வீரராஜேந்திர சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Chola | name=வீரராஜேந்திர சோழன் |
|||
| tamil = வீரராஜேந்திர சோழன் |
|||
| map = [[Image:virarajendra_territories.png|200px]] |
|||
| caption = ''கி.பி 1069 சோழர் ஆட்சிப்பகுதிகள்'' |
|||
| title = ராஜகேசரி |
|||
| reign= கி.பி [[1063]] - கி.பி [[1070]] |
|||
| capital = [[கங்கைகொண்ட சோழபுரம்]] |
|||
| queen= அருள்மொழிநங்கை |
|||
| children= மதுராந்தகன்<br />கங்கைகொண்ட சோழன்<br />இராஜசுந்தரி |
|||
| predecessor= [[இராஜேந்திர சோழன் II]] |
|||
| heir= [[அதிராஜேந்திர சோழன்]] |
|||
| father= [[இராஜேந்திர சோழன் I]] |
|||
| year of birth= அறியப்படவில்லை |
|||
| year of death= கி.பி [[1070]] |
|||
}} |
|||
{{சோழர் வரலாறு}} |
|||
[[இரண்டாம் இராஜேந்திர சோழன்|இரண்டாம் இராஜேந்திர சோழனைத்]] தொடர்ந்து சோழ நாட்டு ஆட்சிபீடம் ஏறியவன் '''வீரராஜேந்திர சோழன்''' (கி.பி 1063 - 1070). இவன் இரண்டாம் இராஜேந்திரனின் தம்பி ஆவான். இரண்டாம் இராஜேந்திரனின் மகனும், முடிக்குரிய வாரிசுமான இராஜமகேந்திரன், தந்தைக்கு முன்னரே இறந்து விட்டதால், வீரராஜேந்திரன் அரசனாக்கப்பட்டான். |
[[இரண்டாம் இராஜேந்திர சோழன்|இரண்டாம் இராஜேந்திர சோழனைத்]] தொடர்ந்து சோழ நாட்டு ஆட்சிபீடம் ஏறியவன் '''வீரராஜேந்திர சோழன்''' (கி.பி 1063 - 1070). இவன் இரண்டாம் இராஜேந்திரனின் தம்பி ஆவான். இரண்டாம் இராஜேந்திரனின் மகனும், முடிக்குரிய வாரிசுமான இராஜமகேந்திரன், தந்தைக்கு முன்னரே இறந்து விட்டதால், வீரராஜேந்திரன் அரசனாக்கப்பட்டான். |
||
18:41, 19 அக்டோபர் 2006 இல் நிலவும் திருத்தம்
கி.பி 1069 சோழர் ஆட்சிப்பகுதிகள் | |
ஆட்சிக்காலம் | கி.பி 1063 - கி.பி 1070 |
பட்டம் | ராஜகேசரி |
தலைநகரம் | கங்கைகொண்ட சோழபுரம் |
அரசி | அருள்மொழிநங்கை |
பிள்ளைகள் | மதுராந்தகன் கங்கைகொண்ட சோழன் இராஜசுந்தரி |
முன்னவன் | இராஜேந்திர சோழன் II |
பின்னவன் | அதிராஜேந்திர சோழன் |
தந்தை | இராஜேந்திர சோழன் I |
பிறப்பு | அறியப்படவில்லை |
இறப்பு | கி.பி 1070 |
சோழ மன்னர்களின் பட்டியல் | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முற்காலச் சோழர்கள் | ||||||||||||||||||||||||||||
மாற்றார் இடையாட்சி | ||||||||||||||||||||||||||||
இடைக்காலச் சோழர்கள் | ||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||
சாளுக்கிய சோழர்கள் | ||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||
சோழர் சமூகம் | ||||||||||||||||||||||||||||
இரண்டாம் இராஜேந்திர சோழனைத் தொடர்ந்து சோழ நாட்டு ஆட்சிபீடம் ஏறியவன் வீரராஜேந்திர சோழன் (கி.பி 1063 - 1070). இவன் இரண்டாம் இராஜேந்திரனின் தம்பி ஆவான். இரண்டாம் இராஜேந்திரனின் மகனும், முடிக்குரிய வாரிசுமான இராஜமகேந்திரன், தந்தைக்கு முன்னரே இறந்து விட்டதால், வீரராஜேந்திரன் அரசனாக்கப்பட்டான்.
இவனுடைய காலம் சோழ நாட்டின் வரலாற்றில் பிரச்சினைகள் மிகுந்த காலமாயிருந்தது. தெற்கு, வடக்கு இரு புறங்களிலுமிருந்தும் போர்களையும், போட்டிகளையும் சந்திக்க வேண்டியிருந்தது.
போர்கள்
வீரராஜேந்திரன் சோழர்களின் பரம்பரை எதிரிகளான சாளுக்கியருடன் பல போர்களை நடத்த வேண்டியிருந்தது. கிழக்குச் சாளுக்கியப் பகுதியான வேங்கி மீது சோழருக்கு இருந்த ஈடுபாடே இப் போர்களுக்கு முக்கிய காரணம் எனலாம். அத்துடன், தெற்கில், பாண்டி நாட்டிலும், ஈழத்திலும் சோழரின் மேலாண்மையைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தொடர்ந்து போராட வேண்டியிருந்தது.
ஆரம்பகாலப் போர்கள்
இவனுடைய ஆரம்ப காலத்தில், சேர நாட்டில் ஏற்பட்ட கிளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்காக அங்கே சென்று போரிட்டான். பாண்டி நாட்டிலும், சில பாண்டிய இளவரசர்களின் கிளர்ச்சிகளை முறியடித்தான். இச் சூழ்நிலையைப் பயன்படுத்தி மேற்குச் சாளுக்கிய மன்னனான முதலாம் சோமேஸ்வரன் சோழ நாட்டின் மீது படையெடுத்தான்.
சாளுக்கியப் போர்கள்
வீரராஜேந்திரன் சாளுக்கியருடன் நடத்திய கடுமையான போர்கள் பற்றிய தகவல்களை அவன் காலத்திய கல்வெட்டுக்கள் எடுத்தியம்புகின்றன. வீரராஜேந்திரன் மன்னன் ஆகுமுன்பே, அப்போதைய முடிக்குரிய இளவரசனான இராஜமகேந்திரனின் தலைமையில் சாளுக்கியருடன் போரிட்டுள்ளான். இப்போரில் சாளுக்கியரை முறியடித்துச் சோழப்படை வெற்றி பெற்றது.