இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 523: வரிசை 523:
# ம.பொ. சிவஞானம் விடுதலைப் போரில தமிழ் வளர்ந்த வரலாறு (சென்னை, 1997), ப. 196
# ம.பொ. சிவஞானம் விடுதலைப் போரில தமிழ் வளர்ந்த வரலாறு (சென்னை, 1997), ப. 196
# இ ஊ.ஐ.னு சுநிழசவ இஏழட-5இ(ளநஉசநவ)இ 1908 – 9
# இ ஊ.ஐ.னு சுநிழசவ இஏழட-5இ(ளநஉசநவ)இ 1908 – 9
# ம. பொ. சிவஞானம், விடுதலைப் போரில் தமிழகம், ப. 210
# ம.பொ.சிவஞானம், விடுதலைப் போரில் தமிழகம், ப. 210
# ம.பொ. சிவஞானம் விடுதலைப்போரில தமிழ் வளர்ந்;த வரலாறு (சென்னை,பூங்கொடி பதிப்பகம், 1997) . 90-91.
# ம.பொ.சிவஞானம், விடுதலைப் போரில தமிழ் வளர்ந்த வரலாறு (சென்னை, பூங்கொடி பதிப்பகம், 1997) பக். 90-91.
# ம.பொ.சிவஞானம், விடுதலைப் போரில் தமிழகம், பக். 219, 228
# ம.பொ.சிவஞானம், விடுதலைப் போரில் தமிழகம், பக். 219, 228
# மே.கூ ப. 233
# மே.கூ ப. 233
# ந.முடிகோமதி,சட்டமன்றத்தில்அண்ணா(சென்னை:மணிவாசகர் பதிப்பகம்,1998), ப.207
# ந.முடிகோமதி, சட்டமன்றத்தில் அண்ணா (சென்னை, மணிவாசகர் பதிப்பகம், 1998), ப.207
# இருவார அறிக்கை, 17 ஆகஸ்ட் 1917 (குழசவniபாவடல சுநிழசவஇ புழஎநசழெச ழக ஆயனசயள வழ வாந புழஎநசழெச புநநெசயட ழக ஐனெயை) தமிழ்நாடு ஆவணக் காப்பகம், த.ஆ.கா)
# இருவார அறிக்கை, 17 ஆகஸ்ட் 1917 (குழசவniபாவடல சுநிழசவஇ புழஎநசழெச ழக ஆயனசயள வழ வாந புழஎநசழெச புநநெசயட ழக ஐனெயை) தமிழ்நாடு ஆவணக் காப்பகம், த.ஆ.கா)
# மே.கூ. 5 அக்டோபர் 1917
# மே.கூ. 5 அக்டோபர் 1917
# தமிழரசு,மார்ச்,2006,பப.68-69
# தமிழரசு, மார்ச் 2006, பக். 68-69
# அ.இறையன்,சுயமரியாதை சுடரொளிகள்(சென்னை,1981),ப.3
# அ.இறையன், சுயமரியாதை சுடரொளிகள் (சென்னை, 1981), ப. 3
# சாமி சிதம்பரனார், தமிழர் தலைவர்:பெரியார் ஈ.வெ.ரா வாழ்க்கை வரலாறு,(சென்னை,1997), ப.64
# சாமி சிதம்பரனார், தமிழர் தலைவர்:பெரியார் ஈ.வெ.ரா வாழ்க்கை வரலாறு, (சென்னை, 1997), ப.64
# [[மதுரை]] ஸ்ரீனிவாஸவரதன் வாக்குமூலம் அரசியல் பிரசித்தி பெற்றவர்கள் வாக்குமூலம், ப.2 (த.ஆ.கா) (Pநசளழயெட ளவயவநஅநவெ ழக Pழடவைiஉயட Pநசளழயெடவைநைள)
# [[மதுரை]] ஸ்ரீனிவாஸவரதன் வாக்குமூலம் அரசியல் பிரசித்தி பெற்றவர்கள் வாக்குமூலம், ப.2 (த.ஆ.கா) (Pநசளழயெட ளவயவநஅநவெ ழக Pழடவைiஉயட Pநசளழயெடவைநைள)
# [[மதுரை]] ஜில்லா தியாகிகள் மலர் ([[மதுரை]] சுதந்திர பிரசுராலயம,; 1983) ப. 39.
# [[மதுரை]] ஜில்லா தியாகிகள் மலர் ([[மதுரை]] சுதந்திர பிரசுராலயம, 1983) ப. 39.
# மே. கூ. பப. 32-33.
# மே.கூ.பக். 32-33.
# அரசு ஆணை எண் 2852, பொதுப் பணித்துறை, 7 டிசம்பர் 1927, நவசக்தி, 7 செப்டம்பர், 1927
# அரசு ஆணை எண் 2852, பொதுப் பணித்துறை, 7 டிசம்பர் 1927, நவசக்தி, 7 செப்டம்பர், 1927
# நியூ இந்தியா, 7 நவம்பர்1927
# நியூ இந்தியா, 7 நவம்பர் 1927
# இந்து, 2 பிப்ரவரி1928
# இந்து, 2 பிப்ரவரி 1928
# இந்து 20 அக்டோபர் 1927
# இந்து, 20 அக்டோபர் 1927
# னுயஎனை யுசழெடனஇ யேவழையெடளைஅ யனெ சுநபழையெட Pழடவைiஉளஇ வுயஅடையெனரஇ ஐனெயைஇ (ளுரளளநஒ ருniஎநசளவைலஇ 1973), ப. 178.
# னுயஎனை யுசழெடனஇ யேவழையெடளைஅ யனெ சுநபழையெட Pழடவைiஉளஇ வுயஅடையெனரஇ ஐனெயைஇ (ளுரளளநஒ ருniஎநசளவைலஇ 1973), ப. 178.
# இருவார அறிக்கை, 3 பிப்ரவரி 1939.
# இருவார அறிக்கை, 3 பிப்ரவரி 1939.
# சட்டமறுப்பு இயக்கம் 1930-31 (இரகசியமானது) பப. 164-65 (ஊiஎடை னுளைழடிநனநைnஉந ஆழஎநஅநவெஇ உழகெனைநவெயைட)
# சட்டமறுப்பு இயக்கம் 1930-31 (இரகசியமானது) பக். 164-65 (ஊiஎடை னுளைழடிநனநைnஉந ஆழஎநஅநவெஇ உழகெனைநவெயைட)
# இளைஞர் இந்தியா, 22 மே 1930 (லுழரபெ ஐனெயை) உதவி செயலாளர் பத்திர கோப்பு எண் 699 ஜி, 1930
# இளைஞர் இந்தியா, 22 மே 1930 (லுழரபெ ஐனெயை) உதவி செயலாளர் பத்திர கோப்பு எண் 699 ஜி, 1930
# இந்து,4 ஜீன் 1931
# இந்து, 4 ஜூன் 1931
# இளைஞர் இந்தியா, 22 மே 1930
# இளைஞர் இந்தியா, 22 மே 1930
# இருவார அறிக்கை,4 ஜீன் 1930
# இருவார அறிக்கை, 4 ஜூன் 1930
# மே. கூ., 18 ஏப்ரல் 1930: உதவி செயலாளர் பத்திர கோப்பு எண் 683 ஏ,30 ஏப்ரல் 1930
# மே. கூ., 18 ஏப்ரல் 1930: உதவி செயலாளர் பத்திர கோப்பு எண் 683 ஏ, 30 ஏப்ரல் 1930
# காங்கிரஸ், 22 ஏப்ரல் 1930: இந்து, 4 ஜீன் 1931
# காங்கிரஸ், 22 ஏப்ரல் 1930: இந்து, 4 ஜீன் 1931
# இருவார அறிக்கை,6 மே 1930: உதவி செயலாளர் பத்திர கோப்பு எண் 683,ஏ,30 ஏப்ரல் 1930
# இருவார அறிக்கை, 6 மே 1930: உதவி செயலாளர் பத்திர கோப்பு எண் 683 ஏ, 30 ஏப்ரல் 1930
# இளைஞர் இந்தியா, 8 மே 1930; : உதவி செயலாளர் பத்திர கோப்பு எண் 683,வி,20 மே 1930
# இளைஞர் இந்தியா, 8 மே 1930; உதவி செயலாளர் பத்திர கோப்பு எண் 683வி, 20 மே 1930
# சட்டமறுப்பு இயக்கம் 1930-31, ப.67
# சட்டமறுப்பு இயக்கம் 1930-31, ப.67
# இருவாரஅறிக்கை,4 ஜீன் 1930;: சென்னை சட்டசபைவிவாதம்,நவம்பர்1930-ஜனவரி1931, பப.147-49
# இருவார அறிக்கை, 4 ஜீன் 1930, சென்னை சட்டசபை விவாதம், நவம்பர் 1930-ஜனவரி 1931, பக். 147-49
# சட்டமறுப்பு இயக்கம் 1930-31, ப.67
# சட்டமறுப்பு இயக்கம் 1930-31, ப.67
# தளவாய்,சுதந்திரப்போராட்டத்தியாகிசொற்பொழிவு,14ஆகஸ்ட்1992, அன்னைதெரசாமகளிர் பல்கலைக்கழகம்:தமிழரசு,16 ஆகஸ்ட்,1991
# தளவாய், சுதந்திரப் போராட்டத் தியாகி சொற்பொழிவு, 14 ஆகஸ்ட் 1992, அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்: தமிழரசு, 16 ஆகஸ்ட், 1991
# சட்டமறுப்பு இயக்கம் 1930-35,(இரகசிய செய்திகள் கோப்பு)
# சட்டமறுப்பு இயக்கம் 1930-35, (இரகசிய செய்திகள் கோப்பு)
# உதவி செயலாளர் பத்திர கோப்பு எண் 699 ஜி, 1930
# உதவி செயலாளர் பத்திர கோப்பு எண் 699 ஜி, 1930
# நவசக்தி, 31 டிசம்பர்1930
# நவசக்தி, 31 டிசம்பர் 1930
# சட்டமறுப்பு இயக்கம் 1930-31, ப.67
# சட்டமறுப்பு இயக்கம் 1930-31, ப.67
# [[மதுரை]] ஜில்லா தியாகிகள் மலர், ப.45
# [[மதுரை]] ஜில்லா தியாகிகள் மலர், ப.45
# இருவார அறிக்கை, 19 மார்ச் 1931
# இருவாரஅறிக்கை,19 மார்ச்1931
# [[மதுரை]] ஜில்லா தியாகிகள் மலர்,ப.48
# [[மதுரை]] ஜில்லா தியாகிகள் மலர், ப.48
# ப.சோழநாடன்,கொடுமுடிகோகிலம்கே.பி.சுந்தராம்பாள் (சென்னை:ரிஷபம் பதிப்பகம்,2002),பப34-63
# ப.சோழநாடன், கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள் (சென்னை, ரிஷபம் பதிப்பகம், 2002), பக். 34-63
# தமிழரசு,16ஆகஸ்ட்,1991,பப.22-23
# தமிழரசு, 16 ஆகஸ்ட், 1991, பக். 22-23
# திரு.வி.க.வாழ்க்கைக்குறிப்புகள், (சென்னை,1981),பப.156-159
# திரு.வி.க.வாழ்க்கைக் குறிப்புகள், (சென்னை, 1981), பக். 156-159
# ம. பொ. சிவஞானம், விடுதலைப்போரில் தமிழகம், ப.161
# ம. பொ.சிவஞானம், விடுதலைப் போரில் தமிழகம், ப.1 61
# சென்னை சட்டசபை விவாதம், மார்ச்1932, ப.396,ஆகஸ்ட் 1932,ப.43
# சென்னை சட்டசபை விவாதம், மார்ச் 1932, ப. 396, ஆகஸ்ட் 1932, ப. 43
# அரசு ஆணை எண் 507,பொதுத்துறை,15 ஜீன் 1933
# அரசு ஆணை எண் 507,பொதுத்துறை,15 ஜீன் 1933
# சென்னை சட்டசபை விவாதம், மார்ச் 1932, ப.753
# சென்னை சட்டசபை விவாதம், மார்ச் 1932, ப.753
# சுதந்திரச்சங்கு, 3 ஏப்ரல் 1933
# சுதந்திரச் சங்கு, 3 ஏப்ரல் 1933
# P.N.Pசநஅயடயவாயஇ யேவழையெடளைஅ யனெ றுழஅநn’ள ஆழஎநஅநவெ in ளுழரவா ஐனெயைஇ1917-1947(நேற னுநடாiஇ2003)இp.145
# P.N.Pசநஅயடயவாயஇ யேவழையெடளைஅ யனெ றுழஅநn’ள ஆழஎநஅநவெ in ளுழரவா ஐனெயைஇ1917-1947(நேற னுநடாiஇ2003)இp.145
# பி.என்.பிரேமலதா,இந்தியப்பெண்கள்(கொடைக்கானல்,1997),ப.192
# பி.என்.பிரேமலதா, இந்தியப் பெண்கள் (கொடைக்கானல், 1997), ப. 192
# தினமலர், [[மதுரை]],26 பிப்ரவரி,2004
# தினமலர், [[மதுரை]], 26 பிப்ரவரி, 2004
# மே.கூ,15 ஆகஸ்ட்,1999
# மே.கூ, 15 ஆகஸ்ட், 1999
# ஆனந்தவிகடன், 23 ஜனவரி, 1994
# மே.கூ
# ஆனந்தவிகடன், 23 ஜனவரி,1994


{{இந்திய விடுதலை இயக்கம்}}
{{இந்திய விடுதலை இயக்கம்}}

08:53, 7 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்கு மகத்தானது. மகாத்மா காந்தி அவர்கள் "இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு எழுதப்படும்போது பெண்கள் செய்த தியாகம் முதலிடம் பெறும்" என்று கூறியுள்ளார். ஆனால் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றுப் புத்தகங்களில் பெண்களின் பங்களிப்பு குறிப்பாக தமிழக பெண்கள் பங்கு ஒரு அடிக்குறிப்பு என்ற அளவில் கூட இடம் பெறவில்லை. எனவே இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழக பெண்களின் பங்களிப்பினை வெளி கொணர்வதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கம். இக்கட்டுரை, தமிழ்நாடு ஆவணக் காப்பகத்திலுள்ள முதனிலை ஆவணங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது.

பண்டைக் காலத் தமிழக மகளிர்

தமிழக மகளிர் பண்டையக் காலத்தில் வீர வாழ்க்கை வாழந்தமைக்கு பல குறிப்புகள் உள்ளன. நாட்டுப்புற கதைகள் தமிழகத்தில் பழங்காலத்தில் பெண்ணாட்சி இருந்ததாக தெரிவிக்கின்றன. கி.மு. 3ஆம் நூற்றாண்டில் சந்திர குப்த மௌரிய மன்னரின் அவைக்கு வந்த கிரேக்க தூதன் மெகஸ்தனிஸ், பாண்டிய நாட்டில் அரசி ஒருவர் ஆட்சி செலுத்தியதை பற்றி தமது இண்டிகாவில் பின்வருமாறு எழுதியுள்ளார். முன்பு பாண்டிய நாட்டில் பாண்டேய என்பவள் ஆண்டு வந்தாள். அப்பகுதி 365 கிராமங்களைக் கொண்டது. அந்த நாடு தென் கடல் வரை பரந்திருந்தது. அவளிடம் 500 யானைகள, 4000 குதிரைகள், 18000 ஆட்கள் கொண்ட படை இருந்தது.

மேலும் ஆரவல்லி சூரவல்லி பவளக்கொடி முதலிய கதைகள் பழங்காலத்தில் பெண் ஆட்சி நடைப்பெற்றதை நமக்கு விளக்குவனவாய் அமைந்துள்ளன. வேதகாலத்தில் திராவிடப் பெண்கள் படையில் சேர்ந்திருந்ததாக வரலாற்று பேராசிரியர்கள் சான்று காட்டுக்கின்றனர்; சங்க காலத்தில் கொற்றவை என்ற பெண் தெய்வம் போருக்குரிய தெய்வமாக போற்றப்பட்டது. மகளிர் வீரம் நிறைந்தவர்களாக காணப்படினும் போர்க்களத்திற்கு சென்று பகைவரோடு போர் இடுவதற்கு வாள் ஏந்தி செல்லும் வாயப்பினை தந்தை ஆட்சி சமுதாயம் அவர்களுக்கு கொடுத்ததாக இலக்கிய சான்றுகள் தெரிவிக்கவில்லை. இருப்பினும் பகைவரிடம் இருந்து தாய் நாட்டை காக்க தம் புதல்வர்கள், கணவர் ஆகியோரை தியாகம் செய்வதை பெருமையாகக் கருதினார்கள். வீரத்திற்கு அவர்கள் சற்றும் குறைந்தவர்கள் இல்லை என்று பின் வரும் புறநானூற்றுப் பாடல் தெளிவுறுத்துகிறது.

இவளுடைய துணிவு நினைத்தாலே அச்சத்தை கொடுக்கிறது. மறக்குடிமகள் என்பது முற்றிலும் பொருத்தமே. முன்னர் நடந்த போரிலே தந்தை போர்க்களத்தில் யானைகளை கொன்று வீர மரணம் எய்தினான். நேற்று நடந்த போரில் இவள் கணவன் திரளான ஆநிரைகளை காத்து அப்போரில் மாண்டான். இப்போதும் போர்பறை கேட்டு மகிழ்ந்து தன் ஒரே மகனை அழைத்து அவன் குடுமிக்கு எண்ணெய் தடவி வெள்ளாடை அணிவித்து வெற்றியை தரும் வேலினை கையில் கொடுத்து போர் முனை நோக்கி செல்க என போக விடுகின்றாளே என்னே இவளுடைய வீரம்.

என்று வியந்து பாராட்டுகிறது.


புறநானூற்றில் வேறோரிடத்தில் இடம் பெற்ற சம்பவம் ஒரு வீரனுடைய தாய் தன் மகன் இறந்த திறத்தைக்காண போர்க்களம் சென்றாள். அங்கு எதிர்த்த பகைவர்களைக் கொன்று முடிவில் உடல் வெட்டுண்டு சிதறிக் கிடந்த தன் மகனுடைய வீரச்சிறப்பை கண்டு அப்பெருமிதத்தால் அவளுடைய வற்றிய மார்புகள் மீண்டும் பாலூறிச் சுரந்ததாக ஒளவையார் கூறுகிறார். வயது முதிர்ந்த ஒரு தாயுடைய மகன் போர்க்களத்திற்கு சென்றிருந்தான். அவன் பகைவர் படைக்கண்டு அஞ்சி முதுகில் புண்பட்டு இறந்தான் என்று சிலர் அத்தாயிடம் கூறினர். இதைக் கேட்டவுடன்

காக்கை பாடினியார் பாடுகிறார்.

பெண்ணெருத்தி ஒரு தாயிடம் சென்று உன் மகன் எங்குள்ளான் என்று கேட்கிறாள். அத்தாய் “புலி தங்கி விட்டு சென்ற குகைபோல பெற்றெடுத்த வயறு இங்கே உள்ளது. ஆனால் அவன் போர்க்களத்தில் தான் காணப்படுவான். ஆதலால் அங்கு சென்று காண்பாயாக.” என்று கூறுகின்றாள். மேலும் தன் ஒரே மகனைப் போருக்கு அனுப்பிய தாய் தன் மகன் மார்பில் வேல் பட்டு ஊடுருவி சென்ற புண்ணை புறப் புண்ணென கருதி நாணிச் சூளுரைத்தது பற்றிய செய்தியும் புறப்பாடலில் காணப்படுகின்றது. எனினும் போர்க் காலத்தில் பசு, அந்தணர், நோயாளிகள், முதியோர் ஆகிய வலுவற்றவர்களுடன் பெண்களும் பாதுகாப்பான அரண்களுக்குள் சேர்க்கப்பட்டனர்.

சங்க காலத்தில் பெண்கள் நிலை மிகச் சிறப்பாக இருந்தாலும் காலப்போக்கில் தலைகீழாக மாறியது. கணவன் இறந்தவுடன் மனைவி உயிரோடு உடன்கட்டை ஏறவேண்டும். கைம்பெண் மறுமணம் ஒழுக்கக்கேடு என கருதப்பட்டது. குழந்தைமணம், பொருந்தாமணம், பன்மகளிர்மணம் ஆகிய சமுதாய சாபக்கேடுகள் இந்திய பண்பாட்டில் வலுவுடன் ஆதிக்கம் செலுத்தின. பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. ஒரு பக்கத்தில் பெண்கள் கற்பை காக்கவேண்டுமென்ற பேரில் பல கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். மறுபக்கத்தில் கடவுளரின் பெயரில் பெண்களுக்கு பொட்டு கட்டுப்பட்டது. விலை மாதர்களாக பெண்கள் கற்பு விற்கப்பட்டது. இன்னும் பல கொடுமைகளுக்குள்ளாகி பெண் உலகம் தத்தளித்துக் கொண்டிருந்தது.

இவ்வாறாக பெண்கள் நிலை மிக மோசமாக இருந்தபோதிலும் பெண்கள் ஆட்சி பொறுப்பு வகித்துள்ளமைக்கு பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மதுரையை ஆண்ட இராணி மங்கம்மாள், இராணி மீனாட்சி, சிவகங்கை இராணி வேலு நாச்சியார் மற்றும் வெள்ளச்சி நாச்சியார் ஆவார்கள.

இராணி மங்கம்மாள் நாயக்கர் மரபில் வந்த பேரரசி. அவள் அமைத்த சாலைகளாலும், வெட்டிய குளங்களாலும், செப்பனிட்ட கால்வாய்களாலும், கட்டிய சத்திரங்களாலும் மங்கம்மாள் பெயர் இன்றும் மங்காமல் இருக்கிறது. சாதுரியமாக முகலாய பேரரசிடம் நடந்து தஞசை நாட்டை அவர்களுடைய படை உதவியால் மீட்டுக்கொண்டாள். மதவெறி பிடித்த ஒளரங்கசீப் வாழ்ந்தகாலத்தில் ஆட்சி செய்தபோதிலும் இராணிமங்கம்மாள் எம்மதமும் சம்மதம் என்ற சர்வ சமய சமரச கொள்கையைப் பின்பற்றி வரலாற்றில் மங்காத இடத்தை பிடித்தாள்.

அந்நிய ஆட்சியின் கொடுமைகளால் அவதியுற்று அடிமைப்பட்டு கிடந்த இந்திய நாட்டின் அடிமைத்தனத்தினை அகற்ற போராடிய வீரர்கள் பலர். தமிழ்நாடும் பல வீரர்களை அளித்த பெருமைக்குரியது. இங்கு பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட கட்டப்பொம்மன் என்ற பாளையக்காரன் ஆங்கிலேயருக்கு எதிராக புரட்சி செய்தமையால் தூக்கு தண்டனை பெற்று தூக்குக் கயிற்றை முத்தமிட்டு ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து முதன்முதலில் தீபகற்ப கூட்டமைப்பை உருவாக்கி புரட்சி செய்த பெருமை தமிழ்நாட்டையேச் சேரும். சிவகங்கை தலைநகரான காளையார்கோயிலை கிழக்கிந்திய கம்பெனியின் படை முற்றுகையிட்டபோது சிவகங்கை மன்னரின் மனைவியான வேலுநாச்சியார் வீரத்தோடு எதிர்த்ததன் மூலம் தமிழக மகளிர் வீரத்தில் குறைந்தவர்கள் இல்லையென்பதை நிரூபித்தார். ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையும் வேலுநாச்சியாருக்கே உரித்தாகும்.

பின்னர் 1806-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10-ஆம் தேதி அதிகாலையில் வேலூர் படைவீரர்கள் புரட்சி செய்தனர். சுமார் 8 மணிநேரம் நடைபெற்ற இப்புரட்சியில் வேலூர் நகர ஆண்களும் பெண்களும் பங்கு கொண்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் தேசியம் தழுவிய போராட்டம் 1885 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசால்தான் ஏற்பட்டது.

இக்காலக் கட்டத்தில் பல சமூக சீர்திருத்த இயக்கங்கள் தோன்றின. சமூக சீர்திருத்தவாதிகள் பெண்களுக்தெதிரான கொடுமைகளை கடுமையாகச் சாடினர். அதன் விளைவு 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே பெண்கள் நிலையில் மாற்றம் காணத் தொடங்கியது. சட்டங்கள் இயற்றப்பட்டன. பெண் கல்வி புகட்டப்பட்டது. நான்கு சுவருக்குள் அடைப்பட்டிருந்த பெண்கள் வெளியுலகைப் பார்த்தனர்.

சுதேசி மற்றும் அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு இயக்கம்

ஆங்கில ஆட்சியின்பால் அதிருப்தி கொண்ட காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்த பலர் வெறும் விண்ணப்பங்களையும் வேண்டுகோள்களையும் அரசுக்குச் சமர்ப்பிப்பதால் பெரிய மாறுதல் எவையும் ஏற்படப் போவதில்லையென்றும், இதர பல நேரடி நடவடிக்கைளில் ஈடுபட்டுப் போராடுதல் அவசியம் என்றும் கருதிக்கொண்டிருந்தார்கள். அவ்வெண்ண எழுச்சியின் பிரதிபலிப்பாக 1906-ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் சுயராஜ்யம், சுதேசி, தேசியக்கல்வி, அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆங்கில அரசு பிரித்தாளும் தந்திரத்தைக் கையாளத் தொடங்கியது. வங்கப்பிரிவினை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு 1905-ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் வெளியிடப்பட்டது. அச்சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட அக்டோபர் திங்கள் 16 ஆம் நாள் தேசியத் துக்க நாள் என அறிவிக்கப்பட்டது. பிரம்மாண்டமான பேரணியொன்றும் கல்கத்தாவில் நடத்தப்பட்டது. வந்தேமாதரம் என்னும் தாரக மந்திரம் விண்ணதிர முழங்கப்பட்டது. பல இரகசிய சங்கங்கள் நாடு முழுவதும் தோற்றுவிக்கப்பட்டு போராட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டன. ஆங்கில அரசும் தங்களாலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு புரட்சிப் போராட்டங்களை ஒடுக்க முற்பட்டது. முக்கியத் தலைவர்கள் சிலர் எவ்வித விசாரணையுமின்றி நாடு கடத்தப்பட்டார்கள். சிலரை சிறையில் அடைத்து சித்ரவதை செய்தனர்.

காங்கிரஸ் பேரியக்கத்தால் நடத்தப்பட்ட இந்த எழுச்சிமிக்கப் போராட்டத்தில், தமிழ் நாட்டைச் சேர்ந்த பெண்கள் நேரடியாகப் பங்கு கொண்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை எனினும் இயக்க நடவடிக்கைகளை வெகு உன்னிப்பாகக் கவனித்து அப்பேரியக்கத்திற்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வந்துள்ளனர். காலப்போக்கில் தங்களால் இயன்ற ஒத்துழைப்பை நல்கி தங்களது கணவன்மார்களுக்கு உறுதுணையாக விளங்கி பல இன்னல்கள் அனுபவித்து பட்டிணியால் வாடியதாக சான்றுகள் பல உள்ளன.

வ. உ. சிதம்பரம்பிள்ளை அவர்களின் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்ட சுதேசி கப்பல் நிறுவனம் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளது. அந்நிறுவனம் தொடங்கும் பொருட்டு தமிழ்நாட்டிலுள்ள ஏராளமான பெண்கள் தங்கள் நகைகளை அடகு வைத்தும் சொந்த பணத்தைக் கொடுத்தும் பங்குகள் வாங்கியும் உதவியுள்ளனர். 6 சுதேசி கப்பல் நிறுவனம் "காலியா"’ "லாவோ"’ என்னும் பெயருடைய இரு கப்பல்களை வாங்கியது. இம்முயற்சியில் வெற்றி பெற்ற வீரர் சிதம்பரனாரை இந்தியாவிலுள்ள தேசிய பத்திரிக்கைகளெல்லாம் பாராட்டின. பாரதியாரின் "இந்தியா" பத்திரிக்கையிலே "வந்தேமாதரம்" எனும் மந்திரச் சொல் பொறித்த கொடியுடன 'காலியா' 'லாவோ' கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்தை அணுகுவது போலவும், ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கூடி 'வீர சிதம்பரம் வாழ்க' எனக் கோஷித்து கப்பல்களை வரவேற்பது போலவும் கார்ட்டூன் பிரசுரிக்கப்பட்டது. இச்செய்தி பெண்களும் இவ்வியக்கத்தில் ஈடுபட்டுள்ளதைச் சுட்டிக் காட்டுவதாக உள்ளது.7 திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்புக்குப்பின் சிதம்பனாரையும், சுப்புரமணியசிவாவையும், போலீஸ் படையினர் பாளையங்கோட்டைச் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர். தம்மைக் கண்டு விம்மியழுத மனைவியைப் பார்த்து "மீனாட்சி பயப்படாதே! விரைவில் வந்து விடுகிறேன்"’ என்று 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சிதம்பரனார் ஆறுதல் கூறினார்.

சிதம்பரனார் அவர்கள் சிறையில் பல கொடுமைகளுக்குள்ளாக்கப்பட்டார். அவரின் தண்டனையைக் குறைக்கும் பொருட்டு அவர் மனைவி மீனாட்சியம்மாள் ஆளுநர், வைசிராய் மற்றும் இங்கிலாந்து மன்னருக்கு தந்தியும், மனுவும் அனுப்பி வேண்டுகோள் விடுத்தார். மேலும் செல்வச் சீமானின் மனைவியான மீனாட்சியம்மாள், தன் கணவரின் விடுதலையின் பொருட்டு வழக்கு நடத்தியதால் தங்கள் நிதிநிலை மோசமாக உள்ளதாகவும், இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அவர் விடுதலை பெறும் வாய்ப்புள்ளதாகவும் அதற்காக ரூ.10,000 தேவைப்படும் என்றும் தன் கணவரின் மேல் அன்பு கொண்ட பலர் அவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்ததற்கு நன்றி தெரிவித்தும், தற்போதைய இயலாத சூழ்நிலையை தெரிவித்தும், உதவி கேட்டு 1908-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பத்திரிக்கைளில் விளம்பரப்படுத்திய செய்தியை படிப்போர் யாவரும் கண்கலங்கும்படியாக இருந்தது.

சிறையில் அவரை படாதபாடு படுத்தினர். அதனை தாங்கிகொள்ள இயலாதவராகி சிதம்பரனார் தன்னை தண்டனைக்கேற்ப அந்தமான் தீவுக்கே அனுப்புமாறு வைஸ்ராய்க்கு மனுசெய்தார். தன் கணவர் சிறையில் அனுபவிக்கும் கொடுமைகளைப் பார்த்து வேதனையுற்ற மீனாட்சியம்மாள் தன் கணவரை தமிழ்நாட்டுச் சிறைகளில் வைத்து கொடுமை படுத்துவதைவிட அந்தமானுக்கே அனுப்புமாறு இங்கிலாந்து மன்னருக்கே மனுசெய்தார். ஒரு தேச பக்தனின் மனைவியின் துயரத்திற்கு இவ்வம்மையாரின் வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டு. இவ்வாறுதான் ஒவ்வொரு தேசபக்தனின் மனைவியரும் நாட்டுப்பணிக்காக தங்கள் கணவன்மார்களை அற்பணித்துவிட்டு துயர வாழ்க்கை வாழ்ந்தனர்.

தேசியகவி சுப்பிரமணிய பாரதியின் மனைவி செல்லம்மாள் பட்ட துயரம் எழுத்தால் வடிக்க முடியாதது. வத்தலக்குண்டில் பிறந்தவரான சுப்பிரமணிய சிவா தமக்கு வாழ்க்கைப்பட்ட மனைவி மீனாட்சியம்மாளைத் துறந்து ஈன்று வளர்த்த அன்னையையும் மறந்து தேச விடுதலைப் போரில் அயராது ஈடுபட்ட அப்பழுக்கற்றவர். அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் அவரிடம் சிறை அதிகாரிகள் கடுமையாக வேலை வாங்கினர். அந்நாளில் சிறைகளிலே தேசபக்தர்கள் அடைக்கப்பட்டிருந்த அறைகளில் இரவு நேரங்களில் படிக்கவும், எழுதவும் விளக்கு வசதி தரப்படவில்லை. பகலில் கடுமையான உழைப்பு. இச்சூழ்நிலையில் பட்டினியால் அவதிப்பட்டு கொண்டிருந்த தன் மனைவி மீனாட்சியின் துயர் துடைக்க "சச்சிதானந்த சிவம்"’ என்ற அரிய வேதாந்த நூலை, தமது சிறை வாசத்தின்போது இயற்றினார். அந்நூலை அவர் இயற்ற காரணமாக இருந்த மிகவும் பரிதாபகரமான அந்த நிகழ்ச்சியை அவரே அந்த நூலின் முன்னுரையில் கூறியுள்ளார்.

“மகான் இயேசு கிறிஸ்துவின் பிரதம சிஷ்யராகிய பீட்டர் என்பவர் வுhந டிநயரவகைரட என்ற சேஷத்திரத்தின் வாயிலிற் செல்லுங்காலத்தில் அங்கு உட்கார்ந்திருந்த இரண்டு கால்களும் இல்லாத ஒரு பிறவி நொண்டி அவரைக் கண்டு பிச்சை கேட்க அவர் ‘’ளுடைஎநச யனெ புழடன hயஎந ஐ ழெநெ டிரவ ளரஉh யள ஐ hயஎந பiஎந ஐ வாநந’’ என்று அவன் கையைப் பிடித்து தூக்கிவிட அவனுக்கு இரண்டு கால்களும் யாவருக்குமிருப்பது போல வளர அவன் பரம சந்தோஷமடைந்து குதித்துக் கொண்டு சென்றான் என்று கிருஸ்துவ வேத புத்தகத்தில் கூறப்பட்டிருக்கின்றது. அதே மாதிரியாக எனது மனைவி என்னைச் சிறைச்சாலையில் கண்டு பேசிய காலத்தில், தான் ஏழ்மைத் தனத்தினால் மிகக் கஷ்டப்படுவதால் தனது கஷ்ட நிவர்த்திக்கு ஓர் உபாயம் செய்து கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ள நானும் ‘’ளுடைஎநச யனெ புழடன hயஎந ஐ ழெநெ டிரவ ளரஉh யள ஐ hயஎந பiஎந ஐ வாநந’’ என்று கூறி எனது சற்குருமுகத்தினின்றும் கேட்டு, அறிந்து அனுபவித்தவைகளை ஒரு புத்தக ரூபமாய் எழுதி அவளது துக்க நிவர்த்தியின் பொருட்டு அளிக்கின்றேன்’’ என்று 1911-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15-ஆம் நாள் சிவா அவர்கள் சேலம் மத்திய சிறைச்சாலையிலிருந்தபோது எழுதியுள்ளார். அப் புத்தகத்தை விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் தன் மனைவி பிழைக்கட்டும் என்று கருதினார். ஆனால் அப்புத்தகம் அதிகம் விற்பனையாகவில்லை.

திருநெல்வேலி சதி வழக்கு

தேச பக்தர்கள் சிறையில் அனுபவித்து வந்த கொடுமைக்கெல்லாம் காரணமான ஆஷை 1911-ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் நாள் மணியாச்சி இரயில் நிலையத்தில் வைத்து வாஞ்சிநாதன் என்ற 25 வயது நிரம்பாத வாலிபன் சுட்டு கொன்றுவிட்டு தானும் மாண்டான். இச்சம்பவம் தமிழ்நாட்டையும் பாரதத்தையும் அதிற்சிக்குள்ளாக்கியது. பத்திரிக்கைகள் ஆஷ் கொலையை கண்டித்தும் திருமதி ஆஷ்க்கு ஆறுதல் கூறியும் தலையங்கங்கள் வெளியிட்டன. ஆனால் பாரிஸ் நகரிலிருந்து வெளிவந்த வந்தே மாதரம் பத்திரிக்கை “இந்திய மக்கள் உறங்கி கொண்டிருக்கவில்லை என்பது ஆஷ் கொலையால் உறுதிபடுகிறது” என்று எழுதியது. அப்பத்திரிக்கை ஆசிரியையான மேடம் காமா மராட்டி மாநிலத்தைச் சேர்ந்த பார்சி பெண்மணி; வெளிநாட்டிலிருந்தவண்ணம் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்.

ஆஷ் கொலையுண்ட பின்னர் செங்கோட்டையிலுள்ள வாஞ்சிநாதனின் வீடு சோதனையிடப்பட்டது. அவர் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நாற்பதுபேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இருவர் பெண்கள். அவ்விருவரும் விசாரணைக்குப்பிறகு விடுதலைச் செய்யப்பட்டனர். ஒரு தேசபக்தரை திருமணம் செய்ததால் பருவமடைந்த நாளிலிருந்து கைம்பெண் வாழ்க்கை வாழ்ந்து வந்த வாஞ்சியின் மனைவி பொன்னம்மாளுக்கு திரு.அண்ணாதுரை அவர்கள் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு ஓய்வுகால ஊதியம் வழங்கி கௌரவித்தார்.

சுயஆட்சி இயக்கம்

சமூக கட்டுப்பாட்டிற்குள்ளாகி அடைப்பட்டுக் கிடந்த தமிழக மகளிரை அரசியலில் ஈர்த்தது அன்னிபெசன்ட் என்ற அயர்லாந்து அம்மையாரால் காங்கிரஸின் ஆதரவோடு 1916-இல் சென்னையில் தொடங்கப்பட்ட சுயஆட்சி இயக்கமாகும். ஆங்கில அரசை எதிர்த்து இந்தியா சுய ஆட்சி பெறவேண்டுமென்று போர்க்கொடி தூக்கியமையால் இவர் சிறை வைக்கப்பட்டார். இவ்வம்மையாரின் கைது ஏராளமான பெண்களை இவர் இயக்கத்தில் சேருமாறு தூண்டியது. அதில் குறிப்பிடத் தக்கவர் பம்பாய் மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த மாணவி சிவகாமு அம்மா ஆவார். தான் மருத்துவராகி நாட்டிற்கு சேவை செய்வதைவிட இப்போராட்டத்தின் மூலம் ஏராளமான தேச சேவை செய்ய முடியமென்றுணர்ந்து படிப்பை விட்டுவிட்டு 1917-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை வந்தார்15. அம்மையார் கைதினை கண்டித்து சென்னையைச் சேர்ந்த சுமார் 300 பெண்கள் திருமதி டாரதி ஜீன ராசதாஸா தலைமையில் செம்டம்பர் 14-ஆம் நாள் பொதுக் கூட்டம் கூட்டினர். அக்கூட்டத்தில் சிவகாமு அம்மாள் சொற்பொழிவு ஆற்றினார். அதைத் தொடர்ந்து அன்னிபெசன்ட் அம்மையார் படமும் சுயஆட்சி கொடியும் கையில் ஏந்தி தடை உத்தரவையும் மீறி பெண்கள் ஊர்வலமாகச் சென்றார்கள். பின்னர் அம்மையார் விடுதலை பெற்று சென்னை வந்தபோது ஏராளமான பெண்கள் அவரை சூழ்ந்து வாழ்த்துத் தெரிவித்தனர்.16 இதுவே நீண்ட நாள் அமைதிக்குப்பிறகு தமிழகப் பெண்டிர் அரசியலில் அடிவைத்த சம்பவமாகும். இவரின் சேவையை பாராட்டி 1917 ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற 32-வது காங்கிரஸ் மகாசபை கூட்டத்திற்கு தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமது உரையின் முடிவில் பின்வருமாறு கூறினார்.

"சகோதர சகோதரிகளே உங்கள் வாய்கள்
இந்திய விடுதலை பற்றியே பேசட்டும்
உங்கள் காதுகள் இந்திய விடுதலை பற்றிய
செய்திகளையே கேட்கட்டும்
உங்கள் கண்கள் இந்திய விடுதலைக்கான
நிகழ்ச்சிகளையே காணட்டும்
உங்கள் நெஞ்சங்கள் இந்திய விடுதலை
பற்றியே சிந்திக்கட்டும் -வந்தே மாதரம்"

அதே சமயத்தில் 1917-ஆம் ஆண்டில் சென்னையில் இந்தியப் பெண்கள் சங்கம் என்ற ஒரு தேசிய அமைப்பு பெண்கள் நலனைக் கருதி ஏற்படுத்தப்பட்டது. அன்னி பெசன்ட் அம்மையார் ஒரு சொற்பொழிவின்போது இவ்வமைப்பு எப்போதும் சுதேசிக்கும் சுயராஜ்யக் கொள்கைகளுக்கும் ஆதரவாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இச் சங்கம் பெண்கள் முன்னேற்றத்தை நாட்டு சுதந்திரத்தோடு இணைத்து, பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு ஆதரவு தெரிவித்தது. ஆனால் இந்திய சுதந்திரத்தையே குறிக்கோளாகக் கொண்டுள்ள இந்திய தேசிய காங்கிரஸில் பெண்களுக்கென்று எந்தப் பணியும் கொடுக்கப்படவில்லை. இத்தருணத்தில் நம் தேசத் தந்தை காந்தியடிகள் இந்திய அரசியலில் ஈடுபட்டார். அவர்தான் இந்தியப் பெண்களுக்கும் சுதந்திரப் போராட்டத்திற்கும் ஒரு திடமான இணைப்பை உண்டு பண்ணினார்.

ஒத்துழையாமை இயக்கம்

காந்தியின் போராட்டம் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது. அதற்கு உடல் சக்தி தேவையில்லை. மன உறுதியே போதும். காந்தி பெண்களுக்கு ஏராளமான மன உறுதி இருப்பதாகக் கருதினார். அதன் முதல்படியாக அவர் தன் மனைவி கஸ்தூரிபாய் காந்தியை தென் ஆப்பிரிக்க சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுத்தினார். தன்னோடு அங்கு சத்யாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த தில்லையாடி வள்ளியம்மை என்ற 17 வயது நிரம்பாத தமிழ் பெண்ணின் வீரஉணர்வை நெஞ்சில் சுமந்து கொண்டிருந்தார்; சிறைக்கொடுமையின் தீவிரப்பிடியில் இருந்த நிலையிலும் "உயிர்போகும் வரையிலும் விடுதலைக்காகப் போராடத் தயார்" என்று பெருமிதத்தோடு கூறிய அவ்வீரச்சிறுமியின் உயிர் 22-2-1914 அன்று பிரிந்தது17

1920-ஆம் ஆண்டு காந்தியின் தலைமையில் நாடு ஒத்துழையாமை இயக்கத்தை தழுவியது. இப்போராட்டம் சத்தியம், அகிம்சை, சாத்வீக எதிர்ப்பு என்ற அடிப்படையில் அமைந்ததால் காந்தியடிகள் பெண்கள் கலந்து கொள்வதை விரும்பினார். பெண்கள், காங்கிரஸ் திட்டங்களான அந்நியத் துணிகளைப் புறக்கணித்தல், அத்துணிக் கடைகள் மற்றும் மதுபானக்கடைகள் இவற்றை மறியல் செய்தல், கதர் துணி நெய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டார்கள். ஒத்துழையாமை இயக்கத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது மதுபான கடைகள் மறியலாகும். இப்போராட்டத்தை ஈரோட்டைச் சேர்ந்த ஈ.வெ. ராமசாமி நாயக்கர் முன்னின்று நடத்தினார். போராட்டம் வெற்றிகரமாக நடைப்பெற்றுக் கொண்டிருந்தபோது சென்னை அரசு அவரையும் மற்றும் பல தொண்டர்களையும் கைது செய்து சிறையிலடைத்தது. பின் அவர் மனைவி நாகம்மாளும், அவர் சகோதரி கண்ணம்மாளும் போராட்டத்தை ஈரோட்டில் தொடர்ந்து நடத்தினர்.

இப்போராட்டத்தை நிறுத்திவிடலாமா என்று காங்கிரஸார் காந்தியடிகளிடம் கேட்டபோது, அவர் "கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை நிறுத்தி விடுவது என்பது என் கையில் இல்லை, அது ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்களிடம் தான் இருக்கிறது" என்று பதிலளிக்குமளவுக்கு இப்பெண்மணிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.18 மேலும் உயர்ந்த பட்டுடுத்தி வந்த இவர்கள் கதராடை உடுத்தினர். ஈ.வே.ரா தமது 80 வயது தாயாரையும் கதர் உடுத்தச்செய்தார்.19

இவ்வியக்கத்தின் இன்னொரு அம்சம், கதர் உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம் அந்நியத் துணிகளைப் புறக்கணித்து அரசுக்கு பெரும் நஷ்டத்தை உண்டு பண்ணவேண்டுமென்பதோடு, நம்மக்கள் பொருளாதார தன்னிச்சை பெறவேண்டும் என்பதாகும். இதை மிகச் சிறப்புடன் நிறைவேற்றியவர் மதுரையைச் சேர்ந்த பத்மாசனி அம்மாள் ஆவார். அம்மையார் தன் கணவர் ஸ்ரீனிவாச வரதன் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு கைதானவுடன் அவர் நடத்தி வந்த பாரத ஆசிரமத்தை திறம்பட நடத்தியதோடு, கதர் விற்கவும், பெண்களை காங்கிரஸ் அங்கத்தினராகச் சேர்க்கவும், பொதுக் கூட்டங்களில் சொற்பொழிவு ஆற்றவும் செய்து வரலானார். தனது கணவர் சிறையிலிருந்து விடுதலையாகி வரும் வரை ஆபரணங்களை கழற்றி வைத்து விட்டார். ஒரு வேளை சாப்பாடு, அதுவும் தனக்கு சாப்பாட்டிற்கு தேவையான வசதியிருந்தும் காலையிலெழுந்து நூல்நூற்று அதில் வரும் வருமானத்தைக் கொண்டுதான் சாப்பிடுவார். மாலையில் வீடு வீடாகச் சென்று கதர் விற்பார். கதர் நெய்வதும், விற்பதும், வாங்குவதும் தண்டனைக்குரிய செயல்களாக இருந்தும், அரசின் ஆணையை மீறி அரசாங்க பதவியிலிருப்பவர்களாயிருந்தாலும் கண்டிப்பாக ஒரு கஜம் துணியாவது வாங்கும்படி செய்து விடுவார். பெண்களை ஒரு முழம் ரவிக்கைத் துணியாவது வாங்கும்படி தூண்டுவார். இவர் சிறந்த பேச்சாளர். தன் சொற்பொழிவுகளில் சில சமயங்களில் 1857-ஆம் ஆண்டு புரட்சி வீரர்களின் சரித்திரங்களை உணர்ச்சியுடன் எடுத்துச் சொல்வார். அதைக் கேட்பவர்கள் ஆங்கில அரசை அறவே ஒழித்துவிடவேண்டுமென்று ஆவேசப்படுவர். சிலர் சபதம் எடுப்பர். அத்தனை சிறப்பு வாய்ந்தது அவர் பேச்சு. இவ்வாறு ஏராளமான சொற்பொழிவுகள் ஆற்றி தமிழ் மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியதோடு ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்களை காங்கிரஸ் அங்கத்தினர்களாகவும் ஆக்கினார்.;20 அம்மையாரின் சலியாத உழைப்பே தமிழகப் பெண்களைத் தட்டி எழுப்பியது.

ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்திய பின்னரும் இவ்வம்மையார், கதர் உற்பத்தியில் தீவிரமாக ஈடுபட்டார். நிர்மாணத் திட்டத்தின் (ஊழளெவசரஉவiஎந Pசழபசயஅஅந) அவசியத்தைக் கருதி கதர் உற்பத்தியை பெருக்க வேண்டுமென்று 1924-ஆம் ஆண்டில் இவ்வம்மையாரும் மேலும் தாயம்மாள், திருமதி. ஜோஸப், திருமதி. சுந்தரமையங்கார், சுப்புலட்சுமி அம்மாள், டி.வி.எஸ். சௌந்தரம் ஆகிய பெண்களும் காங்கிரஸின் உதவியால் மதுரையில் "சகோதரிகள் சங்கம்" என்ற அமைப்பை நிறுவினர். அச்சங்கத்தில் வெள்ளிக்கிழமைதோறும் சுமார் முப்பது பெண்மணிகள் இரண்டு மணிநேரம் நூல் நூர்பார்கள். அவர்களுக்கு வேண்டிய ராட்டினமும் பஞ்சும் தேசியப் பள்ளிக்கூடத்திலிருந்து கொடுக்கப்பட்டு வந்தது. இவர்களுடன் தாயாரம்மாள், சீதையம்மாள், முனியம்மாள், டாக்டர் பிச்சைமுத்து அம்மாள் ஆகியோரும் பணி புரிந்தனர். பல தேசியம் சம்பந்தமான செய்திகளையும் இவர்கள் விவாதித்தார்கள். இங்கு வரும் பெண்களுக்கும் ராட்டின பயிற்சி அளித்ததோடு அவர்களுக்கு கல்வியும் கற்றுக் கொடுத்தனர்21. பின்னால் போராட்ட காலங்களில் ஈடுபட்ட பெண்களுக்கு பெருத்த ஊக்கமளித்தது இச்சங்கம் தான். மேலும் அந்நியத் துணிகளைப் புறக்கணிப்பதற்கு இவர்கள் தொண்டு மிகவும் உதவியது.

நீல் சிலை சத்தியாக்கிரகம்

இச்சத்தியாகிரகம் 1927 ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி சென்னை மவுன்ட் ரோட்டிலுள்ள கர்னல் நீலின் சிலையை அகற்றுவதற்காகத் தொடங்கப்பட்டது. இப்போராட்டத்திற்கு தூண்டுதலாக இருந்த சம்பவம், திருமதி டி.வி.எஸ். சௌந்தரம் அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட "1857 இந்தியாவில் முதல் சுதந்திரப் போராட்ட வரலாறு" என்ற வீரசாவக்கரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு தடை செய்யப்பட்ட புத்தகமாகும். புத்தகம் இருக்கிறது என்று அரசாங்கத்திற்கு தெரிந்தால் உடனே அவர்கள் வீட்டில் சோதனை நடக்கும். எவ்வளவோ கஷ்டங்களிருந்தும் தைரியமாகவும், வெற்றிகரமாகவும் இப்புத்தகத்தை பாண்டிச்சேரியிலிருந்து கொண்டு வந்து இவர் எளிய தமிழில் மொழி பெயர்த்துதவினார்22. இது அம்மையாரின் தேசபக்திக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இப்புத்தகத்தை படித்தபின் தான் கர்னல் நீல் அவர்கள் 1857 புரட்சியின்போது செய்த கொடுமைகள் தெரிய வந்தன. அக்கொடியவன் சிலையை எப்படியாவது அகற்றிவிட வேண்டுமென்ற தேசபக்தி மேலோங்கியது. உடனே ரெ. சுpதம்பர பாரதி, ரா. ஸ்ரீநிவாஸ வரதன், பத்மாசனி அம்மாள் ஆகிய மூவரும் போராட்டத்திற்கான திட்டம் வகுத்து, திருநெல்வேலி சுப்பராயலு நாயிடுவையும், இராமநாதபுரம் முகம்மது சாலியாவையும் போராட்டத்தை தொடங்குவதற்கு அனுப்பத் தீர்மானித்தனர். அவர்களுக்கு சென்னை செல்வதற்குரிய செலவை பத்மாசனி அம்மாள் தன் கொலுசை அடகு வைத்து கொடுத்து உதவினார். இருவரும் ஆகஸ்ட் 11-ஆம் நாள் தேசியக்கொடி, பூமாலை, உளி, சம்மட்டி, ஏணி முதலியவற்றுடன் சென்று சிலையை உடைக்க ஆரம்பித்தனர். சற்றுநேரத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். ஆனாலும் போராட்டம் தொடர்ந்து நடந்தது. பலர் கைதானார்கள். தமிழ்நாட்டின் பல பகுதியிலிருந்தும் பெண்கள் வந்து இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களில் ஒருவரான சேலம் அங்கச்சி அம்மாள் செப்டம்பர் 1-ஆம் நாள் கழுத்தில் மாலையுடனும் கையில் கோடரியுடனும் போலீசை மீறி சிலையை உடைக்கச் சென்றபோது கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலும், 7 ரூபாய் அபராதமும் விதித்து தண்டிக்கப்பட்டார். இப்போராட்டத்தில் கடலூரைச் சேர்ந்த அஞ்சலையம்மாளும் அவர் மகள் அம்மாகண்ணு அம்மாள் என்ற 12 வயது சிறுமியும் செப்டம்பர் 6-ஆம் நாள் கைது செய்யப்பட்டு அஞ்சலையம்மாளுக்கு 25 ரூபாய் அபதாரமும் அதில் தவறினால் ஒருவார கடுஞ்சிறைத் தண்டனையும் அம்மாகண்ணு அம்மாவுக்கு நான்கு வருடம் குழந்தைகள் இல்லத்தில் வைப்பது என்ற தண்டனையும் விதிக்கப்பட்டது.23 அஞ்சலையம்மாவைத் தமிழ்நாட்டில் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. இவர்பேச்சில் பெண்கள் வசீகரிக்கப்பட்டு தேச பக்தி கொண்டவர்களாகி விடுவார்கள். இவரை தென்னாற்காடு மாவட்ட வேலுநாச்சியார் என்று மக்கள் செல்லமாக அழைத்தனர்.

எத்தனையோ தடையுத்தரவுகளைத் தாண்டி இப்போராட்டம் நடைபெறுகையில், சென்னையில் தேசிய காங்கிரஸ் கூடுவதை முன்னிட்டும், சைமன் குழவின் சென்னை வருகையை முன்னிட்டும் நிறுத்தி வைக்கப்பட்டது. இப்போராட்டம் தமிழர்கள் 1857-ஆம் ஆண்டில் நடந்த புரட்சியில் அதிக அளவில் கலந்து கொள்ளவில்லை என்ற குறையை நிவர்த்தி செய்வதோடு, தங்கள் தேச பக்தியையும், அந்நிய ஆதிக்கத்தின் மீதுள்ள வெறுப்பையும், மகளிர் வீர உணர்ச்சியையும் வெளிப்படுத்துகிறது.

சைமன் குழு எதிர்ப்பு

தமிழ்நாட்டில் சைமன் குழு எதிர்ப்பு நடவடிக்கைகளை முதலில் எடுத்தவர் அன்னி பெசன்ட் அம்மையார் அவர்களே. 1927-ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் சென்னையில், பெண்கள் அடங்கிய குழு ஒன்றை சைமன் குழுவை எதிர்க்கும் பணிக்காகத் தோற்றுவித்தார்24. மேலும் சைமன் குழுவை எதிர்த்து ஏராளமான சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். அவற்றில் யாமினி பூர்ண திலகம்மா, திருமதி. மாசிலாமணி, திருமதி. ருக்மணி லட்சுமிபதி மற்றும் பலர் சொறிபொழிவாற்றினார்கள25;. சென்னையைச் சேர்ந்த இந்தியப் பெண்கள் அமைப்பும் சைமன் குழுவை இரண்டு காரணங்களுக்காக எதிர்த்தது. ஒன்று அக்குழுவில் இந்தியர்கள் இடம்பெறாதது. மற்றொன்று பெண்கள் இடம் பெறாதது

சட்டமறுப்பு இயக்கம்

பெண்கள் அதிக அளவு ஈடுபட்ட போராட்டம் இதுவேயாகும். 1929 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் லாகூரில் நடந்த தேசிய காங்கிரஸ் மாநாடு சட்ட மறுப்பு போராட்டம் தொடங்க வேண்டுமென்று தீர்மானித்து காந்தியடிகளிடம் சகலப் பொறுப்புகளையும் ஒப்படைத்தது. காந்தியடிகள் வகுத்த திட்டங்களை அப்போதைய வைசிராய் இர்வின் பிரவு நிராகரித்தவுடன் தான் அறிவித்தபடி அவர் சபர்மதி ஆசிரமத்திலிருந்து சுமார் 150 தொண்டர்களுடன் பம்பாய்க் கடற்கரையிலுள்ள தண்டீ என்ற இடத்திற்கு உப்பெடுப்பதற்காக பாதயாத்திரை தொடங்கினார். அச்சம்பவத்தில் ஏராளமான சத்தியாக்கிரகிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டனர். காந்தியடிகளுக்கு ஆறு வருடம் தண்டனை கொடுக்கப்பட்டது. உடனே தேசமெங்கும் சுதந்திர ஆர்வம் பொங்கி எழுந்தது.

தமிழ்நாட்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு போராட்டம் நடத்த வேண்டுமென்று ராஜகோபாலாச்சாரி அவர்கள் விரும்பினார். தஞ்சாவூரிலுள்ள வேதாரண்யம் கடற்கரையில் உப்பெடுப்பதென்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி 1930 ஏப்ரல் 13-ஆம் தேதி வேதாரண்யம் சென்று உப்பு காய்ச்சத் தொடங்கியபோது கைது செய்யப்பட்டார். அடுத்து கே. சந்தானம் அவர்கள் இரண்டாவது தலைவராக நியமிக்கப்பட்டார். ருக்மணி லட்சுமிபதி அம்மையாரும் உடன் ஒத்துழைத்தார். தொண்டர்கள் பல இடங்கள் போய் உப்பு சேகரித்து சிறைப்பட்டனர். அங்கிருந்த சத்தியாககிரகிகள் கூட்டம் போடுவர், அதிகாரிகள் அவர்களை தடியினால் தாக்கிக் கலைப்பர். எந்த உதவியும் பொது மக்கள் செய்யக் கூடாது என்று அரசாங்கம் உத்தரவு போட்டது. ஆனால் மக்கள் அதற்கு மசியவில்லை. மற்ற சத்தியாக்கிரகிகள் கைதானபோது சத்தியாகிரகிகளின் ஒரே பெண் தொண்டரான ருக்மணிலட்சுமிபதி அவர்கள் தலைமை வகித்தார்.26 இவ்வம்மையார் 1929-ஆம் ஆண்டில் "சென்னை இளைஞர் சங்கம்"’ என்ற அமைப்பை தொடங்கி இளைஞர்களிடமும், மகளிரிடமும் தேச பக்தியை ஏற்படுத்த உழைத்தார்.27 சட்டமறுப்புப் போராட்டம் தொடங்க வேண்டுமென்று காங்கிரஸ் தீர்மானித்தவுடன் இவர் இச்சங்கத்தைக் கூட்டி அத்தீர்மானங்களை ஆமோதித்தார்.28 பின்னர் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தை தலைமை ஏற்று நடத்தினார். இவர் இருநூறு ஆண் சத்தியாகிரகிகள் மத்தியில் ஒரே பெண.; முகாமில் ஆண்களுடனேயே தங்குவார். இவர் அரசு அலுவலர்கள்; வசிக்கும் பகுதிகளுக்கு சென்று அவர்கள் அரசாங்கத்திடம் கொண்டுள்ள பற்று குறைந்து தேசபக்தி ஏற்படும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.29 சத்தியாக்கிரகத்தை அடக்குவதற்காக, மே மாதம் 14-ஆம் நாள் அம்மையார் அவர்கள் கைது செய்யப்பட்டு ஒருவருடம் சாதாரண சிறைத் தண்டனையில் தஞ்சாவூர் சிறையில் வைக்கப்பட்டார்.30 இவர் கைதாகி செல்லும்போது முகாமிலிருந்தவர்களைப் பார்த்து சிரித்த முகத்துடன் "நீங்கள் அனைவரும் என்னைப் பார்த்து பொறாமைப்படவில்லையா? வெற்றி சத்தியாகிரகிகளுக்கே, தைரியமாயிருந்து போராட்டத்தை தொடர்ந்து நடத்துங்கள்’’ எனக் கூறினார்.31 இவர்தான் சட்டமறுப்பு போராட்டத்தில் இந்தியா முழுதுமாக முதன் முதலாகக் கைதான பெண் தொண்டர். காந்தியடிகள் உப்பு சத்தியாக்கிரகத்தின் முக்கிய அம்சம் பெண்கள்தான் என்றும் குறிப்பாக சென்னையை சேர்ந்த ருக்மணி லட்சுமிபதி என்றும் குறிப்பிடுமளவிற்கு இவர் சிறப்புற சத்தியாக்கிரகத்தை நடத்தினார்.32 அம்மையாரின் கைது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைக் கண்டித்து இந்தியப் பெண்கள் சங்கம் ஒரு பொதுக்கூட்டம் கூட்டி இந்தியாவுக்கு உடனடியாக சுயாட்சி கொடுக்க வேண்டுமென்று கோரியது.33.

வேதாரண்யத்தில் சத்திக்யாகிரகம் நடந்து கொண்டிருந்தபோது சென்னை நகரிலும் தி. பிரகாசம் அவர்கள் தலைமையில் உப்பு சத்தியாகிரகம் நடந்தது. அதை முளையிலேயே கிள்ளுவதற்காக அவரை அரசு உடனே கைது செய்தது.34. அதன் பிறகு துர்காபாய் அம்மாள் என்ற பெண் தொண்டர் தலைமை ஏற்று உதயவரம் என்ற இடத்தில் முகாம் ஏற்படுத்தினார்கள்.35 இந்த அம்மையார்தான் காந்தியடிகள் பெண்கள் உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொள்வதை விரும்புகிறார் என்பதை அறிந்து சென்னையிலுள்ள தலைவர்களை அணுகி பெண்களைச் சேர்த்து கொள்ளவேண்டுமென்ற தன் விருப்பத்தை தெரிவித்தார். பெண்கள் விருப்பத்தோடு உப்பு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டபோது காந்தி அதை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். அம்மையார் ஏப்ரல் 25 ஆம் நாள் நூறு தொண்டர்களுடன் சென்னை கடலில் உப்பு காய்ச்சுவதற்காக ஊர்வலமாகப் புறப்பட்டபோது போலீஸ்படை அவர்களை முன்னேறவிடாமல் தடுத்தது.36

பின்னர் மே மாதம் இரண்டாம் நாள் இவ்வம்மையார், கிருஷ்ணம்மா மேலும் சில பெண்கள் உப்புச் சட்டத்தையும், தடையுத்தரவையும் மீறி; சென்னை சாந்தோம் கடற்கரையில் உப்புக் காய்ச்சத் தொடங்கியபோது போலீஸார் அவ்வுப்புப்பானைகளை உடைத்ததோடு கூட்டத்தையும் கலைத்தனர்37. அதன்பின் துர்காபாய் அம்மையார் வட ஆற்காட்டிற்குச் சென்று ஏராளமான சொற்பொழிவுகள் ஆற்றினார். பின்னர் மே மாதம் 25-ஆம் தேதி உப்புச் சட்டத்தை மீறி உப்புக் காய்ச்சினார்.38 இதனால் அடுத்த நாளே கைது செய்யப்பட்டு ஒன்பது மாதம் சிறை தண்டனை அடைந்தார்.39 இதனைக் கண்டித்து ஆற்காடு மற்றும் வேலூர் பகுதிகளில் பெரும் கலவரம் மூண்டது.40 உப்பு சத்தியாக்கிரகம் கடற்கரைப் பகுதிகளில் மட்டுமே நடத்த முடிந்ததால் ஏராளமான மக்கள் கலந்து கொள்ள முடியவில்லை. அதையும் அரசு தீவிர செயல்களால் அடக்கியது.

பின்னர் காந்தியடிகளின் விருப்பத்திற்கிணங்க, கல்லூரி, கல்விக் கூடங்கள், அந்நியத் துணிக்கடைகள், மதுபான கடைகள் இவற்றை மறியல் செய்யும் போராட்டத்திலும், கதர் உற்பத்தியிலும் பெண்கள் ஈடுபட்டனர். இவர்கள் கடமை என்னவென்றால் வியாபாரிகளை அணுகி அவ்வியாபாரத்தை விட்டுவிடுமாறும், வாடிக்கையாளர்களிடம் அப்பொருட்கள் பயன்படுத்தாமல் இருக்குமாறும் அறிவுரைக்க வேண்டும். இவை பயன் தரவில்லையென்றால் கடைகளுக்கு முன்னால் படுத்து விற்பனையை தடை செய்யவேண்டும். இதுவே காந்தியடிகளின் அறிவுரை. இவ்வறிவுரைக்கு இணங்க தமிழகப் பெண்கள் காங்கிரஸ் கமிட்டிகளில் சேர்ந்து இப்போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டார்கள். இவர்கள் நியாயமான கோரிக்கைகளை அரசாங்கம் லத்தியாலும், சிறை தண்டனையினாலும் ஒடுக்கியது. இந்த தண்டனைகளையெல்லாம் பொருட்படுத்தாது மேலும் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

அந்நியத்துணிக்கடைகள் மறியல் போராட்டத்தில் முதன்மை வாய்ந்தவர் சென்னை எஸ். அம்புஜம்மாள் ஆவார். இவர் தன் தந்தை எஸ். ஸ்ரீனிவாச ஐயங்கார் விருப்பத்திற்கு மாறாக காந்தியடிகள்பால் கொண்ட பற்றினால் 1930-ஆம் ஆண்டில் பத்து நாட்கள் தொடர்ந்து துணிக்கடைமறியல் செய்தார். இவரும் ஞானம்மாள மற்றும் இதர பெண்களும் சென்னையில் ராட்டன் பஜாரில் உள்ள அந்நியத் துணிக்கடைகளின் முன்னால் மறியல் செய்தனர். இதைத் தடுப்பதற்காக இவர்கள் மீது ரப்பர் குழாய் மூலம் சாக்கடைநீர் வீசியடிக்கப்பட்டது. எனினும் அச்சமில்லாமல் தொடர்ந்து மறியல் செயதார்கள். அப்போது அரசு அம்மையாரை மட்டும் கைது செய்யவில்லை. ஆனால் அவரோடு உழைத்த ஏழு பெண்களும் கைதானர்கள். அந்நியத்துணிக்கடை மறியல் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட பி.லீலாவதி, லலிதா பிரபு ஆகியோரை தலைச்சேரி நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லும் வழியில் காவலர்களால் அவர்களது தாலி அறுக்கப்பட்டது. இச்சம்பவத்தினால் அவ்விடம் "தாலியறுத்தான் தலைச்சேரி" என்று வழங்கலாயிற்று.41

மற்றொரு அம்சமான கல்லூரி மறியல் போராட்டத்தை டாக்டர் பிச்சைமுத்து அம்மாள் 1930-ஆம் ஆண்டு செப்படம்பர் 3-ஆம் நாள் தொடங்கினார். அம்மையாரும் அவரோடு சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்களும், கல்லூரிகளில் மாணவர்களும், ஆசியர்களும் நுழையாதவாறு தடுத்தார்கள். மேலும் மாணவர்கள் கல்லூரிகளைப் புறக்கணிப்பதற்கான துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். இதனால் ஏராளமான மாணவர்கள் தங்கள் படிப்பை விட்டுவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்42. ஆனால் அம்மையார் அவர்கள் போராட்டம் தொடங்கப்பட்ட அடுத்த நாளே கைது செய்யப்பட்டு ஆறு மாதம் சிறைத்தண்டனை அனுபவித்தார். இதைக் கண்டித்து சென்னை இராணிமேரிக் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் கல்லூரியைப் புறக்கணித்தனர்43. வா.வே.சு. ஐயர் மனைவி பத்மாவதி அம்மாவும் வேறு சில பெண்களும் தடை உத்தரவை மீறித் தேசிய கொடி வணக்கம் செய்தமையால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டனர்44.

தினசரி தெருக்கள் தோறும் உணர்ச்சிதரும் பிரச்சாரங்கள், தலைவர்கள் கைது செய்யப்பட்டால் கடையடைப்பு, வேலை நிறுத்தம், ஊர்வலம், பொதுக்கூட்டங்கள் யாவும் நடைபெறும். வக்கீல்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஏராளமாகக் கலந்து கொண்டனர். ராட்டையும்; கையுமாகவே அனைவரும் தென்பட்டனர். தினசரி நடைபெறும் கூட்டங்களில் சத்தியாக்கிரக நிதிக்காக பணமும், காசும், நகையும், சாமான்களும் பலர் கொடுத்தனர். பலர் சிறை சென்றனர். பத்மாசனி அம்மாளும் சிறைத் தண்டனை பெற்றார். அரசாங்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து உயர் பதவி வகித்த பெண்கள் தங்கள் பதவிகளை துறந்தனர், சென்னை சட்டசபையைச் சேர்ந்த ருக்மணிலட்சுமிபதியும், கமலாதேவி சட்டோபாத்யாவும் ராஜினாமா செய்தார்கள்.45 காந்தியடிகள் கைதானதை எதிர்த்து திருமதி. முத்துலட்சுமி ரெட்டி சென்னை சட்டசபையின் துணை தலைவர் பதவியை துறந்தார்.

கைதானவர்கள் 1931 ஆம் ஆண்டில் ஏற்பட்ட காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின்படி விடுதலையடைந்தனர். இவ்வொப்பந்தத்தின்படி நாடு முழுவதும் சாத்வீக மறியல் தொடங்கப்பட்டது. மதுரையில் அக்டோபர் மாதம் வரை அந்நியத் துணிக்கடைகள் மறியல் தீவிரமாக நடைபெற்றது. இதில் டாக்டர் பிச்சைமுத்து அம்மாள் தலைமையில் சுமார் ஐம்பது பெண்கள் மறியல் செய்தனர். இது தொடர்பாக மதுரை பத்மாசனி அம்மாள், சீதாலட்சுமி, தாயம்மாள் ஆகியோரின் தீவிரப் பிரச்சாரங்கள் குறிப்பிடத் தக்கவை46 சென்னை நகரில் இப்போராட்டம் பெரும்பாலும் பெண்களால் மட்டுமே நடத்தப்பட்டது. அவர்களுக்கு துர்காபாய் அம்மாளும், திருமதி கஸினும் தலைமை தாங்கினார்கள்.47 காந்தி-இர்வின் ஒப்பந்தத்தை நிராகரித்து சாத்வீக மறியல் செய்தவர்களில் பலரை அரசாங்கம் கைது செய்தது. அதில் குறிப்பிடத்தக்கவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமி அம்மாவும், திருவல்லிக்கேணியை சேர்ந்த கமலாபாயும் ஆவார்கள். இவர்களுக்கு ஆறுமாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் கிருஷ்ணாபாயும் வேறு இரண்டு பெண்களும், எண்பது தொண்டர்களும் சென்னை ராட்டன் கடை வீதி துணிக்கடைகளை மறியல் செய்தபோது கைது செய்யப்பட்டு சிறை வைக்கபடபட்டார்கள், இவர்களின் முயற்சியால், ஏராளமான அந்நியத் துணி வியாபாரிகள் தங்கள் கடைகளை மூடினர்.

1932-ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒப்பந்தத்திற்கு விரோதமாக அரசு நடந்து கொண்டமையால் காந்தியடிகள் காரிய கமிட்டியுடன் ஆலோசித்து போராட்டத்திற்கான பல திட்டங்களை வகுத்தார். இதை அறிந்த வைசிராய் வெல்விங்டன் காந்தியடிகளைக் கைது செய்து காவலில் வைத்தார். இச்செய்தி எட்டியதும் தேசம் முழுவதும் கடையடைப்பு, வேலை நிறுத்தம் மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்தி மக்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். நாடு முழுவதும் அடக்குமுறை தலைவிரித்தாடத் தொடங்கியது. முக்கிய அங்கத்தினர்களும், தலைவர்களும் கைது செய்பப்பட்டனர். காங்கிரஸ் குழுக்களை சட்ட விரோதமான ஸ்தாபனம் என்று அறிவித்து அவைகள் கலைக்கப்பட்டன.

தமிழகத்தில், காந்தியடிகள் கைது மக்களை திரண்டு எழச் செய்தது, காங்கிரஸ் நியமித்துள்ள பிரதிநிதிகளான பத்மாசனி அம்மாள், தாயம்மாள் மற்றும் சீதாலட்சுமி, முத்தம்மாள், சித்து பாக்கியலட்சுமி அம்மாள், கொண்டாலட்சுமி அம்மாள், கே.டி. கமலா ஆகிய முப்பது பெண்கள் மதுரையில் மட்டும் கைதாகி சிறை சென்றனர்.48 . இரண்டாவது தடவையாக 1932-ல் அம்புஜம்மாள் துணிக்கடை மறியல் செய்தபோது கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் காவலில் வைக்கப்பட்டார். சென்னையைச் சேர்ந்த ஞானம்மாளும் இப்போராட்த்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டவர்களில் ஒருவராவார். இப்போராட்டத்திலும் ருக்மணி லட்சுமிபதியும்;, துர்காபாயும் ஈடுபட்டார்கள்.

தேசபக்தி பாடல்கள்

சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடைபெற்ற காலத்தில், தேசபக்தர்கள் தங்கள் குடும்ப நிகழ்ச்சிகளிலும் தேசபக்தி பாடல்களுக்கே முதலிடம் கொடுத்தனர். அரசியல் கூட்டங்களிலும் தேசபக்தி பாடல்கள் பாடப்படுவது வழக்கம். அந்நாளில் தேசபக்திபாடல்கள் பாடுவதில் தனிஆர்வம்காட்டி வந்தபெண்களில் கோதை நாயகி, கே.பி.சுந்தராம்பாள் மற்றும் டி.கே.பட்டம்மாளும் சிறப்புடையவர்கள. இவாகள் கணீரெனப் பாடும் தேசபக்தி பாடல்களால் ஈர்க்கப்பட்டு போராட்ட இயக்கங்களில் பங்குகொண்ட தொண்டர்கள் ஏராளம். பாரதியின் பாடல்களை சிறப்பாக பாடும் வல்லமை பெற்றவர் கோதை நாயகி. காங்கிரஸ் நிகழ்ச்சிகளில் இவ்வம்மையார் பெயர் இடம்பெற்றாலே கூட்டம் ஏராளம் சேரும். மதுரகவி பாஸ்கரதாஸ் இயற்றிய பாடல்களான காந்தியோ பரமஏழை சந்நியாசி தாயிடம்அனபில்லாத சன்மம் வீணே நம்பிக்கை கொண்டெல்லோரும ராட்டை சுற்றுவோம் காந்தி லண்டன் சேர்ந்தார் என்ற நான்குபாடல்களையும் கே.பி.சுந்தராம்பாள் அருமையான முறையில் இசைத்தட்டில் பாடி மக்களிடையே கொண்டு சேர்த்தார். பாரதியாரின் பாடல்களை சென்னை அரசு தடை செய்ததை எதிர்த்து நடத்தப்பட்ட கூட்டங்களில் இவர் "நெஞ்சு பொறுக்குதில்லையே" என்ற பாடலைப்பாடி மக்களை வீறுகொண்டெழச்செய்தார்.

உப்பு சத்யாக்கிரகத்தையொட்டி காந்தி சிறை சென்ற போது "காந்தியோ பரம ஏழை சந்நியாசி" என்ற பாடல் இவரால் பாடப்பட்டு இசைத்தட்டில் பதிவு செய்து நாடெங்கும் பரப்பப்பட்டது. காங்கிரஸ் கொள்கையில் பற்று ஏற்பட்டு அதனால் ஓய்வு நேரங்களில் நூல் நூற்று அதை காங்கிரஸ் குழவிற்கு அனுப்பி வைத்து கொண்டிருந்தார். 1931 ஆம் ஆண்டு தனது வீட்டிலிருந்த வெளிநாட்டுத் துணிகளை தீயிட்டுக் கொளுத்தினார். தானே கதர் துணிகளை முதுகில் சுமந்து கொண்டு மயிலாப்பூரிலுள்ள அறுபத்து மூவர் திருவிழாவில் விற்று காங்கிரஸ் குழவிற்கு அனுப்பியிருக்கிறார். 1932 ஆம் ஆண்டு பகத்சிங், இராச குரு, சுகதேவ் என்ற மூன்று இளைஞர்களை தூக்கிலிட்டு கொன்றபோது அதை கண்டித்து எழுதப்பட்ட பாடலான “பகத்சிங், ராச குரு, சுகதேவ் சிறைவாயிலில் கண்ணீர் வடித்தாள் பாரத மாதா …பெறற்கரிய பகத்சிங், ராச குரு, சுகதேவைப் பிரிந்தே வருந்துகிறாள் நம் அன்னை பாரத மாதா” என்ற பாடலை கே.பி.சுந்தராம்பாள் பாடி இசைத்தட்டில பதிவு செய்துள்ளார். இதற்கும் தடைவரவே அது வெகுவாகப் பரவவில்லை. நாடகக்கலைஞர்கள் மூலமே இப்பாடல் பாமர மக்களைச் சென்றடைந்தது. இவ்வாறு பல பாடல்கள் மூலம் இவர் தேசபற்றினை மக்களிடம் ஏற்படுத்தினார். அந்நாளில் இவர் பாடியும், பேசியும் பெரும் கூட்டம் கூடியப் பிறகே காங்கிரஸ் தலைவர்கள் பேசத் தொடங்குவர்49.

எஸ்.ஆர்.ரமாமணிபாய் பாடிய "ஆடு ராட்டே மகிழ்ந்தாடு ராட்டே சுய ஆட்சியைக் கண்டோமென்றாடு ராட்டே"

என்ற பாடல் கதராடை உற்பத்தி மூலம் சுய ஆட்சியை பெறமுடியுமென்ற கருத்தை வலியுறுத்தியது. மதுரை எம்.கண்ணம்மாள் பாடிய "சத்யமெங்குமே தளரா நாடு-இந்து தேசமதைப்புகழ்ந்துபாடு….” என்ற பாடலும் பிரபலமானவை.50

தங்களின் எழுத்துக்கள் மூலமும் பலர் தேசபக்தியை மக்களிடம் பரப்பினர். அவர்களில் பெண்களும் அடங்குவர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் பண்டிதை அசலாம்பிகை அம்மையார். அவர் இயற்றிய நூல்களான காந்திபுராணம் மற்றும் திலகர் புராணம் இவரின் தேசபற்றிற்கு எடுத்துக்காட்டு. வீரவிளக்கு வா.வெ.சு.ஜயர் காந்தி புராணத்திற்கு தமது பாலபாரதி இதழில் பின்வருமாறு மதிப்புரை எழுதினார்.

"பண்டிதை ஸ்ரீமதி அசலாம்பிகை அம்மையார் அருளிய காந்தி புராணத்திற்கு நல்வரவு கூறுகிறோம். ஆத்ம சக்தியின் வெற்றிமுரசு மிருக பலத்தை திடுக்கிடச்செய்யும். இந்த நவயுகத்திற்கு நாயகனான மஹாத்மா காந்தியடிகளின் சரிதையைப் புராணம் வாயிலாக சாசுவதப்படுத்திய அம்மையாருக்குத் தமிழ்நாடு மிகவும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறது”51. இம்மதிப்புரை அம்மையாரின் எழுத்தாற்றலுக்கும் தேசபக்திக்கும் சான்று.

பின்வரும் வட்டவணையிலிருந்து பெண்கள் கணிசமான எண்ணிக்கையில் சுதந்திரப்போராட்டத்தில் பங்குபெற்று சிறை சென்றதை அறியலாம்.

சட்ட மறுப்பு செய்து சென்னை மாகாணத்தில் தண்டிக்கப்பட்டவர்கள்


எண்


மாவட்டம் சாதாரண சட்டம் தொல்லை மற்றும் புறக்கணிப்பு தடுப்பு அவசரச் சட்டம், 1932 பிரிவு-5, சட்டவிரோதமாக துண்டுதல் அவசரச்சட்டம் 1932 பிரிவு-3


ஆண்கள் பெண்கள் மொத்தம ஆண்கள் பெண்கள் மொத்தம் ஆண்கள் பெண்கள் மொத்தம் ட 1 அனந்தப்பூர் 6 - 6 - - - - - - 2 வடஆற்காடு 31 - 31 20 - 20 - - - 3 வெல்லாரி

- - - - - - - - - 4 செங்கல்பட்டு - - - 3 - 3 - - - 5 சித்தூர் 6 - 6 1 - 1 - - - 6 கோயம்பத்தூர் 31 4 35 2 - 2 - - - 7 கடப்பா - - - - - - - - -

8

கஞ்சம் 80 7 87 19 4 23 - - - 9 கிழக்கு கோதாவரி 17 - 17 2 10 12 - - - 10 குணடூர் 77 21 98 5 - 5 - - - 11 மேற்கு கோதாவரி 53 11 64 2 2 4 7 - 7 12 தென்கனரா 13 - 13 1 - 1 - - - 13 கிருஷ்ணா 27 7 34 3 1 4 4 3 7 14 கர்னூல் 1 - 1 5 - 5 - - - 15 மதுரை 46 - 46 4 3 7 - - - 16 மெட்ராஸ் 24 - 24 4 7 11 - - - 17 மலபார் 34 1 35 38 3 41 - - - 18 நெல்லூர்; 2 2 4 - - - - - - 19 நீலகிரி - - - - - - - - - 20 ராம்நாடு 32 - 32 2 - 2 - - - 21 சேலம் 22 - 22 55 1 56 - - - 22 தஞ்சாவூர் 51 - 51 10 - 10 - - - 23 திருநெல்வேலி 12 3 15 8 - 8 - - - 24 திருச்சி 6 3 9 2 3 5 - - - 25 விசாகப்பட்டிணம் 1 - 1 14 2 16 - - -

 மொத்தம்

417

33

450

261

29

290

11

3

14 ஆதாரம்: அரசு ஆணை எண்.386அஇ பொது துறை இ 7-03-1932

சிறையிலடைக்கப்பட்ட பெண்கள் மிகவும் கொடுமைக்குள்ளானார்கள். வேலூர் மத்தியச் சிறையிலுள்ள பெண் அரசியல் கைதிகளிடம் குங்குமமும் அவர்கள் கையிலணிந்திருந்த வளையல்களும் பலாத்காரமாகப் பறிக்கப்பட்டன.52 அவர்களுக்கு அளிக்கப்பட்ட படுக்கைகள் மிகவும் அசுத்தமாக இருந்தன. அவர்களுக்கு ஒருவாரத்திற்கு குளிக்கக் கொடுக்கும் எண்ணெய் ஒருநாளைக்குக் கூட போதுமானதாக இராது. சாப்பிடக் கொடுக்கும் சாதத்திலும், மாவிலும் பூச்சிகள் நிரம்பி இருக்கும். நூறு பெண்கள் வரை ஒரு கழிப்பிடத்தைத்தான் பயன்படுத்த வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை நான்கு மணியிலிருந்து காலை ஐந்து மணி வரை அடைத்து வைக்கப்படுவார்கள். இவர்கள் கல் உடைத்தல், கம்பளி நெய்தல் போன்ற வேலைகள் செய்யவேண்டும். சென்னை குற்றவாளிகள் திருந்துவதற்கான சிறையில் அரசியல் கைதிகளும் மற்ற குற்றவாளிகளும் சேர்ந்து ஒரே பிரிவில் பன்னிரெண்டு பேர் தூங்க வேண்டும். பெண்களும் அப்படியே53. சில பெண் அரசியல் கைதிகளையும் குற்றவாளிகளுக்கான 'சி' பிரிவில் தான் வைத்திருந்தார்கள்.54 இச்சத்தியாக்கிரகத்தில் சென்னை ராஜதானியில் மட்டும் பிப்ரவரி மாதம் 1933 வரை கைதாகி சிறை சென்றவர்கள் எண்ணிக்கை 13674. அவர்களில் 633 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.55

தனிநபர் சத்தியாகிரகம்

அடக்குமுறை தீவிரமாகவே நாட்டில் இயக்கம் ஒருவாறு மந்தமடைந்தது. இதைப் பார்த்து தனிப்பட்ட சட்ட மறுப்புக்கு காந்தியடிகள் அனுமதி வழங்கினார். ஒவ்வொருவரும் கைதாகும் வரை சளைக்காது சேவைசெய்து கொண்டே இருக்கவேண்டும் என்று அவர் தனிப்பட்ட சட்டமறுப்பின் பெருமையை எடுத்துக் கூறினார். பின்னால் காந்தியடிகளும் சட்ட மறுப்பு செய்து தண்டிக்கப்பட்டார்.

இச் சத்தியாக்கிரகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மாவட்டங்களிலும் பல பெண்கள் பங்கு கொண்டு சிறை சென்றனர். 1940 நவம்பர் திங்கள் 21ஆம் நாள் ருக்மணி லட்சுமிபதி சத்தியாக்கிரகம் நடத்தியமையால் ஓராண்டு காலம் சிறைத்தண்டனை பெற்றார். சிறை செல்லும்போது, "இந்தியப் பெண்கள் மகாத்மா காந்தியின் தலைமையை ஏற்று நம் தாயகத்தின் பெருமைக்கும், உயர்வுக்கும் பாடுபடவேண்டும்”56 என்று கேட்டுகொண்டார். மதுரையில் கே.பி.சானகிஅம்மாள் இரண்டாம் உலகப் போருக்கெதிராகப் பிரச்சாரம் செய்தபோது கைதானார். மேலும்; மதுரையைச் சேர்ந்த சொர்ணம்மாள் மற்றும் செல்லம்மாள் பொதுக் கூட்டங்களில் சொற்பொழிவாற்றியமைக்காகக் கைது செய்யப்பட்டுச் சிறை வைக்கப்பட்டனர். அவர்களைப் பின்பற்றி மதுரையில் அகிலாண்டத்தம்மாள், லட்சுமிபாரதி, திருமதி. சௌந்தரம் ராமசந்திரன், திருமதி. கிருஷ்ணசாமி, திருமதி. ராமசாமி ஆகியோர் சிறை சென்றனர்.57

குமாரமங்கலத்து சமீந்தாரினி இராதாபாய் சுப்பராயன் உலகப்போருக்கெதிராக எட்டு பக்கங்களில் தட்டச்சு செய்யப்பட்ட பிரசுரங்களை மக்களிடையே விநியோகித்துக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடியைச் சேர்ந்த சி.ஆர். சாரதாம்பாள் அம்மாள் மற்றும் கரூரைச் சேர்ந்த பியாரி பீபி, ஆகியோர் இச் சத்;தியாக்கிரகத்தில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டுச் சிறை வைக்கப்பட்டனர். சரஸ்வதி பாண்டுரங்கம் ஆறு மாத சிறைத்தண்டனை அடைந்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அதனால் அவருடைய இரண்டு வயது மகளையும் ஆறு மாத மகனையும் இழந்தார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கம்

சுதந்திரப் போராட்டத்தின் கடைசி அத்தியாயம் 1942- ஆம் ஆண்டில் நடந்த 'வெள்ளையனே வெளியேறு' போராட்டமாகும். இப்போராட்டத்தின் முக்கிய அம்சம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம். அந்தோணி அம்மாளும், பேச்சியம்மாளும் பங்கஜ மில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கு பெற்றமைக்காகக் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் காவலில் வைக்கப்பட்டார்கள். கோயம்புத்தூரைச் சேர்ந்த குட்டியம்மாள் மற்றும் சோலையம்மாள் ரயில் தண்டவாளத்தைத் தகர்க்க முனைந்தமையால் கைது செய்யப்பட்டு முறையே மூன்று மாதம், ஆறு மாதம் தண்டனை பெற்று கோயம்புத்தூர் சிறையில் வைக்கப்பட்டார்கள். சென்னையில் உள்ள அனைத்து கல்லூரி மாணவிகளும் வகுப்பறைகளைப் புறக்கணித்து போராட்டத்திற்கு ஆரதவு தெரிவித்தனர்.

வெள்ளையரை எதிர்த்து மதுரையில் கண்டன ஊர்வலங்கள ஆகஸ்ட் மாதத்திலிருந்து அக்டோபர் வரை தொடர்ந்து நடத்தப்பட்டன. இதில் பெருமளவு பெண்கள் கலந்து கொண்டனர். இதனால் கோபமடைந்த போலீஸ் அதிகாரி தீச்சட்டி கோவிந்தன் மற்றும் பிற போலீசார் சொர்னம்மாள் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மதுரையில் வாழ்ந்து வந்த லட்சுமி பாய் ஆகிய இருவரையும் வாகனத்தில் ஏற்றிச் சென்று 8 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அழகர் கோவில் சாலையில் ஒரு காட்டில் இறக்கி அவ்விரு பெண்களின் ஆடைகளையும் பிடுங்கிக்கொண்டு அடித்து உதைத்தனர். இதுதான் சுதந்திரப்பாதை என்று கூறி ஒரு காட்டுப்பாதையில் அவர்களைத் தூக்கி வீசினர். இரவு முழக்க அங்கே மறைவிடத்தில் மறைந்திருந்துவிட்டு காலையில் அங்கிருந்த விவசாயிகள் உதவியால் ஆடைகள் பெற்று கட்டிக் கொண்டு மதுரை வந்து சேர்ந்தனர்.58 அண்ணாமலைப் பல்கலைக் கழகம், இராணி மேரி கல்லூரி மற்றும கிறித்தவக் கல்லூரி மாணவியர் கல்லூரிகளை புறக்கணித்துவிட்டு பேரணிகளும், மறியல் போராட்டங்களும் நடத்தினர்.

புகழ்பெற்ற ஹார்மோனியக் கலைஞரான எம்.ஆர்.கமலவேணி பல தேசியப்பாடல்கள் பாடியவர். மக்களின் தேசிய உணர்வை தூண்டிய இவரது பாடல்கள் இவ்வியக்கத்தின்போது தடை செய்யப்பட்டது. இவர் பின்வரும் பாடலான "அண்டம் கிடுகிடுங்க லண்டன் நடுநடுங்க அகிம்சைப்போர்தொடுத்தார் காந்திமகான்" என்றப் பாடலை உணர்ச்சியோடு பாடி ஹார்மோனியம் வாசித்தார். இதனால் போலீசார் இவரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். தன் ஒருவயது கை குழந்தையுடன ஆறுமாதம் சிறையிலிருந்தார்.59;

டி.கே.பட்டம்மாள் சிறுவயதிலேயே பாரதியின் பாடல்களைப் பாடி தேசப்பற்றினை வளர்த்தவர். காந்தியடிகள் காஞ்சிபுரம் வந்திருந்தபோது அவர் முன்னிலையில் "வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ…. கண்ணிரண்டும் விற்றுச்சித்திரம்வாங்கினால் கை கொட்டி சிரியாரோ…..” எனும் பாடலைப்பாடி பாராட்டினைப் பெற்றவர்.60

பாடகியும், நடிகையுமான எம்.ஆர்.கமலவேணி தேசபக்தி பாடல்கள் தவிர வேறு எந்தப் பாடலும் பாடுவதில்லை என்று உறுதிமொழி எடுத்திருந்தார்.

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் இந்திய ராணுவம்

தமிழக மகளிர் தமிழகத்தில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் சென்று இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய நிகழ்ச்சிகள் உண்டு. அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் குடும்பத்தோடு மலேசியாவிற்குச் சென்ற வடஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தம்மாள் என்ற வீராங்கனை. இவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் இந்திய ராணுவத்தில் சேர்ந்து இந்திய விடுதலைக்காக அரும்பாடுபட்டவர். இந்திய சுதந்திரத்திற்காக தன் ராணுவத்திற்கு நிதி கொடுங்கள் என்று நேதாஜி கூறியதைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்டு இவர் தான் போட்டிருந்த ஆறு பவுன் வளையல்களைக் கழற்றிக் கொடுத்தார். மீண்டும் நேதாஜி பாரத நாட்டுக்காக ராணுவப் படையில் அணிதிரளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தவுடன் தனக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் ரப்பர் தோட்டத்தை இந்திய தேசிய ராணுவத்திற்கு நன்கொடையாகக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், மகளிருக்கென்று அமைந்த 'ஜான்ஸிராணி ரெஜிமெண்ட்'டில் சிப்பாயாகச் சேர்ந்தார். 1000 பெண்கள் கொண்ட அப்படையில் முதலில் 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்குப் பலரகத் துப்பாக்கிகளைச் சுடும் பயிற்சி தரப்பட்டது. அப்படி முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பேரில் கோவிந்தாம்மாளும் ஒருவர். இவருடைய நேர்மையைப் பாராட்டி நேதாஜி இவருக்கு ‘லாண்ட்ஸ் நாயக்’ என்று பதவி உயர்வு அளித்தார். 1945 ஆம் ஆண்டு வரை இவர் அந்த இராணுவத்தில் பணியாற்றினார்61

லட்சுமிசுவாமிநாதன், ஆசாத் இந்து அமைச்சரவையில் சமூகப்பணி மற்றும் மருத்துவத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளார். மருத்துவப் பணியைத் துறந்துவிட்டு ஜான்சிராணி ரெஜிமென்ட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவேண்டுமென்று நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் இவரை அழைத்தபோது எவ்விதத் தயக்கமும் காட்டாது மருத்துவப்பணியை துறந்துவிட்டு, அப்பொறுப்பை ஏற்று செயல்படத் தொடங்கினார். தமது இயக்கத்திற்கு ஆதரவு திரட்டும் பொருட்டு ஆசியாவின் பல பகுதிகளுக்கும் சென்று தொண்டர்களைச் சேர்த்து கொண்டார்.

ஜனவரி 1943 ஆம் ஆண்டில் சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் ராதாபாய் சுப்புராயன் தலைமையில் தேசிய கொடியை உயர்த்தி வந்தேமாதரம் பாடி சுதந்திர தினம் கொண்டாடினார்கள். ஆதனால் ராதாபாயும் அவருடன் இருந்த தமயந்தி எனற பெண்ணும் கைது செய்யப்பட்டு மூன்று மாதம் சிறையிலடைக்கப்பட்டனர். அம்முசுவாமி நாதனும், மஞ்சுபாசினியும் சென்னையில் ஊர்வலங்கள், கடையடைப்புகள் மற்றும் சொற்பொழிவுகள் நடத்த காரணமாக இருந்தனர். அவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்ச்சிகளிலிருந்து இந்தியா சுதந்திரமடைய வேண்டுமென்ற ஒரே குறிக்கோளுடன் தங்களைப் போராட்டங்களில் அர்ப்பணித்த தமிழக மங்கையர்களின் வீரப் போரட்டம் நமக்குத் தெளிவாகிறது. சமூகக் கட்டுப்பாடுகளையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு வீராவேசத்துடன் வெளிவந்து விடுதலைக்கு வித்திட்ட இவ்வீர மகளிர் வரலாறு தமிழக வரலாற்றில் பொன்எழுத்துக்களால் பொறிக்க வேண்டிய ஒன்று.

குறிப்புகள்

  1. சோமலே, மதுரை மாவட்டம் (வேதாரண்யம், 1980), பக். 19-20
  2. ச.க.இராமர் இளங்கோ, பாரதிதாசன் படைப்புக்கலை (சிவகங்கை, 1983), பக்.306, 359
  3. செ.பழனிசாமி, புறநாநூற்றில் தமிழர் பண்பாடு, (கோவை, 1989), ப. 74
  4. இ.N.Pசநஅயடயவாயஇயேவழையெடளைஅ யனெ றுழஅநn’ள ஆழஎநஅநவெ in ளுழரவா ஐனெயைஇ1917-1947(நேற னுநடாiஇ2003)இp.
  5. ம.பொ.சிவஞானம், விடுதலைப் போரில் தமிழகம், முதல் தொகுதி (சென்னை, 1983) ப.70.
  6. சு.யு.Pயனஅயயெடிhயnஇஏ.ழு.ஊhனையஅடியசயஅ Pடைடயiஇ(னுநடாiஇ1977)இp. 35
  7. ம.பொ.சிவஞானம், விடுதலைப் போரில் தமிழகம், ப. 162
  8. ம.பொ. சிவஞானம் விடுதலைப் போரில தமிழ் வளர்ந்த வரலாறு (சென்னை, 1997), ப. 196
  9. இ ஊ.ஐ.னு சுநிழசவ இஏழட-5இ(ளநஉசநவ)இ 1908 – 9
  10. ம.பொ.சிவஞானம், விடுதலைப் போரில் தமிழகம், ப. 210
  11. ம.பொ.சிவஞானம், விடுதலைப் போரில தமிழ் வளர்ந்த வரலாறு (சென்னை, பூங்கொடி பதிப்பகம், 1997) பக். 90-91.
  12. ம.பொ.சிவஞானம், விடுதலைப் போரில் தமிழகம், பக். 219, 228
  13. மே.கூ ப. 233
  14. ந.முடிகோமதி, சட்டமன்றத்தில் அண்ணா (சென்னை, மணிவாசகர் பதிப்பகம், 1998), ப.207
  15. இருவார அறிக்கை, 17 ஆகஸ்ட் 1917 (குழசவniபாவடல சுநிழசவஇ புழஎநசழெச ழக ஆயனசயள வழ வாந புழஎநசழெச புநநெசயட ழக ஐனெயை) தமிழ்நாடு ஆவணக் காப்பகம், த.ஆ.கா)
  16. மே.கூ. 5 அக்டோபர் 1917
  17. தமிழரசு, மார்ச் 2006, பக். 68-69
  18. அ.இறையன், சுயமரியாதை சுடரொளிகள் (சென்னை, 1981), ப. 3
  19. சாமி சிதம்பரனார், தமிழர் தலைவர்:பெரியார் ஈ.வெ.ரா வாழ்க்கை வரலாறு, (சென்னை, 1997), ப.64
  20. மதுரை ஸ்ரீனிவாஸவரதன் வாக்குமூலம் அரசியல் பிரசித்தி பெற்றவர்கள் வாக்குமூலம், ப.2 (த.ஆ.கா) (Pநசளழயெட ளவயவநஅநவெ ழக Pழடவைiஉயட Pநசளழயெடவைநைள)
  21. மதுரை ஜில்லா தியாகிகள் மலர் (மதுரை சுதந்திர பிரசுராலயம, 1983) ப. 39.
  22. மே.கூ.பக். 32-33.
  23. அரசு ஆணை எண் 2852, பொதுப் பணித்துறை, 7 டிசம்பர் 1927, நவசக்தி, 7 செப்டம்பர், 1927
  24. நியூ இந்தியா, 7 நவம்பர் 1927
  25. இந்து, 2 பிப்ரவரி 1928
  26. இந்து, 20 அக்டோபர் 1927
  27. னுயஎனை யுசழெடனஇ யேவழையெடளைஅ யனெ சுநபழையெட Pழடவைiஉளஇ வுயஅடையெனரஇ ஐனெயைஇ (ளுரளளநஒ ருniஎநசளவைலஇ 1973), ப. 178.
  28. இருவார அறிக்கை, 3 பிப்ரவரி 1939.
  29. சட்டமறுப்பு இயக்கம் 1930-31 (இரகசியமானது) பக். 164-65 (ஊiஎடை னுளைழடிநனநைnஉந ஆழஎநஅநவெஇ உழகெனைநவெயைட)
  30. இளைஞர் இந்தியா, 22 மே 1930 (லுழரபெ ஐனெயை) உதவி செயலாளர் பத்திர கோப்பு எண் 699 ஜி, 1930
  31. இந்து, 4 ஜூன் 1931
  32. இளைஞர் இந்தியா, 22 மே 1930
  33. இருவார அறிக்கை, 4 ஜூன் 1930
  34. மே. கூ., 18 ஏப்ரல் 1930: உதவி செயலாளர் பத்திர கோப்பு எண் 683 ஏ, 30 ஏப்ரல் 1930
  35. காங்கிரஸ், 22 ஏப்ரல் 1930: இந்து, 4 ஜீன் 1931
  36. இருவார அறிக்கை, 6 மே 1930: உதவி செயலாளர் பத்திர கோப்பு எண் 683 ஏ, 30 ஏப்ரல் 1930
  37. இளைஞர் இந்தியா, 8 மே 1930; உதவி செயலாளர் பத்திர கோப்பு எண் 683வி, 20 மே 1930
  38. சட்டமறுப்பு இயக்கம் 1930-31, ப.67
  39. இருவார அறிக்கை, 4 ஜீன் 1930, சென்னை சட்டசபை விவாதம், நவம்பர் 1930-ஜனவரி 1931, பக். 147-49
  40. சட்டமறுப்பு இயக்கம் 1930-31, ப.67
  41. தளவாய், சுதந்திரப் போராட்டத் தியாகி சொற்பொழிவு, 14 ஆகஸ்ட் 1992, அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்: தமிழரசு, 16 ஆகஸ்ட், 1991
  42. சட்டமறுப்பு இயக்கம் 1930-35, (இரகசிய செய்திகள் கோப்பு)
  43. உதவி செயலாளர் பத்திர கோப்பு எண் 699 ஜி, 1930
  44. நவசக்தி, 31 டிசம்பர் 1930
  45. சட்டமறுப்பு இயக்கம் 1930-31, ப.67
  46. மதுரை ஜில்லா தியாகிகள் மலர், ப.45
  47. இருவார அறிக்கை, 19 மார்ச் 1931
  48. மதுரை ஜில்லா தியாகிகள் மலர், ப.48
  49. ப.சோழநாடன், கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள் (சென்னை, ரிஷபம் பதிப்பகம், 2002), பக். 34-63
  50. தமிழரசு, 16 ஆகஸ்ட், 1991, பக். 22-23
  51. திரு.வி.க.வாழ்க்கைக் குறிப்புகள், (சென்னை, 1981), பக். 156-159
  52. ம. பொ.சிவஞானம், விடுதலைப் போரில் தமிழகம், ப.1 61
  53. சென்னை சட்டசபை விவாதம், மார்ச் 1932, ப. 396, ஆகஸ்ட் 1932, ப. 43
  54. அரசு ஆணை எண் 507,பொதுத்துறை,15 ஜீன் 1933
  55. சென்னை சட்டசபை விவாதம், மார்ச் 1932, ப.753
  56. சுதந்திரச் சங்கு, 3 ஏப்ரல் 1933
  57. P.N.Pசநஅயடயவாயஇ யேவழையெடளைஅ யனெ றுழஅநn’ள ஆழஎநஅநவெ in ளுழரவா ஐனெயைஇ1917-1947(நேற னுநடாiஇ2003)இp.145
  58. பி.என்.பிரேமலதா, இந்தியப் பெண்கள் (கொடைக்கானல், 1997), ப. 192
  59. தினமலர், மதுரை, 26 பிப்ரவரி, 2004
  60. மே.கூ, 15 ஆகஸ்ட், 1999
  61. ஆனந்தவிகடன், 23 ஜனவரி, 1994