துட்டன்காமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 16: வரிசை 16:


== இதனையும் காண்க ==
== இதனையும் காண்க ==
* [[துட்டன்காமன் முகமூடி]]
* [[பாரோக்களின் பட்டியல்]]
* [[பாரோக்களின் பட்டியல்]]
* [[பண்டைய எகிப்திய அரசமரபுகள்]]
* [[பண்டைய எகிப்திய அரசமரபுகள்]]
* [[கேவி62|துட்டன்காமனின் கல்லறை]]
* [[கேவி62|துட்டன்காமனின் கல்லறை]]
* [[எகிப்தின் பதினெட்டாம் வம்சம்]]
* [[எகிப்தின் பதினெட்டாம் வம்சம்]]

== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{reflist|2}}
{{reflist|2}}

16:05, 11 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்

துட்டன்காமன்
பிறப்புஅமர்னா
இறப்புமெம்பிசு, எகிப்து

துட்டன்காமூன் அல்லது தூத்தான்காமூன் (Tutankhamun, கிமு 1341 – கிமு 1323) என்பவன் புது எகிப்திய இராச்சியத்தின் பதினெட்டாவது வம்சத்தின் 13-வது மன்னன் ஆவான். இவன் கிமு 1333 முதல் கிமு 1324 வரை புது எகிப்திய இராச்சியத்தை ஆண்டான். துட்டன்காமன் தனது எட்டாவது அல்லது ஒன்பதாவது வயதிலேயே பாரோ ஆனான்.[1] பதவியேற்று கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் மட்டுமே உயிரோடு இருந்தான். இவனது இயற்பெயர் துட்டன்காட்டன் என்பதாகும். துட்டன்காமூன் என்பதன் பொருள் "அமூன் கடவுளின் உயிருள்ள படிமம்" என்பதாகும்[2]. இவனது பெயர் எகிப்திய மொழியில் தூத்து-அன்கு-ஆமூன் என்பது ஆகும். கோப்திய (Coptic) மொழியில், அக்கால எகிப்தியப் பெரிய கடவுளின் பெயர் அமூன் என்பதாகும். அதுவே இவனது பெயரிலும் சேர்ந்திருக்கிறது.

1922 ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் ஹவார்ட் கார்ட்டர் என்னும் தொல்லியலாளர் துட்டன்காமனின் கல்லறையைக் கண்டுபிடித்தார்.

பண்டைய எகிப்தை ஆண்ட துட்டன்காமூன் விண்கல்லால் ஆன கத்தியைப் பயன்படுத்தியதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.[3][4]

பார்வோன் துட்டன்காமனின் சிற்பம், லாஸ் ஏஞ்சலீஸ் அருங்காட்சியகம்
பார்வோன் துட்டன்காமனின் சிற்பம், லாஸ் ஏஞ்சலீஸ் அருங்காட்சியகம்
பார்வோன் துட்டன்காமனின் கல்லறைச் சுவர் சித்திரங்கள்
பார்வோன் துட்டன்காமனின் கல்லறைச் சுவர் சித்திரங்கள்

மரணத்தின் காரணம்

துட்டன்காமனின் மம்மியை 2005-ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனைகளின் மூலம் துட்டன்காமனின் காலில் மிக மோசமான எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. அக்காயம் தேரோட்டம் அல்லது குதிரையோற்றம் போன்ற நிகழ்வுகளின் போது ஏற்பட்ட விபத்தாயிருக்கலாம் என்று கருதப்பட்டது. 2010 ஆண்டு நிகழ்த்தப்பட்ட பரிசோதனைகளில் துட்டன்காமன் மரணமடையும் போது மிக ஆபத்தான மலேரியாவால் பாதிக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=துட்டன்காமன்&oldid=3222141" இலிருந்து மீள்விக்கப்பட்டது