கிரிகோர் மெண்டல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: az:Georq Yohan Mendel
சி தானியங்கிஅழிப்பு: az:Georq Yohan Mendel
வரிசை 84: வரிசை 84:
[[af:Gregor Mendel]]
[[af:Gregor Mendel]]
[[ar:غريغور يوهان مندل]]
[[ar:غريغور يوهان مندل]]
[[az:Georq Yohan Mendel]]
[[bg:Грегор Мендел]]
[[bg:Грегор Мендел]]
[[bn:গ্রেগর ইয়োহান মেন্ডেল]]
[[bn:গ্রেগর ইয়োহান মেন্ডেল]]

05:06, 16 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்

கிரிகோர் ஜோஹன் மெண்டல்
Gregor Johann Mendel
பிறப்பு(1822-07-20)சூலை 20, 1822
சிலேசியா, ஆஸ்திரியப் பேரரசு
இறப்புசனவரி 6, 1884(1884-01-06) (அகவை 61)
புர்னோ, ஆஸ்திரியா-ஹங்கேரி
துறைமரபியல்
பணியிடங்கள்Abbey of St. Thomas in Brno
கல்வி கற்ற இடங்கள்வியன்னா பல்கலைக்கழகம்
அறியப்படுவதுமரபியலை கண்டுபிடித்தமை

கிரிகோர் ஜோஹன் மெண்டல் (Gregor Johann Mendel, ஜூலை 20, 1822ஜனவரி 6, 1884), மரபியல் குறித்த அடிப்படை ஆராய்ச்சிப் பணிகளுக்காக அறியப்படும் ஆஸ்திரிய பாதிரியாராவார். இவர், மரபியல் அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

ஆர்வத்தின் காரணமாக தனிப்பட்ட முறையில் ஆய்வு மேற்கொண்ட மெண்டல், தன்னுடைய தோட்டத்தில் இருந்த பட்டாணிச் செடிகளில், முறைப்படுத்தப்பட்ட மகரந்த சேர்க்கை நடைபெறச் செய்து, அதன் விளைவுகளை (அதாவது ஆராய்ச்சியின் முடிவுகளை) புள்ளிவிபரவியலின் அடிப்படையில் விளங்கிக்கொள்ள முற்பட்டார். அதன் பயனாக, மரபுப் பண்புகள் ஒரு சந்ததியிலிருந்து அடுத்த சந்ததிக்கு எப்படி கடத்தப்படுகின்றன என்று கண்டறிந்து, 1866ல் அது குறித்து ஆராய்ச்சிக்கட்டுரை ஒன்றினை எழுதினார். இந்த மரபுப் பண்புகள் சில குறிப்பிட்ட விதிகளுக்கமையவே அடுத்த சந்ததிக்கு கடத்தப்படுகின்றன என அவர் கூறினார். அந்த விதிகள் பின்னாளில் மென்டலின் விதிகள் எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்படுகிறது.

எனினும், அக்கட்டுரையின் முக்கியத்துவத்தை, அவர் வாழ்நாளில் எவரும் உணரவும் இல்லை; அங்கீகரிக்கவும் இல்லை. 1900ல் Correns, De Vries, Tschermak என்ற மூன்று தனிப்பட்ட ஆய்வாளர்களால் மெண்டலின் கட்டுரையின் முக்கியத்துவம் உணரப்பட்டது. மெண்டல் வரையறுத்த கோட்பாடுகள், இன்று மரபியல் அறிவியலின் அடிப்படையாக விளங்குகின்றன.

வாழ்க்கைக் குறிப்பு

ஆஸ்திரியப் பேரரசில் உள்ள Heinzendorf (Moravia) (தற்பொழுதைய Hynčice, Nový Jičín மாவட்டம், செக் குடியரசு) என்ற இடத்தில் பிறந்தார். மெண்டல், தன் இள வயதில் தோட்ட வேலை பார்த்தார். பின் Olmutz தத்துவ இயல் நிறுவனத்தில் சேர்ந்து பயின்றார். 1843ல் Brnoவில் உள்ள Augustinian மடத்தில் சேர்ந்தார். அதன் பிறகு வியன்னா பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலச் சென்றார்.

அவரது பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் மடத்தில் இருந்த உடன் பணியாற்றியவர்களும், தாவரங்களில் இருந்த வேறுபாடுகளை ஆய்வு செய்வதற்கு அவருக்கு உத்வேகமாக விளங்கினர். மெண்டலுக்கு இயற்கை மீதிருந்த காதலே அவருடைய ஆராய்ச்சி மனப்பான்மைக்கு முக்கியக் காரணமாகும். தாவரங்கள் தவிர, வானியலிலும் பரிணாமக் கோட்பாடுகளிலும் அவருக்கு ஈடுபாடு இருந்தது. மெண்டல், தன் மடத்திலிருந்த தோட்டத்திலேயே ஆராய்ச்சிப் பணிகளை செய்தார். 1856ல் இருந்து 1863 வரை பல நுணுக்கமான வேறுபாடுகளைக் கொண்ட பட்டாணிச் செடிகளை வளர்த்து, அவற்றின் மரபியல் பண்புகளை ஆராய்ந்தார். இந்த ஆராய்ச்சிகளின் விளைவாக, அவர் (மெண்டலின் Inheritance விதிகள் என பின்னாளில் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டுவரும்) இரண்டு விதிகளை முன்மொழிந்தார்.

1865ஆம் ஆண்டு, Bohemiaவில் உள்ள Natural History Society of Brunnல் நடந்த இரண்டு அமர்வுகளில் 'தாவரங்களில் கலப்பின ஆய்வுகள்' Experiments on Plant Hybridization என்ற தலைப்பிலான தம்முடைய ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தார். எனினும் அந்த காலக்கட்டத்தில் மெண்டலின் ஆராய்ச்சிகளின் முக்கியத்துவத்தை எவரும் உணரவில்லை. அதற்கடுத்த 35 ஆண்டுகளில் மூன்று முறை மட்டுமே பிற அறிஞர்களால் அவருடைய ஆராய்ச்சி மேற்கோள் காட்டப்பட்டது.

பட்டாணியில் தனது ஆய்வை முடித்துக்கொண்டவர், பின்னர் விலங்குகளிலும் தன் ஆய்வை மேற்கொள்ளும் எண்ணத்துடன் தேனீக்களில் தனது ஆய்வைத் தொடங்கினார். தேனீக்களில் ஒரு கலப்பினத்தை அவர் தோற்றுவித்த போதிலும், அந்த கலப்பினம் நிலைத்து நிற்காமல் அழிந்து போனது. இராணித் தேனீயின் இனப்பெருக்க நடவடிக்கையை கட்டுப்படுத்துவதிலுள்ள சிரமங்கள் காரணமாக, தேனீக்களின் மரபியல்பற்றிய சரியானதொரு வரைபை அவரால் கொடுக்க முடியாமல் போனது. அவரால் விபரிக்கப்பட்ட சில புதிய தாவர இனங்களுக்குரிய சீர்தர தாவரவியல் ஆசிரிய குறுக்கங்களில் (The standard botanical author abbreviation) ‘மெண்டல்' எனக் குறிப்பிடப்படுகின்றது.

1868 இல், அரசாங்கம் மத நிறுவனங்களின்மீது விசேட வரிச்சலுகைகளை விதிக்க முயற்சி செய்தபோது, அதற்கெதிராக தொழிற்பட வேண்டிய நிலையில், அவர் தனது அறிவியல் ரீதியான வேலைகளை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டு, நிர்வாக கடமைகளை செய்யத் தொடங்கினார்.

அவரின் இறப்புவரை, அவரது ஆய்வுகள் சரியாக எவராலும் முக்கியப்படுத்தப்படாமல் போயிருப்பினும், 20 ஆம் நூற்றாண்டில், 1930கள் 1940 களில், அவரது ஆய்வுகள் மீட்டெடுக்கப்பட்டு, டார்வினின் இயற்கைத் தேர்வுக் கொள்கையுடன் சேர்த்து இணைக்கப்பட்டு, தற்கால நவீன கொள்கைகள் உருவாக்கப்பட்டன.

ஜனவரி 6, 1884 ஆம் ஆண்டு ஆஸ்திரியா-ஹங்கேரி (தற்பொழுதைய செக் குடியரசு)ல் உள்ள Brno என்ற இடத்தில் chronic nephritis நோயால் உயிரிழந்தார்.

மெண்டலின் ஆராய்ச்சி மீட்டெடுப்பு

ஆட்சியுடைய, பின்னடைவான தோற்றவமைப்புக்கள். (1) பெற்றோர் சந்ததி. (2) F1 சந்ததி. (3) F2 சந்ததி.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை மெண்டலின் ஆராய்ச்சிகளின் முக்கியத்துவம் உணரப்படாமலேயே இருந்தது. 1900ல் Hugo de Vries, Carl Correns மற்றும் Erich von Tschermak ஆகிய அறிஞர்கள் மெண்டலின் ஆராய்ச்சி முடிவுகளை மீட்டெடுத்தார்கள். அவர்கள் செய்து பார்த்த சோதனைகளில் மெண்டலின் ஆராய்ச்சி முடிவுகளை சரிபார்த்துக்கொள்ள முடிந்தது. அதன் பின்னரும் கூட, மெண்டலின் கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம் பற்றி William Bateson மற்றும் Karl Pearson ஆகியோருக்கு இடையில் கடும் விவாதங்கள் நிகழ்ந்தன. 1918ல், Ronald Fisher மெண்டலின் மரபியல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு நவீன பரிணாம உயிரியல் துறைக்கு வித்திட்டார்.

எனினும் மெண்டலின் ஆராய்ச்சி முடிவுகளின் நம்பகத்தன்மை அவ்வப்போது கேள்விக்குளாக்கப்பட்டு வருகிறது. புகழ்பெற்ற புள்ளிவிபரவியலாளரான ரொனால்ட் ஃபிசர் Ronald Fisher மெண்டலின் ஆய்வுகளில் கூறப்பட்டிருந்த F1 சந்ததியின் விகிதத்தை ஆய்வுசெய்து, அவை நம்ப முடியாத வகையில் 3 க்கு 1 என்ற விகிதத்தை மிக அண்மித்திருப்பதாக கருதினார். மெண்டல், உண்மைக்கு புறம்பான முறையில் தன் ஆராய்ச்சி முடிவுகளைத் திருத்தி எழுதினார் என்று சொல்ல முடியாது என்றாலும், அவரின் ஆராய்ச்சி முடிவுகள் ஆச்சரியப்படத்தக்க வகையில் எளிமையாக உள்ளன. பெரும்பாலும், அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் இவ்வளவு எளிமையாக கிடைத்து விடுவதில்லை. இது போக, அவர் பெரும்பாலும் ஒரே மரபணுவில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாகத் தாவரங்களில் விளையும் வேறுபாடுகளை மட்டும் கொடுத்திருந்தார். பல மரபணுக்களையும் அவர் கவனிதிருந்தார் என்றால், மரபணுக்களின் இணைப்புக்களின் காரணமாக முடிவுகள் வேறு மாதிரியாகவோ இவ்வளவு எளிமையாகவோ கிடைத்திருக்காமல் இருக்கலாம். இதனால், ஒருவேளை மெண்டல், தான் பரிந்துரைத்த மரபியல் கோட்பாடுகளுக்கு புறம்பாக வந்த ஆராய்ச்சி முடிவுகளை மறைத்திருக்கக் கூடுமோ என்ற ஐயப்பாடும் நிலவுகிறது.

மெண்டலும் டார்வினும்

இங்கிலாந்து naturalist சார்லஸ் டார்வினும் (18091882) மெண்டலும் ஒரே காலக்கட்டத்தில் வாழ்ந்தவர்கள். மெண்டல், டார்வினின் (ஜெர்மன் மொழியாக்கப்பட்ட) ”இனங்களின் தோற்றம்” (The Origin of Species) கட்டுரையைப் படித்திருந்த போதிலும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கவில்லை. மெண்டலின் ஆராய்ச்சிக் கட்டுரையை டார்வின் பெற்றுக்கொண்ட போதிலும், இறுதி வரை அதை படிக்கவில்லை என்று தெரிய வருகிறது. இது போன்ற காரணங்களால், 1920 வரை பரிணாமம் (Evolution) குறித்த கோட்பாடுகள் உருப்பெறாமலே இருந்தன.

படங்கள்

நூலாதாரம்

  • Colin Tudge In Mendel's footnotes மெண்டல் பற்றிய ISBN 0-09-928875-3 நூல்.
  • Curt Stern and Sherwood ER (1966) The Origin of Genetics.
  • Robin Marantz Henig, Monk in the Garden: The Lost and Found Genius of Gregor Mendel, the Father of Genetics, Houghton Mifflin, May, 2000, hardcover, 292 pages, ISBN 0-395-97765-7; trade paperback, Houghton Mifflin, May, 2001, ISBN 0-618-12741-0
  • William Bateson Mendel's Principles of Heredity, a Defense, First Edition, London: Cambridge University Press, 1902. On-line Facsimile Edition: Electronic Scholarly Publishing, Prepared by Robert Robbins
  • Reginald Punnett, Mendelism, Cambridge, 1905
  • Robert Lock, Recent Progress in the Study of Variation, Heredity and Evolution, London, 1906
  • James Walsh, Catholic Churchmen in Science, Philadelphia: Dolphin Press, 1906

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Gregor Mendel
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிகோர்_மெண்டல்&oldid=613182" இலிருந்து மீள்விக்கப்பட்டது