சி. பெருமாள் (முன்னாள் எம்.பி.)
![]() | இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
சி. பெருமாள் (பிறப்பு 20 ஜூலை 1957) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்ந்த ராஜ்யசபை உறுப்பினராகப் பணியாற்றியவர். அவர் ராஜ்யசபையில் தன்னுடைய காலத்தில் சட்டமன்ற விவாதங்களுக்கும் முடிவுகளுக்கும் பங்களிப்பு அளித்தவர்.
சி. பெருமாள் | |
---|---|
![]() | |
இயற் பெயர் | பெருமாள் |
பிறப்பு | சூலை 20, 1957 |
பெற்றோர் | ஏ.கே.சின்னு நாடார் (தந்தை) குழந்தையம்மாள் (தாயார்) |
ஆரம்ப வாழ்க்கை
[தொகு]சி. பெருமாள் 20 ஜூலை 1957 ஆம் ஆண்டு பிறந்தார், மற்றும் அரசியலிலும், பொது சேவையிலும் சிறப்பான அறிமுகம் பெற்றார். அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.இ.அ.தி.மு.க) உடனான அவரது தொடர்பு இளமையிலேயே தொடங்கியது. 1974 ஆம் ஆண்டில், வெறும் 17 ஆவது வயதிலேயே, அவரை அக்கட்சியின் தலைமையகம் பேச்சாளராக அப்போது தமிழக முதல்வராக இருந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் நியமித்தார்.[2] இந்நியமனம், அ.இ.அ.தி.மு.க.வில் அவருடைய நீண்டகாலம் நிலையான மற்றும் செல்வாக்கு மிக்க அரசியல் பயணத்திற்கு தொடக்கமாக அமைந்தது. [3]
அரசியல் பொறுப்புகள்
[தொகு]அக்டோபர் 17, 1972-ல் திரு. எம்.ஜி.ஆர் அவர்களின் தலைமையில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அ.இ.அ.தி.மு.க) தொடங்கப்பட்டது. இந்த நாள் தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டும். கழகத்தின் தொடக்க ஆண்டுகளில் மாணவர்களுக்கான அணி உருவாக்கப்பட்டது, இளையோரின் அரசியல் பங்களிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. [4]
1974-ஆம் ஆண்டு முதல் 2002 வரை கழகத்தின் தலைமை பேச்சாளராக பணியாற்றியுள்ளார். மறைந்த அமைச்சர் திரு. சவுந்தரராஜன் மற்றும் அப்போதைய அ.இ.அ.தி.மு.க சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. எச்.வி. ஹண்டே ஆகியோரின் முன்னிலையில் முக்கிய மேடையில் பேச்சாற்றியுள்ளார்.
1977-ஆம் ஆண்டு, இந்திய பாராளுமன்றத் தேர்தலின் போது, கிருஷ்ணகிரி தொகுதியில் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் Dr. P.V. பெரியசாமி அவர்களுக்காக பர்கூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரக் குழு தலைவராக பணியாற்றினார். அதே ஆண்டில் நடைபெற்ற சட்ட சபை தேர்தலில், திரு. எச்.ஜி. ஆறுமுகம் அவர்களுக்காக பர்கூர் தொகுதியில் பிரச்சாரக் குழு தலைவராகவும் செயல்பட்டார்.
திரைப்பயணம்
[தொகு]திரைப்பதிவு (1982-1983)
[தொகு]1982-ஆம் ஆண்டு இயக்குநர் ஆர்.சி.சக்தி இயக்கத்தில் வெளிவந்த "ஸ்பரிசம்" மற்றும் "உண்மைகள்" படங்களில் முதன் முறையாக நடித்தார். 1983-ல் ஆர்.டி.பாஸ்கர் தயாரிப்பில் கங்கை அமரன் இயக்கிய "கொக்கரக்கோ" [5] திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
மொழிப்பெயர்ப்பு (1983)
[தொகு]1983-ஆம் ஆண்டு "மணல் கயிறு" திரைப்படத்தை தெலுங்கில் தயாரிப்பாளர் நடிகர் சலம் அவர்களுக்காக "பெண்லி சேசி சூபிஸ்த்தாமு" என்ற தலைப்பில் மொழிப்பெயர்த்தார்.
தொலைக்காட்சி நாடகங்கள் (1985)
[தொகு]1985-ல் சென்னை தொலைக்காட்சி (Doordarshan) யில் "உண்மை, உழைப்பு, உயர்வு" நாடகத்தில் (தயாரிப்பு தஞ்சைவானன்) நடித்தார். "திசை மாறும் ஜீவ நதிகள்" என்ற தொலைக்காட்சி நாடகத்தில் கதாநாயகனாகவும் நடித்தார்.
திரைப்படங்கள் (1987-1989)
[தொகு]1987-ல் இயக்குநர் இராம திலகராஜன் இயக்கத்தில் "நாடு அதை நாடு" [6] படத்தில் ராமராஜனுடன் நடித்தார். 1989-ல் மீண்டும் அதே படத்தில் இணைந்து நடித்தார். அதே ஆண்டு "நல்ல நேரம்" படத்தில் நடிகராகவும், தயாரிப்பில் உதவியாளராகவும் பணியாற்றினார். மேலும், "இதய வாசல்" [7] படத்தில் கவுண்டமணியின் மருமகனாக நடித்தார்.
கல்விச் சேவை
[தொகு]பெருமாள், 2012 ஆம் ஆண்டு முதல் கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியை [8] நிறுவி அதன் நிர்வாக இயக்குனராகச் செயல்பட்டு வருகிறார். இக்கல்லூரி, அவரது தலைமையில், இளங்கலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை சிறப்பாக நடத்தி வருகிறது. கல்லூரி, பெரியார் பல்கலைக்கழகத்தால் இணைவு பெற்றது, 12 இளங்கலைப் படிப்புகள், 8 முதுகலைப் படிப்புகள் மற்றும் 3 ஆராய்ச்சி படிப்புகளை மாணவர்களுக்கு வழங்குகிறது.
பெருமாள் அவர்கள், கல்விச் சேவையில் மட்டுமின்றி சமூக சேவையிலும் ஈடுபாடுடன் செயல்பட்டு வருகிறார். கொரோனா பேரிடர் காலகட்டத்தில், இந்தக் கல்வி நிறுவனத்தில் பணிபுரியும் எந்த ஒரு ஆசிரியரையும், பணியாளர்களையும் பணி நிறுத்தம் செய்யப்படவில்லை. அதேபோல், எந்த ஒரு மாணவ, மாணவியர்களையும் கல்விக் கட்டணம் செலுத்த நிர்பந்திக்கவில்லை.
கொரோனா சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட பேரிடர் காலத்தில், மாணவர்களுக்கு, குறிப்பாக பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு, கல்லூரி இலவசமாக கல்வி வழங்கியது. இது சமூக சேவையின் ஒரு முக்கிய எடுத்துக்காட்டாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Centre, National Informatics. "Digital Sansad". Digital Sansad (in ஆங்கிலம்). Retrieved 2024-09-01.
- ↑ "சுயவிவரம்". Archive.org. Retrieved 2024-09-01.
- ↑ "முன்னாள் எம்.பி. பட்டியல்". MPLADS.gov.in. Retrieved 2024-09-01.
- ↑ "The Genesis of AIADMK". The New Indian Express. 19 மார்ச் 2021. https://www.newindianexpress.com/specials/2021/Mar/19/the-genesis-of-aiadmk-2278718.html.
- ↑ கொக்கரக்கோ திரைப்படம். spicyonion.com.
- ↑ "Naadu Adhai Naadu". spicyonion.com. Retrieved 2024-09-15.
- ↑ "Idhaya Vaasal (1991) Tamil Movie". spicyonion.com. Retrieved 2024-09-15.
- ↑ "Krishna Arts and Science College website". Retrieved 2024-09-15.
வெளி இணைப்புகள்
[தொகு]- Profile on Rajya Sabha website பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்
- சி. பெருமாள் முன்னாள் எம்.பி. X.com தளத்தில்
- பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைதளம்
- [கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி - எங்களைப் பற்றி](https://kaasck.com/about-us/)