மின்மினிப் பூச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: hu:Szentjánosbogarak |
சி தானியங்கிமாற்றல்: hu:Szentjánosbogár-félék |
||
வரிசை 52: | வரிசை 52: | ||
[[hi:जुगनू]] |
[[hi:जुगनू]] |
||
[[hr:Krijesnice]] |
[[hr:Krijesnice]] |
||
[[hu: |
[[hu:Szentjánosbogár-félék]] |
||
[[id:Kunang-kunang]] |
[[id:Kunang-kunang]] |
||
[[io:Luciolo]] |
[[io:Luciolo]] |
14:15, 17 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்
மின்மினிப் பூச்சி | |
---|---|
Unidentified species from India, dorsal (left) and ventral aspect | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | கணுக்காலி |
வகுப்பு: | பூச்சி |
வரிசை: | வண்டு |
துணைவரிசை: | Polyphaga |
உள்வரிசை: | Elateriformia |
பெருங்குடும்பம்: | Elateroidea |
குடும்பம்: | Lampyridae Latreille, 1817 |
Subfamilies | |
Cyphonocerinae Genera incertae sedis: |
மின்மினி பூச்சிகளை ஆங்கிலத்தில் Firefly என்கிறோம். இலங்கையின் சில பகுதிகளில் மின்மினிப் பூச்சியைக் கண்ணாம் பூச்சி என அழைக்கப்படுகிறது. மின்மினி பூச்சிகள் Coleoptera என்ற குடும்பத்தைச் சேர்ந்த வண்டுகள் ஆகும். மின்மினி பூச்சிகளில், உலகம் முழுதும் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளன.
மின்மினி பூச்சிகள் முட்டை, புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை. பெண் வண்டுகள் மண்ணில் முட்டை வைக்கும். சுமார் 4 வாரங்களில் முட்டையில் இருந்து புழு வந்துவிடும். புழுக்கள் கோடையிலும், வேனில் காலத்திலும் நன்கு சாப்பிட்டுவிட்டு ‘ஹாயாக’ டார்ச் பிடித்துக் கொண்டு வளைய வரும். குளிர்காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மண்ணுக்கடியில் பதுங்கி விடும். பெரும்பாலும், இவை மண்புழு மற்றும் நத்தை ஆகியவற்றையே தின்னும். இவை இரையைப் பிடித்துத் தின்னும் முறையே அலாதியானது. இரையைக் கண்டுபிடித்தவுடன் அதை முதலில் மயக்கமடையச் செய்துவிடும். இதற்கென்றே இதன் முகத்தில் ஒரு பிரத்தியேக அரிவாள் போன்ற கொடுக்கு நீட்டிக்கொண்டு இருக்கும். அதைக் கொண்டு இரையின் உடலினுள் மயக்கமடையச் செய்யும் வேதிப்பொருளை செலுத்திவிடும். பிறகு இரைக்குள் செரிமான நொதிகளை செலுத்தும். சில மணி நேரத்தில், இரையின் உடலினுள் உள்ள அவயங்கள் கூழ்மமாக மாறிவிடும். உடனே மின்மினி பூச்சிகளின் புழுக்கள் இரையைச் சுற்றி அமர்ந்து, ஜூஸ் குடிப்பது போல உறிஞ்சிவிடும். பிறகு ஜாலியாக ரவுண்ட்ஸ் போக தொடங்கும். அப்போது அதன் உடலில், அதாவது அடிவயிற்றின் முடிவில் விளக்கு எரிந்துகொண்டு இருக்கும். ஒரு சில பறவைகள்கூட, ஒளிக்காக இந்த புழுக்களைப் பிடித்து வந்து, தங்கள் கூட்டில் வைத்திருக்கும்.