ஸ்ரீதர் (இயக்குநர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 72: வரிசை 72:
*இதில் [[வெண்ணிற ஆடை நிர்மலா|நிர்மலா]], [[வெண்ணிற ஆடை மூர்த்தி|மூா்த்தி]] இருவருமே தான் அறிமுகமான படத்தின் பெயரான [[வெண்ணிற ஆடை|வெண்ணிறாடை]] என்ற பெயரே இவர்களுக்கு இன்றளவும் அடைமொழியாக இருந்து வருகிறது.
*இதில் [[வெண்ணிற ஆடை நிர்மலா|நிர்மலா]], [[வெண்ணிற ஆடை மூர்த்தி|மூா்த்தி]] இருவருமே தான் அறிமுகமான படத்தின் பெயரான [[வெண்ணிற ஆடை|வெண்ணிறாடை]] என்ற பெயரே இவர்களுக்கு இன்றளவும் அடைமொழியாக இருந்து வருகிறது.


*ஶ்ரீதர் இயக்குனர் ஆக பணியாற்றும் போது அவருடன் இணைந்து உதவி இயக்குனராக இருந்து உருவாக்கபட்ட பல இயக்குனர்கள் [[பி. மாதவன்]], [[சி. வி. ராஜேந்திரன்]], [[சித்ராலயா கோபு]], என். சி. சக்கரவர்த்தி, [[பி. வாசு]], [[சந்தான பாரதி]] மேலும் போன்றவர்கள் ஶ்ரீதர் அவர்களால் உருவாக்கப்பட்ட பெரிய தமிழ் திரைப்பட இயக்குனர்கள் ஆவார்.
*ஶ்ரீதர் இயக்குனர் ஆக பணியாற்றும் போது அவருடன் இணைந்து உதவி இயக்குனராக இருந்து உருவாக்கபட்ட பல இயக்குனர்கள் [[பி. மாதவன்]], [[சி. வி. ராஜேந்திரன்]], [[சித்ராலயா கோபு]], என். சி. சக்கரவர்த்தி, [[பி. வாசு]], [[சந்தான பாரதி]], [[ராஜ்கபூர் (இயக்குநர்)|ராஜ்கபூர்]] போன்றவர்கள் ஶ்ரீதர் அவர்களால் உருவாக்கப்பட்ட பெரிய தமிழ் திரைப்பட இயக்குனர்கள் ஆவார்.


*அதே போல் இந்த இயக்குனர்களின் திரைப்படங்களில் ஶ்ரீதரின் மாறுபட்ட கதைக்களம் கொண்ட காட்சிகள் இவர்கள் திரைபடங்களில் இருக்கும்.
*அதே போல் இந்த இயக்குனர்களின் திரைப்படங்களில் ஶ்ரீதரின் மாறுபட்ட கதைக்களம் கொண்ட காட்சிகள் இவர்கள் திரைபடங்களில் இருக்கும்.

16:42, 29 சூன் 2020 இல் நிலவும் திருத்தம்

சி. வி. ஶ்ரீதர்
இந்திய அஞ்சல் தலையில் சி. வி. ஶ்ரீதர்
பிறப்புசித்தாமூர் விசயராகவுலு ஶ்ரீதரகிருஷ்ணன் & (ஶ்ரீதர்)
(1933-07-22)22 சூலை 1933
சித்தாமூர், செங்கல்பட்டு, மதராசு மாகாணம், பிரித்தானிய இந்தியாஇந்தியா
இறப்பு20 அக்டோபர் 2008(2008-10-20) (அகவை 75)
சென்னை, தமிழ்நாடு
பணி
செயற்பாட்டுக்
காலம்
1959–1991
பெற்றோர்தந்தை : விஜயராகவுலு ரெட்டியார்
தாயாா் : தாயாரம்மாள்
வாழ்க்கைத்
துணை
தேவசேனா

ஸ்ரீதர் (சூலை 221933 - அக்டோபர் 20, 2008) புகழ்பெற்ற தமிழ் திரைப்பட இயக்குனரும், வசனகர்த்தாவும் ஆவார். தமிழில் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் மற்றும் பாலிவுட்டிலும் பெரும் வெற்றியினை ஈட்டியவர் ஸ்ரீதர்.

வாழ்க்கைச் சுருக்கம்

  • ஶ்ரீதரகிருஷ்ணன் என்ற இயற்பெயருடன் பிறந்த ஶ்ரீதர் அவர்கள் விஜயராகவுலு ரெட்டியார் - தாயாரம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் அப்போதையே செங்கல்பட்டு செஞ் ஜோசப் பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை முடித்துவிட்டு அவர் படிக்கும் போதே அவருக்கு தமிழ் மீது ஏற்பட்ட பற்றும், காதலும் தான் அவரை ஒரு நல்ல கதாசிரியர் ஆக்கியது தனது 20 வயதிலே தமிழ் உரைநடைகளை எதுகை மோனையுடன் எழுதி பெயர்ச்சி பெற்றும் தனது தாயார் தாயாரம்மாள் அவர்கள் பழம்பெரும் பல புராண புத்தகங்கள் படிக்கும் போது அதில் தமிழை ஏற்ற இறக்கத்துடன் வாசிக்கும் அழகை கண்டு மேலும் அவருக்கு பேச்சிலும் எழுத்திலும் அவருக்கு தமிழில் வசன கர்த்தாவாக மாற்றியது.
  • மேலும் அவர் பள்ளி பருவத்தில் அங்கு நடத்தப்படும் கலை நிகழ்ச்சி நாடக போட்டிகளில் தமிழ் வசனத்தை மையமாக வைத்து இவர் பல கதைகளை எழுதியுள்ளார் ஆனால் அது ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளி என்பதால் மற்ற மாணவர்களை விட இவரே தமிழை அழகான உச்சரிப்புடன் பேசி நடித்தார்.
  • அதே போல் அந்த சிறு வயதிலே அவர் ஒரு அழகிய கதையுடன் சென்னையில் உள்ள ஏ. வி. எம் நிறுவனத்தில் இயக்குனர் ப. நீலகண்டன் அவர்களிடம் அந்த கதையை காட்டிய போது அதை படித்து பார்த்துவிட்டு மிகவும் நன்றாக உள்ளது ஆனால் நீ இன்னும் பெரிய ஆளாக வளர்ந்த பிறகு இதை படமாக்கலாம் என்று கூறிவிட்டார்.
  • ஆனால் அந்த நேரத்தில் மனம் தளராத ஶ்ரீதர் அடுத்ததாக டி.கே.டி சகோதர்கள் சொந்தமாக நடத்தி வந்த நாடக சபாவில் உள்ள தி. க. சண்முகம் அவர்களிடம் காட்டிய போது அதை விரைவில் நாடகம் ஆக நடத்தபட்டு அதை திரைப்படம் ஆக எடுக்க நினைத்த தி. க. சண்முகம் அவர்கள் அந்த கதையில் சில திருத்தங்களை ஶ்ரீதரை தனது அலுவலகத்திலேயே சரிசெய்ய சொன்ன பிறகு அந்த கதையில் மிகவும் சுவாரஸ்யமாக தனது சிறு வயதான 20 வயதில் இவ்வளவு அபாரமான கதை அமைப்பை தந்திரசாலியாக ஶ்ரீதர் அவர்கள் திருத்தி எழுதியதை கண்டு தி. க. சண்முகம் பாராட்டினார்.
  • பின்பு அந்த கதை நாடகமாக நடத்தப்பட்டு திரைப்படமாக 1954 ஆம் ஆண்டு ரத்த பாசம் என்ற படத்தின் மூலம் வசனகர்த்தாவாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார் ஸ்ரீதர்.
  • அந்த நாட்களில் மிகுந்த புகழ் பெற்றிருந்த திரைப்பட வசனகர்த்தாவான இளங்கோவன் வசனத்தால் ஈர்க்கப்பட்டு திரையுலகை நாடினார் ஸ்ரீதர்.
  • அதனால் அவருடன் இணைந்து 1963 ஆம் ஆண்டு சித்தூர் ராணி பத்மினி என்ற திரைப்படத்தில் கதை-வசனம் எழுதும் வாய்ப்பை பெற்றிருந்தார்.
  • வீனஸ் பிக்சர்ஸ் என்னும் நிறுவனத்திற்காக ஸ்ரீதர் இயக்கிய இத்திரைப்படம், நடிகை சரோஜாதேவி அவர்கள் அதற்கு முன்பு தமிழில் பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் கதாநாயகி அந்தஸ்தை சரோஜாதேவிக்கு வழங்கிய படம் என்பது குறிப்பிடத்தக்கது,
  • அதுவரை பாடகராக மட்டுமே தமிழில் அறியப்பட்டிருந்த ஏ.எம். ராஜா ஒரு இசை அமைப்பாளராகவும் அறிமுகமான படம் இது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
  • இத்திரைப்படத்தின் பாடல்களான "காதலிலே தோல்வியுற்றான்" போன்ற பாடல்கள் பெரும்புகழை ஈட்டின.
  • 1961 ஆம் ஆண்டில் தனது சொந்தப் பட நிறுவனம் சித்ராலயாவைத் தொடங்கிய ஸ்ரீதர் 30 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தினார். இவர் கடைசியாக இயக்கிய படம் "தந்துவிட்டேன் என்னை".

ஸ்ரீதர் படங்களின் சில சிறப்பம்சங்கள்

  • தமிழ்த் திரையுலகில் அதுவரை வசனமே செங்கோலோச்சி வந்த நிலையை மாற்றி அந்த தமிழ் வசனத்தை கூட சாதாரன ரசிகர்கள் புரிந்து கொள்ளும் வகையிலும் திரைப்படங்களின் கதைகளத்தையே மாற்றி அழகான வசன உச்சரிப்புடனும் ஒளிப்பதிவு கோணங்களையும் புதுமை முறையில் திரைப்படங்களை இயக்கியதால் புதுமை இயக்குனர் என்று முதல் முதலில் மத்திய அரசாங்கமே அவருக்கு அளித்த பட்டமாகும். மேலும் இவர் தான் இந்திய திரையுலகில் இயக்குனருக்கான ஒரு இடம் பெற்றுத் தந்தவர் ஸ்ரீதர் தான் என்று கூறிப்பிடபடுகின்றது.
  • அவரது திரைப்படங்களின் காட்சியமைப்புக்களையும், காமிரா கோணங்களையும் அவருக்குப் பின்னர் திரையுலகில் பெரும் மாறுதல்களை உருவாக்கியதாகக் கூறப்படும்.
  • கே. பாலசந்தர், பாரதிராஜா ஆகியோர் திரையுலகில் விரும்பி இயக்குனர் ஆனதற்கு காரணமே ஶ்ரீதர்தான் என்று பெருமளவில் பாராட்டியுள்ளனர்.
  • ஸ்ரீதரின் ஆரம்ப கால படங்களில் பலவற்றிலும் அவருடன் பணியாற்றியவர் ஏ. வின்சென்ட் என்ற ஒளிப்பதிவாளர். நெஞ்சில்ஓர்ஆலயம் என்னும் திரைப்படத்தில், முத்துராமன் மற்றும் தேவிகாவின் நடிப்பில் "சொன்னது நீதானா" என்னும் பாடல் படமாக்கப்பட்ட கோணங்களும், படத்தொகுப்பும் பெரிதும் பாராட்டப்பட்டன.
  • புதுமுகங்களை அறிமுகப்படுத்துவது மட்டும் இன்றி அவர்களைப் பிரபலமான நட்சத்திரங்களாக்குவதிலும் ஸ்ரீதரின் படங்கள் பெரும்பங்கு வகித்தன.
  • ஶ்ரீதரால் அறிமுகமாக்கப்பட்ட நட்சத்திரங்கள் :-

1) ரவிச்சந்திரன், காஞ்சனா - (காதலிக்க நேரமில்லை)

2) ஸ்ரீகாந்த், ஜெ. ஜெயலலிதா, நிர்மலா, மூர்த்தி - (வெண்ணிற ஆடை)

3) கவிதா - (ஓ மஞ்சு)

  • அதே போல் இந்த இயக்குனர்களின் திரைப்படங்களில் ஶ்ரீதரின் மாறுபட்ட கதைக்களம் கொண்ட காட்சிகள் இவர்கள் திரைபடங்களில் இருக்கும்.

இயக்கிய திரைப்படங்கள்

தயாரிப்பு மற்றும் கதை வசனம் எழுதிய திரைபடங்கள் :-

மறைவு

சில ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட ஸ்ரீதர், திரைப்படப் இயக்குனர் பணியிலிருந்து முழுவதுமாக 1991 ஆம் ஆண்டிலிருந்து ஒதுங்கியிருந்தார். 2008, அக்டோபர் 20 இல் சென்னையில் தனது 75 ஆவது அகவையில் காலமானார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீதர்_(இயக்குநர்)&oldid=2993119" இலிருந்து மீள்விக்கப்பட்டது