உசுமானியா பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sankararaju (பேச்சு | பங்களிப்புகள்)
Translated from http://en.wikipedia.org/wiki/Osmania_University (revision: 359603981) using http://translate.google.com/toolkit with about 98% human translations.
 
கூகுள் வார்ப்புரு
வரிசை 1: வரிசை 1:
{{Google}}
{{Infobox University
{{Infobox University
|image_name= Osmania University Logo.png
|image_name= Osmania University Logo.png

17:51, 2 சூன் 2010 இல் நிலவும் திருத்தம்

Osmania University
வகைPublic
உருவாக்கம்1918
வேந்தர்ESL Narasimhan, Governor of Andhra Pradesh
துணை வேந்தர்Prof. T. Tirupati Rao
அமைவிடம்
Osmania University, Hyderabad AP -500 007 INDIA
, , ,
வளாகம்Urban, 1600 acres (6 km²)
இணையதளம்www.osmania.ac.in
Osmania University is accredited with 5 stars level by NAAC

ஓஸ்மானியா பல்கலைக்கழகம் (சுருக்கமாக ஓயூ என்றும் அறியப்பட்டது) என்பது ஒரு பொது பல்கைலைக்கழகம், இது இந்தியாவின் ஆந்திர பிரதேசம்|ஆந்திர பிரதேச மாநிலத்தித்தின் ஐதராபாத் நகரில் அமைந்திருக்கிறது. இந்தியாவிலிருக்கும் மிகப் பழைய நவீன பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இந்திய மொழியைப் பயிற்று மொழியாகக் (உருது) கொண்ட முதல் இந்தியப் பல்கலைக்கழகமும் இதுவாகும். தன்னுடைய பல்வேறு வளாகங்களில் மற்றும் துணைக் கல்லூரிகளில் 300,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் இது இந்தத் துணைகண்டம்|துணைக்கண்டத்தில் இருக்கும் மிகப்பெரிய பல்கலைக்கழக அமைப்புகளில் ஒன்றாகும். குறிப்பாக அது தன்னுடைய பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளுக்கு மிகவும் அறியப்பட்டுள்ளது. அதன் மேலாண்மை பிரிவு, பல்கலைக்கழக அமைப்பின் கீழ் இருக்கும் மிகச் சிறந்த மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஓஸ்மானியா மருத்துவக் கல்லூரி ஒருகாலத்தில் அதே பல்கலைக்கழக அமைப்பின் கீழ் இருந்தது. அது இப்போது இந்தியாவின், ஆந்திர பிரதேசத்தின் என்டிஆர் உடல்நலப் பல்கலைக்கழகத்தின் கீழ் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

வரலாறு

ஐதராபாத் மாநிலம்|ஐதராபாத் மாநில ஏழாவது நிஜாமான நவாப் மிர் ஓஸ்மான் அலி கான் அவர்களால், இந்தியாவில் உயர் கல்விக்காக 1918 ஆம் ஆண்டில் நிறுவபட்ட இந்தப் பல்கலைக்கழகம், தென்னிந்தியாவின் மூன்றாவது பழையதும் முந்தைய அரசகுல ஐதராபாத் மாநிலதில் உருவான முதல் பல்கலைக்கழகமும் ஆகும்.[1]. கிட்டத்தட்ட தொண்ணூறு ஆண்டுகளாக இது அனைத்துத் துறைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சியைப் பேணிக் காத்துவந்துள்ளது. அந்தப் பிராந்தியத்தின் வளர்ச்சி, மற்றும் ஒட்டுமொத்தமாக தேசத்தின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களித்துள்ளது.

படிமம்:OsmaniaUniv2.JPG
கலைக் கல்லூரி, வளாகத்திலுள்ள மிகவும் அறியப்பட்ட கட்டிடம்

அதன் முன்னாள் மாணவர்கள் தங்களைத் தாங்களே தேசிய மற்றும் சர்வதேச அளவில் வேறுபடுத்திக் காட்டியுள்ளனர் (குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள் பிரிவைப் பார்க்கவும்).

பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணை வேந்தராக இருப்பவர் திரு. டி. திருப்பதி ராவ்.

கல்வி, ஆராய்ச்சி மற்றும் மாணவர் சேர்க்கை

ஓஸ்மானியா பல்கலைக்கழகம் ஒரு இலாபநோக்கமற்ற பல்கலைக்கழகம், இது அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தின் இளங்கலை பொறியியல், முதுகலைகள் மற்றும் பேரறிஞர்கள் படிப்பு திட்டங்களுக்கான மாணவர் சேர்க்கை கல்வித் தகுதியின் அடிப்படையிலேயே செய்யப்படுகிறது, இது, அளிக்கப்படும் ஒவ்வொரு கல்வி திட்டத்துக்கும் நடத்தப்படும் தேசிய நுழைவுத் தேர்வு மூலம் மதிப்பிடப்படுகிறது. ஆராய்ச்சி செயல்நடவடிக்கைகள், யூஜிசி (பல்கலைக்கழக மானிய வாரியம்) அல்லது சிஎஸ்ஐஆர் (அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக்கான பேரவை) போன்ற பல்வேறு ஏஜென்சிகளால் நிதியளிக்கப்படுகிறது, இவை இந்திய அரசாங்கத்தின் சுய ஆட்சி நிறுவனங்களாகும். 1918 ஆம் ஆண்டில் நிஸாமால் நிறுவப்பட்ட ஓஸ்மானியா பல்கலைக்கழகம், இந்தியாவின் ஏழாவது பழைய பல்கலைக்கழகமாகும்.

வளாகம்

ஓஸ்மானியா வளாகம் கிட்டத்தட்ட 1600 ஏக்கர்களைக் (6 km²) கொண்டுள்ளது. ஓஸ்மானியா பல்கலைக்கழகம் தான் நாட்டிலேயே மிகப் பெரிய உயர் கல்வி அமைப்பாக இருக்கிறது[மேற்கோள் தேவை]. இந்தப் பல்கலைக்கழகம் தேசத்தின் மூலைமுடுக்குகளிலிருந்தும் பல்வேறு நாடுகளிலிருந்தும் மாணவர்களை ஈர்க்கிறது. அதனுடைய வளாகத்தில், இணையற்ற துணைக் கல்லூரிகள் மற்றும் மாவட்ட மையங்களில் தங்களுடைய மேற்படிப்புகளை மேற்கொண்டிருக்கும் கிட்டத்தட்ட 300,000 மாணவர்களின் மையமாக இருக்கிறது. அதன் ஆசிரியர் குழு மற்றும் ஊழியர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 5,000 ஆக இருக்கிறது.

மனிதவியல், கலை, அறிவியல், சமூக அறிவியல், சட்டம், பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் வணிக மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கிழக்கத்திய மொழிகள் ஆகிய துறைகளில் ஓஸ்மானியா பாடத்திட்டங்களை வழங்குகிறது.

2001 ஆம் ஆண்டில், ஓஸ்மானியா பல்கலைக்கழகம் ஐந்து நட்சத்திர அந்தஸ்தைப் பெறும் பெருமதிப்பினைப் பெற்றது, இது இந்திய அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இயங்கும் பல்கலைக்கழக மானிய வாரியத்தின் தேசிய அங்கீகாரம் மற்றும் மதிப்பீட்டு மன்ற (NAAC)த்தால் வழங்கப்பட்டது[மேற்கோள் தேவை].

வளாகத்திலுள்ள கல்லூரிகள்

அறிவியல் மற்றும் கலைக் கல்லூரி

அறிவியல் கல்லூரி

(1918 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட), இந்த அறிவியல் பல்கலைக்கழக கல்லூரி அடிப்படை மற்றும் பயனுறு அறிவியல் இரண்டிலும் ஆராய்ச்சியை மேற்கொள்ளும் பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறது. கல்லூரியே 1918 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட போதிலும், நிஸாமியா வானிலை ஆய்வுக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட வானியல் பணிகள் 1908 ஆம் ஆண்டுக்கு முந்தையதாக இருக்கிறது. 1906 ஆம் ஆண்டு முதல் 1946 ஆம் ஆண்டு வரையில் இந்த வானிலை ஆய்வுக்கூடம் பெரும் சர்வதேச திட்டமான 'கார்டெ-டு-சியல்' இன் ஒரு அங்கமாக இருந்தது, இது நட்சத்திரங்களின் ஒருங்கிணைப்புகளின் துல்லியமான அளவீடுகளிலிருந்து ஒரு பரந்துவிரிந்த ஆஸ்ட்ரோகிராபிக் நட்சத்திர கேடலாக்கைத் தயாரித்தது.

இன்று ஒவ்வொரு துறைக்கும் ஒரு தனி கட்டடத்தை ஏற்படுத்தி அறிவியல் பல்கலைக்கழக கல்லூரி 13 கற்பிக்கும் துறையில் முதுகலை (எம்.எஸ்சி) மற்றும் பிஎச்.டி பட்டங்களை வழங்குகிறது.

அறிவியல் பல்கலைக்கழக கல்லூரியில் பல்வேறு ஆசிரியர் குழுக்களால் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படுகிறது, இது அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி பேரவை (CSIR) மற்றும் அறிவியல் & தொழில்நுட்பத் துறை (DST) போன்ற பல்வேறு அரசு ஏஜென்சிகளிடமிருந்து மானியங்களைப் பெறுகிறது. வழக்கமான 1000 மாணவர் எண்ணிக்கை அல்லாமல், எம்.பில் மற்றும் பிஎச்.டி பட்டப்படிப்புகளுக்காக 1500 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி அறிஞர்களும் இருக்கிறார்கள். கல்லூரியில் கிட்டத்தட்ட 200 கற்பிக்கும் ஊழியர்களும் 388 தொழில்நுட்ப மற்றும் இதர ஊழியர்களும் இருக்கிறார்கள். மருத்துவர் அஹமத் ஷாநவாஸ் மிகச் சிறந்த ஆசிரியர்களில் ஒருவராகவும் மருத்துவக் கல்லூரியின் டீனாகவும் இருந்தார். அசலாக அவர் சியால்கோட்டைச் சேர்ந்தவர், அது இப்போது பாகிஸ்தான் பகுதி பஞ்சாபில் இருக்கிறது. அவர் தன்னுடைய எம்ஆர்சிபி மற்றும் எஃப்ஆர்சிஎஸ்யை இங்கிலாந்தில் பெற்றார், ஐதராபாத் நிஸாமின் அரசக் குடும்ப வைத்தியராக இருப்பதற்காக 1920 ஆம் ஆண்டில் அவர் ஐதராபாத் வந்தார், பின்னாளில் அவர் கல்லூரியின் ஆசிரியராகவும் பின்னர் டீனாகவும் ஆனார். மாணவர்களிடத்தில் அவர் விரும்பத்தக்க ஆசிரியராகவும் மிகவும் மதிக்கப்படக்கூடியவராகவும் இருந்தார். அவர் இறந்து பல ஆண்டுகள் ஆன பிறகும் கூட அவர் மாணவராக இருந்த உலகெங்கிலும் இருக்கும் பல மருத்துவர்கள் தங்கள் கேபின்களில் அவருடைய புகைப்படத்தை ப்ரேம் செய்து மாட்டியிருக்கிறார்கள். சில சிக்கலான நிலைமைகளின்போது சிலர் அவருடைய புகைப்படத்தின் கீழ் நின்று இந்தச் சிக்கலுக்கான சரியான தீர்வைக் கண்டறிவதாக நம்புகிறார்கள்.

சட்டக் கல்லூரி

சட்டப் பிரிவு அப்போதைய டீனான நீதிபதி பி. ஜகன் மோகன் ரெட்டி இந்தக் கல்வி நிறுவனத்தை ஏற்படுத்துவதில் செயலூக்க ஆர்வம் கொண்டிருந்தார். சட்டப் பல்கலைக்கழகக் கல்லூரி 1960 ஆம் ஆண்டில் அப்போதைய இந்தியத் தலைமை நீதிபதியாக இருந்த திரு. பீ.பி.சின்ஹா அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது. பேரா.ஜி.சி.வி.சுப்பா ராவ் தான் அதனுடைய முதல் கல்லூரி முதல்வராக இருந்தார். அதே ஆண்டில் எல்எல்.எம். பாடத்திட்டங்கள் சட்ட பல்கலைக்கழக கல்லூரிக்கு மாற்றல் செய்யப்பட்டது. எல்எல்.எம்.மின் நான்கு பிரிவுகள், அதாவது சட்டவியல், அரசியல் சாசனச் சட்டம் மற்றும் சர்வதேச சட்டம், தனிநபர் சட்டம் மற்றும் வணிகம்சார்ந்த சட்டம் ஆகியவை அந்தக் கல்லூரியில் வழங்கப்பட்டன. பின்னர் எல்எல்.எம்.மின் சில பிரிவுகள் மாலை சட்டக் கல்லூரிக்கு மாற்றப்பட்டது. 1977 ஆம் ஆண்டில் அனைத்து எல்எல்.எம். பாடத்திட்டங்களும் மாலை சட்டக் கல்லூரிக்கு மாற்றப்பட்டது. மீண்டும் 1994 ஆம் ஆண்டில், எல்எல்.எம்மின் பாடத்திட்டடங்களின் மூன்று பிரிவுகள், அதாவது அரசியல் சாசனச் சட்டம், வணிகம்சார்ந்த சட்டம் மற்றும் உழைப்பாளர் சட்டம் ஆகியவை ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தின் சட்ட பல்கலைக்கழக கல்லூரியில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்சமயம் அனுமதியளிக்கப்பட்டுள்ள எல்எல்.பி. மாணவர் எண்ணிக்கை 160 இருக்கைகளாகும். சட்டப் பிரிவு பிஎச்டி திட்டத்தை அறிமுகப்படுதியது, அதன் முதல் தொகுப்பு பிஎச்டி மாணவர்கள் 1978 ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்டனர். இந்த பிஎச்டி திட்டமானது வழமையான மற்றும் பகுதி நேர அடிப்படையில் வழங்கப்படுகிறது.

அந்தக் கல்லூரி பல்வேறு துறைகளில் பல அறிவுமேதைகளை உருவாக்கியிருக்கிறது. இந்த நிறுவனத்தின் பழைய மாணவர்களில் உச்ச நீதி மன்றம் மற்றும் பல்வேறு உயர் நீதி மன்றங்களின் நீதிபதிகள், முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள், பொதுத்துறை அலுவலர்கள், ஆளுநர்கள், சபாநாயகர்கள், அரசுத் தூதர்கள் மற்றும் முன்னணி வழக்கறிஞர்கள் ஆகியோர் அடங்குவர். அவர்களில் உள்ளடங்குபவர்கள் நீதிபதி பி.ஜகன்மோகன் ரெட்டி, நீதிபதி ஷா முகமத் குவாட்ரி, நீதிபதி பீ.பி.ஜீவன் ரெட்டி, நீதிபதி சர்தார் அலி கான், நீதிபதி வை.பாஸ்கர் ராவ், நீதிபதி பீ.சுபாஷன் ரெட்டி, நீதிபதி பீ.சுதர்ஷன் ரெட்டி, நீதிபதி ஜி.பிக்ஷாபதி, நீதிபதி எல்.நரசிம்ம ரெட்டி, ஆர்.வாசுதேவ பிள்ளை, பி.சி.ராவ், பீ.சி.ஜெயின், எஸ்.பீ.சவான், வீரேந்திர பாட்டீல், சிவ் ராஜ் பாட்டீல், சிவாஜி ராவ் பாட்டில் நிலாங்கிகார், வி.எஸ்.ரமா தேவி, ஸ்ரீபாதா ராவ், சி.வித்யாசாகர் ராவ் மற்றும் தரம் சிங். இந்தப் பட்டியல் ஒரு எடுத்தக்காட்டுக்கானது மட்டுமே. ஒட்டுமொத்தமாக நாட்டில் இருக்கும் சிறந்த பத்து சட்டக் கல்லூரிகளில் ஒன்றாக இது தொடர்ச்சியாக இரண்டு முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது, அதாவது இந்தியா டுடே பத்திரிக்கையில் 2000 ஆம் ஆண்டு மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில்.

இந்தச் சட்ட பல்கலைக்கழகக் கல்லூரி எல்எல்.பி, எல்எல்.எம் மற்றும் பிஎச்.டியை வழங்குகிறது.

வர்த்தகம் மற்றும் வணிக மேலாண்மைக் கல்லூரி

வர்த்தகத் துறை

1945 ஆம் ஆண்டில் பி.காம் பட்டப்படிப்பைத் தொடங்கியதும் இந்தத் துறை ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தின் ஒரு தனிப் பிரிவாக ஆனது. பல்வேறு பாடத்திட்டங்கள் மூலம் கல்வியை வழங்குதல், பல்கலைக்கழக மானிய வாரியம், மாநில அரசு, தொழிற்துறைக் கூடங்கள் முதலானவை நிதியளித்ததல் மூலம் செயல்திட்டங்களை மேற்கொள்ளுதல் மற்றும் சமகாலத்துடன் தொடர்புடைய விஷயங்களில் கடுமையான ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல் முதலான வடிவங்களில் சமூகத்திற்கு வெவ்வேறு வழிமுறைகளில் சேவை புரிவதன் மூலம் இந்தத் துறை தன்னுடைய சுயவிவரத்தை மேம்படுத்த தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. இந்தத் துறையின் சேவைகள் வழக்கமான கல்வி முறையால் ஆந்திர பிரதேசத்திற்கு மட்டுமே வழங்கப்படுவதில்லை, அவை தொலைதூரக் கல்வி மற்றும் திற்ந்தவெளி கற்றல் வடிவங்கள் மூலம் ஒட்டுமொத்த நாட்டுக்கும் வழங்கப்படுகிறது.

கல்வியாளர்கள், தொழில்துறை, சமூகம் முதலானவற்றின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு இந்தத் துறை பல்வேறு பாடத்திட்டங்களை வழங்குகிறது மேலும் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிகளை நடத்தியும் இந்தியப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சுற்றுச்சூழலின் சமகாலத்து சிக்கல்களுக்கான தீர்வுகளையும் வழங்குகிறது.

வணிக மேலாண்மைத் துறை

ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பரந்துவிரிந்திருக்கும் மரங்கள் நிறைந்த வளாகத்தில் அமைந்திருக்கும் வணிக மேலாண்மைத் துறை, வணிக மேலாண்மையில் இரண்டாண்டு முதுகலைத் திட்டத்தை நடத்தி வருகிறது.

இன்றைய கூட்டாண்மை உலகின் 'மந்திர'மான 'மாற்ற'த்தை ஏற்றுக்கொள்வதும் மேலும் துறை தன்னுடைய செயல்பாட்டில் மற்றும் பாடத்திட்டத்தை முடிவுசெய்வதில் தனித்து இயங்க முடிவதன் காரணமாக, இன்றைய கூட்டாண்மை உலகின் எந்நேரமும் மாற்றம்கொள்ளும் தேவைகளுக்கு ஏற்ப பொருந்தி இருப்பதற்கு அது தன்னையே புதுப்பித்தல்களுக்கு உட்படுத்துகிறது.

சிறந்த ஆசிரியர் குழு மற்றும் வசதிவாய்ப்புகளுடன் இந்தத் துறை ஆண்டுதோறும் 80 மாணவர்களுக்குப் பயற்சியளிக்கிறது. ஆசிரியர் குழு, நடைமுறை அறிவாற்றலை வெளிப்படுத்த இயலச்செய்யும் மிகுந்த அனுபவங்களைக் கொண்டிருக்கும் அறிவாற்றல்களால் தூண்டப்பட்ட கல்வியாளர்களைக் கொண்டிருக்கிறது. அவர்கள் வர்த்தகங்களில் நடைமுறை செயல்பாடுகள் மற்றும் விளங்கா புதிர்களுடன் தொடர்பில் இருந்து விடாமுயற்சியாக மாணவர்களை வெற்றியாளர்களாகவும் முன்னேற்றமடைந்த வருங்காலத் தலைவர்களாகவும் மாற்றம் செய்ய முயற்சிக்கிறார்கள்.

ஓஸ்மானியா பல்கலைக்கழக வணிக மேலாண்மைத் துறை 1964 ஆம் ஆண்டு முதலே எம்பிஏ பாடத்திட்டங்களை வழங்கி வருகிறது. இந்தத் திட்டமானது இந்தியாவில் இருக்கும் சிறந்த எம்பிஏ திட்டங்களில் ஒன்றாகத் தொடர்ந்து வரிசைப்படுத்தப்பட்டு வருகிறது.[மேற்கோள் தேவை]. விண்ணப்பிக்கும் 2,00,000 மாணவர்களில் போட்டித் தேர்வு மூலம் வெறும் 80 மாணவர்கள் மட்டுமே இந்த எம்பிஏ திட்டத்தில் சேரமுடிகிறது. எம்பிஏ தவிர அதுமேலாண்மையில் பிஎச்.டியையும் வழங்குகிறது.மூத்த இராணுவ அதிகாரிகளுக்கு எம்எம்எஸ்சை வழங்குவதற்கு இராணுவ பாதுகாப்பு மேலாண்மைக் கல்லூரியுடனும், எம்எச்எம்மை வழங்குவதற்கு டெக்கன் ஸ்கூல் ஆப் ஹாஸ்பிடல் மேனேஜ்மெண்ட் மற்றும் அப்போலோ இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹாஸ்பிடல் அட்மினிஸ்ட்ரேஷன் போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்களுடனும் ஒரு கூட்டிணைப்பைக் கொண்டிருக்கிறது. சர்தார் வல்லபாய் பட்டேல் இன்ஸ்டிடியூட் ஆஃப் போலிஸ் அட்மினிஸ்ட்ரேஷனுடன் இணைந்து எம்பிஎம்மை வழங்குகிறது.

பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

பொறியியல் பல்கலைக்கழகக் கல்லூரி தான் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளில் மிகவும் பழமையானதும் மிகப் பெரியதுமெனப் பெயர் பெற்றுள்ளது. ஓஸ்மானியா பல்கலைக்கழகம் ஏற்பட்டு பதினோரு ஆண்டுகள் கழித்து 1929 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இது, அப்போதைய ஆங்கிலேய இந்தியா முழுமைக்கும் ஏற்படுத்தப்பட்ட ஆறாவது பொறியியல் கல்லூரியாக இருந்தது. 1947 ஆம் ஆண்டில் இந்தக் கல்லூரி தன்னுடைய தற்போதைய நிரந்தர கட்டிடத்துக்கு வந்தது. இன்று ஓஸ்மானியா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளிலியே இதுதான் மிகப் பெரியது. கல்லூரியின் 50வது ஆண்டு நிறைவுவிழா 1979 ஆம் ஆண்டிலும், 60வது ஆண்டுவிழா 1989 ஆம் ஆண்டிலும், 75வது ஆண்டுவிழா 2004 ஆம் ஆண்டிலும் கொண்டாடப்பட்டது. 1994 ஆம் ஆண்டில் கல்லூரி தன்னாட்சியாக மாற்றப்பட்டது.

அந்தக் கல்லூரி நான்கு ஆண்டு பௌறியியல் பட்டப்படிப்பு பாடத்திட்டத்தை வழங்கி, அது உயிர்மருத்தவப் பொறியியல், சிவில் பொறியியல், கணினி அறிவியல் மற்றும் பொறியியல், மின்சார மற்றும் மின்னணு பொறியியல், மின்னணு மற்றும் தகவல்தொடர்பு பொறியியல் மற்றும் மெக்கானிக்கல் பொறியியல் ஆகியவற்றில் இளங்கலை பொறியியல் (பி.ஈ.) பட்டத்தை வழங்குகிறது. கணினி பயன்பாடுகளில் முதுகலை, ஆராய்ச்சி மூலம் அறிவியல் முதுகலை மற்றும் பொறியியலின் பல்வேறு பிரிவுகளில் பிஎச்.டியைப் பெறும் பாடத்திட்டங்களையும் இந்தக் கல்லூரி வழங்குகிறது. இளங்கலை மற்றும் முதுகலை நிலை இரண்டிலும் பகுதி-நேர பாடத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. இன்றைய தேதியில் ஆண்டுக்கு 320 இளங்கலைப் பட்டதாரி மாணவர்கள் (முழு-நேரம்) மற்றும் 140 (பகுதி-நேரம்) மாணவர்களும் 290 முதகலை பட்டதாரி மாணவர்களும் (முழு-நேரம் மற்றும் பகுதி-நேரம்) சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். இங்கு 109 கற்பிக்கும் ஊழியர்கள் இருக்கிறார்கள் அவர்களில் 24 பேராசிரியர்களும் அடங்குவர்.

தொழில்நுட்பக் கல்லூரி

தொழில்நுட்ப பல்கலைக்கழகக் கல்லூரி நாட்டிலேயே இரசாயன பொறியியல் மற்றும் இரசாயன தொழில்நுட்பக் கல்வியை வழங்கும் கல்லூரிகளில் மிகப் பழமையானதும் முதன்மையானவைகளில் ஒன்றுமாகும். ஓஸ்மானியா பல்கலைக்கழக தொழில்நுட்பப் பிரிவின் கீழ் இது ஒரு இன்றியமையாத கல்லூரியாகும். ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறையில் பயனுறு வேதியியலின் முதுகலைப் பட்டதாரி பிரிவாக இந்தத் தொழில்நுட்பக் கல்லூரி 1943 ஆம் ஆண்டில் ஆரவாரமற்ற ஒரு தொடக்கத்தைக் கொண்டிருந்தது. பின்னர் 1945 ஆம் ஆண்டில் அது பயனுறு வேதியியல் துறையாக மேம்படுத்தப்பட்டது. 1951 ஆம் ஆண்டில் வேதிப் பொறியியல் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டு அந்தத் துறையே வேதிய தொழில்நுட்பத் துறையாக மறுபெயரிடப்பட்டது. 1954 ஆம் ஆண்டில் நான்கு ஆண்டு பட்டப்படிப்பு பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அவை வேதிய தொழில்நுட்பம் மற்றும் வேதிப் பொறியியல் இளங்கலை பட்டங்களுக்கு இட்டுச் சென்றது. 1969 ஆம் ஆண்டு செப்டம்பரில், பல்கலைக்கழகம் வேதிய தொழில்நுட்பத் துறையை தொழில்நுட்ப பல்கலைக்கழகக் கல்லூரியாக மேம்படுத்தி வேதிப் பொறியியல்/வேதிய தொழில்நுட்பத்தின் கல்விக்கான திடமான மையக்கருவாக உருவெடுத்தது, மேலும் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைகளுக்குத் தொழில்நுட்பத்தின் செயற்றிறனை பரவச்செய்வதற்கான ஒரு சந்திப்பு முனையாக சேவை புரியவும் தொடங்கியது. இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரி நிலையில் வேதிப் பொறியியல் மற்றும் வேதிய தொழில்நுட்பத்தில் மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சியளிப்பதற்கும் கற்பிப்பதற்காகவும் இந்தக் கல்லூரி பிரபலமாக அறியப்பட்டுள்ளது. சில ஆண்டுகளிலேயே கல்லூரி மிக விரைவாக விரிவடைந்து வளர்ச்சிபெற்றுள்ளது மேலும் இந்தக் கல்லூரியின் பழைய மாணவர்கள் உலகெங்கிலும் தங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

நாட்டின் மாறிவரும் தேவைகளை நிறைவேற்றுவதற்கு உணவு தயாரிக்கும் முறை மற்றும் பதனமிடும் தொழில்நுட்பம் மற்றும் நெசவு தொழில்நுட்பத்தில் பிடெக் பட்டப்படிப்பு பாடத்திட்டங்களை 1994-95 ஆம் ஆண்டுகளின்போது இந்தக் கல்லூரி தொடங்கியது. இந்தப் பாடத்திட்டங்களின் முக்கியத்துவம் தானே விளங்கக்கூடியது, ஏனெனில் உணவுதானியங்கள், பழம் மற்றும் காய்கள், பஞ்சு, பட்டு மற்றும் இதர நூலிழைகளின் வள ஆதாரங்கள் மிகுதியாக இருக்கின்றன. மேலும், ஆந்திரப் பிரதேசத்திலுள்ள வேறு எந்த பல்கலைக்கழகமோ கல்லூரியோ கிடைக்கப்பெறும் வள ஆதாரங்களைப் பயன்படுத்துவதற்கான இந்தத் தொழில்நுட்பத்தில் முழு வளர்ச்சியுற்ற நான்கு ஆண்டு பிடெக் பட்டப்படிப்பு திட்டங்களை வழங்குவதில்லை.

உடற்பயிற்சிக் கல்லூரி

ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சிக் கல்விப் பல்கலைக்கழக கல்லூரி 1993 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் அது பிஜி உடற்பயிற்சிக் கல்விக் கல்லூரி என்று பெயரிடப்பட்டது. அந்தக் கல்லூரி உடற்பயிற்சிக் கல்வியில் நெறிமுறைகளைக் கற்பித்து "உடற்பயிற்சிக் கல்வியில் முதுகலைப் பட்டம்" (எம்.பி.எட்.,) பெறுவதற்கு இட்டுச் செல்லும் நோக்கில் தொடங்கப்பட்டது.

அந்தக் கல்லூரி எம்.பி.எட்., வேனிற் கால மற்றும் எம்.பி.எட் வழக்கமான பாடத்திட்டம் ஆகியவற்றை வழங்கிறது. 2001 ஆம் ஆண்டின் போது அப்போதைய துணை வேந்தராக இருந்த, பேரா.டீ.சி.ரெட்டி, வளாகத்திலுள்ள ஏஎஸ்ஆர்சி அருகில் அமைந்திருந்த நிஸாமியா வானிலை நோக்கு கட்டடத்தை உடற்பயிற்சிக் கல்வி பல்கலைக்கழக கல்லூரிக்கு மட்டுமே பயன்படுத்தும் வகையில் அதை ஒதுக்கினார். கல்லூரி தற்போதைய வசிப்பிட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டும் 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் செயல்படத்தொடங்கியது. 
இதனால் 2002 ஆம் ஆண்டு முதல் ஓராண்டு எம்.பி.எட் பட்டப்படிப்பு நிறுத்தப்பட்டது. பெங்களூர் என்சிடிஈ ஆல் அங்கீகாரம் பெற்றவுடன் 2004-2005 கல்வி ஆண்டு முதல் எம்.பி.எட் இரண்டாண்டு கல்வித்திட்டம் தொடங்கப்பட்டது, இதில் செமஸ்டர் அமைப்புடன் ஆண்டுக்கு 32 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தின் குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்

ஓஸ்மானியா பல்கலைக்கழக வரம்புக்குள் இருக்கும் கல்லூரிகளின் பட்டியல்

http://www.osmania.ac.in/Colleges2006.htm

ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகளின் பட்டியல்

http://www.osmania.ac.in/ALLCOLLEGES2008.htm

குறிப்புதவிகள்

வெளிப்புற இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=உசுமானியா_பல்கலைக்கழகம்&oldid=532103" இலிருந்து மீள்விக்கப்பட்டது