மாக்சிம் கார்க்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 41: வரிசை 41:
==எழுத்துப்பணிகள்==
==எழுத்துப்பணிகள்==


எந்நேரமும் குறிப்பேடு வைத்திருப்பார். தனக்குத் தோன்றுவதை அதில் எழுதுவார். 1892-ல் இவரது முதல் சிறுகதையான ‘மகர் சுத்ரா’ (Makar Chudra) வெளிவந்தது. மாக்சிம் கார்க்கி என்ற பெயரில் தொடர்ந்து எழுதிவந்தார்.
எந்நேரமும் குறிப்பேடு வைத்திருப்பார். தனக்குத் தோன்றுவதை அதில் எழுதுவார். 1892-ல் இவரது முதல் சிறுகதையான ‘மகர் சுத்ரா’ (Makar Chudra) வெளிவந்தது. மாக்சிம் கார்க்கி என்ற பெயரில் தொடர்ந்து எழுதிவந்தார். கார்க்கி என்ற சொல்லுக்கு கசப்பு என்பது பொருள்<ref>தாய் -மக்சீம் கார்க்கி - மக்சிம் கார்க்கி வாழ்க்கைக்குறிப்பு - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - N.C.B.H. முதல் பதிப்பு மே 2003</ref>


1898-ல் ‘ஸ்கெட்சஸ் அண்ட் ஸ்டோரீஸ்’ வெளிவந்தது. 1899-ல் முதல் நாவலும், 1902-ல் ‘தி லோயர் டெப்த்ஸ்’ என்ற நாடகமும் வெளிவந்தன. இவரது உலகப் புகழ்பெற்ற ‘மதர்’ (தாய்) புதினம் 1906-ல் வெளிவந்தது. கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக மக்களைக் கிளர்ந்தெழச் செய்வது, அதிகார வர்க்கத்துக்கு எச்சரிக்கை விடுப்பது, வீரம் ஆகியவை இவரது எழுத்துகளின் அடிநாதமாகத் திகழ்ந்தன. இதனால் அரசின் கோபத்துக்கு ஆளானார். பலமுறை கைது செய்யப்பட்டார். இவரது படைப்புகள் கடும் தணிக்கையை எதிர்கொண்டன.
1898-ல் ‘ஸ்கெட்சஸ் அண்ட் ஸ்டோரீஸ்’ வெளிவந்தது. 1899-ல் முதல் நாவலும், 1902-ல் ‘தி லோயர் டெப்த்ஸ்’ என்ற நாடகமும் வெளிவந்தன. இவரது உலகப் புகழ்பெற்ற ‘மதர்’ (தாய்) புதினம் 1906-ல் வெளிவந்தது. கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக மக்களைக் கிளர்ந்தெழச் செய்வது, அதிகார வர்க்கத்துக்கு எச்சரிக்கை விடுப்பது, வீரம் ஆகியவை இவரது எழுத்துகளின் அடிநாதமாகத் திகழ்ந்தன. இதனால் அரசின் கோபத்துக்கு ஆளானார். பலமுறை கைது செய்யப்பட்டார். இவரது படைப்புகள் கடும் தணிக்கையை எதிர்கொண்டன.

11:55, 10 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம்

மாக்சிம் கார்க்கி
மாக்சிம் கார்க்கி, ஏறக்குறைய 1906
மாக்சிம் கார்க்கி, ஏறக்குறைய 1906
பிறப்புஅலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ்
March 28 [யூ.நா. March 16] 1868
உருசியா
இறப்பு(1936-06-18)சூன் 18, 1936 (வயது 68)
மாசுகோ, உருசியா
புனைபெயர்மாக்சிம் கார்க்கி
தொழில்எழுத்தாளர், கவிஞர், அரசியல்வாதி
தேசியம்உருசியா
வகைபுதினம், நாடகம்
கையொப்பம்

மாக்சிம் கார்க்கி (Maxim Gorky) என அறியப்படும் அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் (உருசியம்: Алексе́й Макси́мович Пешко́в; 28 மார்ச் [யூ.நா. 16 மார்ச்] 1868 – 18 சூன் 1936) உருசியா நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி.[1] இவர் உலகின் மிகச் சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாய் என்ற புதினத்தை எழுதினார்.

வாழ்க்கை

மாக்சிம் கார்க்கி குருசியாவில் நிஜினி நவ்கரோட் என்ற ஊரில் ஏழ்மையான குடும்பத்தில் 1868இல் பிறந்தார். இயற்பெயர் அலெக்சி மாக்சிமோவிச் பெஷ்கோவ். இவருடைய 5 ஆவது வயதில் வயதில் தந்தை இறந்தார். தந்தையார் ஒரு தச்சர். தாயின் ஆதரவும் இல்லாத இவரை இவரின் பாட்டிதான் வளர்த்தார். 1879 இல் இவருடைய தாய் இறந்தார்.

வறுமை காரணமாக பள்ளிப் படிப்பு அவ்வளவாக கிடைக்கவில்லை. 8 வயதிலேயே வேலைக்குச் சென்றார். வேலை செய்துகொண்டே தானாகவே முயன்று கல்வி கற்றார். உருசிய, பிரெஞ்சு, இத்தாலி, ஆங்கிலம், செருமனி ஆகிய மொழிகளைக் கற்றார்.

வாழ்க்கைத் துணைவி

1896ஆம் ஆண்டு அச்சுப்பிழை திருத்துவதில் துணைவராக இருந்த ஏகடரினா பவ்லோவ்னா வால்ழினா என்னும் பெண்மணியை வாழ்க்கைத் துணைவியாக தேர்ந்தெடுத்தார்.

தொழில்கள்

கார்க்கி சிறு பையனாக இருந்தபோதே பல பணிகளைச் செய்ய வேண்டியவர் ஆனார். முதலில் காலணிகள் உற்பத்தி தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். ஓராண்டுக்குப் பிறகு கட்டட ஒப்பந்ததாரரிடம் வேலை செய்தார். வேலை கடினமாக இருந்ததால் தப்பியோடி டோப்ரி என்னும் பயணக் கப்பலில் வேலைக்குச் சேர்ந்தார் [2]

புத்தக வாசிப்பு

கார்க்கிக்கு அவர் பணிபுரிந்த டோப்ரி என்னும் பயணக் கப்பலில் சமையல்காரராக இருந்த மிகைல் அகிமோவிச் என்பவர் புத்தகங்கள் படிப்பதற்கு ஆர்வம் ஊட்டினார். கோகோல், ஹென்றி பீல்டிங் முதலான நாவலாசிரியர்கள் அறிமுகமானார்கள். இதற்குப் பின் டுமாஸ், டெர்ரெல்கெஸ்டாவ், மாண்டிபன், லெர்மான்டொவ், தாஸ்தாவெஸ்கி, டால்ஸ்டாய், துர்க்கனேவ், டிக்கனஸ், ஆண்டான் செகாவ் முதலானோரின் படைப்புகளை சிறிது காலத்திலேயே படித்து முடித்தார். இலக்கிய வாசிப்பு படிப்பு பயிற்சி அவருடைய அறிவை கூராக்கியது. சிந்தனையை விரிவாக்கியது. அவரும் எழுதத் தொடங்கினார்[3].

எழுத்துப்பணிகள்

எந்நேரமும் குறிப்பேடு வைத்திருப்பார். தனக்குத் தோன்றுவதை அதில் எழுதுவார். 1892-ல் இவரது முதல் சிறுகதையான ‘மகர் சுத்ரா’ (Makar Chudra) வெளிவந்தது. மாக்சிம் கார்க்கி என்ற பெயரில் தொடர்ந்து எழுதிவந்தார். கார்க்கி என்ற சொல்லுக்கு கசப்பு என்பது பொருள்[4]

1898-ல் ‘ஸ்கெட்சஸ் அண்ட் ஸ்டோரீஸ்’ வெளிவந்தது. 1899-ல் முதல் நாவலும், 1902-ல் ‘தி லோயர் டெப்த்ஸ்’ என்ற நாடகமும் வெளிவந்தன. இவரது உலகப் புகழ்பெற்ற ‘மதர்’ (தாய்) புதினம் 1906-ல் வெளிவந்தது. கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக மக்களைக் கிளர்ந்தெழச் செய்வது, அதிகார வர்க்கத்துக்கு எச்சரிக்கை விடுப்பது, வீரம் ஆகியவை இவரது எழுத்துகளின் அடிநாதமாகத் திகழ்ந்தன. இதனால் அரசின் கோபத்துக்கு ஆளானார். பலமுறை கைது செய்யப்பட்டார். இவரது படைப்புகள் கடும் தணிக்கையை எதிர்கொண்டன.

பல கவிதைகள் எழுதினார். ஏராளமான நூல்களைப் படித்தார். அபார நினைவாற்றல் படைத்தவர். எழுதுவதற்கு பென்சில்களையே பயன்படுத்தினார். சிறிய சிற்பங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்.

பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகர் என்று போற்றப்பட்டார். இவர் படைத்த ‘தாய்’ (மதர்) நாவல், இன்றுவரை புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து வீரத்தை ஊட்டிவருகிறது. இது 200 முறைக்கு மேல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

அரசியல் ஈடுபாடு

இரஷ்ய சோஷலிச ஜனநாயக தொழிலாளர் கட்சிக்கு நிதியுதவி அளித்துவந்தார். ரஷ்யப் புரட்சி இயக்கத்துக்கு நிதி திரட்ட பல நாடுகளுக்குச் சென்றார். உலகம் முழுவதும் உள்ள சிறந்த எழுத்தாளர்களுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார்.

தற்கொலை முயற்சி

கார்க்கி தன் வாழ்க்கையில் நேரிட்ட துன்ப துயரங்களையும் இழிவுகளையும் நினைத்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார். உடலில் குண்டு பாய்ந்தும் பிழைத்துக் கொண்டார் [5]

மறைவு

இவரது எழுத்துகளின் தாக்கம் உலகம் முழுவதும் உள்ள ஏராளமான எழுத்தாளர்களிடம் காணப்படுகிறது. சோஷலிஸ யதார்த்த இலக்கியத்தின் பிதாமகரும் பல அமர இலக்கியங்களைப் படைத்தவருமான மாக்சிம் கார்க்கி 68 வயதில் (1936) மறைந்தார்.

உசாத்துணை

  1. "Maksim Gorki". Kuusankoski City Library, Finland. பார்க்கப்பட்ட நாள் 2009-07-21.
  2. தாய் நாவல்-மாக்சீம் கார்க்கி- தமிழாக்கம்: தொ.மு.சி ரகுநாதன்- வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் - N.C.B.H. முதல் பதிப்பு மே 2003
  3. தாய் நாவல்-மாக்சீம் கார்க்கி- தமிழாக்கம்: தொ.மு.சி ரகுநாதன்- வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் - N.C.B.H. முதல் பதிப்பு மே 2003
  4. தாய் -மக்சீம் கார்க்கி - மக்சிம் கார்க்கி வாழ்க்கைக்குறிப்பு - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - N.C.B.H. முதல் பதிப்பு மே 2003
  5. தாய் நாவல்-மாக்சீம் கார்க்கி- தமிழாக்கம்: தொ.மு.சி ரகுநாதன்- வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் - N.C.B.H. முதல் பதிப்பு மே 2003

வெளி இணைப்புகள்

பொதுவகத்தில் மேக்சிம் கார்kகி பற்றிய ஊடகங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாக்சிம்_கார்க்கி&oldid=3018933" இலிருந்து மீள்விக்கப்பட்டது