பயனர் பேச்சு:பாஸ்கர் துரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
|||
வரிசை 108: | வரிசை 108: | ||
ஆய்வேடுகள் |
ஆய்வேடுகள் |
||
பாசவதைப் பரணி காட்டும் அறம். |
பாசவதைப் பரணி காட்டும் அறம். |
||
இலக்கணவியலாரின் |
இலக்கணவியலாரின் எழுத்தியல் மரபுகள்.(M.phil) |
||
இடைச்சொற்களின் வரலாறும் வளர்ச்சியும் (முனைவர் பட்ட ஆய்வு) |
இடைச்சொற்களின் வரலாறும் வளர்ச்சியும் (முனைவர் பட்ட ஆய்வு) |
||
தொல்காப்பியம், நன்னூல், வீரசோழியம், நேமிநாதம், முத்துவீரியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், தமிழ்நூல் போன்றவை நூல் எல்லைகள் ஆகும். |
|||
மதுரையின்கண்ணுள்ள விவேகானந்தர் கல்லூரியில் பேராசிரியர் பணியிலும் மதுரையில் உள்ள வேலம்மாள் மேல்நிலைப்பள்ளியில் முதுநிலை ஆசிரியர் பணியிலும் தமிழ்ப்பணி ஆற்றினேன். சில ஆண்டுகளுக்கு முன் எனக்கு நடந்த ஒரு விபத்தில் என்ற முதுகுத்தண்டு சி4,சி5 பாதிக்கப்பட்டு கை கால்கள் செயலிழந்த நிலையிலும் (எனது உடலில் நெஞ்சுக்கு மேல் வலிமிகும் இடங்கள் நெஞ்சுக்கு கீழ் வலிமிகா இடங்கள் உண்டு -ஆதலால் உடலளவிலும் வலிமிகும் இடங்கள் மிகா இடங்கள் அறிவேன்) தமிழ் இலக்கண இலக்கியங்களோடு இருக்கின்றனன். நான் கற்ற தமிழ் என் உயிருக்கு உயிர் ஊட்டிக் கொண்டிருக்கிறது. தமிழுக்கு அமுதென்று பேர் என்ற வரிகளுக்கு பொருளாக வாழ்கிறேன். தாங்கள் கேட்கும் குரல் கொடுக்கவும் குரல் செயலி வாயிலாகப் பதிலைப் பதிவிட்டேன். தமிழாசிரியர் பணியைத் தவமாகக் கருதிப் பணியாற்றினேன் |
மதுரையின்கண்ணுள்ள விவேகானந்தர் கல்லூரியில் பேராசிரியர் பணியிலும் மதுரையில் உள்ள வேலம்மாள் மேல்நிலைப்பள்ளியில் முதுநிலை ஆசிரியர் பணியிலும் தமிழ்ப்பணி ஆற்றினேன். சில ஆண்டுகளுக்கு முன் எனக்கு நடந்த ஒரு விபத்தில் என்ற முதுகுத்தண்டு சி4,சி5 பாதிக்கப்பட்டு கை கால்கள் செயலிழந்த நிலையிலும் (எனது உடலில் நெஞ்சுக்கு மேல் வலிமிகும் இடங்கள் நெஞ்சுக்கு கீழ் வலிமிகா இடங்கள் உண்டு -ஆதலால் உடலளவிலும் வலிமிகும் இடங்கள் மிகா இடங்கள் அறிவேன்) தமிழ் இலக்கண இலக்கியங்களோடு இருக்கின்றனன். நான் கற்ற தமிழ் என் உயிருக்கு உயிர் ஊட்டிக் கொண்டிருக்கிறது. தமிழுக்கு அமுதென்று பேர் என்ற வரிகளுக்கு பொருளாக வாழ்கிறேன். தாங்கள் கேட்கும் குரல் கொடுக்கவும் குரல் செயலி வாயிலாகப் பதிலைப் பதிவிட்டேன். தமிழாசிரியர் பணியைத் தவமாகக் கருதிப் பணியாற்றினேன் |
||
தமிழ்நாடு-திருச்சிராப்பள்ளி |
தமிழ்நாடு-திருச்சிராப்பள்ளி |
17:38, 28 சூலை 2021 இல் நிலவும் திருத்தம்
வாருங்கள்!
வாருங்கள், பாஸ்கர் துரை, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 09:33, 5 சூலை 2021 (UTC)
சிறு தொகுப்பு
சிறு திருத்தங்கள் செய்யும்போது தொகுத்தல் சுருக்கத்தில் இஃது ஒரு சிறு தொகுப்பு என்பதைத் தெரிவுசெய்து சேமியுங்கள். காண்க: en:Help:Minor edit --AntanO (பேச்சு) 02:46, 28 சூலை 2021 (UTC)
எழுத்துகள்
நீங்கள் யார்? எதற்காக எழுத்துக்கள் என்றிருப்பவற்றையெல்லாம் எழுத்துகள் என்று மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்? இலக்கணப் பிழை எதுவுமிருந்தால் தக்க ஆதாரத்துடன் காண்பித்த பின்னர் மாற்றலாம். கவனிக்க @செல்வா:, @Sengai Podhuvan:, @Mayooranathan:.--பாஹிம் (பேச்சு) 13:10, 28 சூலை 2021 (UTC)
வாழ்க தமிழ்!
தங்களின் தமிழ் ஆர்வத்தை நான் வணங்குகிறேன். வணக்கம் ஐயா, நான் ஒரு தமிழாசிரியன்/தமிழ் ஆர்வலன்.
இயல்பினும் விதியினும்... நன்னூல் எழுத்ததிகாரம் 165-ஆவது நூற்பாவை முதலில் பார்த்துவிட்டு கீழ்வரும் நூற்பாவைப் பார்ப்பது சாலச் சிறந்தது
இடை, உரி, வடசொலின் இயம்பிய கொளாதவும் போலியும் மரூஉவும் பொருந்திய ஆற்றிற்கு இயையப் புணர்த்தல் யாவர்க்கும் நெறி (நன்னூல் எழுத்ததிகாரம் நூற்பா.239)
நிலைமொழி இடைச்சொல்லாக வந்து வருமொழி முதலில் வல்லினம் வருகையில் வல்லெழுத்து மிகாமல் இயல்பாகும்.
எழுத்து -பெயர்ச்சொல்>வன்தொடர்க் குற்றியலுகரம் பிழை-பெயர்ச்சொல்>தொழிற்பெயர் =எழுத்துப் பிழை
எட்டு-பெயர்ச்சொல்>எண்ணுப்பெயர்>வன்தொடர்க் குற்றியலுகரம் தொகை-பெயர்ச்சொல்>தொழிற்பெயர் =எட்டுத்தொகை அடுக்குத்தொடர்
எடுத்து-வினைச்சொல்>வினையெச்சம்>வன்தொடர்க் குற்றியலுகரம் காட்டினான்-வினைச்சொல்>வினைமுற்று எடுத்துக்காட்டினான் பிடித்துக்கொண்டான்.
ஆனால், பெயர்ச்சொல் மட்டுமே பன்மை விதி ஏற்கும். கள் என்பது பன்மை விகுதி ஆகும் அஃது ஓர் இடைச் சொல் ஆகும்.
நிலைமொழி வன்தொடர்க் குற்றியலுகரமாக அமைந்து அதனை அடுத்து, கள்- என்னும் இடைச்சொல் விகுதி வந்து புணர்ந்தால் அதனை அடுத்து ஒற்று மிகுதல் கூடாது என்பதை மேற்கண்ட நன்னூல் நூற்பா தெளிவாக விளக்கி நிற்கிறது.
எழுத்துகள் ஓட்டுகள் நாற்றுகள் பாட்டுகள் வாத்துகள் பூட்டுகள் வேட்டுகள் மூக்குகள் படைப்புகள் அடுக்குகள் அடுப்புகள் குறிப்புகள் கருத்துகள் சீட்டுகள் சொட்டுகள் உப்புகள் சீப்புகள் தப்புகள் வாய்ப்புகள்
இவ்வாறு எழுதுவதே வழாநிலை ஆகும்.
தாங்கள் விளக்கம் கேட்டதற்கு (நன்னூல் நூற்பா 41) மிக்க நன்றிகள்
வாழ்க வளமுடன்...
வாழ்க தமிழ்!
என்னுடைய கருத்துத் தவறாக இருக்கும் பட்சத்தில் வேறு ஏதேனும் இலக்கணச் சான்றுகளுடன் விளக்கம் தாருங்கள்.
பாஸ்கர் துரை (பேச்சு) 15:06, 28 சூலை 2021 (UTC)
வன்றொடர்க் குற்றியலுகரத்தைப் பற்றிக் கூறுகிறீர்கள். வன்தொடரல்லவே. விதியை உரைத்து விட்டு எதற்காக எழுத்துக் கற்பிக்கும் போது என்று வந்த இடங்களிலெல்லாம் ககர ஒற்றை நீக்கினீர்கள்? எழுத்தே கற்பிக்கிறதா?--பாஹிம் (பேச்சு) 15:50, 28 சூலை 2021 (UTC)
வணக்கம் ஐயா வாழ்க வளமுடன் வாழ்க தமிழ்... நான் ஒரு மாற்றுத்திறனாளி தாங்கள் கேட்கின்ற வினாவிற்கு மெதுவாகத்தான் பதில் பதிவிட இயலும். அதற்கு என்னை மன்னிக்கவும்.
பிள்ளைகளுக்கு எழுத்து கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "இம்மன்னா" என வழங்குவர்.
பிள்ளைகளுக்கு எழுத்தைக் கற்பிக்கும்போதும் -என்ற சொற்றொடரில் அஃது உணர்த்தும் பொருண்மையை நோக்கினால் பிள்ளைகள் எழுவாய் ஆகின்றன எழுத்து என்ற சொல்லை அடுத்து செயப்படுபொருள் வேற்றுமை உருவான ஐ (இரண்டாம் வேற்றுமை உருபு) மறைந்து வருகிறது. மேற்கண்ட சொற்றொடரில் எழுத்து என்பதற்கும் கற்பிக்கும்போது என்பதற்கும் இடையில் ஐ உருபு மறைந்து வருவதால் இச்சொற்றொடர் இரண்டாம் வேற்றுமைத்தொகையில் அமைவதினால் இவ்விடத்து ஒற்று மிகுதல் கூடாது.
மேலும் சான்றுகள்
கண்ணன் பிள்ளைகளுக்கு எழுத்தைக் கற்பிக்கும்போதும்.
எழுத்தை -என்ற இரண்டாம் வேற்றுமை விரியில் உருபு மறைந்து வருமாயின்
அச்சொற்றொடர் கண்ணன் பிள்ளைகளுக்கு எழுத்து கற்பிக்கும்போதும்- என்று இருக்க வேண்டும்
மேற்கண்ட சொற்றொடரில் எழுத்து என்பது செயப்படு பொருளாக அமைந்து இரண்டாம் வேற்றுமை உருபை ஏற்காமல் இருப்பதனால் இஃது இரண்டாம் வேற்றுமைத்தொகை ஆகும் எனவே அவ்விடத்து வல்லினம் மிகாது
இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது.
வாழ்க தமிழ்
வாழ்க வளமுடன். பாஸ்கர் துரை (பேச்சு) 16:25, 28 சூலை 2021 (UTC)
பாஸ்கர் பி.ஏ.,எம்.ஏ.,எம்.பில்.,பி.எட்., தமிழ் ஆசிரியன் ஆய்வேடுகள் பாசவதைப் பரணி காட்டும் அறம். இலக்கணவியலாரின் எழுத்தியல் மரபுகள்.(M.phil) இடைச்சொற்களின் வரலாறும் வளர்ச்சியும் (முனைவர் பட்ட ஆய்வு)
தொல்காப்பியம், நன்னூல், வீரசோழியம், நேமிநாதம், முத்துவீரியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், தமிழ்நூல் போன்றவை நூல் எல்லைகள் ஆகும்.
மதுரையின்கண்ணுள்ள விவேகானந்தர் கல்லூரியில் பேராசிரியர் பணியிலும் மதுரையில் உள்ள வேலம்மாள் மேல்நிலைப்பள்ளியில் முதுநிலை ஆசிரியர் பணியிலும் தமிழ்ப்பணி ஆற்றினேன். சில ஆண்டுகளுக்கு முன் எனக்கு நடந்த ஒரு விபத்தில் என்ற முதுகுத்தண்டு சி4,சி5 பாதிக்கப்பட்டு கை கால்கள் செயலிழந்த நிலையிலும் (எனது உடலில் நெஞ்சுக்கு மேல் வலிமிகும் இடங்கள் நெஞ்சுக்கு கீழ் வலிமிகா இடங்கள் உண்டு -ஆதலால் உடலளவிலும் வலிமிகும் இடங்கள் மிகா இடங்கள் அறிவேன்) தமிழ் இலக்கண இலக்கியங்களோடு இருக்கின்றனன். நான் கற்ற தமிழ் என் உயிருக்கு உயிர் ஊட்டிக் கொண்டிருக்கிறது. தமிழுக்கு அமுதென்று பேர் என்ற வரிகளுக்கு பொருளாக வாழ்கிறேன். தாங்கள் கேட்கும் குரல் கொடுக்கவும் குரல் செயலி வாயிலாகப் பதிலைப் பதிவிட்டேன். தமிழாசிரியர் பணியைத் தவமாகக் கருதிப் பணியாற்றினேன் தமிழ்நாடு-திருச்சிராப்பள்ளி 8248446268. பாஸ்கர் துரை (பேச்சு) 17:02, 28 சூலை 2021 (UTC)
நன்றாக விளக்கினீர்கள். மிக்க நன்றி. மற்றும் சில கேள்விகளும் இருக்கின்றன. சற்று விளக்கத்துக்காகத்தான். குறை பிடிக்கவல்ல. தாரும், செய்யும், வாரும் என்றவாறு ஏவல் வினை முடியலாம் என்பதை தெரியும். தரவும், செய்யவும், வரவும் என்றவாறு முடியுமா? இரு சொற்களை இணைக்க மற்றும் என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு இலக்கணமுண்டா? விளக்கினால் நல்லது.--பாஹிம் (பேச்சு) 17:37, 28 சூலை 2021 (UTC)