யாழ்ப்பாண அரசின் சிதைவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Mantri Manai.JPG|thumb|300 px|[[மந்திரிமனை (நல்லூர்)|மந்திரிமனை]] சிதைவுகள்]]
[[படிமம்:Mantri Manai.JPG|thumb|300 px|[[மந்திரிமனை (நல்லூர்)|மந்திரிமனை]] சிதைவுகள்]]
'''யாழ்ப்பாண அரசின் கட்டட இடிபாட்டு சிதைவுகள்''' அல்லது '''யாழ்ப்பாண அரசின் சிதைவுகள்''' என்பது தற்போடு எச்சியுள்ள [[யாழ்ப்பாண அரசு]]டன் தொடர்புபட்ட கட்டடக் கட்டுமானங்களைக் குறிப்பிடுகிறது. இவை [[நல்லூர் (யாழ்ப்பாணம்)|நல்லூரில்]] காணப்படுகின்றன.
'''யாழ்ப்பாண அரசின் கட்டட இடிபாட்டு சிதைவுகள்''' அல்லது '''யாழ்ப்பாண அரசின் சிதைவுகள்''' என்பது தற்போது எஞ்சியுள்ள [[யாழ்ப்பாண அரசு]]டன் தொடர்புபட்ட கட்டுமானங்களைக் குறிப்பிடுகிறது. இவை [[நல்லூர் (யாழ்ப்பாணம்)|நல்லூரில்]] காணப்படுகின்றன.


== வரலாறு ==
== வரலாறு ==

18:10, 2 சூலை 2021 இல் நிலவும் திருத்தம்

மந்திரிமனை சிதைவுகள்

யாழ்ப்பாண அரசின் கட்டட இடிபாட்டு சிதைவுகள் அல்லது யாழ்ப்பாண அரசின் சிதைவுகள் என்பது தற்போது எஞ்சியுள்ள யாழ்ப்பாண அரசுடன் தொடர்புபட்ட கட்டுமானங்களைக் குறிப்பிடுகிறது. இவை நல்லூரில் காணப்படுகின்றன.

வரலாறு

சங்கிலித்தோப்பு வளைவு

ஆரியச் சக்கரவர்த்திகளின் அரண்மனை போர்த்துக்கேயர் யாழ்ப்பாண அரசை வெற்றி கொள்ளும் வரை முக்கியமாக விளங்கியது.[1]

இது எங்கு அமைந்திருந்தது என்பதில் இரு வேறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன. ஏனென்றால், தலைநகர் நல்லூரிலும் புத்தளத்திலும் இருந்ததென்றும் மொரோக்கோ வரலாற்றாசிரியர் இப்னு பதூதா குறிப்பின்படி அறியப்படுகின்றது.[2][3] ஆயினும் தற்போதுள்ள இடுபாட்டு எச்சங்களை நல்லூரில் காணக்கூடியதாகவுள்ளன.

அரச அரண்மனையில் உருவாக்கம் சிங்கை ஆரியச் செகராசசேகரத்தினால் உத்தரவிடப்பட்டது.[4] ஆயினும், இன்னொரு தகவலின்படி, அரண்மனை, பூந்தோட்டம் ஆகியவற்றை உருவாக்க கி.பி. 104 இல் கூழங்கைச் சக்கரவர்த்தி உத்தரவிட்டதாக அறிய முடிகிறது.[5]

அமைப்பு

தென் இந்திய அமைப்புக்கு ஏற்ப நகர் அமைக்கப்பட்டது. இரு பிரதான வீதிகளும், நான்கு நுளைவு வாயில்களுடன் கூடிய கோயில்களும் அமைக்கப்பட்டிருந்தன. நகர மத்தியில் முத்திரைச் சந்தை அமைக்கப்பட்டது. சதுர வடிவில், அரண்மிக்க நகர் அமைந்திருந்தது. பழைய நல்லூர் கந்தசுவாமி கோயில் அரண்மனையின் பாதுகாப்பு அரணாகக் காணப்பட்டது. அத்துடன் அங்கு அரண்மனை, பூந்தோட்டம், குளம், அரச கட்டடங்களுடன் பிற கட்டடங்களும் அமைக்கப்பட்டிருந்தன.[5][6]

நகர் பாதுகாப்பிற்காக கொழும்புத்துறை, கோப்பாய், பண்ணைத்துறை ஆகிய இடங்களில் சிறு கோட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன.

Yamuna Eri in panorama view
Π வடிவ யமுனா ஏரி

அழிவு

போர்த்துக்கேயரின் முதலாவது படையெடுப்பின்போது முதலாம் சங்கிலியினால் அரண்மனை தீவைக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்த போர்களினால் அது மேலும் அழிவிற்குள்ளானது. போர்த்துக்கேய, இடச்சு, பிரித்தானிய படையெடுப்புக்களினால் அரண்மனை, கோயில்கள், கட்டடங்கள், கட்டமைப்புக்கள் ஆகியன அழிவுற்றன.

தற்போதைய நிலையும் இடுபாடுகளின் எச்சங்களும்

சங்கிலித்தோப்பு அத்திவாரம்

ஆயினும் சில கட்டட இடுபாடுகளின் எச்சங்கள் சிலவற்றை இன்றும் காணக்கூடியதாகவுள்ளது.[7][8] இவை தற்போது இலங்கை அரசாங்கத்தினால் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் இடங்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. [9] அவையாவன:

நகர பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட கோட்டைகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டன. கோப்பாயில் சிறிதளவு எச்சம் அண்மைய காலம் வரை இருந்ததாக் கூறப்பட்டது. ஏனையவற்றின் எச்சங்கள் எதுவுமே இல்லை.

தற்போது அமைந்துள்ள கோயில்கள் புதிய இடங்களில் பின்பு புதிதாகக் கட்டப்பட்டன. நல்லூர் சட்டநாதர் கோயில், வெயிலுகந்த விநாயகர் ஆலயம் என்பன ஏறக்குறைய ஒரே இடத்தில் மீளமைக்கப்பட்டடிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

அரண்மணை உட்பட முக்கிய கட்டமைப்புக்கள் எவையும் தற்போது இல்லை.

உசாத்துணை

  1. Abeysinghe, T Jaffna Under the Portuguese, p.4
  2. Gunasingam, M Sri Lankan Tamil Nationalism, p.54
  3. Codrington, Humphry William. "Short history of Sri Lanka:Dambadeniya and Gampola Kings (1215–1411)". Lakdiva.org. பார்க்கப்பட்ட நாள் 2007-11-25.
  4. "The Royal Palace". jaffnaroyalfamily.org. பார்க்கப்பட்ட நாள் 22 April 2016.
  5. 5.0 5.1 Jaffna Palace Ruins
  6. "Nallur Rajadhani: City Layout". V.N.Giritharan. பார்க்கப்பட்ட நாள் 2007-12-02.
  7. "Places of interest in Jaffna". Urlaub-sr-lanka.info. 2013-01-19. பார்க்கப்பட்ட நாள் 2013-11-28.
  8. "Rise of ruins from ravages of war". Sundaytimes.lk. பார்க்கப்பட்ட நாள் 2013-11-28.
  9. Gazette 1486 2007, ப. 129.