மோகனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5: வரிசை 5:
|bgcolor=efefef|[[ஆரோகணம்]]: ||ஸ ரி<sub>2</sub> க<sub>3</sub> ப த<sub>2</sub> ஸ்
|bgcolor=efefef|[[ஆரோகணம்]]: ||ஸ ரி<sub>2</sub> க<sub>3</sub> ப த<sub>2</sub> ஸ்
|-
|-
|bgcolor=efefef|[[அவரோகணம்]]: ||ஸ் த<sub>2</sub> ப க<sub>3/sub> ரி<sub>2/sub> ஸ
|bgcolor=efefef|[[அவரோகணம்]]: ||ஸ் த<sub>2</sub> ப க<sub>3</sub> ரி<sub>2/sub> ஸ
|}
|}



13:57, 15 அக்டோபர் 2006 இல் நிலவும் திருத்தம்

மோகனம்

  • இது 28வது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப் படும் 5வது சக்கரத்தின் 4 வது மேளமாகிய ஹரிகாம்போஜியின் ஜன்ய இராகம் ஆகும். எப்போதும் பாடக் கூடிய இவ்விராகம் சர்வ ஸ்வர கமக வரிக ரத்தி இராகம் ஆகும். சுபகரமான இவ்விராகம் விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுக்கும்.
ஆரோகணம்: ஸ ரி23 ப த2 ஸ்
அவரோகணம்: ஸ் த2 ப க3 ரி2/sub> ஸ
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), ஆகிய சுரங்கள் வருகின்றன.

இதர அம்சங்கள்

  • ம, நி வர்ஜம் என்பதனால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இது உபாங்க இராகம் ஆகும். ரி, க, த என்பன ராகச்சாயா ஸ்வரங்கள். இதில் வரும் ஜண்டை ஸ்வரங்களும், தாடுப் பிரயோகங்களும் ராக ரஞ்சகமானவை.
  • இது திரிஸ்தாயி இராகம் ஆகும். மேலும் இரவில் பாட இரு மிக ரஞ்சகமாக இருக்கும்.
  • இது ஒரு புராதன இராகம் ஆகும். எல்லா உருப்படி வகைகளையும் இந்த இராகத்தில் காணலாம். சுலோகங்களும், விருத்தங்களும் பாடுவதற்கேற்ற இராகம் ஆகும். இது ஒரு வர்ணனைக்குரிய இராகம் ஆகும். இசை நாடகங்களிலும், நிருத்திய நாடகங்களிலும் காணப்படும் பிரசித்த இராகங்களில் இதுவும் ஒன்றாகும்.
  • மனிதவர்க்கத்துக்கு தெரிந்த மிகப் பழைய இராகம் இது ஆகும். இந்த இராகத்தில் வரும் ஸ்வரங்கள் ஸட்ஜ - பஞ்சம முறையில் முதன் முதலில் தோன்றும் ஸ்வரங்களாகும். இந்த விடயத்தை ஆதி காலத்திலேயே எல்லா நாட்டு இசைக் கலைஞர்களாலும் கையாளப்பட்டு வந்தது. ஆதிவாசிகளின் இசையிலும் பாமரமக்கள் இசையிலும் கூட இவ்விராகம் வழக்கத்தில் இருந்து வருகிறது.
  • இந்துஸ்தானி இசையில் பூப் என்பது இவ்விராகமே. சர்வ ஸ்வர மூர்ச்சனாகர ஜன்ய இராகம்.
  • " திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" எனச் சிறப்புப் பெற்ற மாணிக்கவாசகரின் திருவாசகங் கூட தொன்று தொட்டு இந்த இராகத்தில் பாடப்பட்டு வருவது இவ்விராகத்தின் சிறப்பை உணர்த்துகின்றது.

உருப்படிகள்

  1. வர்ணம் : "நின்னுக்கோரி" - ஆதி - பூச்சி ஐயங்கார்.
  2. கீர்த்தனை : "ஏன் பள்ளி" - ஆதி - அருணாச்சல கவிராயர்.
  3. கிருதி : "ஸதாபாலய" - ஆதி - ஜி. என். பாலசுப்பிரமணியம்.
  4. கிருதி : "ராராராஜீவ" - ஆதி - மைசூர் வாசுதேவாச்சாரியார்.
  5. கிருதி : "நனுபாலிம்ப" - ஆதி - தியாகராஜர்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோகனம்&oldid=70837" இலிருந்து மீள்விக்கப்பட்டது