சிறீமன் நாராயண்
சிறீமன் நாராயண் Shriman Narayan | |
---|---|
குசராத்தின் ஆளுநர் | |
பதவியில் 26 திசம்பர் 1967 – 16 மார்ச்சு 1973 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 1912 |
தேசியம் | இந்தியர் |
இருப்பிடம் | குசராத்து, இந்தியா |
சிறீமன் நாராயண் (Shriman Narayan) இந்தியாவிலுள்ள குசராத்து மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் ஆவார்.[1] 1912 ஆம் ஆண்டில் பிறந்த இவர் 1974 ஆம் ஆண்டு வரை வாழ்ந்தார்.[2] மகாத்மா காந்தியின் சிறந்த ஆதரவாளராகவும் சுதந்திர இந்தியாவின் முதல் மக்களவை உறுப்பினராகவும் இவர் இருந்தார்.
இவர் ஒரு சிறந்த கல்வி வாழ்க்கையைக் கொண்டிருந்தார். பின்னர் இவர் கல்விச் சுற்றுலாவை மேற்கொண்டார் மற்றும் ஹவாய், சீனா, ஜப்பான், அமெரிக்கா, கிரேட் பிரிட்டன், பெல்ஜியம், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரியா, செக்கோஸ்லோவாக்கியா, இத்தாலி, கிரீஸ், துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது 18 மாதங்கள் காவலில் வைக்கப்பட்டார். பல்வேறு குழுக்கள், மாநிலத் திட்டக் குழுக்கள், பல்கலைக்கழகங்களில் கல்விக் குழுக்கள் போன்றவற்றில் பல பதவிகளை வகித்தார். காந்திய பொருளாதார சிந்தனையின் உணர்வை ஊக்குவித்து, இவர் 1944ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான காந்திய திட்டத்தை வெளியிட்டார். இத்திட்டத்தில் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தொழில்மயமாக்கலுக்காக, தேசிய திட்டக் குழு (NPC) மற்றும் கனரக மற்றும் பெரிய தொழில்களுக்கு ஒரு முக்கிய பங்கை வழங்கிய பம்பாய் திட்டத்தைப் போலல்லாமல், குடிசை மற்றும் கிராம அளவிலான தொழில்களை ஊக்குவிக்கும் அளவிற்கு மட்டுமே இவர் அதை மேம்படுத்தினார். இவர் பரவலாக்கப்பட்ட பொருளாதார அமைப்பு மற்றும் தன்னிறைவான கிராமங்களை விரும்பினார். இவர் 1933 இல் வாழ்க்கையின் நீரூற்று, ரொட்டி கா ராக் போன்ற கவிதைகள் மற்றும் கட்டுரைகள் பற்றிய புத்தகங்களையும் வெளியிட்டார்.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).