இரண்டாம் இராசாதிராச சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 23: வரிசை 23:
இராமேசுவரம், சிறுவயல், பொன்னமராவதி, தேவிப்பட்டனம், காளையார் கோவில், தேவிக்கோட்டை, மணமேல்குடி என பல ஊர்களிலும் சிங்களப் படையினர் கொடும் தாக்குதல் நடத்தினர். இராமேஸ்வர்ம் கோவில் உள்ளிட்ட கோவில்களில் கொள்ளையடித்தனர். அக்காலத்தில் 'சிங்களப் படையினரின் அட்டூழியங்கள்' சோழநாட்டிலும் கடும் சினத்தை ஏற்படுத்தி இருந்தது.
இராமேசுவரம், சிறுவயல், பொன்னமராவதி, தேவிப்பட்டனம், காளையார் கோவில், தேவிக்கோட்டை, மணமேல்குடி என பல ஊர்களிலும் சிங்களப் படையினர் கொடும் தாக்குதல் நடத்தினர். இராமேஸ்வர்ம் கோவில் உள்ளிட்ட கோவில்களில் கொள்ளையடித்தனர். அக்காலத்தில் 'சிங்களப் படையினரின் அட்டூழியங்கள்' சோழநாட்டிலும் கடும் சினத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், சிங்கள படையிடம் தோல்வியுற்ற குலசேகர பாண்டியன், இரண்டாம் இராசாதிராச சோழனிடம் உதவி கேட்டான். இராசாதிராச சோழன் தனது படைத்தலைவர் 'திருச்சிற்றம்பலமுடையான் பெருமானம்பிப் பல்லவராயன்' தலைமையில் பெரும் படையினரை இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி மற்றும் பாசிப்பட்டினத்துக்கு அனுப்பினார்.
இந்நிலையில், சிங்கள படையிடம் தோல்வியுற்ற குலசேகர பாண்டியன், இரண்டாம் இராசாதிராச சோழனிடம் உதவி கேட்டான். இராசாதிராச சோழன் தனது படைத்தலைவர் 'திருச்சிற்றம்பலமுடையான் பெருமானம்பிப் பல்லவராயன்' தலைமையில் பெரும் படையினரை இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி மற்றும் பாசிப்பட்டினத்துக்கு அனுப்பினார்.
படைத்தலைவர் 'பெருமானம்பிப் பல்லவராயன்' தலைமையில் பெரும் படையினரை இராமநாதபுரம் பகுதிக்கு சென்று, திருக்கானப்பேர், தொண்டி, பாசிபொன் அமராவதி, மணமேற்குடி, மஞ்சக்குடி ஆகிய இடங்களில் போரிட்டனர். சோழப் படைவீரர்கள், சிங்கள மன்னனின் படையைத் தோற்கடித்தனர். 'லங்காபுர தண்டநாதா' மற்றும் ‘ஜகத் விஜயன்’ ஆகிய இரு சிங்களப் படைத்தளபதிகளின் தலையைக் கம்பில் குத்தி மதுரைக் கோட்டை முகப்பில் வைத்தனர்.
படைத்தலைவர் 'பெருமானம்பிப் பல்லவராயன்' தலைமையில் பெரும் படையினரை இராமநாதபுரம் பகுதிக்கு சென்று, திருக்கானப்பேர், தொண்டி, பாசிப்பட்டினம் அமராவதி, மணமேற்குடி, மஞ்சக்குடி ஆகிய இடங்களில் போரிட்டனர். சோழப் படைவீரர்கள், சிங்கள மன்னனின் படையைத் தோற்கடித்தனர். 'லங்காபுர தண்டநாதா' மற்றும் ‘ஜகத் விஜயன்’ ஆகிய இரு சிங்களப் படைத்தளபதிகளின் தலையைக் கம்பில் குத்தி மதுரைக் கோட்டை முகப்பில் வைத்தனர்.
இந்த போருக்கு பின்னர் படைத்தளபதி பெருமானம்பிப் பல்லவராயன் காலமானார். அவருக்கு பின்னர் 'அம்மையப்பன் ஆன அண்ணன் பல்லவரான்' என்பவர் படைத்தளபதி ஆனார். தோற்று ஓடிய சிங்களப்படைகள் மீண்டும் ஒரு போருக்கு தயாராவதாக தெரிந்தவுடன் அண்ணன் பல்லவரான் தலைமையில் மீண்டும் படையெடுத்து சென்று, இரண்டாவது முறையாகவும் சிங்களப்படைகளை தோற்கடித்தனர். இந்தப் போர் கி.பி. 1169 - 1177 ஆண்டுகளுக்கு இடையே நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த போருக்கு பின்னர் படைத்தளபதி பெருமானம்பிப் பல்லவராயன் காலமானார். அவருக்கு பின்னர் 'அம்மையப்பன் ஆன அண்ணன் பல்லவரான்' என்பவர் படைத்தளபதி ஆனார். தோற்று ஓடிய சிங்களப்படைகள் மீண்டும் ஒரு போருக்கு தயாராவதாக தெரிந்தவுடன் அண்ணன் பல்லவரான் தலைமையில் மீண்டும் படையெடுத்து சென்று, இரண்டாவது முறையாகவும் சிங்களப்படைகளை தோற்கடித்தனர். இந்தப் போர் கி.பி. 1169 - 1177 ஆண்டுகளுக்கு இடையே நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்தப் போர் மிக முக்கியமான ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு ஆகும். தென் தமிழ்நாட்டில் சிங்கள ஆதிக்கம் நிகழாமல் தடுத்தது இந்தப் போர் ஆகும். இதனை சோழநிலா எனும் நாவலின் முன்னுரையில் மு. மேத்தா, "சம்புவராயர் அன்று சிங்களரை துரத்தியடித்து தமிழகத்தை காக்காமல் விட்டிருந்தால், இன்று தமிழகம் சிங்களாபௌத்த நாடாக மாறியிருக்கும்" என்று குறிப்பிடுகிறார்.
இந்தப் போர் மிக முக்கியமான ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு ஆகும். தென் தமிழ்நாட்டில் சிங்கள ஆதிக்கம் நிகழாமல் தடுத்தது இந்தப் போர் ஆகும். இதனை சோழநிலா எனும் நாவலின் முன்னுரையில் மு. மேத்தா, "சம்புவராயர் அன்று சிங்களரை துரத்தியடித்து தமிழகத்தை காக்கமல் விட்டிருந்தால், இன்று தமிழகம் சிங்களாபௌத்த நாடாக மாறியிருக்கும்" என்று குறிப்பிடுகிறார்.
---------------------
---------------------
"சம்புவராயர் யாகம்"
"சம்புவராயர் யாகம்"

18:27, 2 சூன் 2021 இல் நிலவும் திருத்தம்

இரண்டாம் இராசாதிராச சோழன், விக்கிரம சோழனின் மகள் வயிற்றுப் பேரனாவான். இரண்டாம் இராசாதிராசன் பட்டத்திற்கு வரவேண்டும் என்று இரண்டாம் இராஜராஜன் தன்னுடைய ஆட்சியின் இறுதியில் முடிவு செய்தான். நேரடியாக ஆடவர் வரிசையில் அரசுரிமைக்கு உரியோர் இல்லாத காரணத்தால் விக்கிரம சோழனின் மகள் வழிப் பேரனான இரண்டாம் இராசாதிராசன் தேர்ந்தெடுக்கப்பட்டான்.

ஆட்சி

இரண்டாம் இராசராசனுடன் சேர்ந்து, இராசாதிராசன் இவ்வாறு சில வருடங்கள் அரசப் பிரதிநிதியாக ஆண்டுவந்தான். இராசாதிராசனுடைய மெய்க்கீர்த்திகள், மூவகையின. அவை யாவும் சொல்லலங்காரம் நிறைந்ததாக உள்ளனவே தவிர வரலாற்றுச் செய்திகளைச் சிறிதளவும் கொண்டவனவாக இல்லை. இரண்டாம் ஆட்சிக் காலத்திலேயே காணப்படுவதும் 'கடல் சூழ்ந்த பார் மகளும்(மாதரும்)' என்று தொடங்குவதுமான வாசகம், இரண்டாம் இராசராசன் கல்வெட்டுகளில் இருந்து எடுத்தாளப்பட்டிருக்க வேண்டும். வேறு வாசகங்களும் உண்டு.

ஐந்தாம் ஆண்டில் முதல் முறையாக 'பூமருவியக் திசைமுகத்தோன்' என்ற வாசகம் காணப்படுகிறது. இதைப் பிற்காலத்தில் மூன்றாம் குலோத்துங்கன் கடைபிடித்தான். தஞ்சை மாவட்டத்தின் ஆறாம், பத்தாம் ஆட்சி ஆண்டுகளில் ஏற்பட்ட கல்வெட்டுகளில் 'கடல் சூழ்ந்த பாரேழும்' என்ற வாசகம் உள்ளது. அரசனின் மெய்க்கீர்த்திகள் வரலாற்று ஆராய்ச்சிக்குப் பயன்படாவிட்டாலும் அவனுடைய ஆட்சியில் ஏற்பட்ட சில கல்வெட்டுகள், பாண்டிய அரசுரிமைப் போர்களின் நிகழ்ச்சிகளைப் பற்றி விரிவான தகவல்களைத் தருகின்றன. இந்தப் போரைப் பற்றி மகாவம்சம் தெரிவிக்கும் விவரங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் கல்வெட்டுச் செய்திகள் மிகவும் நம்பத்தக்கனவாக உள்ளன.

பாண்டியப் போர்

இரண்டாம் ராசாதிராசனின் காலத்தில் ஆரம்பித்தது பாண்டிய தாயாதிகளின் பகைமை சண்டைகள். தாயாதிகளான குலசேகரப் பாண்டியனும் பராக்கிரம பாண்டியனும் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்ள ஆரம்பித்தனர்.

குலசேகரப் பாண்டியன் சோழனின் உதவியை நாடினான். பராக்கிரம பாண்டியன் சிங்களன் பராக்கிரம பாகுவின் உதவியை நாடினான். இவ்வாறு இந்த இரண்டு மன்னர்கள் பொருட்டு சோழர்களும் சிங்களர்களும் மோதிக் கொள்ள ஆரம்பித்தனர்.

தாயாதி சண்டையினில் பாண்டிய தேசத்தினை ஆண்டு கொண்டிருந்த பராக்கிரம பாண்டியனை குலசேகரப் பாண்டியன் முற்றுகை இட்டான். பராக்கிரம பாண்டியன் சிங்கள மன்னனாகிய பராக்கிரம பாகுவின் உதவியை கோரினான். அவனது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சிங்களன், தனது மாதண்ட நாயகனை பெரும் படையுடன் பாண்டிய தேசத்துக்கு அனுப்பித்தான். சிங்களப் படை நுழைவதற்குள் குலசேகரன், பராக்கிரம பாண்டியனையும் அவனது உற்றத்தையும் கொன்று ஆட்சியை கைப்பிடித்தான். இதனை அறிந்த சிங்கள மாதண்டன் மதுரை நகரத்தினுள் நுழைந்து பாண்டிய படைகளை அழித்தான், பராக்கிரமனின் புதல்வனாகிய வீர பாண்டியனை ஆட்சிப் பொறுப்பில் எற்றுவித்தான்.

பராக்கிரம பாண்டியனின் ஆட்சியை விரும்பாத பாண்டியர்கள் அவனது மகனாகிய வீரப் பாண்டியனின் ஆட்சியை விரும்பவில்லை. அவர்கள் குலசேகர பாண்டியனையே மன்னனாக்க விரும்பினர், அவர்கள் ஒரு பெரும் படை சேர்த்து வீரப் பாண்டியனை ஆட்சியில் இருந்து அகற்றினர். இதனை உணர்ந்த சிங்கள மாத்தண்டன் உதவிப் படை கோரி சிங்களனிடம் விண்ணப்பித்தான். அதனால், சிங்கள மன்னன் ஜகத்விஜயன் என்ற தண்டனாயகனை சிங்கள மாதண்டனாயகனுக்கு துணை அனுப்பித்தான். இந்த இரண்டு வீரர்களிடம் ஈடுக் கொடுக்க முடியாத குலசேகரன் தனது அரியாசனத்தை இழக்க வேண்டி இருந்தது.

சோழர்களின் நுழைவு

இரண்டாம் இராசாதிராச சோழன் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 1163 – 1173) பாண்டிய நாட்டில் பராக்கிரம பாண்டியனுக்கும், குலசேகர பாண்டியனுக்கும் இடையே அரசுரிமை மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் தலையிட்ட சிங்கள மன்னன் பராக்கிரம பாகு, தனது தளபதி 'லங்காபுர தண்டநாதா' என்பவன் தலைமையில் படையை அனுப்பினான். பின்னர் ‘ஜகத் விஜயன்’ என்பவன் தலைமையில் இன்னொரு படையையும் அனுப்பினான். இராமேசுவரம், சிறுவயல், பொன்னமராவதி, தேவிப்பட்டனம், காளையார் கோவில், தேவிக்கோட்டை, மணமேல்குடி என பல ஊர்களிலும் சிங்களப் படையினர் கொடும் தாக்குதல் நடத்தினர். இராமேஸ்வர்ம் கோவில் உள்ளிட்ட கோவில்களில் கொள்ளையடித்தனர். அக்காலத்தில் 'சிங்களப் படையினரின் அட்டூழியங்கள்' சோழநாட்டிலும் கடும் சினத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், சிங்கள படையிடம் தோல்வியுற்ற குலசேகர பாண்டியன், இரண்டாம் இராசாதிராச சோழனிடம் உதவி கேட்டான். இராசாதிராச சோழன் தனது படைத்தலைவர் 'திருச்சிற்றம்பலமுடையான் பெருமானம்பிப் பல்லவராயன்' தலைமையில் பெரும் படையினரை இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி மற்றும் பாசிப்பட்டினத்துக்கு அனுப்பினார். படைத்தலைவர் 'பெருமானம்பிப் பல்லவராயன்' தலைமையில் பெரும் படையினரை இராமநாதபுரம் பகுதிக்கு சென்று, திருக்கானப்பேர், தொண்டி, பாசிப்பட்டினம் அமராவதி, மணமேற்குடி, மஞ்சக்குடி ஆகிய இடங்களில் போரிட்டனர். சோழப் படைவீரர்கள், சிங்கள மன்னனின் படையைத் தோற்கடித்தனர். 'லங்காபுர தண்டநாதா' மற்றும் ‘ஜகத் விஜயன்’ ஆகிய இரு சிங்களப் படைத்தளபதிகளின் தலையைக் கம்பில் குத்தி மதுரைக் கோட்டை முகப்பில் வைத்தனர். இந்த போருக்கு பின்னர் படைத்தளபதி பெருமானம்பிப் பல்லவராயன் காலமானார். அவருக்கு பின்னர் 'அம்மையப்பன் ஆன அண்ணன் பல்லவரான்' என்பவர் படைத்தளபதி ஆனார். தோற்று ஓடிய சிங்களப்படைகள் மீண்டும் ஒரு போருக்கு தயாராவதாக தெரிந்தவுடன் அண்ணன் பல்லவரான் தலைமையில் மீண்டும் படையெடுத்து சென்று, இரண்டாவது முறையாகவும் சிங்களப்படைகளை தோற்கடித்தனர். இந்தப் போர் கி.பி. 1169 - 1177 ஆண்டுகளுக்கு இடையே நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தப் போர் மிக முக்கியமான ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு ஆகும். தென் தமிழ்நாட்டில் சிங்கள ஆதிக்கம் நிகழாமல் தடுத்தது இந்தப் போர் ஆகும். இதனை சோழநிலா எனும் நாவலின் முன்னுரையில் மு. மேத்தா, "சம்புவராயர் அன்று சிங்களரை துரத்தியடித்து தமிழகத்தை காக்கமல் விட்டிருந்தால், இன்று தமிழகம் சிங்களாபௌத்த நாடாக மாறியிருக்கும்" என்று குறிப்பிடுகிறார்.


"சம்புவராயர் யாகம்" சோழப்படையின் படைத்தளபதியாக பல்லவராயன் படையெடுத்து சென்ற அதே காலத்தில், பல்லவராயனுடைய தந்தை 'எதிரிலி சோழ சம்புவராயன்' சோழப்பேரரசின் கீழ் சிற்றரரசராக தொண்டை மண்டலத்தில் படைவீட்டிலிருந்து ஆட்சி நடத்தினார். சிங்களர்களுடனான போரின் தொடக்கத்தில் சிங்களப்படையினரே வெற்றி பெற்றதால், தன்னுடைய மகன் பல்லவராயன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, உமாபதி சிவர் எனும் ஞானசிவ தேவர் எனும் சிவாச்சாரியரைக் கொண்டு 28 நாள் அகோரபூஜை நடத்தினார். சிங்களப்படை தோற்ற செய்தி வந்ததும் ஆர்ப்பாக்கம் எனும் ஊரை ஞானசிவ தேவருக்கு தானமாக அளித்தார். "கல்வெட்டு சான்றுகள்" மேற்கண்டவாறு, இரண்டாம் இராஜாதிராஜன் காலத்தில் பல்லவராயர்கள் சிங்களப்படை மீது போர்த்தொடுத்ததும், சம்புவராயன் எனும் சிற்றரசனின் மகன்தான் பல்லவராயன் எனும் படைத்தளபதி என்பதும் உறுதியாகிறது. இதுகுறித்த வரலாற்று செய்திகள் மயிலாடுதுறை பல்லவராயன் பேட்டை கல்வெட்டு, திருவள்ளூர் திருவாலங்காடு கல்வெட்டு, திருவண்ணாமலை ஆர்ப்பாக்கம் கல்வெட்டு ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன.


"சிங்கள ஊடுருவலைத் தடுக்கும் அரணாக வன்னியர்கள்" பாண்டிய மன்னன் சோழ மன்னனிடம் ‘இலங்கை அரசன் மீண்டும் தம் மீது போர் தொடுக்க வாய்ப்பிருக்கிறது அதனால் உங்கள் படைகளை இங்கே காவலுக்கு வேண்டும்’ என்றான். சோழ மன்னனும் தன் படையை காவலுக்கு வைத்தான் என்று செவிவழி கதைகள் கூறுகின்றன. அவ்வாறு சிங்களப் படைகள் பாண்டிய நாட்டுக்குள் நுழையாமல் அரணாக நிறுத்தப்பட்ட வன்னியர்கள் இப்போதும் புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்ட கடலோரங்களில் வாழ்கின்றனர். பொன்னகரம், வடக்குப் புதுக்குடி, தெற்கு புதுக்குடி, அய்யம்பட்டினம், பாசிப்பட்டினம், தாமோதரன்பட்டினம், சோழன் தொண்டி, நம்புதாளை, தேவிப்பட்டினம், முடிவீரன் பட்டினம் என பாண்டியநாட்டுக் கடலோர எல்லைப் பகுதியில் சுமார் 30,000 வன்னியர்கள் இப்போதும் வாழ்கிறார்கள். சிங்களர்களின் கொட்டத்தை அடக்க சோழ மன்னன் அனுப்பியப் அந்த படையினர் தான் அங்கு பூர்விக மக்களாக உள்ளனர். அவர்கள் படை நடத்தியதால் படையாட்சி என்று அழைக்கப்படுகிறார்கள். புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்கரை பகுதியில் வாழ்ந்த வன்னியர்கள், காலப்போக்கில் மீன்பிடிப்பதை முதன்மைத் தொழிலாகக் கொண்டனர். தமிழ்நாட்டை சிங்களர்களிடமிருந்து காப்பாற்ற சோழ மன்னனால் தொண்டியில் நிறுத்தப்பட்ட படை வீரர்கள் மரபில் வந்த சீனிக்குப்பன் படையாட்சி கச்சத்தீவில் கோவில் கட்டி அதனை தமிழ்நாட்டின் சொத்தாக அடையாளம் காட்டினார்.


"வரலாற்று ஆதாரம்" 1. இலங்கையின் வரலாற்று நூலான 'மகாவம்சம்', பராக்கிரம பாகுவின் தளபதியான 'லங்காபுர தண்டநாதா' என்பவன் தமிழ்நாட்டின் மீது படையெடுத்து வந்தததைக் குறிப்பிடுகிறது. ஆனால், அவன் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு திரும்பிச் சென்றானா என்பதைக் குறிப்பிடவில்லை. 2. சிங்களத் தளபதி லங்காபுர தண்டநாதா என்ன ஆனான் என்பதை 'திருவாலங்காடு‘ மற்றும் ‘பல்லவராயன் பேட்டை‘ கல்வெட்டுக்கள் கூறுகின்றன. சிங்களப்படையைத் தோற்கடித்து 'லங்காபுர தண்டநாதா' மற்றும் 'ஜகத் விஜயன்' ஆகிய படைத்தளபதிகளின் தலையைக் கொய்து, அதனை கம்பில் குத்தி மதுரைக் கோட்டையின் வாயிலில் சோழப்படையினர் தொங்கவிட்டனர் - என பல்லவராயன் பேட்டைக் கல்வெட்டுக் கூறுகிறது. 3. சிங்களர்களுக்கு எதிராக இராசாதிராசன் வெற்றிகொண்டதைக் குறிப்பிடும் இக்கல்வெட்டு மயிலாடுதுறைக்கு அருகே உள்ள பல்லவராயன் பேட்டையில் இருக்கிறது. இந்த ஊரின் பெயரே - சோழப்படைத் தளபதி பல்லவராயன் பெயரில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஊரில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலைக் கட்டியதும் இதே பல்லவராயன்தான். இப்போதும் இந்த ஊரைச் சுற்றியுள்ள பகுதிகளில் வன்னியர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். 4. சிங்களப்படையைத் தோற்கடித்த பல்லவராயனின் தந்தையின் பெயர் எதிரிலிச் சோழ சம்புவராயர் என்று HISTORICAL SKETCHES OF ANCIENT DEKHAN எனும் நூலில் வரலாற்று அறிஞர் சுப்பிரமணிய அய்யர் குறிப்பிட்டுள்ளார். இதே தகவலை வரலாற்று அறிஞர் கிருஷ்ணசாமி அய்யங்காரும் குறிப்பிட்டுள்ளார். 5. இரண்டாம் இராசாதிராசன் தனது படையினரை பல்லவராயன் தலைமையில் கடற்கரை நகரமான தொண்டிக்கும், பாசிப்பட்டனத்துக்கும் அனுப்பிய செய்தியை SOUTH INDIA AND HER MUHAMMADAN INVADERS எனும் நூலில் வரலாற்று அறிஞர் கிருஷ்ணசாமி அய்யங்கார் குறிப்பிட்டுள்ளார். இப்போதும் பாசிப்பட்டினத்தில் பெரும்பான்மையினராகவும் தொண்டியில் கணிசமாகவும் வன்னியர்கள் வாழ்கின்றனர். 6. சிங்களப்படைகளுக்கு எதிராக படையெடுத்துச் சென்றவர்களில் ஒருவராக 'அம்மையப்பன் பாண்டிநாடு கொண்டானான கண்டர் சூரியன் சம்புவராயன்' என்பவரின் பெயரை 'பிற்கால சோழர் வரலாறு’ எனும் நூலில் வரலாற்று அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் குறிப்பிட்டுள்ளார். 7. இரண்டாம் ராசாதிராசன் காலத்திலும், அவருக்குப் பின்னர் மூன்றாம் குலோத்துங்கன் காலத்திலும் சோழ ஆட்சிப்பகுதிகளில் குறுநில மன்னர்கள் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருந்தனர், உறவினர்களாகவும் இருந்தனர். அவ்வாறு பல்லவராயரின் தந்தை எதிரிலி சோழ சம்புவராயர், பொன்பரப்பி வானகோவராயன், கிளியூர் மலையமான் (சேதிராயர்), குலோத்துங்கச் சோழனின் மருமகன் காடவராயன் என்கிற பெயர்களை வரலாற்று அறிஞர் கிருஷ்ணசாமி அய்யங்கார் குறிப்பிட்டுள்ளார். சம்புவராயர், சேதிராயர், காடவராயர் என்கிற பெயர்கள் வன்னியர்களைக் குறிப்பிடும் பட்டப்பெயர்கள் ஆகும்.


"கச்சத்தீவில் வன்னியர் கட்டிய கோவில்" கச்சத்தீவு இந்திய தீபகற்பத்திற்கும் இலங்கைக்கும் இடையில் உள்ளது. 1974-ம் ஆண்டு வரை இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த இத்தீவு தற்போது இலங்கைக்கு சொந்தமாக உள்ளது. இந்த தீவில் புகழ்பெற்ற அந்தோணியார் கோவில் ஒன்று உள்ளது. மனிதர்கள் வசிக்காத இந்த 285 ஏக்கர் தீவில் உள்ள ஒரே கட்டுமானம் இக்கோவில் மட்டும்தான். இதனை 1907 ஆம் ஆண்டில் அமைத்தவர் சீனிக்குப்பன் படையாட்சி என்பவர் ஆவார். இரண்டாம் இராசாதிராசனால், சிங்களப் படைகளை எதிர்கொள்வதற்காக இராமநாதபுரம் மாவட்டத்தில் நிறுத்தப்பட்ட சோழப்படையினரின் பரம்பரையில் வந்தவர்தான் சீனிக்குப்பன் படையாட்சி. 850 ஆண்டுகளுக்கு முன்பு போருக்காக வந்தவர்கள் பிற்காலத்தில் மீன்பிடித் தொழிலில் ஈட்பட்டு வருகின்றனர். “இந்தத் தேவாலயம் இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு மீனவரான சீனிக்குப்பன் படையாட்சியால் கட்டப்பட்டது” என்று ‘கச்சத்தீவு: அன்றும் இன்றும்’ என்ற நூலில் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் ஏ. சூசை ஆனந்தன் கூறியுள்ளார். “இராமநாதபுர மாவட்டம், திருவாடானை வட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாழையைச் சார்ந்த மீனவர், சீனிக்குப்பன் என்பவர் கச்சத்தீவில் அந்தோணியார் கோவிலை எழுப்பினார்” என்று ‘வரலாற்றில் கச்சத்தீவு’ என்ற நூலில் உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன் கூறியுள்ளார்.


சிங்களப் போர்

சோழர்களிடம் தோல்வியை அடைந்ததை பராக்கிரம பாகு ஏற்றுக் கொள்ள இயலவில்லை. இதனால் தனது தோல்வியை அகற்ற பராக்கிரம பாகு புலைச்சேரி, மாதோட்டம், வல்லிகாமம், மட்டிவாழ் போன்ற ஊர்களில் படைகளைத் திரட்டி படகுகளையும் ஆயத்தம் செய்தான். இதனை ஒற்றறிந்த சோழன், அம்மையப்பா அண்ணன் பல்லவராயன் தலைமையில் படை ஒன்றை திரட்டினான். சிங்களனின் தயாதியான சீவல்லபன் என்பவன் சோழனின் உதவியை கேட்டு சோழ தேசம் வந்தான். அவனுக்கு உதவும் வகையில் தனது படையை பராக்கிரம பாகுவினை எதிர்க்க அனுப்பினான். மாதோட்டம், புலைச்சேரி ஆகிய இரண்டு இடங்களிலும் சோழனுக்கும் சிங்களனுக்கும் கடுமையான போர் நிகழ்ந்ததாக மகாவம்சம் குறிப்பிடுகின்றது. அது மட்டுமில்லாமல், இப்போரில் ஆயிரம் யானைகளை வென்று, பல்லாயிரம் மதிப்புள்ளவைகளை வென்று சோழனுக்கு அண்ணன் பல்லவராயன் காணிக்கை அளித்ததாக திருவாலங்காடுச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.

சிங்களனின் பாண்டிய உறவு

சோழர்களிடம் வலிமையை இழந்த சிங்களன், தான் பராக்கிரம பாண்டியனிற்கு உதவியதால் தான் இந்த தோல்விகளை அடைய நேர்ந்தது என்பதனை உணர்ந்து, தனது ஆதரவை குலசேகரப் பாண்டியனிற்கு நீட்டினான். தனது புதல்வியை குலசேகரப் பாண்டியனிற்கு திருமணம் முடிப்பித்தான். இதனால் ராசாதிராசன் தனக்கு உதவியதை மறந்த குலசேகரன் சிங்களனின் சொற்படி நடக்க ஆரம்பித்தான். அரண்மனை வாயிலில் தொங்கிக் கொண்டிருந்த சிங்களர்களின் தலைகளை அகற்றி அவர்களுக்கு கல் தூண் நாட்டினான்.

இதனை அறிந்த சோழன் குலசேகரன்பால் வெகுண்டெழுந்தான். தனது உதவிகளை மறந்து சிங்களனுடன் தொடர்பு கொண்ட குலழேகரனை ஆட்சியை விட்டு நீக்குவதற்கு முடிவு செய்தான். இதனையடுத்து அண்ணன் பல்லவராயன் மற்றும் பெருமானம்பிப் பல்லவராயன் தலைமையில் படைகளை அனுப்பினான். அண்ணன் பல்லவராயனின் இளவலான கருணாகரப் பல்லவனும் இப்போரினில் ஈடுபட்டதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு பெரும் படைகளோடு சிங்களனையும் பாண்டியனையும் எதிர்த்து சோழர்கள் வெற்றி நடைப் போட்டு பாண்டிய தேசத்தினை முற்றுகை இட்டனர். மிகக் கடுமையாக நிகழ்ந்த போரினால் சிங்களர்கள் தோற்று புறமுதுகிட்டு ஈழ மண்டலத்தின் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டிற்கே ஓடினர். போரினில் தோற்ற குணசேகரப் பாண்டியனும் ஈழ தேசத்தில் புகலிடமடைந்தான். இதனையடுத்து வீரப்பாண்டியனிற்கே பாண்டிய தேசத்தினைக் கொடுத்து தனக்கு படிந்த மன்னனாக ஆட்சிப் புரிந்து கப்பம் செலுத்தப் பணித்தான் சோழன். இவ்வாறு எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தான் இரண்டாம் ராசாதிராச சோழன்.

இறுதி நாட்கள்

சுருங்கிக் கொண்டிருந்த சோழர்களின் வரைப் படத்தினையும் வீரத்தினையும் மலர்ச்சி அடைய செய்த பெரும் வீரனாக திகழ்ந்தான் இரண்டாம் ராசாதிராசன். இவனது காலத்தில் சோழ மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தவர்களாக இருந்தனர். பாண்டியர்களையும் சிங்களர்களையும் வென்று சோழர்களின் புகழினை இறங்காமல் காப்பாற்றினான் ராசாதிராசன். ஆனால் கால ஓட்டத்தில் இரண்டாம் ராசராசனின் மகன் வளர்ந்து பருவத்தினை அடைந்தான். அவனது புஜங்களும் போர் தினவெடுத்தன. இராசாதிராசனின் போர் கலந்த சுற்று சுழலில் வளர்ந்த அவன், சோழர்களின் புகழினை உச்சிக்கு கொண்டு செல்ல எண்ணினான். தனக்கு உரிய அரச பீடம் கிடைக்காதா என்று ஏங்கினான். இதனை அறிந்த ராசாதிராசன் ராசராசனின் புதல்வனாகிய மூன்றாம் குலோத்துங்கனுக்கு அரச பதவி அளித்துவிட்டு தெலுங்கு தேசம் சென்றான்.