சுசேதா கிருபளானி
தோற்றம்
சுசேதா கிருபளானி | |
|---|---|
| உத்தரப் பிரதேச முதலமைச்சர்கள் | |
| பதவியில் 02.10.1963–14.03.1967 | |
| முன்னையவர் | சந்திர பானு குப்தா |
| பின்னவர் | சந்திர பானு குப்தா |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 25 சூன் 1908 அம்பாலா, அரியானா |
| இறப்பு | 1 திசம்பர் 1974 |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
சுசேதா கிருபளானி (Sucheta Kriplani) (Bengali: সুচেতা কৃপলানী, இந்தி: सुचेता कृपलानी) (சூன் 25, 1908 - டிசம்பர் 1, 1974) இந்தியா உத்தரப்பிரதேச மாநில முதல் பெண் முதலமைச்சராகப் பதவி வகித்த பெருமை உடையவர்.
ஹரியானாவில் இருந்த வங்காளக் குடும்பத்தில் பிறந்தவர் சுசேதா. இவரது தந்தையான எஸ். என். மஜீம்தார் மருத்துவரும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவரும் ஆவார்.
காந்தியடிகளின் வழியைப் பின்பற்றிய சுசேதா வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார். இந்தியப் பிரிவினைக் கலவரத்தின் போது காந்தியடிகள் மேற்கொண்ட நவகாளி யாத்திரையில் சுசேதாவும் கலந்து கொண்டார்.
1947 ஆகஸ்டு 15 அன்று அரசியலமைப்பு அவையின் அமர்வில் வந்தே மாதரம் பாடலை இவர் பாடினார்.
பகுப்புகள்:
- Articles containing இந்தி-language text
- 1908 பிறப்புகள்
- 1974 இறப்புகள்
- இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்
- உத்தரப் பிரதேச முதலமைச்சர்கள்
- இந்தியப் பெண் முதலமைச்சர்கள்
- இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனைகள்
- 1ஆவது மக்களவை உறுப்பினர்கள்
- 2ஆவது மக்களவை உறுப்பினர்கள்
- 4வது மக்களவை உறுப்பினர்கள்
- காந்தியவாதிகள்
- இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- கோண்டா மாவட்ட நபர்கள்
- அரியான அரசியலில் பெண்கள்
- உத்தரப் பிரதேசப் பெண் சட்டமன்ற உறுப்பினர்கள்