அற்புதத் திருவந்தாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Please stop blanking articles!
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''காரைக்கால் அம்மையார்''' எழுதிய

==அற்புதத் திருவந்தாதி==
இப்பக்கத்தில் முதல் 50 பாடல்கள் உள்ளன. மீதிப் பாடல்களைப் பார்க்க [[இரண்டாம் பக்கத்துக்குச் செல்லவும்]]

பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல்

சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்

மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே

எஞ்ஞான்று தீர்ப்ப திடர்....................................1


இடர் களையாரேனும் எமக்கு இரங்காரேனும்

படரும் நெறி பணியாரேனும் -சுடர் உருவில்

என்பறாக் கோலத்து எரியாடும் எம்மானார்க்(கு)

அன்பறா தென்நெஞ் சவர்க்கு.................................2


அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்

அவர்க்கே நாம் அன்பாவதல்லால் -பவர்ச்சடைமேல்

பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்

காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்...............................3


ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டால்

கேளாத தென்கொலோ கேளாமை - நீளாகம்

செம்மையான் ஆகித் திருமிடறு மற்றொன்றாம்

எம்மைஆட் கொண்ட இறை..................................4


இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான் தோற்றி

இறைவனே ஈண்டிறக்கம் செய்வான் - இறைவனே

எந்தாய் எனஇரங்கும் எங்கள் மேல் வெந்துயரம்

வந்தால் அது மாற்றுவான்......................................5


வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன்

தானத்தான் என்பாரும் தாமென்க - ஞானத்தான்

முன்னஞ்சத் தால்இருண்ட மொய்யொளிசேர் கண்டத்தான்

என்நெஞ்சத் தான்என்பன் யான்..................................6


யானே தவமுடையேன் என்நெஞ்சே நன்னெஞ்சம்

யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானேயக்

கைம்மா உரிபோர்த்த கண்ணுதலாண் வெண்ணீற்ற

அம்மானுக் காளாயினேன்.......................................7


ஆயினேன் ஆள்வானுக் கன்றே பெறற்கரியன்

ஆயினேன் அஃதன்றே யாமாறு -தூய

புனற்கங்கை ஏற்றானோர் பொன்வரையே போல்வான்

அனற்கங்கை ஏற்றான் அருள்....................................8


அருளே உலகெலாம் ஆள்விப்ப தீசன்

அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே

மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்

எப்பொருளு மாவ தெனக்கு......................................9


எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும்

மனக்கினிய வைப்பாக வைத்தேன் - எனக்கவனைக்

கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்

உண்டே எனக்கரிய தொன்று...................................10


ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன்

ஒன்றேஎன் உள்ளத்தி னுள்ளடைத்தேன் - ஒன்றே காண்

கங்கையான் திங்கள் கதிர்முடியான் பொங்கொளிசேர்

அங்கையாற் காளாம் அது......................................11




அதுவே பிரானாமா றாட்கொள்ளு மாறும்

அதுவே யினியறிந்தோ மானால் - அதுவே

பனிக்கணங்கு கண்ணியார் ஒண்ணுதலின் மேலோர்

தனிக்கணங்கு வைத்தார் தகவு...................................12


தகவுடையார் தாமுளரேல் தாரகலம் சாரப்

புகவிடுதல் பொல்லாது கண்டீர் - மிகவடர

ஊர்ந்திடுமா நாகம் ஒருநாள் மலைமகளைச்

சார்ந்திடுமே லேபாவம் தான்.....................................13


தானே தனிநெஞ்சம் தன்னை உயக்கொள்வான்

தானே பெருஞ்சேமம் செய்யுமால் - தானேயோர்

பூணாகத்தாற் பொலிந்து பொங்கழல்சேர் நஞ்சுமிழும்

நீணாகத் தானை நினைந்து......................................14


நினைந்திருந்து வானவர்கள் நீள்மலரால் பாதம்

புனைந்தும் அடிபொருந்தமாட்டார் - நினைந்திருந்து

மின்செய்வான் செஞ்சடையாய் வேதியனே என்கின்றேற்

கென்செய்வான் கொல்லோ இனி..................................15


இனியோம் நாம்உய்ந்தோம் இறைவன்தாள் சேர்ந்தோம்

இனியோர் இடரில்லோம் நெஞ்சே - இனியோர்

வினைக்கடலை ஆக்குவிக்கும் மீளாப் பிறவிக்

கனைக்கடலை நீந்தினோம் காண்................................16


காண்பார்க்கும் காணலாம் தன்மையனே கைதொழுது

காண்பார்க்கும் காணலாம் காதலால் - காண்பார்க்குச்

சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக்கு

ஆதியாய் நின்ற அரன்.........................................17


அரனென்கோ நான்முக னென்கோ அரிய

பரனென்கோ பண்புணர மாட்டேன் - முரணழியத்

தானவனைப் பாதத் தனிவிரலால் செற்றானை

யானவனை எம்மானை இன்று....................................18


இன்று நமக்கெளிதே மாலுக்கும் நான்முகற்கும்

அன்றும் அளப்பரியன் ஆனானை - என்றுமோர்

மூவா மதியானை மூவே ழுலகங்கள்

ஆவானைக் காணும் அறிவு.......................................19


அறிவானும் தானே அறிவிப்பான் தானே

அறிவா யறிகின்றான் தானே - அறிகின்ற

மெய்ப்பொருளும் தானே விரிசுடர்பார் ஆகாசம்

அப்பொருளும் தானே அவன்......................................20


அவனே இருசுடர்தீ ஆகாச மாவான்

அவனே புவிபுனல்காற் றாவான் - அவனே

இயமான னாய்அட்ட மூர்த்தியுமாய் ஞான

மயனாகி நின்றானும் வந்து.......................................21


வந்திதனைக் கொள்வதே ஒக்குமிவ் வாளரவின்

சிந்தையது தெரிந்து காண்மினோ - வந்தோர்

இராநீர் இருண்டனைய கண்டத்தீர் எங்கள்

பிரான்நீர் உம்சென்னிப் பிறை.....................................22


பிறையும் புனலும் அனல் அரவும் சூடும்

இறைவர் எமக்கிரங்கா ரேனும் - கறைமிடற்ற

எந்தையார்க் காட்பட்டேம் என்றென் றிருக்குமே

எந்தையா வுள்ள மிது............................................23


இதுவன்றே ஈசன் திருவுருவ மாமாறு

இதுவன்றே என்றனக்கோர் சேமம் - இதுவன்றே

மின்னுஞ் சுடருருவாய் மீண்டாய்என் சிந்தனைக்கே

இன்னும் சுழல்கின்ற திங்கு........................................24


இங்கிருந்து சொல்லுவதென் எம்பெருமான் எண்ணாதே

எஙகும் பலிதிரியும் எத்திறமும் - பொங்கிரவில்

ஈமவனத் தாடுவதும் என்னுக்கென் றாராய்வோம்

நாமவனைக் காணலுற்ற ஞான்று....................................25


ஞான்ற குழற்சடைகள் பொன்வரை போல் மின்னுவன

போன்ற கறைமிடற்றான் பொன்மார்பி்ன் - ஞான்றெங்கும்

மிக்கயலே தோன்ற விளங்கி மிளிருமே

அக்கயலே தோன்றும் அரவு......................................26


அரவமொன் றாகத்து நீநயந்து பூணேல்

பரவித் தொழுதிரந்தோம் பன்னாள் -முரணழிய

ஒன்னாதார் மூவெயிலும் ஓரம்பால் எய்தானே

பொன்னாரம் மற்றொன்று பூண்.....................................27


பூணாக வொன்று புனைந்தொன்று பொங்கதளின்

நாணாக மேல்மிளிர நன்கமைத்துக் - கோள்நாகம்

பொன்முடிமேற் சூடுவதும் எல்லாம் பொறியிலியேற்கு

என்முடிவ தாக இவர்...........................................28


இவரைப் பொருளுணர மாட்டாதா ரெல்லாம்

இவரை யிகழ்வதே கண்டீர் - இவர்தமது

பூக்கோல மேனிப் பொடிபூசி என்பணிந்த

பேய்க்கோலம் கண்டார் பிறர்.....................................29


பிறரறிய லாகாப் பெருமையரும் தாமே

பிறரறியும் பேருணர்வும் தாமே - பிறருடைய

என்பே அணிந்திரவில் தீயாடும் எம்மானார்

வன்பேயும் தாமும் மகிழ்ந்து.......................................30


மகிழ்தி மடநெஞ்சே மானிடரில் நீயும்

திகழ்தி பெருஞ்சேமம் சேர்ந்தாய் - இகழாதே

யாரன்பே யேனும் அணிந்துழல்வார்க் காட்பட்ட

பேரன்பே இன்னும் பெருக்கு......................................31


பெருகொளிய செஞ்சடைமேற் பிள்ளைப் பிறையின்

ஒருகதிரே போந்தொழுகிற் றொக்கும் - தெரியின்

முதற்கண்ணான் முப்புரங்கள் அன்றெரித்தான் மூவா

நுதற்கண்ணான் தன்மார்பின் நூல்..................................32


நூலறிவு பேசி நுழைவிலா தார் திரிக

நீல மணிமிடற்றான் நீர்மையே - மேலுலந்தது

எக்கோலத் தெவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும்

அக்கோலத் தவ்வுருவே யாம்.....................................33


ஆமா றறியாவே வல்வினைகள் அந்தரத்தே

நாமாளென் றேத்தார் நகர்மூன்றும் - வேமாறு

ஒருகணையாற் செற்றானை உள்ளத்தா லுள்ளி

அருகணையா தாரை அடும்......................................34


அடுங்கண்டாய் வெண்மதியென் றஞ்சி இருள்போந்து

இடங்கொண் டிருக்கின்ற தொக்கும் - படங்கொள்

அணிமிடற்ற பேழ்வாய் அரவசைத்தான் கோல

மணிமிடற்றின் உள்ள மறு.......................................35


மறுவுடைய கண்டத்தீர் வாரசடைமேல் நாகம்

தெறுமென்று தேய்ந்துழலும் ஆவா - உறுவான்

தாளரமீ தோடுமேல் தானதனை அஞ்சி

வளருமோ பிள்ளை மதி.........................................36


மதியா அடலவுணர் மாமதில்மூன் றட்ட

மதியார் வளர்சடையி னானை - மதியாலே

என்பாக்கை யாலிகழா தேத்ததுவரேல் இவ்வுலகில்

என்பாக்கை யாய்ப்பிறவார் ஈண்டு.................................37


ஈண்டொளி சேர்வானத் தெழுமதியை வாளரவம்

தீண்டச் சிறுகியதே போலாதே - பூண்டதோர்

தாரேறு பாம்புடையான் மார்பில் தழைத்திலங்கு

கூரேறு கானேனக் கொம்பு......................................38


கொம்பினையோர் பாகத்துக் கொண்ட குழகன்றன்

அம்பவள மேனி யதுமுன்னம் - செம்பொன்

அணிவரையே போலும் பொடியணிந்தால் வெள்ளி

மணிவரையே போலும் மறித்து...................................39


மறித்து மடநெஞ்சே வாயாலும் சொல்லிக்

குறித்துத் தொழுதொண்டர் பாதம் - குறித்தொருவர்

கொள்ளாத திங்கட் குறுங்கண்ணி கொண்டார்மாட்டு

உள்ளாதார் கூட்டம் ஒருவு......................................................40


ஒருபால் உலகளந்த மாலவனாம் மற்றை

ஒருபால் உமையவளாம் என்றால் - இருபாலும்

நின்னுருவ மாக நிறந்தெரிய மாட்டோமால்

நின்னுருவோ மின்னுருவோ நேர்ந்து...............................41


நேர்ந்தரவம் கொள்ளச் சிறுகிற்றோ நீயதனை

ஈர்ந்தளவே கொண்டிசைய வைத்தாயோ - பேர்ந்து

வளங்குழவித் தாய் வளரமாட்டாதோ என்னோ

இளங்குழவித் திங்க ளிது.......................................42


திங்க ளிதுசூடிச் சில்பலிக்கென் றூர்திரியேல்

எங்கள் பெருமானே என்றிரந்து - பொங்கொளிய

வானோர் விலக்காரேல் யாம் விலக்க வல்லமே

தானே யறிவான் தனக்கு........................................43


தனக்கே அடியனாய்த் தன்னடைந்து வாழும்

எனக்கே அருளாவா றென்கொல் - மனக்கினிய

சீராளன் கங்கை மணவாளன் செம்மேனிப்

பேராளன் வானோர் பிரான்......................................44


பிரானவனை நோக்கும் பெருநெறியே பேணிப்

பிரானவன்றன் பேரருளே வேண்டிப் - பிரானவனை

எங்குற்றான் என்பீர்கள் என்போல்வார் சிந்தையிலும்

இங்குற்றான் காண்பார்க் கெளிது................................45


எளிய திதுவன்றே ஏழைகாள் யாதும்

அளியீர் அறிவி லீர்ஆவா -ஒளிகொள்மிடற்று

எந்தையராப் பூண்டுழலும் எம்மானை உள்நினைந்த

சிந்தையராய் வாழும் திறம்.....................................46


திறத்தான் மடநெஞ்சே சென்றடைவ தல்லால்

பெறத்தானும் ஆதியோ பேதாய் - நிறத்த

இருவடிக்கண் ஏழைக் கொருபாக மீந்தான்

திருவடிக்கண் சேரும் திரு.....................................47


திருமார்பில் ஏனச் செழுமருப்பைப் பார்க்கும்

பெருமான் பிறைக் கொழுந்தை நோக்கும் - ஒருநாள்

இதுமதியென் றொன்றாக இன்றளவும் தேராது

அதுமதியொன் றில்லா அரா.....................................48


அராவி வளைத்தனைய அங்குழவித் திங்கள்

விராவு கதிர்விரிய வோடி விராவுவதால்

பொன்னோடு வெள்ளிப் புரிபுரிந்தாற் போலாவே

தன்னோடே யொப்பான் சடை...................................49


சடைமேலக் கொன்றை தருகனிகள் போந்து

புடைமேவித் தாழ்ந்தனவே போலும் -முடிமேல்

வலப்பாலக் கோல மதிவைத்தான் தன்பங்கின்

குலப்பாவை நீலக் குழல்.......................................50

08:09, 22 மார்ச்சு 2006 இல் நிலவும் திருத்தம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அற்புதத்_திருவந்தாதி&oldid=30572" இலிருந்து மீள்விக்கப்பட்டது