பலாலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
திருத்தி மீள் அமைக்கப்படுகிறது. அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
எழுத்து திருத்தப்பட்டுள்ளது அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 17: | வரிசை 17: | ||
'''பலாலி''' (''Palaly'') [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] உள்ள ஒரு நகரமாகும். இலங்கை விடுதலை அடைந்த போது, இங்குள்ள விமான நிலையம் மூலம் [[திருச்சி|திருச்சிக்கு]] விமான சேவைகள் இருந்த போதும் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டுப் பின்னர் கைவிடப்பட்டது. |
'''பலாலி''' (''Palaly'') [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] உள்ள ஒரு நகரமாகும். இலங்கை விடுதலை அடைந்த போது, இங்குள்ள விமான நிலையம் மூலம் [[திருச்சி|திருச்சிக்கு]] விமான சேவைகள் இருந்த போதும் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டுப் பின்னர் கைவிடப்பட்டது. |
||
1990 இல் இராணுவ நடவடிக்கைக்காக பலாலி மக்கள் நிரந்தரமாக அங்கிருந்து |
1990 இல் இராணுவ நடவடிக்கைக்காக பலாலி மக்கள் நிரந்தரமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் அவர்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டு இராணுவத் தளம், விமானப்படைத் தளம் என்பன விரிவாக்கப்பட்டு அதி உயர் பாதுகாப்பு வலயமாக இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்டது. |
||
2009 இல் இலங்கையின் உல் நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததும், பலாலி கிழக்கில் உள்ள விவசாய சமூகத்தின் சில விவசாயக்க் காணிகள் மட்டும் இராணுவத்தால் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட்து. ஏனைய சமூகங்களின் காணிகள் எதுவும் இன்றுவரை (29-07-2021) இராணுவத்தால் விடுவிக்கப்படவில்லை. ஆனால் பலாலி வடக்கில் கடற்ககரைக்கு அண்மையிலுள்ள விவசாயிகளின் மேச்சல் நிலத்தை அரசாங்கம் சுவீகரித்து மீனவ சமூகத்துற்குக் கொடுத்துள்ளது. |
2009 இல் இலங்கையின் உல் நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததும், பலாலி கிழக்கில் உள்ள விவசாய சமூகத்தின் சில விவசாயக்க் காணிகள் மட்டும் இராணுவத்தால் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட்து. ஏனைய சமூகங்களின் காணிகள் எதுவும் இன்றுவரை (29-07-2021) இராணுவத்தால் விடுவிக்கப்படவில்லை. ஆனால் பலாலி வடக்கில் கடற்ககரைக்கு அண்மையிலுள்ள விவசாயிகளின் மேச்சல் நிலத்தை அரசாங்கம் சுவீகரித்து மீனவ சமூகத்துற்குக் கொடுத்துள்ளது. |
01:03, 30 சூலை 2021 இல் நிலவும் திருத்தம்
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
பலாலி Palaly | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 9°48′0″N 80°05′0″E / 9.80000°N 80.08333°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
பிசெ பிரிவு | வலிகாமம் வடக்கு |
பலாலி (Palaly) யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு நகரமாகும். இலங்கை விடுதலை அடைந்த போது, இங்குள்ள விமான நிலையம் மூலம் திருச்சிக்கு விமான சேவைகள் இருந்த போதும் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டுப் பின்னர் கைவிடப்பட்டது.
1990 இல் இராணுவ நடவடிக்கைக்காக பலாலி மக்கள் நிரந்தரமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் அவர்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டு இராணுவத் தளம், விமானப்படைத் தளம் என்பன விரிவாக்கப்பட்டு அதி உயர் பாதுகாப்பு வலயமாக இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்டது.
2009 இல் இலங்கையின் உல் நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததும், பலாலி கிழக்கில் உள்ள விவசாய சமூகத்தின் சில விவசாயக்க் காணிகள் மட்டும் இராணுவத்தால் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட்து. ஏனைய சமூகங்களின் காணிகள் எதுவும் இன்றுவரை (29-07-2021) இராணுவத்தால் விடுவிக்கப்படவில்லை. ஆனால் பலாலி வடக்கில் கடற்ககரைக்கு அண்மையிலுள்ள விவசாயிகளின் மேச்சல் நிலத்தை அரசாங்கம் சுவீகரித்து மீனவ சமூகத்துற்குக் கொடுத்துள்ளது.
2020 இல் பலாலி விமான நிலையம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஆக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. பலாலியில் இருந்தது தமிழ் நாட்டுக்கு விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பலாலி கிராமம், வடக்கே பாக்குநீரினை கடல், கிழக்கே பத்தைமேனி, அச்சுவேலி, வளலாய், தெற்கே வயாவிளான், ஒட்டகப்புலம், குரும்பசிட்டி மேற்கே கட்டுவன், மயிலிட்டி என்னும் கிராமங்கள் அமைத்துள்ளன. வடக்கில் கரைமணலும் அதணைத்தொடர்ந்து கிராய்மண்ணும் தென்பகுதி முழுவதும் செம்மண் கனிவளத்துடன் விவசாய நிலங்களும், பனையடைப்புகளும், புல் வெளிகளும், அவற்றின் மத்தியில் விவசாய பொருளாதார உற்பத்தி கொண்ட மையமாகும். வடக்கில் கடல் வளங்களும் நிறைந்த அழகுமிகு கிராமம்.
கோயில் / ஆலயம்
கிழக்கில்
அம்மன் கோயில் (இராஜராஜேஸ்வரி )
பத்திரகாளி கோயில்
முதலியம் கோயில் (தெய்வ மனை)
வைரவர் கோயில்,
பெரியதம்பிரான் கோயில் (இராணுவக் கட்டுப்பாட்டில்)
தேற்கில்
சிவன் கோயிலும், (இராணுவக் கட்டுப்பாட்டில்)
வைரவர் கோயிலும், (இராணுவக் கட்டுப்பாட்டில்)
வடக்கில்
ஆரோக்கிய மாதா தேவாலயம்,
அண்ணமார் கோயில் (இராணுவக் கட்டுப்பாட்டில்)
மேற்கில்
சென்.செபஸ்ரியார் தேவாலயம், (இராணுவக் கட்டுப்பாட்டில்)
பலாலி சித்தி விநாயகர் ஆலையம் (இராணுவக் கட்டுப்பாட்டில்)
இராணுவ தலைமையகம்
இலங்கையின் வடபகுதிக்கு வரும் கள்ளக்குடியேற்றத்தை தடுக்கும் நோக்குடன் 1962 இல் இலங்கை அரசு ஒரு தடுப்பு முகாமை அமைக்க முன்வந்தது. அப்போது இருந்த நெல்லுசங்கத்தின் ஒரு பகுதியில் கள்ள குடியேற்ற தடுப்பு முகாம் அமைக்கப்பட்டது. இது நாளடைவில் நெல்லு சங்கத்தை வெளியேற்றி கள்ளக்குடியேற தடுப்பு தலைமையகம் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் இவ்விடம் பலாலி இராணுவ முகாமாக மாற்றப்பட்டு அதன் அருகில் இருந்த பலாலி சித்தி விநாயகர் வித்தியாசாலையை அங்கிருந்து வெளியேற்றி இன்று உள்ள இராணுவ தலைமையகம் அமைக்கப்பட்டது. இது இப்போது ஓர் உலக புகழ் பெற்ற கேந்திர மையமாக விளங்குகின்றது
ஆசிரியர் பயிற்சி கலாசாலை
பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலை மிகவும் முக்கியம் வாய்ந்த ஓர் கல்வி போதனாசாலையாகும். இது பலாலி விமானநிலையத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு பல விதமான கல்வி துறைகளில் பயிற்சி வழங்கப்பட்டு இலங்கை முழுவதுக்குமான தமிழ் மொழி மூலம் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் உருவாக்கப்பட்டார்கள். இதன்முலம் பலாலி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்துள்ளது என்று கூறினால் மிகையாகாது.
பொருளாதாரம்
பலாலி மக்கள் விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தினர். மிளகாய், வெங்காயம், தக்காளி, புகையிலை, கோவா, திராட்சை என பல வகையான மரக்கறி வகையையும் தானிய பெருட்களையும் உற்பத்தி செய்து தன்ணிறைவு கண்டனர். உள்ஊரிலும், யாழ்ப்பாண குடாநாட்டிலும் சந்தைப்படுதி கொண்டிருந்த பலாலி விவசாயிகள் நாட்டின் தென்பகுதிக்கு படையெடுத்தனர். நேராகவே கொழும்பு புறக்கோட்டையில் உள்ள நாலாம் குறுக்கு தெருவில் அமைந்த வியாபார நிலையங்களில் தமது விளைபொருட்களை சந்தைப்படுத்தி வெற்றியும் கண்டனர்.
மேற்கோள்கள்