இசுப்புட்னிக் 1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி [r2.5.2] தானியங்கிஇணைப்பு: is:Spútnik 1 |
சி r2.5.1) (தானியங்கிஇணைப்பு: pnb:سپوتنک 1 |
||
வரிசை 59: | வரிசை 59: | ||
[[no:Sputnik 1]] |
[[no:Sputnik 1]] |
||
[[pl:Sputnik 1]] |
[[pl:Sputnik 1]] |
||
[[pnb:سپوتنک 1]] |
|||
[[pt:Sputnik I]] |
[[pt:Sputnik I]] |
||
[[ro:Sputnik 1]] |
[[ro:Sputnik 1]] |
22:03, 6 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்
இசுப்புட்னிக் 1 (Sputnik 1, ஸ்புட்னிக் 1) பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட முதலாவது மனிதனால் செய்யப்பட்ட செயற்கைக் கோள் ஆகும். இது 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் திகதி விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
இச் செயற்கைக் கோளின் நிறை 83 கிகி (184 இறாத்தல்) ஆகும். இது இரண்டு வானொலி ஒலிபரப்பிகளைக் கொண்டிருந்தது. இது பூமிக்குமேல் 250 கிமீ (150 மைல்) உயரத்தில் பூமியைச் சுற்றி வந்தது. சுபுட்னிக் 1 அனுப்பிய வானொலிச் சமிக்ஞைகளை ஆராய்ந்து, பூமியின் காற்று மண்டலத்தின் மேற்பகுதியைப் பற்றிய தகவல்கள் பெறப்பட்டன. சுபுட்னிக் 1 R-7 ராக்கெட்டினால் செலுத்தப்பட்டது.
சுபுட்னிக் 1 சோவியத் ஒன்றியத்தின் சுபுட்னிக் திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட பல்வேறு செயற்கைக் கோள்களில் முதலாவதாகும். இவற்றில் பலவும் வெற்றிகரமாக நிறைவேறின. விண்ணில் செலுத்தப்பட்ட இரண்டாவது செயற்கைக் கோளான ஸ்புட்னிக் 2, லைக்கா என்ற நாயைச் சுமந்து சென்றது. இதுவும், விலங்கொன்றை விண்வெளிக்குக் கொண்டுசென்ற முதலாவது செயற்கைக் கோள் என்ற பெருமையைப் பெற்றது. ஸ்புட்னிக் 3 தோல்வியுற்றது.
ஐக்கிய அமெரிக்காவும் ஆரம்பகட்டமாக, அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த குழுக்களினூடாக, வான்காட் திட்டம் என்ற பெயரில், செயற்கைக் கோள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தது. அவர்களுடைய முதல் ஏவுதலை, ஸ்புட்னிக்குக்கு முன்னரே செய்ய எண்ணியிருந்தும், அது நடைபெறாமல் பலமுறை தள்ளிப்போடப்பட்டது.
பின்னர், அமெரிக்கத் தரைப்படையின் ஜுபிட்டர் திட்டத்தின் கீழ் ஓர் அவசர முயற்சியொன்று தொடங்கப்பட்டு 1958 ஜனவரியில் எக்ஸ்புளோரர் 1 என்ற செயற்கைக் கோளை ஏவுவதில் வெற்றிகண்டனர்.
இது, பனிப்போரின் ஒரு பகுதியாக, இரு வல்லரசுகளுக்கிடையே நடைபெற்ற விண்வெளிப் போட்டியின் ஆரம்பமாகக் கருதப்படுகிறது. இரு நாடுகளும், விண்வெளி ஆய்வில் ஒன்றையொன்று முந்தும் முயற்சியின் உச்சக் கட்டமாக, அமெரிக்கா, அப்பல்லோ 11 இல் மனிதர்களை அனுப்பிச் சந்திரனில் இறக்கியது.
ஸ்புட்னிக் 1 ஜனவரி 4, 1958ல் திரும்பவும் பூமியில் விழுந்தது.