சி. கனகசபாபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சி. கனகசபாபதி என்பவர் ஒரு கல்வியாளர், திறனாய்வாளர். தமிழ்ப் பேராசிரியர் ஆவார். ஒரு பேராசிரியராக முதன்முதலாகப் புதுக்கவிதையை வரவேற்று எழுதியவர் ஆவார். இவர் பொதுநிலைச் சமூகவியலார்களில் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.[1]

இவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நவீனத் தமிழ் இலக்கியம் கறிபித்துவந்தார்.[2] மேலும் இவர் முதன்மையாக எழுத்து இதழில் தொடர்ந்து எழுதினார். புதுக்கவிதையின் உருவ அமைப்பு, உருவகம், படிமம் முதலியவை உள்ளிட்ட அதன் உத்திகள், பொதுவான கட்டமைப்பு முதலியவற்றை விரிவாக விளக்கி திறனாய்வு செய்துள்ளார்.[3]

எழுதிய நூல்கள்[தொகு]

  1. பாரதி-பாரதிதாசன் கவிதை மதிப்பீடு [1979]
  2. தி-பாரதிதாசன் ஒப்பியல் திறனாய்வு [1980]
  3. பாரதியும் பிறகும் ந. பிச்சைமூர்த்தியும் பிறகும்
  4. புனைகதைகள், சி. கனகசபாபதி கட்டுரைகள் (2005)[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._கனகசபாபதி&oldid=2955112" இலிருந்து மீள்விக்கப்பட்டது