பாமினி சுல்தானகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி விடுபட்ட கட்டுரைகள், தகவற்பெட்டியில் இணைக்கப்பட்டது
சி Quick-adding category "இசுலாமிய சுல்தானகங்கள்" (using HotCat)
வரிசை 65: வரிசை 65:
[[பகுப்பு:இந்தியப் பேரரசுகள்]]
[[பகுப்பு:இந்தியப் பேரரசுகள்]]
[[பகுப்பு:பாமினிப் பேரரசு]]
[[பகுப்பு:பாமினிப் பேரரசு]]
[[பகுப்பு:இசுலாமிய சுல்தானகங்கள்]]


[[ca:Bahmànida]]
[[ca:Bahmànida]]

16:10, 5 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்

பாமினி பேரரசு
1347–1527
பாமினி பேரரசு, 1470
பாமினி பேரரசு, 1470
தலைநகரம்அஸன்பாத் (1347-1425)
முகம்மதாபாத் (1425-1527)
சமயம்
ஷியா இஸ்லாம்
அரசாங்கம்முடியாட்சி
சுல்தான் 
• 1347-1358
அலாவுதீன் ஹாசன் பாமினி ஷா
• 1525-1527
காலீம் அல்லாஹ் ஷா
வரலாற்று சகாப்தம்பின் மத்திய காலம்
• தொடக்கம்
3 ஆகஸ்ட் 1347
• முடிவு
1527
முந்தையது
பின்னையது
[[விஜயநகரப் பேரரசு]]
[[தில்லி சுல்தானகம்]]
[[தக்காணத்து சுல்தானகங்கள்]]

பாமினி பேரரசு (Bahmani Sultanate) என்பது இந்திய தக்காணப் பகுதியில் அமைந்த ஒரு இஸ்லாமியப் பேரரசு . மேலும் இதுவே தென்னிந்தியாவில் அமயப்பெற்ற முதல் சுதந்திர மற்றும் ஒரே ஷியா முஸ்லிம் பேரரசு ஆகும்.

வரலாறு

டெல்லி சுல்தான் முகம்மது பின் துக்ளக்கின் ஆட்சி காலத்தில் தக்காண பகுதிக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டவர் அலாவுதீன் ஹாசன் பாமினி ஷா என்பவர். தாஜிய-பாரசீக வம்சத்தில் வந்த இவர் 1347ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் நாள் டெல்லி சுல்தானை எதிர்த்து, தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளை தனி சுதந்திர அரசாக அறிவித்தார். இதன் பிறகு 1425ம் ஆண்டு வரை அஸன்பாத் (இன்றைய குல்பர்கா) நகரை தலைநகரமாக கொண்டு பாமினி சுல்தான்கள் ஆண்டு வந்தார்கள். 1425ம் ஆண்டு தலைநகர் முகம்மதாபாத் (இன்றைய பீதர்) நகருக்கு மாற்றப்பட்டது.

இதன் பிறகு இந்த பேரரசு, விஜயநகர பேரரசால் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், முகம்மது கவுன் (1466 - 1481) ஆட்சி காலத்தில் தனது உச்சத்தை அடைந்தது. இவரது காலமே பாமினி பேரரசின் பொற்காலமாக விளங்கியது. இதற்கு பிறகு தனது வீழ்ச்சியை அடையத்தொடங்கிய இந்த பேரரசு 1518ம் ஆண்டு ஐந்து பகுதிகளாக பிரிந்தது. அஹமதுநகர், பேரர், பீதர்,பிஜப்பூர் மற்றும் கோல்கொண்டா ஆகிய இந்த ஐந்து பேரரசுகளே பின்னாளில் தக்காணத்து சுல்தானகங்கள் என அழைக்கப்பட்டன.

கலாச்சாரம்

பாமினி சுல்தான்கல், இராணீய மன்னர் பரம்பரையான பாமான் வம்சத்தில் வந்தவர்கள் என நம்பப்படுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் பாரசீக கலாச்சாரத்தையே பின்பற்றினார். இவர்களது காலத்தில்தான் பாரசீக கலாச்சாரம் இந்தியாவில் பரவ தொடங்கியது.


இதையும் பார்க்கவும்

தக்காணத்து சுல்தானகங்கள்


வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாமினி_சுல்தானகம்&oldid=836718" இலிருந்து மீள்விக்கப்பட்டது