பொ. பூலோகசிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(வேறுபாடு ஏதுமில்லை)

14:05, 29 ஏப்பிரல் 2006 இல் நிலவும் திருத்தம்

பொ. பூலோகசுந்தரம் தமிழிலும் ஆங்கிலத்திலும் இலக்கியம், இலக்கணம், பண்பாடு, சமயம், வரலாறு பற்றி ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். இரு அகில உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளிலே பங்கு கொண்டவர்.

இலங்கைப் பல்கலைக்கழக பேராதனை வளாகத்தில் பயின்று பட்டம் பெற்றவர். இலங்கை அரசாங்க பல்கலைக்கழகப் புலமைப் பரிசில் பெற்று ஐக்கிய அரசிலுள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மொழியியல் ஆய்வில் கலாநிதி பட்டம் பெற்றவர். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக 1965 இல் சேர்ந்து, கொழும்பு, களனி, பேராதனைப் பல்கலைக்கழகங்களில் 1997 வரை பணிபுரிந்தவர். 1993 ஆம் ஆண்டு இலங்கை அரசினால் 'கலாகீர்த்தி'ப் பட்டம் அளிக்கப்பெற்ற முதல் தமிழர் இவர்.

ஆணல்ட் சதாசிவம் பிள்ளையின் பாவலர் சரித்திர தீபகத்தினை (1886) ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் எழுதி முதலிரு பாகங்களையும் 1975 இலும் 1979 இலும் வெளியிட்டுள்ளார். ஆங்கிலக் கவிஞர் தம்பிமுத்து பற்றித் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய கட்டுரைகள் நூலுருவாகியுள்ளன.

வெளிவந்த நூல்கள்

  • தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞரின் பெருமுயற்சிகள் (கட்டுரைத் தொகுப்பு, 1970, இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருது பெற்றது)
  • இந்துக் கலைக்களஞ்சியம் (முதற் தொகுதி, கொழும்பு, 1990)
  • ஈழம் தந்த நாவலர் (கட்டுரைத் தொகுதி, 1997, இலங்கை அரசின் விருது பெற்றது)
  • நாவலர் பண்பாடு (கட்டுரைத் தொகுதி)
  • சிலப்பதிகார யாத்திரை (கட்டுரைத் தொகுதி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொ._பூலோகசிங்கம்&oldid=35535" இலிருந்து மீள்விக்கப்பட்டது