விராலிமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 10°36′6″N 78°32′47″E / 10.60167°N 78.54639°E / 10.60167; 78.54639
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Rsmnஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 2: வரிசை 2:
|type = நகரம்
|type = நகரம்
|native_name = விராலிமலை
|native_name = விராலிமலை
|other_name = nil
|other_name =
|district = [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை]]
|district = [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை]]
|state_name = தமிழ்நாடு
|state_name = தமிழ்நாடு

14:29, 4 மே 2011 இல் நிலவும் திருத்தம்

விராலிமலை
—  நகரம்  —
விராலிமலை
இருப்பிடம்: விராலிமலை

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°36′6″N 78°32′47″E / 10.60167°N 78.54639°E / 10.60167; 78.54639
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் புதுக்கோட்டை
அருகாமை நகரம் திருச்சி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்களவைத் தொகுதி கரூர்
மக்களவை உறுப்பினர்

ஜோதிமணி

சட்டமன்றத் தொகுதி விராலிமலை
சட்டமன்ற உறுப்பினர்

சி. விஜயபாஸ்கர் (அதிமுக)

மக்கள் தொகை 38,866 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
இணையதளம் www.viralimalai.com


விராலிமலை தமிழ்நாட்டின் திருச்சியிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள ஓர் வளர்ந்துவரும் நகர்ப்புறமாகும். கடல்மட்டதிலிருந்து 137மீ உயரத்தில்36,866 மக்கள்தொகையுடன்[3] அமைந்துள்ளது.

விராலிமலையில் உள்ள குன்றின் உச்சியில் விராலிமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பரத நாட்டியக் கலைக்குப் பெயர்பெற்றது. அவ்வகை நாட்டியத்தின் 32 வகை அடவு (நடன அசைவு)களில் ஒவ்வொன்றிற்கும் பெயர்பெற்ற கலைஞர்கள் அங்கு இருந்துள்ளனர். இந்நகரில் வாழ்வோரில் பெரும்பான்மையானோர் இசைவேளாளர் (மேளக்காரர்) சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

வரலாறு

குன்றில் அமைந்துள்ள இயற்கையான குகைகளில் மனிதர்கள் வாழ்ந்திருந்த அறிகுறிகள் காணப்படுகின்றன. ஆறு கி.மீ தொலைவில் அமைந்துள்ள கொடும்பாளூரின் தாக்கம் இங்கும் இருந்திருக்கலாம். சோழர் கால கோவில் ஒன்பதாம் நூற்றாண்டில் வளமிக்க ஊராக இருந்திருக்க வேண்டும் என சாற்றுகிறது. [4] இங்குள்ள குன்றுப்புறத்தில் முள்ளில்லாத மரங்கள், பெரும்பாலும் வெப்பாலை மரங்கள் காணப்படுகின்றன.

விராலிமலை இரு நூற்றாண்டுகளுக்கும் பழமையான குறவஞ்சி நாட்டிய நாடக வடிவொன்றிற்குப் பெயர்பெற்றது. 1993ஆம் ஆண்டுவரை ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி குன்றின் அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் இரவு முழுவதும் குறவஞ்சி நாடகம் நடக்கும். [5]

மயில் உய்வகம்

இந்தியாவின் தேசியப் பறவையான மயில்கள் கூடுதலாகக் காணப்படும் ஓர் இடமாக விராலிமலை திகழ்கிறது. முருகன் கோவிலைச் சுற்றியும் சுற்றியுள்ள வனங்களிலும் இவை காணப்படுகின்றன. இம்மலைப்பகுதி மயில்களுக்கான உய்வகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.[6] இந்நகரமும் கோவிலும் மயில்களின் உய்வகமும் பாரம்பரியமிக்க இடமாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. [7]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. Falling Rain Genomics Virilimalai
  4. Pudukkottai District#Pandya empire
  5. Sundarsuman center for Arts and Culture, Pudukkottai More details on Viralimalai
  6. Services International, Viralimalai Sanctuary Viralimalai Sanctuary
  7. Rural Development and Panchayat Raj (PR.2) Department, G.O. (Ms) No.19, Dated: 23.1.2008 Declaring Viralimalai as a heritage place
"https://ta.wikipedia.org/w/index.php?title=விராலிமலை&oldid=757492" இலிருந்து மீள்விக்கப்பட்டது