மார்ச்சு 8: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ne:८ मार्च |
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: new:मार्च ८ |
||
வரிசை 136: | வரிசை 136: | ||
[[nds-nl:8 meert]] |
[[nds-nl:8 meert]] |
||
[[ne:८ मार्च]] |
[[ne:८ मार्च]] |
||
[[new:मार्च ८]] |
|||
[[nl:8 maart]] |
[[nl:8 maart]] |
||
[[nn:8. mars]] |
[[nn:8. mars]] |
11:48, 16 மே 2011 இல் நிலவும் திருத்தம்
<< | மார்ச் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
31 | ||||||
MMXXIV |
மார்ச் 8 கிரிகோரியன் ஆண்டின் 67ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 68ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 298 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1618 - ஜொஹான்னெஸ் கெப்லர் கோள்களின் இயக்கங்களுக்கான மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தார்.
- 1761 - வடக்கு லண்டனில் ஹாம்ப்ஸ்டட் நகரில் நிலநடுக்கம் பதியப்பட்டது.
- 1782 - ஐக்கிய அமெரிக்காவின் ஒகைய்யோ மாநிலத்தில் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறிய 90 அமெரிக்க இந்தியப் பழங்குடிகள் பென்சில்வேனியாவின் துணை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 68 பேர் குழந்தைகளும் பெண்களுமாவர்.
- 1817 - நியூ யோர்க் பங்குச் சந்தை நிறுவன மயப்படுத்தப்பட்டது.
- 1906 - பிலிப்பைன்சில் அமெரிக்கத் துருப்புக்களால் ஏறத்தாழ 600 ஏதிலிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1911 - அனைத்துலக மகளிர் நாள் முதன் முதலாக டென்மார்க்கில் கொண்டாடப்பட்டது.
- 1917 - ரஷ்யாவில் பெப்ரவரிப் புரட்சி (பெப்ரவரி 13 - பழைய நாட்காட்டியில்) ஆரம்பம்.
- 1921 - ஸ்பெயின் பிரதமர் எடுவார்டோ டாட்டோ மாட்ரிட்டில் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறும்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1924 - யூட்டாவில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் 172 பேர் கொல்லப்பட்டனர்.
- 1942 - இரண்டாம் உலகப் போர்: ஜாவாவில் ஜப்பானியப் படைகளிடம் டச்சுப் படைகள் சரணடைந்தனர்.
- 1942 - இரண்டாம் உலகப் போர்: பர்மாவின் ரங்கூன் நகரை ஜப்பான் கைப்பற்றியது.
- 1950 - சோவியத் ஒன்றியம் தன்னிடம் அணுக்குண்டு இருப்பதாக அறிவித்தது.
- 1957 - எகிப்து சூயஸ் கால்வாயை மீண்டும் திறந்தது.
- 1965 - வியட்நாம் போர்: 3,500 அமெரிக்கப் படைகள் தென் வியட்நாமில் தரையிறங்கினர்.
பிறப்புக்கள்
- 1879 - ஓஒட்டோ ஹான், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1968)
- 1886 - எட்வர்ட் கெண்டல், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1972)
- 1908 - பாலகங்காதர திலகர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.
இறப்புக்கள்
- 1922 - சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவர், ஈழத்துப் புலவர் (பி. 1854
- 1923 - ஜொஹானஸ் வான் டர் வால்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1837)
- 2004 - அபூ அப்பாஸ், பாலஸ்தீன விடுதலை முன்னணி தாபகர் (பி. 1948)