சிறயின்கீழ் வட்டம்
சிறயின்கீழ் வட்டம் | |
|---|---|
வட்டம் | |
| ஆள்கூறுகள்: 8°42′N 76°49′E / 8.70°N 76.82°E | |
| நாடு | |
| மாநிலம் | கேரளம் |
| மாவட்டம் | Thiruvananthapuram |
| பெயர்ச்சூட்டு | சிறயின்கீழ் |
| தலைமையகம் | ஆற்றிங்கல் |
| அரசு | |
| • நிர்வாகம் | கிராம ஊராட்சி நகராட்சி |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 215.61 km2 (83.25 sq mi) |
| • பரப்பளவு தரவரிசை | 5th |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 3,39,785 |
| • தரவரிசை | 4th |
| • அடர்த்தி | 1,600/km2 (4,100/sq mi) |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்மாக | மலையாளம், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| தொலைபேசி குறியீடு | 0470 |
| வாகனப் பதிவு | KL-16 |
சிறயின்கீழ் வட்டம் (Chirayinkeezhu taluk) என்பது கேரளத்தின், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு வட்டம் ஆகும். [1][2][3] இது வடக்கே வர்க்கலா வட்டத்துடனும், தெற்கே திருவனந்தபுரம் வட்டத்துடனும் நில எல்லையைக் கொண்டுள்ளது. இதில் 12 ஊராட்சிகளும் ஆற்றிங்கல் நகராட்சியும் அடங்கியுள்ளது. சிறயின்கீழ் வட்டம், புகழ்பெற்ற ஓவியர் ராஜா ரவி வர்மா, கவிஞரும் சமூக சீர்திருத்தவாதியுமான குமரன் ஆசான், நடிகர் பிரேம் நசீர் உள்ளிட்ட பல புகழ்பெற்ற ஆளுமைகளின் பிறப்பிடமாகும்.
உள்ளடங்கிய பகுதிகள்
[தொகு]இந்த வட்டத்தில் 16 கிராமங்களும் ஒரு நகராட்சியும் உள்ளது. [4]
கிராமங்கள்
[தொகு]இந்த வட்டத்தில் ஆலம்கோடு, ஆழூர், சிறயின்கீழ், இடைக்கோடு, கடக்காவூர், கீழடிங்கல், கிளிமானூர், பொங்கநாடு, கூந்தலூர், கொடுவாழன்னூர், முடக்கல், நாகரூர் , பழையகுன்றும்மேல், பெருங்குழி, புளிமத்தூர், வக்கீல்கீழே ஆகிய கிராமங்கள் உள்ளன.[5]
நகராட்சிகள்
[தொகு]இந்த வட்டத்தில் ஆற்றிங்கல் நகராட்சி மட்டுமே உள்ளது.
சுற்றுலாப் பயணிகள் விரும்பும் இடங்கள்
[தொகு]சிறயின்கீழ் வட்டமானது உப்பங்கழிகள், கால்வாய்கள் போன்றவற்றின் வலையமைப்பை கொண்டுள்ளது. இது கேரளத்தின் இயல்பான நிலவியலாகும். மேலும் இப்பகுதியில் பல கோயில்களும் முக்கியமான சுற்றுலாத் தலங்களும் உள்ளன. அவற்றில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
கிளிமானூர் அரண்மனை
[தொகு]

கிலிமானூர் ஜாகீர் (எஸ்டேட்) ஆரம்பத்தில் பிள்ளை இனத்தைச் சேர்ந்த ஒரு குறுநில மன்னருக்குச் சொந்தமாக இருந்தது; பின்னர் மகாராஜா மார்த்தாண்ட வர்மர் காலத்தில் அது திருவிதாங்கூர் அரசால் கைப்பற்றப்பட்டது. பல கிராமங்களை உள்ளடக்கிய இந்த ஜாகீர், சுமார் 1718-ஆம் ஆண்டில் மலபாரின் பரப்பநாட்டிலிருந்து தெற்கு நோக்கி வந்திருந்த மன்னரின் தந்தையின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கி.பி. 1705-ஆம் ஆண்டில் ( கொல்ல ஆண்டு 880), கோலாத்துநாடு அரச குடும்பத்தைச் சேர்ந்த பேப்பூர் தத்தரிகோவிளகத்தின் இட்டம்மர் ராஜாவின் மகனும் இரண்டு மகள்களும் வேணாடு அரச குடும்பத்தில் தத்தெடுக்கப்பட்டனர். இட்டம்மார் ராஜாவின் சகோதரியும் அவரின் மகன்களான ராம வர்மா மற்றும் ராகவ வர்மா ஆகியோரும் கிளிமானூரில் குடியேறி, அப்போது தத்தெடுக்கப்பட்ட சகோதரிகளைத் திருமணம் செய்துகொண்டனர். திருவிதாங்கூர் இராச்சியத்தை நிறுவிய மார்த்தாண்ட வர்மர், ராகவ வர்மாவின் மகன் ஆவார். மருமகன் சகோதரியின் மகன். அக்காலத்தில் நிலவிய தாய்வழிச் சமூக முறைப்படி, பெண் உறுப்பினர்களுக்குப் பிறந்த குழந்தைகள் மட்டுமே ராகவ வர்மாவின் உடைமைகளுக்கு சொந்தமானவர்களாக இருந்தனர். ரவி வர்மா கோயில் தம்புரான், மார்த்தாண்ட வர்மாவின் சகோதரியை மணந்தார். இவர்களது மகன் தர்மராஜா கார்த்திகை திருநாள் ராமவர்மா என்று பெயர் பெற்றார்.
மார்த்தாண்ட வர்மா மீது பகை கொண்டிருந்த கொச்சி, தெக்கும்கூர், தேச்சிங்கநாடு (தற்போதைய கொல்லம்) , புரக்காடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த படைகள் ஒன்றிணைந்து வேணாடு மீது, 1740-இல், தாக்குதல் நடத்தின. தேசிங்கநாட்டு மன்னருக்கு ஆதரவாக டச்சு கேப்டன் ஹாக்கர்ட் தலைமையில் வந்த இந்தப் படைகளை, கிளிமானூர் படை எதிர்த்துப் போரிட்டுத் தோற்கடித்தது. இது ஒரு சிறிய வெற்றியாக இருந்தாலும், ஒரு இந்தியப் படை ஒரு ஐரோப்பிய வல்லரசைத் தோற்கடித்தது இதுவே முதல் முறையாகும். 1753-ஆம் ஆண்டில், இந்தச் சாதனையைப் பாராட்டி, மார்த்தாண்ட வர்மா கிளிமானூர் அரண்மனையின் கட்டுப்பாட்டில் பகுதிகளுக்கு (இவை தற்போதைய கிளிமானூர் மற்றும் பழயகுன்னும்மேல் ஊராட்சிகளுக்கு உட்பட்டவை) வரி விலக்கு அளித்ததுடன், அவை தனது ராஜ்யத்தின் கீழ் இருந்தபோதிலும் அவற்றுக்குத் தன்னாட்சி உரிமையையும் வழங்கினார். தற்போதைய அரண்மனை வளாகமும், அதனுடன் இணைந்த ஐயப்பன் கோயிலும் இக்காலகட்டத்திலேயே கட்டப்பட்டன. இக்குடும்பத்தின் குலதெய்வமான சாஸ்தா அல்லது ஐயப்பனுக்கான மூலக் கோயில், கோழிக்கோடுக்கு அருகிலுள்ள நேரும்கைதாகோட்டையில் அமைந்திருந்தது.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சிகளைத் திட்டமிடும் போது வேலுத்தம்பி தளவாய் தளவாய் கிளிமானூர் அரண்மனையில் கூட்டங்களை நடத்தினார். இறுதிப் போருக்கு பிரித்தானியரிடம் செல்வதற்கு முன்பு, அவர் தனது வாளை அரண்மனையில் ஒப்படைத்தார். இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான டாக்டர் இராசேந்திர பிரசாத் அந்த வாளை அரண்மனையிலிருந்து பெற்றுக்கொண்டார். அது தில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. அதன்பிறகு அந்த வாள் திருவனந்தபுரத்தில் உள்ள நேப்பியர் அருங்காட்சியகத்திற்கு மாற்றப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Chirayinkeezh". Archived from the original on 8 November 2009. Retrieved 23 April 2010.
- ↑ "Villages of Chirayinkeezhu taluk | District Thiruvananthapuram, Government of Kerala | India" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2026-08-06.
- ↑ "Chirayinkeezhu, Taluk. Panchayat, Thiruvananthapuram District, Kerala, India". Kerala Tourism (in ஆங்கிலம்). Retrieved 2026-08-06.
- ↑ Villages and municipalities பரணிடப்பட்டது 8 நவம்பர் 2009 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Kerala Hotels". Archived from the original on 13 July 2011. Retrieved 23 April 2010.