சிறீ எதிர்ப்புப் போராட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறீ எதிர்ப்புப் போராட்டம் என்பது 1957 இல் இலங்கை அரசு அனைத்து தமிழர்களின் தானுந்துகளும் சிங்கள சிறீ எழுத்துக் கொண்ட வாகன அனுமதி தட்டுக்களை மாட்ட வேண்டும் என்பதற்கு எதிராக தமிழர்களால் நடத்தப்பட்ட போராட்டம் ஆகும். தனிச் சிங்களச் சட்டம் அமுலாகிய பின்னர் இந்த சட்டம் அமுலுக்கு வந்தது.