சுப்பிரமணியம் பிள்ளை
சுப்பிரமணியம் பிள்ளை (Subramaniam Pillai) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் தென்காசி மாவட்ட (முன்னர் திருநெல்வேலி மாவட்டம்) தென்காசியினைச் சார்ந்தவர். இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த இவர், தென்காசி சட்டமன்றத் தொகுதிக்கு 1952ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]