சி. என். லட்சுமிகாந்தன்
Appearance
![]() | இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி லட்சுமிகாந்தன் கொலை வழக்கு கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
சி. என். லட்சுமிகாந்தன், இந்து நேசன், சினிமாத் தூது உள்ளிட்ட மஞ்சள் பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தவர்.[1][2] திரைப்பட நடிகர், நடிகைகள் பற்றி தமிழில் ஆபாசமாக எழுதி அதன் காரணமாகவே கொலை செய்யப்பட்டவர்.
சினிமாத் தூது
[தொகு]சினிமாத் தூது, தமிழில் முதல் முதலாக வெளிவந்த மஞ்சள் பத்திரிகையாகக் கருதப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட காகிதப் பற்றாக்குறையால் இவ்விதழுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அரசுக்குத் தெரியாமல் இவ்விதழ் சி. என். லட்சுமிகாந்தனால் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது.
இந்து நேசன்
[தொகு]சினிமாத் தூது, அரசாங்கத்தால் மூடப்பட்ட பிறகு அதுவரையில் நல்ல முறையில் நடந்து வந்த இந்து நேசன் பத்திரிகையில், திரைப்பட நடிகர், நடிகைகள் பற்றி தமிழில் ஆபாசமாக எழுதத் தொடங்கினார்.
கொலை வழக்கு
[தொகு]8-11-1944 அன்று, சென்னை புரசவாக்கத்தில் கத்தியால் குத்தப்பட்டு, 9-11-1944 அன்று உயிரிழந்தார்.[3]
குறிப்புகளும் மேற்கோள்களும்
[தொகு]- ↑ "சினிமா கிசு கிசு வளர்ந்த கதை…". Retrieved மார்ச் 20, 2014.
- ↑ "Agathiyar-Groups". Retrieved மார்ச் 20, 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கே.வை சிறைக்கு அனுப்பிய லட்சுமிகாந்தன் கொலை எப்படி நடந்தது?