பிரான்சிஸ் சவேரியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
சி தானியங்கிஇணைப்பு: oc:Francés de Xavièr மாற்றல்: fr:François de Xavier |
||
வரிசை 61: | வரிசை 61: | ||
[[பகுப்பு:1552 இறப்புகள்]] |
[[பகுப்பு:1552 இறப்புகள்]] |
||
⚫ | |||
[[an:Sant Francisco Xabier]] |
[[an:Sant Francisco Xabier]] |
||
⚫ | |||
⚫ | |||
[[bg:Франциск Ксаверий]] |
[[bg:Франциск Ксаверий]] |
||
⚫ | |||
[[ca:Francesc Xavier]] |
[[ca:Francesc Xavier]] |
||
[[cs:František Xaverský]] |
[[cs:František Xaverský]] |
||
வரிசை 72: | வரிசை 71: | ||
[[dv:ފްރާންސިސް ޒޭވިއަރ]] |
[[dv:ފްރާންސިސް ޒޭވިއަރ]] |
||
[[en:Francis Xavier]] |
[[en:Francis Xavier]] |
||
⚫ | |||
[[eo:Francisco Xavier]] |
[[eo:Francisco Xavier]] |
||
⚫ | |||
[[eu:Frantzisko Xabierkoa]] |
[[eu:Frantzisko Xabierkoa]] |
||
[[ |
[[fi:Francisco Xavier]] |
||
⚫ | |||
[[fy:Franciscus Xaverius]] |
[[fy:Franciscus Xaverius]] |
||
[[ga:Naomh Proinsias Xavier]] |
[[ga:Naomh Proinsias Xavier]] |
||
[[gl:Francisco Xabier]] |
[[gl:Francisco Xabier]] |
||
⚫ | |||
⚫ | |||
[[hr:Sveti Franjo Ksaverski]] |
[[hr:Sveti Franjo Ksaverski]] |
||
⚫ | |||
[[id:Fransiskus Xaverius]] |
[[id:Fransiskus Xaverius]] |
||
[[it:Francesco Saverio]] |
[[it:Francesco Saverio]] |
||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
[[la:Franciscus Xaverius]] |
[[la:Franciscus Xaverius]] |
||
⚫ | |||
[[ms:Francis Xavier]] |
[[ms:Francis Xavier]] |
||
[[nl:Franciscus Xaverius]] |
[[nl:Franciscus Xaverius]] |
||
⚫ | |||
[[no:Frans Xavier]] |
[[no:Frans Xavier]] |
||
[[oc:Francés de Xavièr]] |
|||
[[pl:Franciszek Ksawery]] |
[[pl:Franciszek Ksawery]] |
||
[[pt:Francisco Xavier]] |
[[pt:Francisco Xavier]] |
||
வரிசை 98: | வரிசை 99: | ||
[[sl:Sveti Frančišek Ksaverij]] |
[[sl:Sveti Frančišek Ksaverij]] |
||
[[sr:Франсиско Ксавер]] |
[[sr:Франсиско Ксавер]] |
||
⚫ | |||
[[sv:Frans Xavier]] |
[[sv:Frans Xavier]] |
||
⚫ | |||
[[tl:Francisco Javier]] |
[[tl:Francisco Javier]] |
||
⚫ | |||
[[uk:Франциск Ксав'єр]] |
[[uk:Франциск Ксав'єр]] |
||
[[vi:Phanxicô Xaviê]] |
[[vi:Phanxicô Xaviê]] |
11:28, 8 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்
புனித பிரான்சிஸ் சவேரியார் Saint Francis Xavier | |
---|---|
மறைப்பணியாளர் தொலை கிழக்கு நாடுகளின் திருத்தூதர் | |
பிறப்பு | சவேரி, நவார் இராச்சியம், (எசுப்பானியா) | 7 ஏப்ரல் 1506
இறப்பு | 3 திசம்பர் 1552 சாங்சோங் தீவு, சீனா | (அகவை 46)
ஏற்கும் சபை/சமயங்கள் | ரோமன் கத்தோலிக்கம், லூதரனியம், ஆங்கிலிக்கம் |
அருளாளர் பட்டம் | 25 அக்டோபர் 1619 by திருத்தந்தை பவுல் V |
புனிதர் பட்டம் | 12 மார்ச் 1622 by திருத்தந்தை கிரகோரி XV |
திருவிழா | டிசம்பர் 3 |
சித்தரிக்கப்படும் வகை | நண்டு, சிலுவை; லீலி மலை, நெருப்பு, போதகர், எரியும் இதயம் |
பாதுகாவல் | இந்தியா; ஆப்ரிக்க மறைப்பணியாளர்கள்; அகர்தலா; அகமதாபாத்; அலெக்சாண்டிரியா லூசியானா; ஆஸ்திரேலியா; மும்பை; கோவா (மாநிலம்); கேப் டவுன்; சீனா; டோக்கியோ; பிலிப்பைன்ஸ்; |
புனித பிரான்சிஸ் சவேரியார் (Saint Francis Xavier) ஸ்பெயின் நாட்டில் ஏப்ரல் 7, 1506 அன்று புகழ்மிக்க சவேரியார் அரண்மனையில் பிறந்தார். தன்னுடைய ஒன்பதாம் வயதில் தந்தையை இழந்த இவர் தாயின் பராமரிப்பிலேயே அதே அரண்மனையில் படித்து வந்தார். அப்போதே எசுப்பானியம் மற்றும் பல மொழிகளில் புலமை பெற்றிருந்தார். இந்தியாவில் கிறித்துவத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றினார்.
கல்வி
1525ஆம் வருடம் கல்லூரி படிப்பிற்காகப் பாரிஸ் சென்றார். அதன் பின்னர் 11 வருடங்கள் பாரிசிலே இருந்த புனித சவேரியார், அங்குள்ள புனித பற்பே கல்லூரியில் தத்துவம் மற்றும் கலைத்துறையில் முதுகலை பட்டம் பெற்று, 1530 முதல் 1534 வரை விரிவுரையாளராகப் பணியாற்றினார். மீண்டும் 1534முதல் 1536 வரை இறையியலைப் பயின்றார். அப்போது புனித சவேரியாருக்கு இலொயோலா இஞ்ஞாசியார் நண்பராயினார். பின்னர் இவர்கள் இயேசு சபையைத் தொடங்கினர். இதில் மீண்டும் நான்கு நண்பர்கள் சேர்ந்து இறைபணியை செய்ய முடிவு செய்தனர்.
குருத்துவமும் இந்திய வருகையும்
இதை தொடர்ந்து 1537 ஆம் வருடம் ஜூன் மாதம் 24 ஆம் நாள் குருவாக திருநிலை பெற்று தன் முதல் திருப்பலியை செப்டம்பர் 30ஆம் நாள் நிறைவேற்றினார். பின்னர் அவரும் அவருடைய நண்பர்களும் திருத்தந்தை மூன்றாம் பவுலைச்சந்தித்து இறைப்பணி செய்வதற்கான தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர். அதே வேளையில் போர்த்துகீசிய மன்னன் தனக்குக் கீழ் இருந்த நாடுகளுக்குக் குருக்களைத் தந்துதவும்படி வேண்டியதால், சவேரியார் இந்தியா மற்றும் போர்த்துகீசிய காலணி நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.
புனித சவேரியார் 1540இல் உரோமில் இருந்து புறப்பட்டு லிஸ்பான் செல்கிறார். அங்கு ஒரு வருடம் இறைபணியை செய்த பின்னர் இந்தியாவிற்கு வரும் வழியில் மொசாம்பிக்கில் ஒரு வருடம் இறைபணியை செய்துவிட்டு 1542 மே மாதம் 6ஆம் நாள் கோவாவை வந்தடைந்தார். முதல் நான்கு மாதங்கள் கோவாவிலும் பின்னர் தென் இந்தியாவின் குறிப்பாக தமிழகக் கடற்கரைக் கிராமங்களில் தனது இறைப்பணியைச் செய்துவந்தார்.
மறைப்பணி
1543இல் கன்னியாகுமரி மாவட்டத்தில் தன் இறைப்பணியைத் தொடர்ந்தார். சுமார் பதினைந்து மாதங்கள் கிராமங்கள் தோறும் மணியடித்தபடி சென்று அங்கு ஆட்கள் கூடியதும் அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவைப் பற்றிய செய்திகளைக் கூறியும் நோயாளிகளைச் சந்தித்தும் வந்தார். திருவிதாங்கூர் இராச்சியத்தில் பல ஆலயங்கள் புனித சவேரியாரால் நிறுவப்பட்டன.
இன்றைய குமரி மாவட்டத்தின் கோட்டாறு புனித சவேரியார் ஆலயம் இப்புனிதராலேயே நிறுவப்பட்டது என்பர்.
ஒரு முறை கடலில் பயணம் செய்யும் போது புனித சவேரியாரின் சிலுவை தொலைந்து போயிற்று, ஆனால் கரையை அடைந்ததும் ஒரு நண்டு அந்தச் சிலுவையைக் கொண்டுவந்து சேர்த்தது என்பர்.
மரணம்
புனித சவேரியார் சுமார் 38000 மைல்கள் கடல் மற்றும் தரை மார்கமாகப் பயணம் செய்து இறைப்பணியைச் செய்துள்ளார். கடைசியாக சாங்சோங் தீவில் நோயால் பாதிக்கபட்டார். இவரை ஜார்ஜ் அல்வறேஸ் என்னும் போர்த்துக்கீசியர் கவனித்து வந்தார். இருந்தாலும் 1552ஆம் வருடம் டிசம்பர் 3-ஆம் நாள் உயிர் துறந்தார். ஜார்ஜ் அல்வறேஸ் சவேரியாரை அத்தீவிலேயே அடக்கம் செய்துவிட்டுச் சென்று விடுகிறார்.
அழியா உடல்
சுமார் இரண்டரை மாதங்கள் கழித்து ( பெப்ருவரி 17, 1553) அத்தீவின் வழியாக வரும்போது, மீபொருட்களை, அவரின் சொந்த நாட்டுக்கு எடுத்துச்செல்ல கல்லறையை திறந்தபோது அவரது உடல் எந்தப் பாதிப்பும் இல்லாமல் வைத்தது வைக்கப்பட்டது போலவே இருந்தது. நறுமணமும் வீசியது. பின்னர் அவரது உடலை சண்ட க்ரூஸ் என்னும் கப்பலில் மக்காவு கொண்டு சென்றனர். இக்கப்பலானது மார்ச் 22, 1553ஆம் வருடம் மக்காவுவை வந்தடைந்தது. மீண்டும் ஒரு ஆலயத்தில் வைத்து அவரது உடலைப் பார்த்த போது அது கெட்டுபோகாமல் நறுமணம் வீசியது என்பர். பின்னர் சவேரியாரின் உடல் புனித சின்னப்பர் தேவாலயத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இரண்டு மாதங்களுக்குப் பின்னர் தந்தை பெய்ரோ புனித சவேரியாரின் உடலைக் கோவா கொண்டுசெல்ல உத்தரவிட்டார். இதன்படி டிசம்பர் 1553இல் புனித சவேரியாரின் உடல் கோவா வந்தடைந்தது. 450 வருடங்களைத் தாண்டிய பின்னரும் அழியாமல் இன்றும் இப்புனிதரின் உடல் மக்கள் பார்க்கும் படியாக வைக்கப்பட்டுள்ளது.