சிலாங்கூர் சுல்தான் முகமட் சா
சிலாங்கூர் சுல்தான் முகமட் சா Muhammad Shah of Selangor Sultan Muhammad Shah | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
3-ஆவது சிலாங்கூர் சுல்தான் | |||||||||
ஆட்சிக்காலம் | 27 அக்டோபர் 1826 – 6 சனவரி 1857 | ||||||||
முன்னையவர் | சுல்தான் இப்ராகிம் சா | ||||||||
பின்னையவர் | சுல்தான் அப்துல் சமாட் | ||||||||
பிறப்பு | 1772 | ||||||||
இறப்பு | 6 சனவரி 1857 (வயது 84-85) | ||||||||
புதைத்த இடம் | 1857 | ||||||||
துணைவர் |
| ||||||||
குழந்தைகளின் பெயர்கள் | |||||||||
| |||||||||
மரபு | அரச லூவு பூகிஸ் ஒப்பு டாயேங் செலாக் | ||||||||
தந்தை | சிலாங்கூர் சுல்தான் இப்ராகிம் சா | ||||||||
தாய் | சிக் புவான் பெசார் சிக் லோங் அலிஜா டத்தோ உசைன் | ||||||||
மதம் | சன்னி |
சுல்தான் முகமட் சா அல்லது சிலாங்கூர் சுல்தான் முகமட் சா (ஆங்கிலம்: Muhammad Shah of Selangor; மலாய்: Sultan Muhammad Shah ibni Sultan Ibrahim Shah ibni Sultan Salehuddin Shah ibni Yamtuan Muda Riau II Opu Daeng Chelak; சீனம்: 雪兰莪州的穆罕默德·沙) (1772 - 1857) என்பவர் 27 அக்டோபர் 1826 முதல் 6 சனவரி 1857 வரையில் சிலாங்கூர் சுல்தான் பதவி வகித்தவர்; மற்றும் 3-ஆவது சிலாங்கூர் சுல்தான் ஆவார்.[1]
அவரின் ஆட்சி 31 ஆண்டுகள் நீடித்தது. அவரின் ஆட்சிக் காலத்தில், அம்பாங்கில் ஈயச் சுரங்கங்கள் திறக்கப்பட்டன; மற்றும் சிலாங்கூர் மாநிலம் ஐந்து தன்னாட்சி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. அவர் தன் குடும்பத்தினருக்கு அரசு நிலங்களை வழங்கினார். இறுதியில் அதுவே கிள்ளான் போருக்கு வழிவகுத்தது.
ஆட்சி
[தொகு]சுல்தான் முகமட் சா, தன் தந்தையின் முதல் மனைவியின் மகன் அல்ல. ஆனால் அவரது தந்தையின் ஆட்சிக் காலத்தில், சுல்தான் முகமட் சா வாரிசாக அறிவிக்கப்பட்டதால், சிலாங்கூர் உயர் அரசப் பதவியாளர்களால் சுல்தான் முகமட் சா, சிலாங்கூரின் அடுத்த சுல்தானாக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.
சுல்தான் முகமட் சா, சிலாங்கூர் மாநிலத்தை நிர்வகிப்பதில் அவ்வளவு திறமையானவராக இல்லை; மேலும் உள்ளூர் அரசு பிரபுக்கள், கிராமத் தலைவர்கள் அல்லது அவரின் மாவட்டங்கள் மீதும் சுல்தான் முகமட் சா அவர்களுக்கு முழுக் கட்டுப்பாடு இல்லாமல் இருந்தது.
அவரின் ஆட்சியின் முடிவில், சிலாங்கூர் மாநிலம்; பெர்ணம் பள்ளத்தாக்கு, கோலா சிலாங்கூர், கிள்ளான், லங்காட் மற்றும் லுக்குட் என ஐந்து தனித்தனி பிரதேசங்களாகப் பிரிந்தது. ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு தலைவர்களால் ஆளப்பட்டது; மேலும் சுல்தான் முகமட் சா கோலா சிலாங்கூரை மட்டுமே தன் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார்.[2]
அம்பாங் ஈயம் சுரங்கங்கள்
[தொகு]சுல்தான் முகமட் சாவின் ஆட்சிக் காலத்தில் சீனக் குடியேறிகள் சிலாங்கூர் மாநிலத்தில் ஈயம் வெட்டியெடுக்கத் தொடங்கினர். அம்பாங்கில் ஈயம் சுரங்கங்கள் அமைக்கப்பட்டன; அவை மக்களுக்கு வணிகத்தைக் கொண்டு வந்தன. இதுவே அவரின் ஆட்சிக் காலத்தில் ஒரே வெற்றிச் செயல்பாடாக அறியப்படுகிறது.
தொடக்கத்தில் சுல்தான் முகமட் சா, கிள்ளான் பள்ளதாக்குப் பகுதியை ராஜா சுலைமானுக்கு (வைப்பாட்டியின் மகன்) கொடுத்தார். ஆனால் சிறிது காலம் கழித்து, அந்த வழங்கலைத் தடை செய்து, அதே பகுதியைத் தம்முடைய மருமகன் ராஜா அப்துல்லாவுக்கு கொடுத்தார். இதுவே பின்னர் காலத்தில், இரு தரப்பினருக்கும் இடையே வெறுப்பையும் மனக்கசப்புகளையும் ஏற்படுத்தின. மேலும் ராஜா அப்துல்லாவிற்கும் ராஜா மகிதிக்கும் (ராஜா சுலைமானின் மகன்) இடையே கிள்ளான் போருக்கு வழிவகுத்தது.[3]
குடும்பம்
[தொகு]சுல்தான் முகமட் சா அவர்கள்; சுல்தான் இப்ராகிம் சாவின் (Ibrahim Shah of Selangor) மனைவி சிக் புவான் பெசார் எஞ்சிக் லாங் அலிஜா பிந்தி டத்தோ' உசைனுக்குப் (Cik Puan Besar Encik Long Halijah binti Dato' Hussain) பிறந்த மகனாவார். இவர் சிலாங்கூரின் 4-ஆவது சுல்தானான சுல்தான் அப்துல் சமாட் (Abdul Samad of Selangor) அவர்களின் மாமனார் ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Megat Zaharuddin, M.I. (2002). "Database of Malay Nobility - Genealogy Data". Geocities. Archived from the original on 16 March 2008. Retrieved 25 June 2009.
- ↑ Selangor, Wangsa Mahkota (16 November 2012). "Raja Muda Laut Ibni Almarhum Sultan Muhammad Shah". Wangsa Mahkota Selangor (in ஆங்கிலம்). Retrieved 14 February 2025.
- ↑ Winstedt, Richard Olof (1962). A History of Malaya (in ஆங்கிலம்). Marican. p. 216.
மேலும் காண்க
[தொகு]- சிலாங்கூர் சுல்தான்
- மலேசியாவின் முடியாட்சிகள்
- மலேசிய ஆட்சியாளர்களின் பேரவை
- மலேசிய மாநிலங்களின் தலைவர்கள்