உள்ளடக்கத்துக்குச் செல்

சுகாசு வித்தல் மாபுசுகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுகாசு வித்தல் மாபுசுகர் (Suhas Vitthal Mapuskar)(22 சனவரி 1935-அக்டோபர் 2015) என்பவர் ஓர் இந்திய மருத்துவரும் சமூக ஆர்வலரும் ஆவார். இவருக்கு 2017ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மசிறீ வழங்கப்பட்டது.[1] 2006-ஆம் ஆண்டில் மறைந்த குடியரசுத் தலைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாமிடமிருந்து நிர்மல் கிராம் விருதைப் பெற்றார்.[2][3] 1960களில் இருந்தே புனே அருகிலுள்ள தேகு கிராமத்தை திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாததாக மாற்ற இவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.[4] மகாராட்டிராவில் கிராமப்புற சுகாதாரத் துறையில் இவர் செய்த பணிகளுக்காக அறியப்படுகிறார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]