சுரேந்திரநகர் சந்திப்பு தொடருந்து நிலையம்
சுரேந்திரநகர் சந்திப்பு தொடருந்து நிலையம் | |||||
|---|---|---|---|---|---|
| பொது தகவல்கள் | |||||
| அமைவிடம் | சுரேந்திரநகர், குசராத்து இந்தியா | ||||
| ஆள்கூறுகள் | 22°44′39″N 71°37′44″E / 22.744222°N 71.628800°E | ||||
| ஏற்றம் | 72 m (236 அடி) | ||||
| உரிமம் | இந்தியத் தொடருந்து அமைச்சகம், இந்தியத் தொடருந்துகள் | ||||
| இயக்குபவர் | மேற்கு மண்டல இரயில்வே | ||||
| தடங்கள் | விராம்கம்–ஓகா வழித்தடம் தரங்காத்ரா–சுரேந்திர நகர் பிரிவு வழித்தடம் சுரேந்திரநகர்–பவநகர் வழித்தடம் | ||||
| நடைமேடை | 6 | ||||
| இருப்புப் பாதைகள் | 11 | ||||
| கட்டமைப்பு | |||||
| கட்டமைப்பு வகை | நிலையானது (தரையில்) | ||||
| தரிப்பிடம் | உள்ளது | ||||
| மற்ற தகவல்கள் | |||||
| நிலை | செயல்படுகிறது | ||||
| நிலையக் குறியீடு | SUNR | ||||
| மண்டலம்(கள்) | மேற்கு மண்டல இரயில்வே | ||||
| கோட்டம்(கள்) | ராஜ்கோட் | ||||
| வரலாறு | |||||
| திறக்கப்பட்டது | 1872 | ||||
| மின்சாரமயம் | ஆம் | ||||
| முந்தைய பெயர்கள் | மோர்வி மாநில இரயில்வே | ||||
| |||||
சுரேந்திரநகர் சந்திப்பு தொடருந்து நிலையம் (Surendranagar Junction railway station) இராஜ்கோட் கோட்டத்தின் மேற்கு இரயில்வேயைச் சேர்ந்தது. இது இந்தியாவின் குசராத்து மாநிலத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
வரலாறு
[தொகு]1922-ஆம் ஆண்டு முதல் 1948-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த சர் இலக்திராஜி வாக்ஜி, மாநிலத்தின் ஆட்சியாளராக, மேலாளராக, புரவலராக மற்றும் காவலராக பெரும் அதிகாரத்துடன் செயல்பட்டார். சௌராட்டிராவின் மற்ற சமகால ஆட்சியாளர்களைப் போலவே, சர் வாக்ஜியும் வத்வான் மற்றும் மோர்பியை இணைக்கும் சாலைகளையும் (எழுபது மைல்) இரயில்வே வலையமைப்பையும் கட்டினார். சுரேந்திரநகர்–இராஜ்கோட் பிரிவு 1905-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.[1] சுரேந்திரநகர், வான்கனேர் வழியாக விராம்காம்–ஹாபா பிரிவின் அகல மாற்றம் 1980 ஆம் ஆண்டுக்குள் நிறைவடைந்தது. [2] மோர்வி மாநில இரயில்வே 5 நவம்பர் 1951 அன்று மேற்கு இரயில்வேயுடன் இணைக்கப்பட்டது.
பயணிகளுக்கான வசதிகள்
[தொகு]இந்த நிலையத்திற்கு சுமார் 108 பயணிகள் தொடருந்துகள் வருகின்றன.
இங்கு மும்பை , அகமதாபாது, தில்லி , விசாகப்பட்டினம், செகந்திராபாத்து , நாக்பூர் , ஹவுரா , காமக்யா , இராஜ்கோட், காந்திதாம் , வான்கனேர் போன்ற இடங்களுக்குச் செல்லும் தொடருந்துகள் வந்து செல்கின்றன.