பண்டத்தரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 50: வரிசை 50:
*மக்களும்_ சமயமும்*
*மக்களும்_ சமயமும்*
பண்டத்தரிப்பில் இலங்கை தமிழ்பேசும் இனக்குழுமத்தினரே பொரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றார்கள் சமய ரீதியில் கத்தோலிக்க சமயத்தை பின்பற்றுகிறவர்கள் அதிகம் உள்ள பகுதியாக உள்ளபோதும் சைவசமயத்தவர்களும் சராசரியாக 50:50 என குறிப்பிடத்தக்க அளவிலே பெரும்பான்மையாக வாழ்கிறார்கள் கிறிஸ்தவத்தின் ஏனைய பிரிவுகளை(புரட்டஸ்தாந்து ,ஆவிக்குரிய பெந்தக்கோஸ்தோ ) சபைகளினை பின்பற்றுகின்றவர்களும் காணப்படுகின்றார்கள்.
பண்டத்தரிப்பில் இலங்கை தமிழ்பேசும் இனக்குழுமத்தினரே பொரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றார்கள் சமய ரீதியில் கத்தோலிக்க சமயத்தை பின்பற்றுகிறவர்கள் அதிகம் உள்ள பகுதியாக உள்ளபோதும் சைவசமயத்தவர்களும் சராசரியாக 50:50 என குறிப்பிடத்தக்க அளவிலே பெரும்பான்மையாக வாழ்கிறார்கள் கிறிஸ்தவத்தின் ஏனைய பிரிவுகளை(புரட்டஸ்தாந்து ,ஆவிக்குரிய பெந்தக்கோஸ்தோ ) சபைகளினை பின்பற்றுகின்றவர்களும் காணப்படுகின்றார்கள்.

பிரதானமான தொழிற்துறை
இங்கு வாழும் மக்களின் பிரதானமான தொழிலாக விவசாயமே உள்ளது அத்துடன் பனைசார் பதனீர் தொழில் மற்றும் எள்ளு சார்ந்த நல்லெண்ணை உற்பத்தி தொழில்களும் பிரதானமான வாழ்வாதார தொழில்களாக உள்ளதோடு மரவேலைப்பாடுகள் தேர்சிற்ப உருவாக்கம் போன்ற கைத்தொழில்களும் இங்கே காணப்படுகின்றன. அன்றும் சரி இன்றும் சரி குறிப்பிடத்தக்க தொகையினர் பல அரச துறைகளிலும் அரசாங்க உத்தியோகங்களில் ஈடுபடுவோராகவும் உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அரசியல்
பண்டத்தரிப்பு கிராமம் அன்றுதொட்டு இன்று வரை அரசியலிலும் முக்கியத்துவம் வாய்ந்த கிராமமாகவே விளங்கி வந்துள்ளது இக்கிராமத்திலிருந்து பலர் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டமைக்கான சான்றுகள் உள்ளன. பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரியின் அதிபராக இலங்கையின் புகழ்பூத்த தமிழ் கம்யூனிசவாதி தோழர் கார்த்திகேசன் செயற்பட்டதும் அவர் இங்கே பணியாற்றிய காலங்களில் இக்கிராமத்தில் கம்யூனிச சித்தாந்த அரசியலில் கணிசமாக ஈடுபட்டிருந்தார் மறுபுறம் அன்றைய தமிழரசுக்கட்சியின் தளபதி அ.அமிர்தலிங்கத்தின் உறவினர்கள் சிலரும் இக்கிராமத்தவர்களாக இருந்தமையால் தமிழரசுக்கட்சியின் கோட்டைகளில் ஒன்றாகவும் இக்கிராமம் விளங்கியது. தற்போது 2018இன் பின்னரான உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தின்படி இக்கிராமத்திலிருந்து தமிழரசுக்கட்சி சார்பாக போட்டியிட்டு வென்ற திரு அ.ஜோன் ஜிப்பிரிக்கோ என்பவர் வட்டாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்ற அரசியல் பிரதிநிதியாக உள்ளார்.

இப்படியாக பண்டைக்காலம் முதல் இன்றுவரை சிறப்புமிக்க கிராமமாக விளங்கிவந்த பண்டத்தரிப்பு உள்நாட்டு யுத்தம் தீவிரமான காலப்பகுதியில் 1993களில் இலங்கை இராணுவத்தின் இராணுவநடவடிக்கைகள் காரணமாக அதிகமாக மக்கள் இடம்பெயர தொடங்கியமையினால் வெறிச்சோடி போனதுடன் சில குறிப்பிட்ட காலம் இராணுவத்தினரின் உயர்பாதுகாப்பு வலயமாகவும் காணப்பட்டதினால் தனது முக்கியத்துவத்தை இழந்து பண்டத்தரிப்பு நகரம் பழடைந்த நகராக தள்ளப்பட்டாலும் பின்னர் சிறிதுசிறிதாக மக்கள் மீளக்குடியேற தொடங்கியதனால் இராணுவத்தினர் வசமிருந்த பலபகுதிகள் விடுவிக்கப்பட்டு சகஜ நிலைக்கு திரும்பினாலும் முன்னர் இருந்த வர்த்தக வணிக மைய நிலையினை பெருமளவு மீட்டுக்கொள்ள முடியவில்லை பண்டத்தரிப்பு நகரம் இராணுவத்தினர் வசமிருந்த குறுகிய காலப்பகுதியில் சங்கானை நகரம் அதற்குரிய முக்கியத்துவத்தை பெற்றுக்கொண்டதினால் இந்நிலை ஏற்பட்டது ஆயினும் காலசுழற்சியின் வேகத்தில் பண்டத்தரிப்பு நகர் தனக்கான மீள் முக்கியத்துவத்தை நோக்கி நகர்ந்து கொண்டே உள்ளது.
இப்படியாக பண்டைக்காலம் முதல் இன்றுவரை சிறப்புமிக்க கிராமமாக விளங்கிவந்த பண்டத்தரிப்பு உள்நாட்டு யுத்தம் தீவிரமான காலப்பகுதியில் 1993களில் இலங்கை இராணுவத்தின் இராணுவநடவடிக்கைகள் காரணமாக அதிகமாக மக்கள் இடம்பெயர தொடங்கியமையினால் வெறிச்சோடி போனதுடன் சில குறிப்பிட்ட காலம் இராணுவத்தினரின் உயர்பாதுகாப்பு வலயமாகவும் காணப்பட்டதினால் தனது முக்கியத்துவத்தை இழந்து பண்டத்தரிப்பு நகரம் பழடைந்த நகராக தள்ளப்பட்டாலும் பின்னர் சிறிதுசிறிதாக மக்கள் மீளக்குடியேற தொடங்கியதனால் இராணுவத்தினர் வசமிருந்த பலபகுதிகள் விடுவிக்கப்பட்டு சகஜ நிலைக்கு திரும்பினாலும் முன்னர் இருந்த வர்த்தக வணிக மைய நிலையினை பெருமளவு மீட்டுக்கொள்ள முடியவில்லை பண்டத்தரிப்பு நகரம் இராணுவத்தினர் வசமிருந்த குறுகிய காலப்பகுதியில் சங்கானை நகரம் அதற்குரிய முக்கியத்துவத்தை பெற்றுக்கொண்டதினால் இந்நிலை ஏற்பட்டது ஆயினும் காலசுழற்சியின் வேகத்தில் பண்டத்தரிப்பு நகர் தனக்கான மீள் முக்கியத்துவத்தை நோக்கி நகர்ந்து கொண்டே உள்ளது.

06:34, 25 ஏப்பிரல் 2022 இல் நிலவும் திருத்தம்

பண்டத்தரிப்பு

பண்டத்தரிப்பு
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாணம்
அமைவிடம் 9°46′22″N 79°58′03″E / 9.772897°N 79.967561°E / 9.772897; 79.967561
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)


பண்டத்தரிப்பு பண்டத்தரிப்பு_கிராம_அமைவிட அறிமுகம்

பண்டத்தரிப்பு (Pandatharippu) என்பது இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள யாழ் மாவட்டத்திற்குட்பட்ட வலிகாமம் தென்மேற்கு பிரதேசசெயலகம்(சண்டிலிப்பாய் ) ஆளுகைக்குள் அமைந்துள்ளதும் யாழ்ப்பாண நகரத்திலிருந்து 16 கிலோமீட்டர் வடக்காக

J/146( யா/146) கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட தனித்துவமான நிலப்பரப்பும் சனத்தொகையும் உடையதாக நகர கட்டமைப்புடன் காணப்படும் ஒரு அழகிய கிராமம் ஆகும். பண்டத்தரிப்பானது முன்னைய காலங்களில் பட்டினசபை எனப்படும் உள்ளூராட்சி கட்டமைப்பை கொண்டதாக  அதனையண்டிய அயல் கிராமங்களான   சில்லாலை, வடலியடைப்பு,  பிரான்பற்று, ஆகியவற்றை  அப்பட்டின சபையின் ஆளுகைக்குள் உள்ளடக்கியதாக காணப்பட்டது பிற்பட்ட காலங்களில் 1987ஆம் ஆண்டுகளில் பட்டின,கிராம சபைகள் ஒருங்கிணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட பிரதேசசபைகள் என்னும் புதிய உள்ளூராட்சி கட்டமைப்பின் கீழ் வலிதென்மேற்கு  மானிப்பாய் பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்ட கிராமமாகவும் அப்பிரதேசசபையில் நகரகட்டமைப்புடன் காணப்படும் மானிப்பாய் கிராமத்திற்கு அடுத்து நகரகட்டமைப்புடைய ஒரே ஒரு கிராமமாகவும் பண்டத்தரிப்பு விளங்கி வருகின்றது. 

பண்டத்தரிப்பு_என்னும்_பெயரின் வரலாற்று_பின்னனியும்_கிராமத்தின் வரலாற்று_சுருக்கமும்.

"பண்டத்தரிப்பு" என்கிற பெயர் அமைந்ததற்கான காரணம் சரியாக யாராலும் தெளிவாக கூறமுடியாவிட்டாலும் வெவ்வேறு காரணங்கள் ஆய்வாளர்களால் கூறப்படுகின்றன. ஒருசிலர் பண்டைய காலங்களில் பண்டங்களை தரித்துவைக்கும் (storage) தளமாக இருந்திருக்கலாம் என்றும் இதனால் தான் பண்டங்கள் தரித்து நிற்கும் ஊர் என்கிற காரணப் பெயரின் அடிப்படையில் பண்டத்தரிப்பு என பெயர் வந்திருக்கலாம் என கூறுகிறார்கள் . இதனை உறுதிப்படுத்துவதை போன்று வரலாற்று பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் தனது யாழ்ப்பாண இராச்சியம் ஒரு சுருக்க வரலாறு என்னும் நூலில் 149ஆம் பக்கத்தில் யாழ்ப்பாண மன்னர் காலத்திலேயே பண்டத்தரிப்பு ஒரு வணிகமையமாக இருந்தது என்கிறார் அத்துடன் ஒல்லாந்தர் கால குறிப்புக்களை உள்ளடக்கிய பால்தேஸ் பாதிரியார் எழுதிய A_Description_of_the_East-India_Coasts_of_Malabar_and_Coromandel என்கிற புத்தககுறிப்புக்களில் பண்டத்தரிப்பு குறிப்பிடப்பட்டுள்ளதோடு பண்டத்தரிப்பை குறிப்பிடும் ஓவிய மாதிரியில் ஒல்லாந்த தேவாலயம் மற்றும் வணிககூடம் வியாபாரிகள் யானை, போன்ற விடயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆகவே வணிக மையம் என்கிற அடிப்படையில் கடல் போக்குவரத்து மார்க்கமான மாதகல் துறைக்கு மிக அருகே அமைந்து இருந்த கிராமம் என்கிற அடிப்படையில் பன்னெடுங்காலமாகவே பண்டத்தரிப்பு என்னும் பெயர் இக்கிராமத்தின் பெயராக அமைந்தது எனலாம் . வேறு சிலர் பாண்டியர்களின் இலங்கை மீதான படையெடுப்பின்போது பாண்டியரின் படைகள் தரித்துச்செல்லும் இடமாக இருந்ததினால் "பாண்டியன் தரிப்பு" என்று அழைக்கப்பட்டு பின்னர் பண்டத்தரிப்பு என மருவியதாகவும் சில கர்ணபரம்பரை கதைகள் கூறுகின்றன.

இவ்வாறு பன்னெடுங்காலமாக யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவொரு கிராமங்களில் ஒன்றாக பண்டத்தரிப்பு திகழ்ந்து வந்துள்ளமையின் தொடர்ச்சியை இலங்கை மீதான அல்லது யாழ்ப்பாணத்தின் மீதான அந்நியராட்சி கால பகுதிகளிலும் இனங்காணக்கூடியதாக உள்ளது. 1616இல் யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கேயரிடம் வீழ்ந்த பின் தமது நிர்வாக வசதிக்காக வலிகாமம்,தென்மராட்சி,வடமராட்சி, தீவகம் என இருந்த யாழ்ப்பாணபகுதிகளை 32 கோயிற்பற்றுக்களாக பிரித்தனார் அதில் வலிகாமம் பகுதியில் பிரிக்கப்பட்ட 14 கோயிற்பற்றுக்களில் ஒன்றாக பண்டத்தரிப்பு கிராமம் விளங்கியதுடன் பண்டத்தரிப்பு கோயிற் பற்று என்பது பிரான்பற்று,வடலியடைப்பு,சில்லாலை,மாதகல்,பெரியவிளான்,சிறுவிளான், மாரீசங்கூடல்,இளவாலை, பனிப்புலம் ஆகிய பலகிராமங்களை குறிப்பதாக இருந்ததினால் அதன் தொடர்ச்சியாக இன்றுவரை அக்கிராமங்களின் பிரதேசரீதியான பெயராக பண்டத்தரிப்பு பயன்படுத்தப்பட்டு வருகின்ற தன்மையினை இனங்காணமுடிகிறது.

போர்த்துக்கேயர்  தேவாலயம் ஒன்றை அமைத்து அதனை அண்டிய ஒரு வணிக மைய வளாகத்தையும் அமைத்தனார்.இதனால் அக்காலத்திலும் வணிக மையமாக பண்டத்தரிப்பு விளங்கியது இத்தகு தன்மை பின் வந்த ஒல்லாந்தர் காலத்திலும் தொடர்ந்தது. 
    ஒல்லாந்தர் காலத்தின் பின்னர் வந்த ஆங்கிலேயர் காலத்தில் 1820ஆம் ஆண்டில் பண்டத்தரிப்பு பகுதியில் மதம்பரப்பு பணிக்காக அமெரிக்காவில் இருந்து வந்த  மறைப்பரப்பாளரும் வைத்தியருமான  ஜோன் ஸ்கூட்டர்

(DR. John Scudder ) தெற்க்காசியாவினதும் இலங்கையினதும் முதல் மேற்க்கத்தேய மருந்தகத்தினை அமைத்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும் . அது மட்டுமல்லாமல் உடுவில் மகளீர் கல்லூரிக்கு அடுத்ததான விடுதிவசதியுடன் கூடிய மகளீர் கல்லூரி யாக பண்டத்தரிப்பு மகளீர் கல்லூரியும் அமைக்கப்பட்டது. பண்டத்தரிப்பு மகளீர் கல்லூரியை விட பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி, பண்டத்தரிப்பு ஜெசிந்தா றோமன் கத்தோலிக்க தமிழ்கலவன் பாடசாலை என்கிற இரண்டு கபொத உயர்தரம்,மற்றும் கபொத சாதரணதரம் வரையான மொத்தம் மூன்று பாடசாலைகளை கொண்டு காணப்படுகின்றது.

*மக்களும்_ சமயமும்*
பண்டத்தரிப்பில் இலங்கை தமிழ்பேசும் இனக்குழுமத்தினரே பொரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றார்கள் சமய ரீதியில் கத்தோலிக்க சமயத்தை பின்பற்றுகிறவர்கள் அதிகம் உள்ள பகுதியாக  உள்ளபோதும் சைவசமயத்தவர்களும் சராசரியாக 50:50 என குறிப்பிடத்தக்க அளவிலே பெரும்பான்மையாக வாழ்கிறார்கள் கிறிஸ்தவத்தின் ஏனைய பிரிவுகளை(புரட்டஸ்தாந்து ,ஆவிக்குரிய பெந்தக்கோஸ்தோ ) சபைகளினை பின்பற்றுகின்றவர்களும் காணப்படுகின்றார்கள். 

பிரதானமான தொழிற்துறை

இங்கு வாழும் மக்களின் பிரதானமான தொழிலாக விவசாயமே உள்ளது அத்துடன் பனைசார் பதனீர் தொழில் மற்றும் எள்ளு சார்ந்த நல்லெண்ணை உற்பத்தி தொழில்களும் பிரதானமான வாழ்வாதார தொழில்களாக உள்ளதோடு மரவேலைப்பாடுகள் தேர்சிற்ப உருவாக்கம் போன்ற கைத்தொழில்களும் இங்கே காணப்படுகின்றன. அன்றும் சரி இன்றும் சரி குறிப்பிடத்தக்க தொகையினர் பல அரச துறைகளிலும் அரசாங்க உத்தியோகங்களில் ஈடுபடுவோராகவும் உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அரசியல்

  பண்டத்தரிப்பு கிராமம் அன்றுதொட்டு இன்று வரை அரசியலிலும் முக்கியத்துவம் வாய்ந்த கிராமமாகவே விளங்கி வந்துள்ளது இக்கிராமத்திலிருந்து பலர் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டமைக்கான சான்றுகள் உள்ளன. பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரியின் அதிபராக இலங்கையின் புகழ்பூத்த தமிழ் கம்யூனிசவாதி தோழர் கார்த்திகேசன் செயற்பட்டதும் அவர் இங்கே பணியாற்றிய காலங்களில் இக்கிராமத்தில் கம்யூனிச சித்தாந்த அரசியலில் கணிசமாக ஈடுபட்டிருந்தார் மறுபுறம் அன்றைய தமிழரசுக்கட்சியின் தளபதி அ.அமிர்தலிங்கத்தின் உறவினர்கள் சிலரும் இக்கிராமத்தவர்களாக இருந்தமையால் தமிழரசுக்கட்சியின் கோட்டைகளில் ஒன்றாகவும் இக்கிராமம் விளங்கியது. தற்போது 2018இன் பின்னரான உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தின்படி இக்கிராமத்திலிருந்து தமிழரசுக்கட்சி சார்பாக போட்டியிட்டு வென்ற திரு அ.ஜோன் ஜிப்பிரிக்கோ என்பவர் வட்டாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்  உள்ளூராட்சி மன்ற அரசியல் பிரதிநிதியாக உள்ளார்.


இப்படியாக பண்டைக்காலம் முதல் இன்றுவரை சிறப்புமிக்க கிராமமாக விளங்கிவந்த பண்டத்தரிப்பு உள்நாட்டு யுத்தம் தீவிரமான காலப்பகுதியில் 1993களில் இலங்கை இராணுவத்தின் இராணுவநடவடிக்கைகள் காரணமாக அதிகமாக மக்கள் இடம்பெயர தொடங்கியமையினால் வெறிச்சோடி போனதுடன் சில குறிப்பிட்ட காலம் இராணுவத்தினரின் உயர்பாதுகாப்பு வலயமாகவும் காணப்பட்டதினால் தனது முக்கியத்துவத்தை இழந்து பண்டத்தரிப்பு நகரம் பழடைந்த நகராக தள்ளப்பட்டாலும் பின்னர் சிறிதுசிறிதாக மக்கள் மீளக்குடியேற தொடங்கியதனால் இராணுவத்தினர் வசமிருந்த பலபகுதிகள் விடுவிக்கப்பட்டு சகஜ நிலைக்கு திரும்பினாலும் முன்னர் இருந்த வர்த்தக வணிக மைய நிலையினை பெருமளவு மீட்டுக்கொள்ள முடியவில்லை பண்டத்தரிப்பு நகரம் இராணுவத்தினர் வசமிருந்த குறுகிய காலப்பகுதியில் சங்கானை நகரம் அதற்குரிய முக்கியத்துவத்தை பெற்றுக்கொண்டதினால் இந்நிலை ஏற்பட்டது ஆயினும் காலசுழற்சியின் வேகத்தில் பண்டத்தரிப்பு நகர் தனக்கான மீள் முக்கியத்துவத்தை நோக்கி நகர்ந்து கொண்டே உள்ளது.

  • பண்டத்தரிப்பில் உள்ள புகழ்மிக்க வழிபாட்டு தலங்கள் ,கட்டிடங்கள் *

வழிபாட்டு தலங்கள்

 1- பண்டத்தரிப்பு புனித பற்றிமா மாதா தேவாலயம் - 

(யாழ்மாவட்ட கத்தோலிக்கர்களின் யாத்திரைக்குரிய தலமாக உள்ளது) 2- பண்டத்தரிப்பு புனித செபமாலை மாதா தேவாலயம் 3-பண்டத்தரிப்பு புனித அந்தோணியார் தேவாலயம் 4- பண்டத்தரிப்பு குழந்தையேசு

தேவாலயம்

5-பண்டத்தரிப்பு அன்னை வேளாங்கன்னி ஆலயம்(அம்மன் வீதி) 6-பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலை அன்னை வேளாங்கன்னி ஆலயம் (கடாப்புலம்) 7-பண்டத்தரிப்பு சந்தி அருகே உள்ள சிலோன் அமெரிக்கன் மிசன் தேவாலயம் (முன்னைய தென்னிந்திய திருச்சபை தேவாலயம்)

8- முல்லையடி அருள்மிகு வைரவர் ஆலயம்

9-பண்டத்தரிப்பு ஸ்ரீ ஞானவைரவர் ஆலயம் 10-பண்டத்தரிப்பு சித்தங்கேணி வீதி ஸ்ரீ ஞான வைரவர் ஆலயம் 11- கேணிக்கட்டு அருள்மிகு கன்னிமார் ஆலயம் 12- பண்டத்தரிப்பு அம்மன்வீதி முருகன் ஆலயம் 13-பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலை ஞானவைரவர் ஆலயம்(காடாப்புலம்) 14-பண்டத்தரிப்பு விளாவெளி இந்துமயான வைரவர் ஆலயம்

கட்டிடங்கள்

1-கத்தோலிக்க தியான இல்லம் - திருக்குடும்ப அருட்சகோதரிகளின் வதிவிட மடம் 2-தெற்க்காசியாவின் முதல் ஆங்கில மருந்தகம் அமைந்த மிசனறி ஜோன் ஸ்கூட்டர் இல்லம் 3- ஹரியோட் வின்சிலோ அம்மையார் ஞாபகார்த்த மகளீர் பராமரிப்பு விடுதி 4-பண்டத்தரிப்பு பொதுச்சந்தைக்கட்டிடம் 5-YMCA கட்டிடம் 6- பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி முன்பாகவுள்ள நீர்நிலை கேணி

பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள அரசபணி நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டு விடயங்கள்

1- சண்டிலிப்பாய் பிரதேச அரச கால்நடை வைத்தியசாலை 2-பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலை (காடாப்புலம்) 3- பண்டத்தரிப்பு பிரதேச ஆயுள்வேத வைத்தியசாலை 4-சண்டிலிப்பாய் பிரதேச தொழிற்பயிற்ச்சி மையம்( VTA) 5-வலிதென்மேற்கு மானிப்பாய் பிரதேசசபை பண்டத்தரிப்பு பட்டின உப அலுவலகம் 6-இளவாலை பொலீஸ் நிலையம் 7-பண்டத்தரிப்பு தபால்நிலையம் 8-கிராமிய செயலகம் 9-பாடசாலைகள்

    1- பண்டத்தரிப்பு மகளீர் கல்லூரி
     2-பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
     3-பண்டத்தரிப்பு ஜெசிந்தா றோதக
       பாடசாலை

10- விளாவெளி இந்துமயானம் 11-பண்டத்தரிப்பு பலநோக்கு கூட்டுறவுச்சங்கம் 12- பண்டத்தரிப்பு பனைதென்னை வள கூட்டுறவுச்சங்கம் 14-ஆயுள்வேத மருந்து உற்பத்தி கூட்டுறவுச்சங்கம் பண்டத்தரிப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டத்தரிப்பு&oldid=3422356" இலிருந்து மீள்விக்கப்பட்டது