சிறீரூப மித்ரா சவுத்ரி
சிறீரூப மித்ரா சவுத்ரி | |
---|---|
உறுப்பினர்-மேற்கு வங்காள சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2 May 2021 | |
தொகுதி | ஆங்கில சந்தை, மால்தா |
தலைவர்-மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்[1] | |
பதவியில் 2014–2016 | |
தலைவர்-சிறப்பு பிரிவு- குற்றத்தடுப்பு | |
பதவியில் திசம்பர் 2012 – திசம்பர் 2013 | |
தலைவர்-அரசு சார்பற்ற அமைப்பு சுதினாலே | |
பதவியில் 2010–2013 | |
ஆலோசகர்-தேசிய சட்ட சேவை ஆணையம் - சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், இந்தியா | |
பதவியில் 2008–2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 ஏப்ரல் 1964[2] |
தேசியம் | இந்திய மக்கள் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி[2] |
துணைவர் | ஆர். கே. மித்ரா |
வாழிடம் | தெற்கு பாலூசார், மால்டா, மேற்கு வங்காளம்[3] |
கல்வி | முதுகலை முதுகலை, வடக்கு வங்காள பல்கலைக்கழகம்[3] |
சிறீரூப மித்ரா சவுத்ரி (Sreerupa Mitra Chaudhury)(பிறப்பு 18 ஏப்ரல் 1964) என்பவர் நிர்பயா தீதி என்று பிரபலமாக அழைக்கப்படும் ஓர் இந்திய அரசியல்வாதியும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி உறுப்பினரும் ஆவார். இவர் ஒரு சமூக சேவகர், பெண்கள் உரிமை ஆர்வலர், முன்னாள் பத்திரிகையாளர் ஆவார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]சிறீஉரூப மித்ரா சவுத்ரி மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்தில் உள்ள தெற்கு பலுச்சார் பட்ட்லாவைச் சேர்ந்தவர். இவர் முதுகலைப் பட்டம் பெற்றவர். 1987ஆம் ஆண்டில் வட வங்காளப் பல்கலைக்கழகத்தில் முதுகலை கலை பட்டம் பெற்றார். இவர் ஆர். கே. மித்ராவை மணந்தார்.[3]
தொழில் வாழ்க்கை
[தொகு]2004ஆம் ஆண்டில் தேசிய சட்ட எழுத்தறிவு இயக்கத்தின் துவக்கத்தில் பங்கேற்றார்.[4] 2008ஆம் ஆண்டு நிலவரப்படி இவர் சட்டம் மற்றும் நீதி அமைச்சின் தேசியச் சட்ட சேவைகள் ஆணையத்தின் தேசிய ஆலோசகராக பணியாற்றினார்.[4] 2010ஆம் ஆண்டு நிலவரப்படி இவர் சுதினாலே என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தலைவராக இருந்தார்.[5]
கொல்கத்தா நிர்பயா தீதி என்று அழைக்கப்படும் இவர், கற்பழிப்புக்கு ஆளானவர்களின் மறுவாழ்வு மற்றும் பெண்களுக்குக் கழிப்பறைகள் வழங்கும் பணியில் ஈடுபட்டார். 2012 தில்லி கூட்டு பாலியல் பலாத்காரத்திற்குப் பிறகு பிரதமர் மன்மோகன் சிங் அமைத்த பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு, கடத்தல் மற்றும் வன்முறை தொடர்பான சிறப்புப் பணிக்குழுவிற்கு இவர் தலைமை தாங்கினார்.[6][7] இவர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக மால்டா தொகுதியில் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிடலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில், திசம்பர் 2013-இல் அவர் இந்த பதவியை ராஜினாமா செய்தார்.[7]
சவுத்ரி அகில இந்திய திரிணாமுல் காங்கிரசின் வேட்பாளராக 2014 பொதுத் தேர்தலில் தெற்கு தில்லி மக்களவைத் தொகுதியில் 803 வாக்குகளைப் பெற்றார்.[6] 2019 மக்களவைத் தேர்தலில், இவர் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மால்டாஹா தக்ஷின் தொகுதியில் போட்டியிட்டார்.[3] ஆனால் அபு ஹசீம் கான் சவுத்ரியிடம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.[8]
2021 மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில், சவுத்ரி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக ஆங்கில சந்தைத் தொகுதியில் போட்டியிட்டு, தனது நெருங்கிய போட்டியாளரான திரிணாமுல் காங்கிரசை தோற்கடித்து வெற்றி பெற்றார்.[9][10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "National Institute for Gender Justice honours Rani Mukerji with National Award". www .oneindia.com. 4 March 2015. Retrieved 8 July 2019.
- ↑ 2.0 2.1 "Sreerupa Mitra Chaudhury: Sreerupa Mitra Chaudhury BJP from MALDAHA DAKSHIN in Lok Sabha Elections | Sreerupa Mitra Chaudhury News, images and videos". தி எகனாமிக் டைம்ஸ். https://economictimes.indiatimes.com/sreerupa-mitra-chaudhury/candidates/candidateid-7449.cms?from=mdr.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "Sreerupa Mitra Chaudhury(Bharatiya Janata Party(BJP)):Constituency- MALDAHA DAKSHIN(WEST BENGAL) - Affidavit Information of Candidate". myneta.info. Retrieved 17 March 2021.
- ↑ 4.0 4.1 . 18 January 2008.
- ↑ . 18 September 2010.
- ↑ 6.0 6.1 . 29 March 2014.Akram, Maria (29 March 2014).
- ↑ 7.0 7.1 "PM's Nirbhaya Task Force Chairperson Resigns". Echo of India. Archived from the original on 13 May 2014. Retrieved 17 March 2021.
- ↑ . 24 May 2019.
- ↑ "BJP candidate selection Anger elation in three districts". The Statesman. 19 March 2021. https://www.thestatesman.com/bengal/bjp-candidate-selection-anger-elation-three-districts-1502958238.html.
- ↑ "Bengal Elections 2021: BJP frowns at Englishbazar". The Telegraph. 11 April 2021. https://www.telegraphindia.com/west-bengal/west-bengal-assembly-elections-2021-bjp-frowns-at-englishbazar/cid/1812207.