மறுபிறப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
⚫ | |||
[[Image:Reincarnation AS.jpg|thumb|200px|Reincarnation in art]] |
[[Image:Reincarnation AS.jpg|thumb|200px|Reincarnation in art]] |
||
⚫ | |||
'''மறுபிறப்பு''' என்பது ஒரு உயிரினம் இறக்கும் போது அதன் வெறும் உடல் மட்டுமே இறக்கிறது என்றும் உயிர் அல்லது ஆத்மா மீண்டும் ஒரு புது உடலில் பிறக்கும் என்ற நம்பிக்கை ஆகும். |
'''மறுபிறப்பு''' என்பது ஒரு உயிரினம் இறக்கும் போது அதன் வெறும் உடல் மட்டுமே இறக்கிறது என்றும் உயிர் அல்லது ஆத்மா மீண்டும் ஒரு புது உடலில் பிறக்கும் என்ற நம்பிக்கை ஆகும். |
||
00:34, 17 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம்
வார்ப்புரு:இந்து மெய்யியல் கருத்துருக்கள் மறுபிறப்பு என்பது ஒரு உயிரினம் இறக்கும் போது அதன் வெறும் உடல் மட்டுமே இறக்கிறது என்றும் உயிர் அல்லது ஆத்மா மீண்டும் ஒரு புது உடலில் பிறக்கும் என்ற நம்பிக்கை ஆகும்.
இந்து சமயத்தின் படி அவரவரின் கர்மபலன்களுக்கு ஏற்ப பிறப்பின் தன்மை அமைகிறது. இந்த பிறவிச்சுழற்சியில் (சம்சாரம்) இருந்து விடுபெற வீடுபேறு அடைய வேண்டும். இந்த கதையாடலில் ஒரு உயிர் ஏன் முதன் முதலில் பிறந்தது என்று கூறப்படவில்லை.
சிவபுராணப் பாடல்
- புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
- பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
- கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
- வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
- செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
- எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
- மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
யஜுர் வேதம்
இந்து சமயத்தின் முக்கியமான நம்பிக்கைகளில் ஒன்று மறுபிறவி.
- ஒருவரின் இறப்பிற்குப்பின், அவரது ஆத்மா முன்பிறவிகளின் மொத்த கர்மாவின் பதிவுகளுடன் அடுத்த உலகுக்குச் செல்கிறது. அங்கு தன் கர்மாவுக்கான பயன்களை அறுவடை செய்தபின், இந்த உலகுக்கு திரும்புகிறது. எப்படி கர்ம வினைகள் ஒருவருடைய செயலின் தேர்வின் அடிப்படையில் அமைகிறதோ, அதுபோலவே, அதனாலேயே, மறுபிறவியும் அவரவர் தேர்ந்தெடுப்பதுதான்
- என்கிறது யஜுர் வேதம், பிரகதாரண்ய உபநிடதம் 4.4.6
மறுபிறவியானது 'பிறப்பு - இறப்பு - மறுபிறப்பு' எனும் இயற்கையான பிறவிச்சுழலின் ஒரு பகுதியாகும். இறப்பிற்குப்பின், ஒருவர் அவருடைய உடலை விட்டுவிட்டு, அவரது உள் உலகங்களில் அடுத்த நிலைகளை அடைகிறார். அதன்பின் மறுபிறவியில் ஓர் உடலை அடைகிறார்.
ஒருவருடைய கர்மாவானது முழுதும் தீருமாயின், பிறவிச் சுழல் முடிவடைந்து, அவர் அதன்பின் மறுபிறவி எடுப்பதில்லை. இந்த மறுபிறவி இல்லா நிலை மோட்சம் அல்லது முக்தி என வழங்கப்படுகிறது.
அறிவியல் நோக்கு
மறுபிறப்புக்கு எந்தவிதமான அறிவியல் ஆதாரமும் இல்லை.