

முதல் முறையாக 1840 இல் கைது செய்யப்பட்டு ஹசாரிபாக் சிறைக்கு அனுப்பப்பட்டார். 1857 கிளர்ச்சியின் போது போராளிகளால் அவர் ஹசாரிபாக் சிறையிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவர் தனது நடவடிக்கைகளை ஒடிசாவின் மலைப்பகுதிகளுக்கு மாற்றினார்.

மேலும் 1862 இல் அவர் சரணடையும் வரை தனது எதிர்ப்பைத் தொடர்ந்தார். சரணடைவதற்கு முன்னர் அவர் ஹசாரிபாகில் 17 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார், மேலும் அவர் கைது செய்யப்பட்ட பின்னர் 20 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார், இதில் அவர் 19 ஆண்டுகள் தொலைதூர ஆசிர்கரில் தடுத்து வைக்கப்பட்டார்.

சிறப்பு பெயர்[தொகு]

இவர் ஒரு நல்ல வாள்வீரன். அப்பகுதி மக்கள் அவரை அன்பாக பீரா (அல்லது "வீர்" என்றால் தைரியமானவர்) சுரேந்திர சாய் என்று அழைத்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Sahu, N. K. (1985). Veer Surendra Sai. Dept. of Culture, Govt. of Orissa. https://books.google.com/books?id=RcQtAAAAMAAJ&q=veer+surendra+sai. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேந்திர_சாய்&oldid=3391615" இலிருந்து மீள்விக்கப்பட்டது