சிலையெழுபது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிலையெழுபது ஓலைச்சுவடிகள்

சிலையெழுபது (Silaiyezhupathu) என்பது ஒரு தமிழ் இலக்கியம் ஆகும். இது கம்பரால் இயற்றப்பட்டது என்றொரு கருத்தும், வேறொருவரால் இயற்றப்பட்டது எனும் இன்னொரு கருத்தும் உள்ளது.[1] கலிங்கப் போர் வெற்றிக்குப் பிறகு, சோழருக்கு அடங்கிய சிற்றரசனாக பல்லவ நாட்டை ஆண்ட, முதற் குலோத்துங்க சோழனுடைய தளபதி (கி.பி.1070 - கி.பி.1118) கருணாகரத் தொண்டைமானின் குலமாகிய பள்ளியரின் பெருமையைப் பற்றி கம்பர் பாடியது இந்நூல் எனப்படுகிறது. இதற்குப் பரிசாக தங்கப் பல்லக்கு, அணிகலன்கள் மற்றும் ஒரு செய்யுளுக்கு ஆயிரம் பொன் வீதம் பரிசும் கம்பருக்கு வழங்கப்பட்டதாக அறியப்படுகிறது.[2][3]

நூலின் சிறப்புகள்

சிலையெழுபது வன்னியர் குலத்தின் பெருமைகளையும், அவர்களின் வரலாற்றையும் எடுத்துரைக்கும் ஒரு நூல் ஆகும்

பாயிரம்

  1. கணபதி துதி
  2. நூற்பெயரும் நூல்செய்தார் பெயரும் நுவலல்
  3. நூலரங்கேறிய கச்சித்தலச் சிறப்பு
  4. சம்புகோத்திரச் சிறப்பு
  5. குலோற்பவச் சிறப்பு
  6. வன்னியர் குலச் சிறப்பு
  7. குலத்தலைவர் படைச் சிறப்பு

நூல்

  1. விசயதசமி நாட்கோடற் சிறப்பு
  2. வில் வலிமையால் வாழும் உலகம்
  3. வன்னியர் ஏந்திய வில்லே, வில்
  4. விற்போரில் மகிழ்பவர்கள்
  5. வில்லின் வளைவுகள்
  6. விற்பிடித்தல் சிறப்பு
  7. வில்லால் விளைந்த நன்மை
  8. வில்மணிச் சிறப்பு
  9. நாணின் சிறப்பு
  10. வில்லேந்துதற் சிறப்பு
  11. உலகம் செழிப்பது வில்லாலே
  12. விற்போர் சிறப்பு
  13. படை எழுந்தால் அரக்கர் அழிவர்
  14. வில்வளைத்தற் சிறப்பு
  15. நாணேற்றுதற் சிறப்பு
  16. குணத்தொனிச் சிறப்பு
  17. அம்பறாத்தூணிச் சிறப்பு
  18. பிரமாத்திரச் சிறப்பு
  19. நாராயணாத்திறச் சிறப்பு
  20. பாசுபதாத்திரச் சிறப்பு
  21. அபிமந்திரித்தற் சிறப்பு
  22. நாணிறங்குதற் சிறப்பு
  23. வீரவாட் சிறப்பு
  24. வேலேந்திய காலாட்படைச் சிறப்பு
  25. யானைப்படைச் சிறப்பு
  26. குதிரைப்படைச் சிறப்பு
  27. தேர்ப்படைச் சிறப்பு
  28. பிறர் தேரும் இவர் தேரும்
  29. அகழியின் சிறப்பு
  30. அரண் சிறப்பு
  31. கொடிச் சிறப்பு
  32. அரசாட்சி மண்டபச் சிறப்பு
  33. சிங்காதனத்திருத்தற் சிறப்பு
  34. டிதரித்தற் சிறப்பு
  35. மகுடங்கள் நிலைப்பது இவர் மகுடத்தாலே
  36. புயகேயூர கிரீடச் சிறப்பு
  37. குடைச் சிறப்பு
  38. செங்கோற் சிறப்பு
  39. செங்கோல்வண்மைச் சிறப்பு
  40. செங்கோல்நடத்தற் சிறப்பு
  41. அறநெறியின் சிறப்பு
  42. ஆக்கினைச் சக்கரச் சிறப்பு
  43. தொழில்நெறி பிறழாமைச் சிறப்பு
  44. முத்திரைமோதிரச் சிறப்பு
  45. துட்டநிக்கிரகச் சிறப்பு
  46. வாயில்மேவுதற் சிறப்பு
  47. தொழுதல் முதலிய சிறப்பு
  48. செல்வாக்கின் சிறப்பு
  49. வன்னியரின் புகழ்
  50. திருமங்கை ஆழ்வாரால் பாடப்பெற்றோர்
  51. மாசு அகற்றற் சிறப்பு
  52. எல்லாவிதத்திலும் சிறந்தோர்
  53. குணச் சிறப்பு
  54. இதயவண்மைச் சிறப்பு
  55. இராஜசமூகச் சிறப்பு
  56. பதியிருத்தற் சிறப்பு
  57. மன்னர்சூழ்தற் சிறப்பு
  58. மொழிதவறாமைச் சிறப்பு
  59. சாந்தம் முதலிய பண்புகளாற் சிறப்பு
  60. கொடைவளத்தின் சிறப்பு
  61. வள்ளல்தன்மைச் சிறப்பு
  62. அடுத்தவர்க்குத் தாழ்வின்றெனல் சிறப்பு
  63. உமை முதலியோரின் அருள்பெற்றோரெனற் சிறப்பு
  64. அஷ்ட ஐசுவரியச் சிறப்பு
  65. தசாங்கச் சிறப்பு
  66. அரசின் சிறப்பு
  67. வில்லின் புகழ்கூறுதற் சிறப்பு
  68. பரிசுதரற் சிறப்பு
  69. இதுமுதல் மூன்று கவிகள் - வாழ்த்துச் சிறப்பு (69, 70, 71)

[4]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. முனைவர் தெ. ஞானசுந்தரம், மறவாதியர் யார்? மலட்டு ஆ எது?, தமிழ்மணி, தினமணி, 11, சனவரி, 2015
  2. துரை ராசாராம் (1999). கம்பனின் சிற்றிலக்கியங்கள். முல்லை நிலையம். பக். 319. https://books.google.co.in/books?id=wIFkAAAAMAAJ&q=%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D. 
  3. "சிலையெழுபது - Silaiyelupathu - கம்பர் நூல்கள் - Kambar Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com". சென்னை நூலகம். பார்க்கப்பட்ட நாள் 2022-08-12.
  4. சிலையெழுபது. http://www.tamilkalanjiyam.com/literatures/kambar/silaiyelupathu.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலையெழுபது&oldid=3904876" இலிருந்து மீள்விக்கப்பட்டது