கோவிந்த் வல்லப் பந்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) துவக்கம் |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) சி + |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{prettyurl|Govind Ballabh Pant}} |
|||
{{Infobox_Indian_politician |
{{Infobox_Indian_politician |
||
| honorific-prefix = பண்டிட் |
| honorific-prefix = பண்டிட் |
||
வரிசை 14: | வரிசை 13: | ||
| order = [[உத்தரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்|ஐக்கிய மாகாண முதலமைச்சர்]] |
| order = [[உத்தரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்|ஐக்கிய மாகாண முதலமைச்சர்]] |
||
| term_start = 17 சூலை 1937 |
| term_start = 17 சூலை 1937 |
||
| term_end = |
| term_end = 1939 |
||
| predecessor = நவாப் சர் (முகம்மது அகமது சையித் கான் சடாரி) |
| predecessor = நவாப் சர் (முகம்மது அகமது சையித் கான் சடாரி) |
||
| successor = ஆளுனர் ஆட்சி |
| successor = ஆளுனர் ஆட்சி |
05:00, 31 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்
பண்டிட் கோவிந்த் வல்லப் பந்த் | |
---|---|
படிமம்:Govind Ballabh Pant-greyscale.jpg கோவிந்த் வல்லப் பந்த் | |
ஐக்கிய மாகாண முதலமைச்சர் | |
பதவியில் 17 சூலை 1937 – 1939 | |
முன்னையவர் | நவாப் சர் (முகம்மது அகமது சையித் கான் சடாரி) |
பின்னவர் | ஆளுனர் ஆட்சி |
ஐக்கிய மாகாண முதலமைச்சர் | |
பதவியில் 1 ஏப்ரல் 1946 – 26 சனவரி 1950 | |
முன்னையவர் | ஆளுனர் ஆட்சி |
பின்னவர் | பதவி அழிக்கப்பட்டது |
உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் | |
பதவியில் 26 சனவரி 1950 – 27 திசம்பர் 1954 | |
முன்னையவர் | புதிய உருவாக்கம் |
பின்னவர் | சம்பூரானந்த் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஆகத்து 30, 1887 கூந்த்-தாமாசு கிராமம், அல்மோரா, வட மேற்கு மாகாணம் |
இறப்பு | மார்ச் 7, 1961 உத்தரப் பிரதேசம் |
அரசியல் கட்சி | காங்கிரசு |
கோவிந்த் வல்லப் பந்த்(1887 ஆகத்து 30 - 1961 மார்ச் 7, गोविंद वल्लभ पंत) இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல் முதலமைச்சராகப் பணியாற்றியவரும் ஆவார். இந்தியை ஆட்சிமொழியாக்குவதில் பெரும் பங்கு வகித்தார்.தான் தலைமையேற்ற நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையில் இந்தியை முதன்மையான அலுவல் மொழியாகவும் ஆங்கிலத்தைத் துணைமொழியாக்கவும் பரிந்துரைத்தார்.இவருக்கு 1957ஆம் ஆண்டு நாட்டின் மிக உயர்ந்த குடிமை விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது.[1]
இளமைக்காலம்
1887 ஆகத்து 30-ல், பிளவுபடாத இந்தியாவின் வடமேற்கு மாகாணத்திலிருந்த அல்மோராவில் மனோரத் பந்த் மற்றும் கோவிந்தி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.[2]. 1909ஆம் ஆண்டு சட்டப்படிப்பு முடித்த பந்த் அடுத்த ஆண்டு அல்மோராவில் தமது வக்கீல் தொழிலைத் துவங்கினார்.பின்னர் காசிப்பூரில் 1914ஆம் ஆண்டு சுற்றுலா வரும் ஆங்கிலேயர்களுக்கு உள்ளூர்வாசிகள் கட்டணமின்றி பளு தூக்கவேண்டும் என்றிருந்த சட்டத்தை எதிர்க்க கிராமசபைக்கு உதவிய நேரத்தில் ஆளும் பிரித்தானியர்களுக்கு எதிராக மனம் மாறினார். 1921ஆம் ஆண்டு காந்தியின் அகிம்சை வழியில் ஈர்க்கப்பட்டு அரசியல் வாழ்வில் நுழைந்தார். ஐக்கிய மாகாணத்தில் நடந்த பொதுத்தேர்தல்களில் நைனிதால் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்திய விடுதலை இயக்கதின் போது 1930,1933,1940 மற்றும்1942ஆம் ஆண்டுகளில் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். 1937 மற்றும் 1946 ஆண்டுகளில் ஐக்கிய மாகாணத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.புதியதாக உருவாக்கப்பட்ட உத்திரப் பிரதேச மாநிலத்தின் முதலாவது முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
1955ஆம் ஆண்டு நடுவண் ஆயத்தில் உள்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
மேற்கோள்கள்
- ↑ http://india.gov.in/myindia/bharatratna_awards_list1.php
- ↑ http://www.liveindia.com/freedomfighters/8.html