லால் கிருஷ்ண அத்வானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 60: வரிசை 60:
[[சிந்து மாகாணம்|சிந்து மாகாணத்தின்]] [[கராச்சி]] நகரில் பிறந்தவர். இவரது பெற்றோர் கிஷன்சந்த டி. அத்வானி மற்றும் ஞானிதேவி ஆவர். தன் பள்ளிக்கல்வியை கராச்சியிலுள்ள புனித பேட்ரிக் உயர் நிலைப்பள்ளியில் கற்றார். அதன் பின்னர் சிந்து மாகாணத்தின் ஹைதிராபாத்திலுள்ள அரசு கல்லூரியில் இணைந்தார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது இவரது குடும்பர் பாகிஸ்தானிலிருந்து இடம் பெயர்ந்து [[மும்பை]]யில் குடியேறியது. மும்பை பல்கலைக்கழகத்தின் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பினை முடித்தார்.
[[சிந்து மாகாணம்|சிந்து மாகாணத்தின்]] [[கராச்சி]] நகரில் பிறந்தவர். இவரது பெற்றோர் கிஷன்சந்த டி. அத்வானி மற்றும் ஞானிதேவி ஆவர். தன் பள்ளிக்கல்வியை கராச்சியிலுள்ள புனித பேட்ரிக் உயர் நிலைப்பள்ளியில் கற்றார். அதன் பின்னர் சிந்து மாகாணத்தின் ஹைதிராபாத்திலுள்ள அரசு கல்லூரியில் இணைந்தார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது இவரது குடும்பர் பாகிஸ்தானிலிருந்து இடம் பெயர்ந்து [[மும்பை]]யில் குடியேறியது. மும்பை பல்கலைக்கழகத்தின் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பினை முடித்தார்.
== அரசியல் ==
== அரசியல் ==
அத்வானி தனது 14 ஆம் வயதில் 1941 ஆம் ஆண்டு [[ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்|ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில்]] இணைந்தார். கராச்சி பகுதி கிளையின் முழு நேர ஊழியராக பணியாற்றினார். இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் [[ராஜஸ்தான்]] மாநிலத்திற்கு பணி செய்ய அனுப்பப்பட்டார். அங்கு "ஆல்வார், பாரத்பூர், கோட்டா, பிண்டி மற்றும் ஜாலாவார்" மாவட்டங்களில் 1952 வரை பணியாற்றினார்.
அத்வானி தனது 14 ஆம் வயதில் 1941 ஆம் ஆண்டு [[ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்|ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில்]] இணைந்தார். கராச்சி பகுதி கிளையின் முழு நேர ஊழியராக பணியாற்றினார். இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் [[ராஜஸ்தான்]] மாநிலத்திற்கு பணி செய்ய அனுப்பப்பட்டார். அங்கு ''ஆல்வார், பாரத்பூர், கோட்டா, பிண்டி மற்றும் ஜாலாவார்'' மாவட்டங்களில் 1952 வரை பணியாற்றினார்.
[[ஸ்யாம் பிரகாஷ் முக்கர்ஜி]] 1951 ல் தொடங்கிய ஜன சங்கத்தில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் இணைந்ததும் அத்வானி ஜன சங்கத்தின் உறுப்பினரானார். ஜனசங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்த எஸ்.எஸ். பண்டாரியின் செயலாளராக அத்வானி ராஜஸ்தானில் நியமிக்கப்படுகிறார். பின்னர் 1957 ஆம் ஆண்டு பாராளுமன்ற விவகாரங்களைக் கையாளுவதற்காக தில்லி அனுப்பப்படுகிறார். தில்லி ஜன சங்கத்தின் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். 1966 ல் ஜன சங்கத்தின் தேசியத் தலைவர்களில் ஒருவராக அத்வானி நியமிக்கப்படுகிறார்.
[[ஸ்யாம் பிரகாஷ் முக்கர்ஜி]] 1951 ல் தொடங்கிய ஜன சங்கத்தில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் இணைந்ததும் அத்வானி ஜன சங்கத்தின் உறுப்பினரானார். ஜனசங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்த எஸ்.எஸ். பண்டாரியின் செயலாளராக அத்வானி ராஜஸ்தானில் நியமிக்கப்படுகிறார். பின்னர் 1957 ஆம் ஆண்டு பாராளுமன்ற விவகாரங்களைக் கையாளுவதற்காக தில்லி அனுப்பப்படுகிறார். தில்லி ஜன சங்கத்தின் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். 1966 ல் ஜன சங்கத்தின் தேசியத் தலைவர்களில் ஒருவராக அத்வானி நியமிக்கப்படுகிறார்.



01:38, 21 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

லால் கிருஷ்ண அத்வானி
எதிர் கட்சித் தலைவர்
பதவியில்
ஜூன் 1 2004 – 2009
முன்னையவர்சோனியா காந்தி
பின்னவர்சுஷ்மா சுவராஜ்
இந்திய துணை பிரதமர், உள்துறை அமைச்சர்
பதவியில்
ஜூன் 29 2002 – மே 20 2004
பிரதமர்அடல் பிஹாரி வாஜ்பாய்
முன்னையவர்சௌதரி தேவி லால் (1991 முதல் துணை)
எல். கே. ஆட்வாணி (உள்துறை)
பின்னவர்பதவி அழிக்கப்பட்டது
சிவ்ராஜ் பாட்டில் (உள்துறை)
உள்துறை அமைச்சர்
பதவியில்
அக்டோபர் 13 1999 – ஜூன் 28 2002
பிரதமர்அடல் பிஹாரி வாஜ்பாய்
முன்னையவர்எல். கே. ஆட்வாணி
பின்னவர்எல். கே. ஆட்வாணி
உள்துறை அமைச்சர்
பதவியில்
மார்ச் 19 1998 – ஏப்ரல் 26 1999
பிரதமர்அடல் பிஹாரி வாஜ்பாய்
முன்னையவர்இந்திரஜித் குப்தா
பின்னவர்எல். கே. ஆட்வாணி
உள்துறை அமைச்சர்
பதவியில்
மே 16 1996 – ஜூன் 1 1996
பிரதமர்அடல் பிஹாரி வாஜ்பாய்
முன்னையவர்ஷங்கர்ராவ் சவன்
பின்னவர்இந்திரஜித் குப்தா
இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர்
பதவியில்
மார்ச் 24 1977 – ஜூலை 15 1979
பிரதமர்மொரார்ஜி தேசாய்
முன்னையவர்வித்தியா சரண் சுக்லா
பின்னவர்வித்தியா சரண் சுக்லா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புநவம்பர் 8, 1927 (1927-11-08) (அகவை 96)
கராச்சி, பிரித்தானிய இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்கம்லா ஆட்வாணி
பிள்ளைகள்பிரதிபா ஆட்வாணி, ஜெயந்த் ஆட்வாணி
முன்னாள் கல்லூரிமும்பை பல்கலைக்கழகம்
வேலைவழக்கறிஞர்
இணையத்தளம்http://blog.lkadvani.in

லால் கிருஷ்ண அத்வானி (சிந்தி மொழி: लाल कृष्ण आडवाणी لال ڪرشنا آڏواڻي, பிறப்பு நவம்பர் 8, 1927, கராச்சி) பாரதிய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவர் ஆவார். அத்வானி ஆர்.எஸ்.எஸ் ஊழியர். இந்திய மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். 2002 முதல் 2004 வரை இந்தியாவின் துணைப் பிரதமராகப் பணி ஆற்றினார். பாரதிய ஜனதா கட்சி இவரை மே 2009இல் நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவித்தது. 2015 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 30 ஆம் தேதி அன்று எல்.கே. அத்வானிக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசன் விருது வழங்கப்பட்டது.


இளமைக் காலம்

சிந்து மாகாணத்தின் கராச்சி நகரில் பிறந்தவர். இவரது பெற்றோர் கிஷன்சந்த டி. அத்வானி மற்றும் ஞானிதேவி ஆவர். தன் பள்ளிக்கல்வியை கராச்சியிலுள்ள புனித பேட்ரிக் உயர் நிலைப்பள்ளியில் கற்றார். அதன் பின்னர் சிந்து மாகாணத்தின் ஹைதிராபாத்திலுள்ள அரசு கல்லூரியில் இணைந்தார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது இவரது குடும்பர் பாகிஸ்தானிலிருந்து இடம் பெயர்ந்து மும்பையில் குடியேறியது. மும்பை பல்கலைக்கழகத்தின் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பினை முடித்தார்.

அரசியல்

அத்வானி தனது 14 ஆம் வயதில் 1941 ஆம் ஆண்டு ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் இணைந்தார். கராச்சி பகுதி கிளையின் முழு நேர ஊழியராக பணியாற்றினார். இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் ராஜஸ்தான் மாநிலத்திற்கு பணி செய்ய அனுப்பப்பட்டார். அங்கு ஆல்வார், பாரத்பூர், கோட்டா, பிண்டி மற்றும் ஜாலாவார் மாவட்டங்களில் 1952 வரை பணியாற்றினார். ஸ்யாம் பிரகாஷ் முக்கர்ஜி 1951 ல் தொடங்கிய ஜன சங்கத்தில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் இணைந்ததும் அத்வானி ஜன சங்கத்தின் உறுப்பினரானார். ஜனசங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்த எஸ்.எஸ். பண்டாரியின் செயலாளராக அத்வானி ராஜஸ்தானில் நியமிக்கப்படுகிறார். பின்னர் 1957 ஆம் ஆண்டு பாராளுமன்ற விவகாரங்களைக் கையாளுவதற்காக தில்லி அனுப்பப்படுகிறார். தில்லி ஜன சங்கத்தின் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். 1966 ல் ஜன சங்கத்தின் தேசியத் தலைவர்களில் ஒருவராக அத்வானி நியமிக்கப்படுகிறார்.

இந்திரா காந்தி அமுல்படுத்திய அவரசநிலைப் பிரகடனத்தின் பின்னான தேர்தலில் அத்வானி வெற்றி பெற்று மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக பதவியேற்றார். பாரதீய ஜனதாக் கட்சி உருவாக்கப்பட்ட பின்னர் 1982 களிலிருந்து இரண்டு முறை பாராளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார்.

இராமர் ஆலயம்

1992-ல் கரசேவகர்களால் பாபர் மசூதி இடிப்பு செய்து, ராம ஜென்ம பூமியில் இராமர் கோயில் கட்ட அடித்தளமிட்டவர்களில் அத்வானியும் ஒருவர்.

சவால்கள்

ஹவாலா மோசடி வழக்கில் சிக்கியது, அவரது வாழ்வில் ஏற்பட்ட முதல் சறுக்கல். அதை சமாளிக்க அவர் பதவியை ராஜினாமா செய்தது, குற்றமற்றவர் என நிரூபித்தது.

டிச,1999 -ல் நடந்த காந்தஹார் விமான கடத்தல் அரசின் அஸ்திவாரத்தையே உலுக்கியது. தீவிரவாதிகள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கி மௌலானா மசூத் அசார் உள்ளிட்ட 3 தீவிரவாதிகளை விடுவித்து, 831 பயணிகளை மீட்டார்.[1]

நாடாளுமன்றத்தின் மீது 2001இல் நடத்தப்பட்ட தாக்குதல், அதற்காக தீவீரவாதிகளை ஒடுக்கும் நோக்குடன் இவர் கொண்டு வந்த பொடா சட்டம் தேசிய அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற தாக்குதல் திட்டத்தின் சூத்திரதாரி அப்சல் குரு, இன்னும் தூக்கிலிடப்படவில்லை.

ஜின்னா ஒரு தியாகி - அத்வானி

ஜின்னா ஒரு துரோகி, அவரை பாராட்டி பேசியவரும் துரோகியே! என கட்சிக்குள்ளும், வி.ஹெச்.பி போன்றோரிடமும் கலகக்குரல் ஒலிக்கத்துவங்கியது. இது பற்றிஅத்வானி கூறியது: ஹவாலா சோதனையின்போது கட்சி எனக்கு துணையாக இருந்தது, ஜின்னா விவகாரத்தில் எனக்கு கட்சியாக துணையாக இல்லை. பெரும்பாலான பாஜக தலைவர்கள் என்னை ஆதரிக்க முன்வரவில்லை. எனது கருத்துக்களை அவர்கள் விரும்பவில்லை. நான் நல்ல எண்ணத்தில் ஜின்னா குறித்துக் கூறிய கருத்துக்களை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

மேற்கோள்கள்

  1. கந்தகார் விமானக் கடத்தல்

இணைப்புகள்

1. அத்வானி, ஒரு காவிய நாயகன் - தமிழில் வலைப்பூ

2. அத்வானி - கிழக்கின் புத்தகம்

[1]


  1. ‘கராச்சி முதல் டெல்லி வரை...’ - எல்.கே.அத்வானியின் வாழ்க்கைப் பயணம்!
"https://ta.wikipedia.org/w/index.php?title=லால்_கிருஷ்ண_அத்வானி&oldid=3003771" இலிருந்து மீள்விக்கப்பட்டது