சீ. கல்யாணராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீ. கல்யாணராமன் இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஆவார். இவர் கல்யாண் குழுமத்தின் கல்யாண் நகை கடைகளின் தலைவர் ஆவார். போர்ப்ஸ் இந்திய வெளியீட்டின் இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலில் 87 ஆவது இடத்தில் இடம்பெற்றார்.[1]

பிறப்பு[தொகு]

கல்யாணராமன் கேரளத்தின் திருச்சூரில் பிறந்தார். இவரது தந்தையான சீதாராமையரிடம் தொழில் பயின்ற பின்னர், கேரள வர்மா கல்லூரியில் வணிகவியல் பயின்றார்.

தொழில்[தொகு]

இவரது தலைமையில் கீழ் இயங்கும் கல்யாண் நகை கடை இந்தியா முழுவதும் அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளை வைத்துள்ளது. இவருக்கு ராஜேஷ் கல்யாணராமன், ரமேஷ் கல்யாணராமன் என்று இரு மகன்கள் உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீ._கல்யாணராமன்&oldid=2711994" இலிருந்து மீள்விக்கப்பட்டது