எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
வரிசை 29: | வரிசை 29: | ||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
<references/> |
<references/> |
||
⚫ | |||
⚫ | |||
{{இலங்கை பிரதமர்கள்}} |
{{இலங்கை பிரதமர்கள்}} |
||
வரிசை 35: | வரிசை 36: | ||
[[பகுப்பு:பண்டாரநாயக்கா குடும்பம்]] |
[[பகுப்பு:பண்டாரநாயக்கா குடும்பம்]] |
||
[[பகுப்பு:இலங்கைப் பிரதமர்கள்]] |
[[பகுப்பு:இலங்கைப் பிரதமர்கள்]] |
||
⚫ | |||
⚫ | |||
[[bg:Соломон Бандаранайке]] |
[[bg:Соломон Бандаранайке]] |
||
[[de:S. W. R. D. Bandaranaike]] |
[[de:S. W. R. D. Bandaranaike]] |
10:05, 8 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்
சொலமன் பண்டாரநாயக்கா | |
---|---|
பிறப்பு | ஜனவரி 8, 1899 கம்பகா,இலங்கை |
இறப்பு | செப்டெம்பர் 26, 1959 கொழும்பு, இலங்கை |
பணி | அரசியல்வாதி |
துணை | சிறிமாவோ பண்டாரநாயக்கா |
சாலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா (S. W. R. D. Bandaranaike, இலங்கைத் தமிழ்: சொலமன் பண்டாரநாயக்கா சுருக்கமாக S.W.R.D.பண்டாரநாயக்க) (ஜனவரி 8, 1899 - செப்டெம்பர் 26, 1959) இலங்கையின் நான்காவது பிரதமர் ஆவர்.இவர் பிரதமராக பதவி வகித்த போது பௌத்த பிக்கு ஒருவரால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
குடும்பம்
பிறப்பால் பண்டாரநாயக்கா ஓர் அங்கிலிக்கன் கிறிஸ்தவராவார். சர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க இவரது தந்தையாவார். சிறுவயதில் ஏற்பட்ட நோய்கள் காரணமாக பாடசாலை செல்லாத இவர் வீட்டில் இருந்தபடியே கல்வி கற்றார். 15 வயதில் பாடசாலை செல்லத் தொடங்னார். பின்னர் இங்கிலாந்தின் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் சட்டத்தரணியாகக் கல்வி கற்று முடித்த பின்னர் இலங்கை அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்[1]. பண்டாரநாயக்க இலங்கையில் அரசியல் செல்வாக்கு மிகுந்து காணப்பட்ட இரத்வத்தை பரம்பரையைச் சேர்ந்த சிறிமாவோ திருமணம் செய்துக் கொண்டார். தனது கணவரின் மரணத்துக்குப் பின்னர் சிறிமாவோ கணவரின் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வென்றதன் மூலம் உலகின் முதல் பெண் பிரதமரானார்[2]. இவர் இலங்கையின் பிரதமரும் அதிபருமான சந்திரிகா குமாரத்துங்க, அனுரா பண்டாரநாயக்கா மற்றும் சுனேத்திரா பண்டாரநாயக்காவின் தகப்பனாரும் ஆவர்.
அரசியல் வாழ்க்கை
பண்டாரநாயக்கா ஓர் அங்கிலிக்கன் கிறிஸ்தவராகப் பிறந்தபோதும் அரசியல் நோக்கங்களுக்காகத் தம்மை ஓர் பௌத்தராகவே அடையாளம் காட்டினார். ஐக்கிய தேசியக் கட்சியில் 1931 முதல் 1951 வரை இணைந்த இவர் பல்வேறு பதவிகளை வகித்தார். இவர் 1951 இல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து தனியாக இலங்கை சுதந்திரக் கட்சியினைத் தோற்றுவித்தார்.
1956 இல் பிரதமராகிய பண்டாரநாயக்கா இலங்கையின் அதிகாரப்பூர்வ மொழியாயிருந்த ஆங்கிலத்தை இல்லாதொழித்து சிங்களத்தை மாத்திரமே அதிகாரப்பூர்வ மொழியாக்கினார்.
கொலை
தனது அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த பௌத்த பிக்கு ஒருவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். மரணச் சடங்குகள் கிறிஸ்தவ முறையிலேயே இடம்பெற்றன.
விட்டுச் சென்றவை
1950 இன் நடுப்பகுதியில் தமிழைப் புறக்கணித்து தனிச் சிங்கள கோட்பாடுகளைக் கையாண்டனர். இதுவே இலங்கை இனப்பிரச்சினைக்கு முதல்வித்தாக அமைந்தது எனபது இப்போது பலரும் ஏற்றுக் கொள்ளும் கருத்தாகும். தனிச் சிங்கள சட்டத்தால் தமிழ்ப் பகுதிகளில் ஏற்பட்ட அமைதியின்மையை நீக்கும் நோக்குடன் செய்யப்பட்ட பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தத்தையும் பௌத்த பிக்குகளினதும் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவினதும் போராட்டங்கள் காரணமாக கிழித்தெறிந்தார்[3]. இதன் மூலம் நாட்டின் தலைமை சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு தலை குனியும் நிலைமையை உருவாக்கியவர் இவராகவே கருதப்படுகிறார்[4].
மேற்கோள்கள்
- ↑ சிறுவயது வாழ்க்கை
- ↑ http://news.bbc.co.uk/2/hi/south_asia/964914.stm
- ↑ பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம்
- ↑ ஜே. ஆர். பாதயாத்திரை
"சிங்கள-தமிழ் தேசியவாதம்" அல்லது "பண்டா-செல்வா சித்தாந்தம்"
பண்டாரநாயக்க, பொன்னம்பலம் : இரு நண்பர்களின் இன அரசியல்