பீம்சேன் சோசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 83: வரிசை 83:
* 2010 - பெங்களூரின் ராம சேவா மண்டலியிடமிருந்து, "எஸ் வி நாரயணஸ்வாமி ராவ் தேசிய விருது"
* 2010 - பெங்களூரின் ராம சேவா மண்டலியிடமிருந்து, "எஸ் வி நாரயணஸ்வாமி ராவ் தேசிய விருது"


== மேற்கோள்கள் ==
== குறிப்புதவிகள் ==
{{Reflist|2}}
{{Reflist|2}}


வரிசை 91: வரிசை 91:
* {{cite book|last=Majumdar|first=Abhik|title=Bhimsen Joshi: A Passion for Music|publisher=Rupa & Co|year=2004|id={{ISBN|81-291-0354-0}}}}
* {{cite book|last=Majumdar|first=Abhik|title=Bhimsen Joshi: A Passion for Music|publisher=Rupa & Co|year=2004|id={{ISBN|81-291-0354-0}}}}


== புற இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
* [http://www.fourthplane.com/2009/01/yaadava-nee-baa-bhimsen-joshi-lyrics.html பீம்சென் ஜோஷியின் பாடல் மாதிரி]
* [http://www.fourthplane.com/2009/01/yaadava-nee-baa-bhimsen-joshi-lyrics.html பீம்சென் ஜோஷியின் பாடல் மாதிரி]
* [http://www.dharwad.com/bhimsen.html பீம்சென் ஜோஷி]
* [http://www.dharwad.com/bhimsen.html பீம்சென் ஜோஷி]

08:03, 18 ஏப்பிரல் 2021 இல் நிலவும் திருத்தம்

பண்டிட் பீம்சென் ஜோஷி
Bhimsen Joshi
பீம்சென் ஜோஷி
பின்னணி பாடகர்
இயற்பெயர் பீம்சென் குருராஜ் ஜோஷி
மற்றொரு பெயர் பண்டிட் பீம்சென் ஜோஷி
பிறப்பு பெப்ரவரி 4, 1922 (1922-02-04) (அகவை 102)
பிறப்பிடம் கடாக், கர்நாடகா, இந்தியா
இறப்பு சனவரி 24, 2011(2011-01-24) (அகவை 88)
இறந்த இடம் புனே, மகாராட்டிரம், இந்தியா
இசையில் குரலிசைப் பாடகர்
வசிப்பிடம் பூனா, மஹாராஷ்டிரம், இந்தியா
வகை இந்திய சாஸ்திரீய சங்கீதம்
பணிக்கால ஆண்டுகள் 1941–2000

பீம்சென் ஜோஷி (கன்னடம்: ಭೀಮಸೇನ ಜೋಷಿ, மராத்தி: भीमसेन जोशी, பெப்ரவரி 4, 1922 - சனவரி 24, 2011) இந்துஸ்தானி இசை மரபில் ஓர் இந்திய குரலிசைப் பாடகராவார். கிரான காரனாவின் (பள்ளி) உறுப்பினரான இவர், அவரது கயால் வகைப் பாடல்களுக்கு மிகவும் பிரசித்தி பெற்றவர், அதோடு அவரது பக்திப் பாடல் நிகழ்ச்சிகளுக்கும் (பஜனைகள் மற்றும் அபாங்குகள் ) பிரபலமானவராவார். அவர் இந்தியாவின் உயரிய குடியியல் விருதான பாரத் ரத்னா விருதைப் பெற்றவராவார், அவருக்கு 2008 ஆம் ஆண்டில் அது வழங்கப்பட்டது.[1]

இளமைக் காலம்

கர்நாடக மாநிலத்தின் வட பகுதியிலுள்ள கடகா நகரில் ஒரு கன்னடக் குடும்பத்தில் இவர் பிறந்தார்[2][3]. அவரது தந்தை குராச்சார்யா ஜோஷி ஒரு பள்ளி ஆசிரியராவார். 16 உடன் பிறந்தவர்களில் பீம்சென் மூத்தவர். அவரது உடன்பிறந்தவர்களில் சிலர் இன்றும் அவரது கடகாவிலுள்ள முன்னோர்களின் இல்லத்தில் வசித்துவருகின்றனர்[4]. பீம்சென் சிறுவயதில் தாயை இழந்தவர், பின்னர் அவரது சித்தியால் வளர்க்கப்பட்டார்.

தொழில் வாழ்க்கை

20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதி வரை, காயல் பிரதானமாக குரு சிஷ்யா (குரு-சீடர்) மரபிலேயே கற்றுக்கொடுக்கப்பட்டு வந்தது. பீம்சென்னின் குரு ஸ்வாமி கந்தர்வா, அப்துல் கரீம் கானின் தலைமை சீடராவார், அவர் தனது உறவு சகோதரர் அப்துல் வஹீது கானுடன் இணைந்து கிரானா காரனா என்னும் இந்துஸ்தானி இசைப் பள்ளியைத் தொடங்கினார்.

ஜோஷி இளவயதில் அப்துல் கரீம் கானின் ஒரு ரெக்கார்டிங்கைக் கேட்டு அதில் கவரப்பட்டே பின்னாளில் இசைக் கலைஞராக வேண்டும் என்ற எண்ணத்தைப் பெற்றார். 1933 இல், 11-வயதான பீம்சென் ஒரு குருவைத் தேடிக் கண்டறிந்து இசை கற்பதற்காக வீட்டை விட்டு வெளியேறினார்.[3] ரயிலில் அவரது சக பயணியர்கள் கொடுத்த சிறிய பணத்தின் உதவியைக் கொண்டு பீம்சென் முதலில் தர்வாருக்கும் பின்னர் பூனாவிற்கும் சென்றார். பின்னர் அவர் குவாலியருக்குச் சென்றார், அங்கு மாதவா இசைப் பள்ளியில் சேர்ந்தார், அது குவாலியர் மன்னரால் நடத்தப்பட்டு வந்த பள்ளியாகும், அதற்கு பிரபலமான சரோத் கலைஞர் ஹாசிஃப் அலி கான் உதவியாக இருந்தார். அவர் டெல்லி, கொல்கத்தா, குவாலியர், லக்னோ மற்றும் ராம்பூர் உட்பட வட இந்தியாவில் 3 ஆண்டுகள் பயணம் செய்து ஒரு குருவைக் கண்டறிய முயற்சித்தார்.[5] பின்னர், அவரது தந்தை அவரை ஜலந்தரில் கண்டுபிடித்து பீம்சென்னை மீண்டும் வீட்டிற்கு அழைத்துவந்தார்.[3]

1936 இல், சவாய் கந்தர்வா எனப் பிரபலமாக அறியப்படும் தார்வாதைச் சேர்ந்த ராம்பா குண்ட்கோல்கர் அவரது குருவாக இருக்கச் சம்மதித்தார். பீம்சென் ஜோஷி அவரது இல்லத்தில் குரு-சிஷ்யா (ஆசிரியர்-மாணவர்) மரபின்படி தங்கியிருந்தார், அவரது குருவிடமிருந்து இசையறிவைப் பெற்றார், அந்த வேளையில் அவரது இல்லத்தில் பகுதி நேரப் பணிகளையும் செய்துவந்தார். கீரன காரணாவிலிருந்து வந்த மற்றொரு குரலிசைப் பாடகர் கங்குபாய் ஹங்கல் அந்தக் காலகட்டத்தில் பீம்சென்னின் சக மாணவராக இருந்தவராவார். ஜோஷி தனது பயிற்சியை பின்னர் ஸ்வாமி கந்தர்வாவுடன் 1940 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தார்.

ஜோஷி 1943 ஆம் ஆண்டு மும்பைக்குச் சென்று வானொலி கலைஞராகப் பணியாற்றினார். அங்கு தனது 19 வயதில் நிகழ்ச்சிகளை நடத்தினார். கன்னடம் மற்றும் ஹிந்தியில் சில பக்திப் பாடல்களைக் கொண்டிருந்த அவரது அறிமுக இசைத் தட்டு HMV ஆல் வெளியிடப்பட்டது, அப்போது அவருக்கு வயது 22.

பீம்சென்னின் இசையை விமர்சகர்களும் மக்களும் மிகவும் பாராட்டினர். அவரது நிகழ்ச்சிகள் தன்னிச்சையான இயல்பும், துல்லியமான இசைக் குறிப்புகளும் அவரது அசாதாரணமான குரலிசைப் பயிற்சியைப் பயன்படுத்தி அவர் பாடும் தலை சுற்றும் விதத்திலமைந்த டான்களும் தாளத்தில் அவருக்கு இருந்த மேதைமையும் அவரது புகழுக்கு முக்கிய அம்சங்களாக இருந்தன. அவர் அசாத்தியமான இசைத் தொடர்களையும் டான்களையும் அதிக பிரயத்தனமின்றி தன்னிச்சையாகவே பிரயோகிக்கும் திறமை கொண்டிருக்கக் கூடிய அவர் எப்போதும் இசையில் நீண்ட பயணத்தை மேற்கொள்பவராகவே விளங்கினார். கடினமான கோட்பாடுகளால் கட்டுப்படாதவராக விளங்கிய அவர் அதீத உயரங்களுக்கு பயணித்தும் சில நேரங்களில் விண்மீன்களை அடைந்தும் இசையில் மாயஜாலாங்களைச் செய்தார்.[6] அவர் அரிதாகவே சர்கம் மற்றும் டிஹாய் களைப் பயன்படுத்தினார், அவர் பெரும்பாலும் கிரான காரனாவின் பாரம்பரிய பாடல்களையே விரும்பினார். சில ஆண்டுகளில் அவர் அடிக்கடி பாடும் சில ராகங்களில் மிகுந்த நிபுணத்துவம் பெற்றார். அவர் அதிகமாக விரும்பும் ராகங்கள் என அறியப்படுபவற்றில், சுத்த கல்யாணி, மியான் கி தோடி, பூரிய தனஸ்ரீ, முல்தானி, பீம்பளாசி, தர்பாரி மற்றும் ராம்கலி ஆகியன அடங்கும். அம்துல் கரீம் கான் மட்டுமின்றி, கேசர்பாய் கேர்க்கர், பேகம் அக்த்தர் மற்றும் உஸ்தாத் அமீர் கான் போன்ற பிற இசைக்கலைஞர்களாலும் அவர் மிகவும் கவரப்பட்டார். பீம்சென் விரும்பிய வெவ்வேறு பாணிகளைப் பயன்படுத்தி வெவ்வேறு விதமாக பிரயோகித்த பின்னர் அவரது தனிப்பட்ட பாணி அவருக்குக் கிடைத்தது.[7]

ஜோஷி, பசந்த் பாஹர் (மன்னா டேவுடன்), 'பீர்பால் மை ப்ரதர்' (பண்டிட் ஜஸ்ராஜ்) மற்றும் நோடி ஸ்வாமி நாவு இரோது ஹீகே போன்ற திரைப்படங்களிலும் பாடியுள்ளார். 'தான்சேன்'(1958 ஆம் ஆண்டு வெளியானது)[சான்று தேவை] மற்றும் 'அன்கஹீ'( 1985 ஆம் ஆண்டு வெளியானது) ஆகிய படங்களிலும் பாடியுள்ளார்.

பக்தி இசையில், அவரது பஜனைகள், குறிப்பாக தசவானி தொகுப்பும் மராத்தி அபாங்குகளும் மிகவும் பிரபலமானவை. தேசிய ஒருமைப்பாட்டுக்கான பிரபலமான மிலே சுர் மேரா துமாரா இசை காணொளியில் தொடக்க கலைஞராக வருவது உலகளவில் அறியப்பட்ட அம்சமாகும்.

ஜோஷி வருடாந்தர சாஸ்திரிய இசை விழாவை நடத்தினார், அது அவரது குருவின் நினைவாக சவாய் கந்தர்வா இசை விழா என அழைக்கப்படுகிறது. இந்த விழா பூனாவில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் நடைபெறுகிறது.[சான்று தேவை]

சொந்த வாழ்க்கை

பீம்சென்னின் குடும்பம் அவரது இளம் வயதில் அவருக்கு சுனந்தா காட்டி என்னும் பெண்ணை மணம் முடிக்க ஏற்பாடு செய்தனர்; அவர் பீம்சென்னின் உறவினராவார். அவருக்கு ராகவேந்திரா மற்றும் ஆனந்த் என இரண்டு மகன்கள் இருந்தனர். அவர்கள் இருவருமே மெல்லிசை சாஸ்திரீய குரலிசைக் கலைஞர்களாவர். அவரது மனைவி 1992 ஆம் ஆண்டு காலமானார். பின்னர் பீம்சென் வத்சலா முதோல்கர் என்பவரை மணந்தார். அவர் 2004 ஆம் ஆண்டு காலமானார். பீம்சென்னுக்கும் வத்சலாவுக்கும் இரண்டு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர். மூத்த மகன் ஜயந்த் ஓவியரும், இளைய மகன் ஸ்ரீனிவாஸ் குரலிசைக் கலைஞரும் இசை இயற்றுபவரும் ஆவார், மேலும் அவர் சில வணிக ரீதியான படைப்புகளையும் பதிவு செய்திருக்கிறார்.

விருதுகளும் அங்கீகாரங்களும்

  • 1972 - பத்ம ஸ்ரீ
  • 1976 - சங்கீத் நாடக் அகாடமி விருது
  • 1985 - பத்ம பூஷன்
  • 1985 - சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது
  • 1986 - "முதல் பிளாட்டினம் டிஸ்க்" [8]
  • 1999 - பத்ம விபூஷன்
  • 2000 - "ஆதித்ய விக்ரம் பிர்லா கலாஷிக்கார் புரஸ்கார்" [9]
  • 2001 - கன்னட பல்கலைக்கழகத்திலிருந்து "நடோஜா விருது"[10]
  • 2002 - மஹாராஷ்ட்ர பூஷன் [11]
  • 2003 - கேரள அரசின் "ஸ்வாதி சங்கீத புரஸ்காரம்" [12]
  • 2005 - கர்நாடக ரத்னா
  • 2008 - பாரத் ரத்னா
  • 2008 - "ஸ்வாமி ஹரிதாஸ் விருது" [13]
  • 2009 - டில்லி அரசாங்கத்திடமிருந்து "வாழ்நாள் சாதனை விருது"[14]
  • 2010 - பெங்களூரின் ராம சேவா மண்டலியிடமிருந்து, "எஸ் வி நாரயணஸ்வாமி ராவ் தேசிய விருது"

மேற்கோள்கள்

  1. "Bharat Ratna for Vocalist Pandit Bhimsen Joshi". Rediff. பார்க்கப்பட்ட நாள் 2009-02-21.
  2. "Kannadiga family". The Hindu. 2002-10-31. பார்க்கப்பட்ட நாள் 2009-02-21.
  3. 3.0 3.1 3.2 "Relentless riyaz- Bhimsen Joshis recipe for success". Deccan Herald. 2008-11-05. பார்க்கப்பட்ட நாள் 2008-11-05.
  4. "Naughty lad turned muse is 'Bharat Ratna'". Deccan Herald. 2008-11-06. {{cite web}}: Unknown parameter |dateaccess= ignored (help)
  5. "A class apart". Mumbai Mirror. 2008-11-06. {{cite web}}: Unknown parameter |dateaccess= ignored (help)
  6. "Seeking the stars". The Hindu. 2008-11-07. {{cite web}}: Unknown parameter |dateaccess= ignored (help)
  7. "A man of few words". Sakaal Times. 2008-11-07. {{cite web}}: Unknown parameter |dateaccess= ignored (help)
  8. http://www.dnaindia.com/report.asp?newsid=1229441
  9. http://www.screenindia.com/old/20001117/tnews.htm
  10. 'நடோஜா' ஃபார் பீம்சென் ஜோஷி
  11. டைம்ஸ் ஆஃப் இண்டியா கட்டுரை
  12. http://www.hindu.com/2003/12/02/stories/2003120208750400.htm
  13. பீம்சென் ஜோஷி டு பி ப்ரெசண்ட்டெட் ஸ்வாமி ஹரிதாஸ் அவார்ட்
  14. பீம்சென் ஹேப்பி அபௌட் டெல்லி கவர்மெண்ட் அவார்ட்

மேலும் படிக்க

  • Nadkarni, Mohan (1983). Bhimsen Joshi: the man and his music. Prism Communications. 
  • Nadkarni, Mohan (1994). Bhimsen Joshi: a biography. Indus, New Delhi. ISBN 81-7223-126-1. 
  • Majumdar, Abhik (2004). Bhimsen Joshi: A Passion for Music. Rupa & Co. ISBN 81-291-0354-0. 

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீம்சேன்_சோசி&oldid=3134177" இலிருந்து மீள்விக்கப்பட்டது