யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சிறுவர் செயற்பாட்டுக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறுவர் செயற்பாட்டுக் கழகம் யாழ் இந்துக்கல்லூரியில் இயங்கிவரும் கழகங்களில் ஒன்றாகும். இது இக்கல்லூரியின் மாணவர்களின் நன்மை கருதி பல செயற்பாடுகளை செய்து வருகிறது.

வரலாறு[தொகு]

இக் கழகம் 2000ம் ஆண்டு ஒக்டோபர் 1ம் திகதி அன்று சிறுவர் உள மேம்பாடு கருதி அதிபர் ஏ. சிறிகுமரன் (1996 - 2005) காலத்தில் அல்பிரட் ஜெனீவா என்பவரால் உருவாக்கப்பட்டது. பொறுப்பாசிரியராக திருமதி. சா . அருந்தவபாலன் இருந்தார். இக்கழகத்தின் செயற்பாடாக வலயமட்ட பொதுஅறிவுப் பரீட்சை இவரது காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. நா. கு . மகிழ்ச்சிகரன் 2012 இலிருந்து பொறுப்பாசிரியராக உள்ளார். 2009 ஆம் ஆண்டு இக்கழகத்தின் 10வது ஆண்டு இதழ் “கனிவு“ வெளியிடப்பட்டது. 2011ல் “சங்கமம்“ இறுவட்டு பாடல்கள் வெளியிடப்பட்டது. 2012ல் ”கண்ணீர் பூக்கள்” எனும் கவிதை இக் கழக அநுசரணையில் வெளியானது. 2013ம் ஆண்டில் இக்கழகத்தின் முகப்புத்தகம் (facebook) மற்றும் ருவிற்றர் (twitter) கணக்குகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

சிறப்பு[தொகு]

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சிறந்த கழகமாக 2009ம் ஆண்டு இக் கழகம் தெரிவு செய்யப்பட்டது. 2013ல் பாடசாலை குமாரசுவாமி பூங்கா, சிரமதான நடவடிக்கை மூலம் துப்பரவு செய்யப்பட்டது. 2013ல் கழக அங்கத்தவர்களுக்கு தனிப்பட்ட சீருடை உருவாக்கப்பட்டுள்ளது. 2013ல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நூலகத்துக்கு புத்தகங்கள் சேகரித்து வழங்கப்பட்டது. இதைவிட வருடாந்தம் இப் பாடசாலை தவிர 5 பாடசாலைகளில் பொதுஅறிவுப் பரீட்சை மற்றும் கவிதை, கட்டுரை, பேச்சு, குறுநாடகம், சித்திரம் போன்ற போட்டிகளும் நடாத்தி பரிசு வழங்கி வருவதும் குறிப்பிடத் தக்கது. இவை வருடாந்த சிறுவர் தின நிகழ்வின் போது வழங்கப்படுகின்றன.


வெளியிணைப்புக்கள்[தொகு]

முகநூல் பக்கம்
முகநூல் பக்கம்
டுவிட்டர் பக்கம்
சிறுவர் செயற்பாட்டுக் கழகம்-blogger