தமிழ்நாடு அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 3: | வரிசை 3: | ||
[[1986]] வரை தமிழ் நாடு அரசு ஈரவைகள் கொண்ட (சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவை) அரசாக செயல்பட்டது. அதன் பின் இன்று ஒரவையான சட்டமன்றத்தை மட்டும் கொண்டு செயல்பட்டு வருகின்றது. |
[[1986]] வரை தமிழ் நாடு அரசு ஈரவைகள் கொண்ட (சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவை) அரசாக செயல்பட்டது. அதன் பின் இன்று ஒரவையான சட்டமன்றத்தை மட்டும் கொண்டு செயல்பட்டு வருகின்றது. |
||
[[ஆளுநர்]], தமிழக அரசிற்கான [[இந்திய அரசியலமைப்பு|இந்திய அரசியலமைப்புத்]] |
[[ஆளுநர்]], தமிழக அரசிற்கான [[இந்திய அரசியலமைப்பு|இந்திய அரசியலமைப்புத்]] தலைவராகச் செயலாற்றுகிறார். [[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|தமிழக முதல் அமைச்சர்]] மற்றும் அவரது அமைச்சரவையின் ஆலோசனைகளின் பேரில் தமிழக ஆளுநர் செயல்படுகிறார். நீதிபரிபாலணம் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் கீழ் இயங்குகின்றது. |
||
'''தற்பொழுதைய ஆட்சியாளர்''' |
'''தற்பொழுதைய ஆட்சியாளர்''' |
20:21, 20 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்
இக்கட்டுரை தொடரின் ஒரு பகுதியாகும் |
தமிழ்நாடு அரசியல் |
---|
தமிழ் நாடு அரசு[1] 1986 வரை தமிழ் நாடு அரசு ஈரவைகள் கொண்ட (சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவை) அரசாக செயல்பட்டது. அதன் பின் இன்று ஒரவையான சட்டமன்றத்தை மட்டும் கொண்டு செயல்பட்டு வருகின்றது.
ஆளுநர், தமிழக அரசிற்கான இந்திய அரசியலமைப்புத் தலைவராகச் செயலாற்றுகிறார். தமிழக முதல் அமைச்சர் மற்றும் அவரது அமைச்சரவையின் ஆலோசனைகளின் பேரில் தமிழக ஆளுநர் செயல்படுகிறார். நீதிபரிபாலணம் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் கீழ் இயங்குகின்றது.
தற்பொழுதைய ஆட்சியாளர்
தமிழகத்தின் தற்பொழுதைய ஆளுநர் மேதகு எஸ்.எஸ். பர்னாலா, தற்பொழுதைய முதல்வர் மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி, தற்பொழுதைய தலைமை நீதிபதி மாண்புமிகு நீதியரசர் எச்.எல்.கோகலே.
தொகுதிகள்
தமிழக அரசின் ஆளுமைக்குட்பட்ட 234சட்டசபைத் தொகுதிகளாக , 39மக்களவைத் தொகுதிகளாக உள்ளன. தமிழக அரசு 31 மாவட்டங்களையும், 10 மாநகராட்சிகளையும், 149 நகராட்சிகளையும், 561 பேரூராட்சிகளையும், 12,618 கிராம ஊராட்சிகளையும் உள்ளடக்கியது.
மின் ஆளுமை
தமிழ் நாடு மாநிலம் மின் ஆளுமையை அறிமுகப்படுத்தியன் விளைவாக மற்ற மாநிலங்களிலிருந்து விலகி முன்னோடி மாநிலமாக திகழ்கின்றது அரசு பதிவேடுகள், நிலப்பதிவு, பட்டா போன்றவைகளை அனைத்து கிராம, நகர, சார் பதிவாளர் அலுவலகங்களில் கணிணிமயமாக்கலின் மூலம் அனைவரும் எளிதில் மற்றும் துரிதமாக பயன்பெரும் விதமாக, அரசின் செயல்பாடுகளை அனைவரும் அறியும் விதமாக மாற்றப்பட்டதில் தமிழக அரசுக்கு பெரும் பங்கு உண்டு.
2006 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தன் தோழமைக் கட்சியான காங்கிரசுடன் சேர்ந்து அதிமுகவை வெற்றிபெற்றதின் விளைவாக தற்பொழுது ஆட்சி நடத்துகின்றது.