சீதப்பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீதப்பால் என்பது கன்னியாகுமாரி மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூர். நாகர்கோவிலிலிருந்து சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. வயல்வெளிகளும் தென்னஞ்சோலைகளும் நிறைந்த இவ்வூரில் சுமார் 500 மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பாசனத்திற்காக ஒரு வாய்க்கால் உள்ளது. இக்கிராமத்திற்கு அருகாமையில் தாடகைமலை என்று ஒரு மலையுள்ளது. இராமாயணத்தில் விசுவாமித்திரர் மேற்கொண்ட யாகத்தை சீர்குலைக்க வந்த தாடகையை இராமர் அழித்தார். அவள் பெயரில் உள்ளது தான் இம்மலை. மேலும் இந்த சிற்றூரில் திருவள்ளுவர் அறக்கட்டளை என்னும் அமைப்பினரால் நடத்தப்படும் ஒரு முதியோர் இல்லமும் இயங்கி வருகிறது. இந்து தெய்வங்களுக்கு ஆலயமும் ஒரு கிறித்துவ தேவாலயமும் இருக்கின்றன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீதப்பால்&oldid=1580021" இலிருந்து மீள்விக்கப்பட்டது