சீவக சிந்தாமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 10: வரிசை 10:
* [[சச்சந்தன்]] (தந்தை), [[விசயமாதேவி]] (தாய்)
* [[சச்சந்தன்]] (தந்தை), [[விசயமாதேவி]] (தாய்)
* [[கந்துக்கடன்]] (வளர்ப்புத் தந்தை), [[சுநந்தை]] (வளர்ப்புத் தாய்)
* [[கந்துக்கடன்]] (வளர்ப்புத் தந்தை), [[சுநந்தை]] (வளர்ப்புத் தாய்)
* தம்பியர்: [[நந்தட்டன்]], [[நபுலன்]], [[விபுலன்]] (வளர்ப்புத் தந்தையின் மக்கள்)
* [[நந்தட்டன்]], [[நபுலன்]], [[விபுலன்]] (வளர்ப்புத் தந்தையின் மக்கள்)
* நண்பர்கள்: [[சீதத்தன்]], [[புத்திசேனன்]], [[பதுமுகன்]], [[தேவதத்தன்]]
* [[சீதத்தன்]], [[புத்திசேனன்]], [[பதுமுகன்]], [[தேவதத்தன்]] (நண்பர்கள்)
* '''சீவகன் மனைவியர்''': [[காந்தருவதத்தை]], [[குணமாலை]], [[பதுமை]], [[கேமசரி]], [[கனகமாலை]], [[விமலை]], [[சுரமஞ்சரி]], [[இலக்கணை]]
* [[காந்தருவதத்தை]], [[குணமாலை]], [[பதுமை]], [[கேமசரி]], [[கனகமாலை]], [[விமலை]], [[சுரமஞ்சரி]], [[இலக்கணை]] (சீவகன் மனைவியர்)
* [[அச்சணந்தி]] (ஆசிரியர்)
* [[அச்சணந்தி]] (ஆசிரியர்)
* [[கட்டியங்காரன்]] (பகைவன்)
* [[கட்டியங்காரன்]] (பகைவன்)

09:02, 4 நவம்பர் 2006 இல் நிலவும் திருத்தம்

சீவக சிந்தாமணி என்பது சங்க காலத்துக்குப் பின்னர் தோன்றிய ஐம் பெருங் காப்பியங்களுள் ஒன்று. சோழர் காலத்தில் எழுதப்பட்டது. திருத்தக்கதேவர் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்ட இக் காப்பியம் சீவகன் என்பவனின் அகவாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. சமய இலக்கியங்களே அதிகம் படைக்கப்பட்ட அக்காலத்தில், மக்கள் மத்தியிலும், மன்னனிடமும் கூட இதற்கான தேவையும், ஆதரவும் இருந்ததாகத் தெரிகிறது.

சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் தமிழில் தோன்றிய முதல் இரு காப்பியங்களாகக் கருதப்படும், கதையை அடிப்படையாகக் கொண்ட இலக்கியங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக உருவான கதை கூறும் தமிழ் இலக்கியம் இது. எனினும் முன்னையவற்றைப் போலன்றி, சீவக சிந்தாமணி விருத்தப்பாக்களால் ஆனது. இதனால் விருத்தப் பாக்களால் ஆன முதல் தமிழ்க் காப்பியமாகவும் இது திகழ்கின்றது.

கதைச் சுருக்கம்

மன்னனுக்கு மகனாக, அரசியின் வயிற்றில் உருவானவன் சீவகன். எனினும் விதி வசத்தால் சுடுகாட்டில் பிறக்கிறான். பின்னர் வணிகன் ஒருவனின் வீட்டில் வளர்கிறான். அச்சணந்தி என்னும் ஆசானிடம் கல்வி பயின்றான். இவன் சிறந்த தோற்றப்பொலிவு கொண்டவன். மிக்க அறிவு நிரம்பியவன், பல்வேறு கலைகளிலும் வல்லவன், சிறந்த வீரன். இவன் எட்டு மங்கையரை மணந்து கொள்கிறான். இவ்வாறு பல மணம் புரிந்தவன் ஆனாலும், இவன் ஒரு காமுகனாக அன்றி சிறந்த மன அடக்கம் கொண்டவனாகவே சித்தரிக்கப்படுகிறான். இவ்வாறு பல பெண்களை மணம்புரிந்ததன் மூலம், பணபலத்தையும், படைபலத்தையும் பெருக்கிக் கொண்டு அரசபதவியை அடைகிறான். 30 ஆண்டுகள் நீதியுடன் ஆட்சி செய்த சீவகன், ஆட்சிப் பொறுப்பை மகனிடம் அளித்துவிட்டுத் துறவறம் பூண்டு முத்தி பெறுகிறான்.

முக்கிய பாத்திரங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீவக_சிந்தாமணி&oldid=79543" இலிருந்து மீள்விக்கப்பட்டது